புதன், 15 டிசம்பர், 2021

பள்ளிக்கல்வி_TRB மூலம் தெரிவு செய்யப்பட்ட கணித பட்டதாரி ஆசிரியர்களின் பணி நியமன ஆணைகளை பணிவரன் முறைப்படுத்துதல் சார்ந்த இணை இயக்குநர் செயல்முறைகள்



 

பணத்துக்கு பதிலாக பாண்ட்? அரசு ஊழியர்கள் படபடப்பு!

 பணத்துக்கு பதிலாக பாண்ட்? அரசு ஊழியர்கள் படபடப்பு! கடந்த அதிமுக ஆட்சியில் நிதிப் பற்றாக்குறையால் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறக்கூடிய வயது 59ஆக நீட்டிக்கப்பட்டது. 2021இல் திமுக ஆட்சி பொறுப்பேற்று முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றதும் 59 வயதை 60ஆக உயர்த்தி அரசாணையை வெளியிட்டார், இதனால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மற்றொரு பக்கம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கொடுக்க காலியிடங்களை நிரப்பாமல் அரசு தவிர்த்து வருகிறது என்று குற்றச்சாட்டுகளும் எழுந்தன. இந்த நிலையில் வரும் 2022 ஜனவரி மாதம் 5ஆம் தேதி கூடும் தமிழகச் சட்டப்பேரவை கூட்டத்தொடரில், அரசு ஊழியர்களின் ஓய்வு வயது தொடர்பாக, தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிடலாம், அதன்படி 33 வருடங்கள் அரசு பணி செய்தவர்கள் 58 வயதிலும், மற்றவர்கள் 60 வயதிலும் ஓய்வு பெறலாம் என்று அறிவிக்கப்படலாம் எனத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுமட்டுமல்ல... “நிதி சுமையால்தான் அரசு ஊழியர்களின் பணி ஓய்வு வயதை உயர்த்தியது, தற்போது ஓய்வு பெறும் வயதை 58ஆகக் குறைத்தால் பல ஆயிரம் பேர் ஓய்வு பெறுவார்கள். அவர்களுக்குப் பணப்பலன் எப்படிக் கொடுப்பது என்பது முக்கிய கேள்வியாக இருக்கிறது. அனைவருக்கும் பாண்ட் பத்திரம் கொடுத்து அனுப்ப முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றும் கோட்டை வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசிகின்றன. இவ்விவகாரம் தொடர்பாக, அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் தமிழ்செல்வியிடம் பேசினோம். அவர், “நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனும் முதல்வரும் வெவ்வேறு கருத்துகளைச் சொல்லி வருகிறார்கள். ஒரு வாரத்திற்கு முன்பு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிப் பற்றாக்குறையால் காலி பணியிடங்களை நிரப்ப முடியவில்லை என்று பேசினார். இந்த நிலையில் வயது வரம்பைக் குறைக்க புதிய அறிவிப்பு செய்யப் போவதாகக் கடந்த பத்து தினங்களாக வாட்ஸ்அப்பில் ஒரு குறுஞ்செய்தி பரவி வருகிறது. 33 வருடங்கள் பணி செய்தவர்கள் 58 வயதில் பணி ஓய்வு என்றால் காவல் துறையில் மட்டும் சுமார் 20,000 பேர் ஓய்வு பெறுவார்கள், அவர்களுக்குப் பணப்பலன் எப்படிக் கொடுப்பார்கள்? 33 வருடங்கள் பணி செய்தவர்களுக்கு பத்து மாதம் (ஈட்டிய விடுப்பு) சம்பளம் கொடுக்க வேண்டும். ஜிபிஎஃப் போன்ற பணப்பலன்கள் ஒவ்வொருவருக்கும் குறைந்தது 30 லட்சம் கொடுக்க வேண்டியது இருக்கும். அப்படி என்றால் சுமார் 600 கோடி ரூபாய் வழங்க வேண்டியிருக்கும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எனப் பழைய பென்ஷன் திட்டத்தில் உள்ள சுமார் மூன்றரை லட்சம் ஊழியர்களும், புதிய பென்ஷன் திட்டத்தில் ஆறரை லட்சம் ஊழியர்களும் மொத்தம் பத்து லட்சம் ஊழியர்கள் பணி செய்து வருகிறார்கள். 2022இல் 60 வயது நிரம்பியவர்கள் என்றால் லட்சம் ஊழியர்களுக்குக் குறையாமல் இருப்பார்கள். அவர்களுக்கு சுமார் 4,000 கோடி வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப நிதி இல்லை என்று சொல்கிறார்களே, 4,000 கோடி ரூபாய் கொடுத்து லட்சம் அரசு ஊழியர்களை எப்படி வீட்டுக்கு அனுப்புவார்கள்” என்றார். “பணத்துக்கு பதிலாக பாண்ட் கொடுக்க அரசு முடிவு செய்துள்ளதாகச் சொல்கிறார்களே?” என்று கேள்வி எழுப்பினோம்... “2003 அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுபவர்களுக்கு பாண்ட் பத்திரம் வழங்குவதைக் கடுமையாக எதிர்த்தார் கலைஞர் கருணாநிதி, தற்போது தந்தை எதிர்த்த பாண்ட் பத்திரத்தை ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்குக் கலைஞர் மகன் முதல்வர் ஸ்டாலின் வழங்குவரா என்ன? 33 வருடங்கள் உழைத்துப் பணி ஓய்வுபெறும்போது நிம்மதியான வாழ்க்கை வாழ நினைப்பவர்களுக்குப் பத்திரம் கொடுப்பது கொடுமையானது. இப்படி ஒரு செயலை முதல்வர் செய்தால், ஒட்டுமொத்த அரசு ஊழியர்களின் குடும்பங்களும் அரசுக்கு எதிரான போராட்டத்தில் இறங்கும், அதன் விளைவை அடுத்த தேர்தலில் சந்திப்பார்” என்று கூறினார். சட்டமன்றக் கூட்டத் தொடருக்கு முன்பே, டிசம்பர் 18,19 தேதிகளில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க 14ஆவது மாநில மாநாடு சென்னையில் நடக்கிறது. புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். முடக்கப்பட்ட அகவிலைப்படியை வழங்க வேண்டும் . பறிக்கப்பட்ட சரண் விடுப்பு மீண்டும் அளிக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தும் இந்த மாநாட்டின் இரண்டாம் நாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். அந்த மாநாட்டில் முதல்வரின் பேச்சை அரசு ஊழியர்கள் ஆர்வமாக எதிர்பார்த்திருக்கின்றனர். -வணங்காமுடி நன்றி:மின்னம்பலம்.


தமிழ்நாடு அரசின் சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டம் - தேநீர் ஊர்திகள்- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்-





 

மதுரை மாநகரில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகக் கட்டடம் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்




கோவிட் தடுப்பூசி குழந்தைகளுக்கு எப்போது?

 கோவிட் தடுப்பூசி குழந்தைகளுக்கு எப்போது? 14 December 2021 தீக்கதிர் புதுதில்லி,டிச.14- கொரோனாவின் ஒமைக்ரான் வகை திரிபு பல நாடுகளில் வேகமாக பரவுகிறது. குறிப்பாக பிரிட்டன் போன்ற நாடுகளில் இதன் தாக்கம் தற்சமயம் அதிகம் உள்ளது. இருப்பினும் ஒமைக்ரான் திரிபானது குறைவான அளவே பாதிப்பை ஏற்படுத்துவதாக அறிவியலாளர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர். ஒமைக்ரான் போன்ற புதிய புதிய திரிபுகளிலி ருந்து மக்களை காக்க, பிரிட்டன் உட்பட சில நாடுகளின் அரசுகள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை நோக்கி நகர்ந்து வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை குழந்தைகளுக்கான கொரோ னா தடுப்பூசி அமலாக்கத்தை நோக்கி நகர்கிறது. ஒமைக்ரான் உட்பட இதுவரை பரவிய எல்லா வகை கொரோனா திரிபுகளுமே, தடுப்பூசிக்கு மிகப்பெரிய அளவில் கட்டுப்படுவது நிரூபிக்கப் பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் சிறிய வர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவ ருக்கும் தடுப்பூசியை கொண்டு செல்ல வேண்டும் என்று அரசு முனைந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி இந்திய மக்கள் தொகையில் தடுப்பூசி பெற தகுதியுடையவர்க ளில் (18 வயதுக்கு மேற்பட்டோர்) சுமார் 50% பேர் இரு டோஸ் தடுப்பூசியும்; கிட்டத்தட்ட 90% முதல் டோஸ் தடுப்பூசியும் பெற்றுள்ளனர் என ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் முன்னாள் இணைச் செயலாளர் ராகேஷ் குமார் பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார். “ஹர் கர் தஸ்தக்” என்ற மெகா தடுப்பூசி முகாம் மூலம் இந்தியா முழுவதும் சுகாதாரப் பணியாளர்கள் அனைத்து வீடுகளுக்கும் சென்று தடுப்பூசி போடும் பணியை மேற்கொண்டு வரு கின்றனர். இந்த திட்டத்தின்கீழ் ஒன்றிய அரசுத் தரப்பிலிருந்து ‘இந்தியாவில் பூஸ்டர் டோஸ் பயன்பாடு’ குறித்து முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், அதற்கு முன்ன தாக குழந்தைகளுக்கான தடுப்பூசியை அமலுக்கு கொண்டுவரவே அரசு வேகமாக முனைந்து வருகிறது எனத் தெரிகிறது. தற்போது வரை, ஒன்றிய மருத்து கட்டுப்பாட்டு வாரியத்தின் பரிந்து ரையின் கீழ், 5 கொரோனா தடுப்பூசிகள் குழந்தை கள் மத்தியிலான ஆய்வுநிலையில் உள்ளன. கேடிலா ஹெல்த்கேர் நிறுவனத்தின் சைகோவ் டி இந்த தடுப்பூசி 12 - 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான மூன்றாம் கட்ட ஆய்வில் உள்ளது. இருப்பினும் அவசர கால ஒப்புதலுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இது மகாராஷ்டிரா, தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஜார்க்கண்ட், பீகார், மேற்கு வங்கம் ஆகிய 7 மாநிலங்களில் பொது சோதனைக்கு வந்துள்ளது. கோவாக்சின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் ‘கோவாக் சின்’ தடுப்பூசியை, 12 வயதுக்குக் கீழ் உள்ள (2-18 வயது)குழந்தைகளுக்கு செலுத்த ஆய்வு நடந்துவருகிறது. இரண்டாம் / மூன்றாம் கட்ட நிலையில் இந்த ஆய்வுகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் அவசரகாலப் பயன்பாட்டுக்கு இதை குழந்தைகளுக்கு பயன்படுத்தலாம் என இந்தியா பரிந்துரை செய்துள்ளது. இருப்பினும் அதற்கு இன்னும் இந்திய மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டாளர் அலுவலகம் ஒப்புதல் வழங்கவில்லை. சீரம் நிறுவனத்தின் கோவாவாக்ஸ் 2 - 17 வயதுடைய குழந்தைகள் மத்தியில் இந்த மருந்துக்கான ஆய்வு நடக்கிறது. இதற்கும், இரண்டாம்/மூன்றாம் கட்ட நிலையில் ஆய்வுகள் இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 920 பேர் மத்தியில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பயோலாஜாக்கில்-இ நிறுவனத்தின் ஆர்.பி.டி தடுப்பூசி 5 - 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மத்தியில் தனது ஆய்வை மேற்கொண்டு வருகிறது. இதன் ஆய்வும் இரண்டாம்/மூன்றாம் கட்ட நிலையில் இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 624 பேர் மத்தியில் இந்த ஆய்வு கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் ஏடி.2எஸ் தடுப்பூசி இது, 12 - 17 வயதுக்குட்பட்ட பதின் பருவ குழந்தைகள் மத்தியில் தனது ஆய்வை மேற்கொண்டு வருகிறது. இரண்டாம் / மூன்றாம் கட்ட நிலையில் ஆய்வுகள் உள்ளன. 920 பேர் மத்தியில் இந்த ஆய்வுகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றது. ஐந்து தடுப்பூசிகளிலும், ஒவ்வொன்றும் 2 - 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்குமே தடுப்பூசி கிடைக்கும் வகையில் வெவ்வேறு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்தத்தகவல்களை,நாடாளுமன்றத்தில் ஒன்றிய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் கூறியிருந்தார். உலகளவில் அமெரிக்கா, கிரீஸ், இத்தாலி, இந்தோனேஷியா, ஸ்பெயின், சுவீடன், பின்லாந்து, சுவிட்சர்லாந்து, கனடா, அர்ஜென்டி னா, கியூபா, கொலம்பியா, ரஷ்யா, நார்வே, பஹ்ரைன், இஸ்ரேல், சவூதி அரேபியா உட்பட பல நாடுகள் குழந்தைகளை கொரோனாவில் இருந்து பாதுகாக்க தடுப்பூசிகளை வழங்கி வருகின்றன. ஒவ்வொரு நாடும், வெவ்வேறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி தருகிறது. உதாரணத்துக்கு, இந்தோனேஷியா 6- 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு; கனடா 12 - 17 வயதுக்குட்பட்டோருக்கு; அமெரிக்கா 5 - 18 வயதுக்குட்பட்டோருக்கு என தடுப்பூசி வழங்கி வருகிறது. அந்தந்த நாடுகள் செய்த ஆய்வின்படி வயது நிர்ணயிக்கப்படுகிறது. தடுப்பூசி தினம் வயது மட்டுமன்றி குழந்தைகளின் உடல்நல னும் கவனத்தில் கொள்ளப்பட்டு தடுப்பூசி போடப் படுவதாக சொல்லப்படுகிறது. உதாரணத்துக்கு டென்மார்க்கில் தொற்றுக்கான சாத்தியமுள்ள குழந்தைகளுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது. இதுவே இத்தாலியில் “தடுப்பூசி யென்பது மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு அது இன்னும் எளி மையாக்கப்பட்டுள்ளது” எனக்கூறப்பட்டு Vax Day (தடுப்பூசி தினம்) என்ற பெயரில் தனி யொரு தினமே இன்று (டிச.15) கொண்டாடப்பட உள்ளது. குழந்தைகள் மத்தியில் உலக நாடுகள் தடுப்பூசி விநியோகத்தை அதிகரித்து வருவதன் விளைவாக கனடாவில், குழந்தைகளில் கிட்டத்தட்ட 7.25 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஸ்பெயினில் 12 வயதுக்கு மேற்பட்ட 90% பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்னும் இந்த எண்ணிக்கை யை உயர்த்தவும் வாய்ப்புள்ளதாக ஸ்பெயின் கூறுகிறது. இப்படி பல நாடுகள் குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்குவதை கருத்தில் கொண்டு, இந்தி யாவிலும் சிறார்களுக்கான தடுப்பூசி விநியோ கத்தை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும், அதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட வேண்டுமென்று மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


குரூப் - 1' தேர்வு: 'ரிசல்ட்' வெளியீடு #tnpsc2022exams #tnpscgroup1 'குரூப் -1' பதவிகளுக் கான முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட் டுள்ளன

 'குரூப் - 1' தேர்வு: 'ரிசல்ட்' வெளியீடு #tnpsc2022exams #tnpscgroup1 'குரூப் -1' பதவிகளுக் கான முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட் டுள்ளன. தமிழக அரசு துறை களில் காலியாக உள்ள துணை கலெக்டர், டி.எஸ். பி., வணிக வரி உதவி கமி ஷனர், கூட்டுறவு துறை துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி துறை உதவி இயக் குனர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மாவட்ட அதிகாரி ஆகிய பதவிகளில், 66 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்காக, அரசு பணி யாளர் தேர்வாணையம் சார்பில், இந்த ஆண்டு ஜனவரி 3ல் குரூப் 1 முதல் நிலை தேர்வு நடத்தப்பட்தேர்வு டது. இதில் 1.31 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர் வுக்கான விடைத்தாள் திருத்தம் முடிந்து, பிரதான தேர்வுக்கு தகுதி பெற்றவர் களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில், 3,800 பேர் பிரதான தேர்வு எழுத தகுதி பெற்றுள்ளனர். 'இவர்களுக்கு மார்ச் முதல் 6 வரை பிரதான நடத்தப்படும்' என, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கிரண் குராலா தெரிவித் துள்ளார்.