புதன், 15 டிசம்பர், 2021

கோவிட் தடுப்பூசி குழந்தைகளுக்கு எப்போது?

 கோவிட் தடுப்பூசி குழந்தைகளுக்கு எப்போது? 14 December 2021 தீக்கதிர் புதுதில்லி,டிச.14- கொரோனாவின் ஒமைக்ரான் வகை திரிபு பல நாடுகளில் வேகமாக பரவுகிறது. குறிப்பாக பிரிட்டன் போன்ற நாடுகளில் இதன் தாக்கம் தற்சமயம் அதிகம் உள்ளது. இருப்பினும் ஒமைக்ரான் திரிபானது குறைவான அளவே பாதிப்பை ஏற்படுத்துவதாக அறிவியலாளர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர். ஒமைக்ரான் போன்ற புதிய புதிய திரிபுகளிலி ருந்து மக்களை காக்க, பிரிட்டன் உட்பட சில நாடுகளின் அரசுகள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை நோக்கி நகர்ந்து வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை குழந்தைகளுக்கான கொரோ னா தடுப்பூசி அமலாக்கத்தை நோக்கி நகர்கிறது. ஒமைக்ரான் உட்பட இதுவரை பரவிய எல்லா வகை கொரோனா திரிபுகளுமே, தடுப்பூசிக்கு மிகப்பெரிய அளவில் கட்டுப்படுவது நிரூபிக்கப் பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் சிறிய வர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவ ருக்கும் தடுப்பூசியை கொண்டு செல்ல வேண்டும் என்று அரசு முனைந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி இந்திய மக்கள் தொகையில் தடுப்பூசி பெற தகுதியுடையவர்க ளில் (18 வயதுக்கு மேற்பட்டோர்) சுமார் 50% பேர் இரு டோஸ் தடுப்பூசியும்; கிட்டத்தட்ட 90% முதல் டோஸ் தடுப்பூசியும் பெற்றுள்ளனர் என ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் முன்னாள் இணைச் செயலாளர் ராகேஷ் குமார் பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார். “ஹர் கர் தஸ்தக்” என்ற மெகா தடுப்பூசி முகாம் மூலம் இந்தியா முழுவதும் சுகாதாரப் பணியாளர்கள் அனைத்து வீடுகளுக்கும் சென்று தடுப்பூசி போடும் பணியை மேற்கொண்டு வரு கின்றனர். இந்த திட்டத்தின்கீழ் ஒன்றிய அரசுத் தரப்பிலிருந்து ‘இந்தியாவில் பூஸ்டர் டோஸ் பயன்பாடு’ குறித்து முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், அதற்கு முன்ன தாக குழந்தைகளுக்கான தடுப்பூசியை அமலுக்கு கொண்டுவரவே அரசு வேகமாக முனைந்து வருகிறது எனத் தெரிகிறது. தற்போது வரை, ஒன்றிய மருத்து கட்டுப்பாட்டு வாரியத்தின் பரிந்து ரையின் கீழ், 5 கொரோனா தடுப்பூசிகள் குழந்தை கள் மத்தியிலான ஆய்வுநிலையில் உள்ளன. கேடிலா ஹெல்த்கேர் நிறுவனத்தின் சைகோவ் டி இந்த தடுப்பூசி 12 - 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான மூன்றாம் கட்ட ஆய்வில் உள்ளது. இருப்பினும் அவசர கால ஒப்புதலுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இது மகாராஷ்டிரா, தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஜார்க்கண்ட், பீகார், மேற்கு வங்கம் ஆகிய 7 மாநிலங்களில் பொது சோதனைக்கு வந்துள்ளது. கோவாக்சின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் ‘கோவாக் சின்’ தடுப்பூசியை, 12 வயதுக்குக் கீழ் உள்ள (2-18 வயது)குழந்தைகளுக்கு செலுத்த ஆய்வு நடந்துவருகிறது. இரண்டாம் / மூன்றாம் கட்ட நிலையில் இந்த ஆய்வுகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் அவசரகாலப் பயன்பாட்டுக்கு இதை குழந்தைகளுக்கு பயன்படுத்தலாம் என இந்தியா பரிந்துரை செய்துள்ளது. இருப்பினும் அதற்கு இன்னும் இந்திய மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டாளர் அலுவலகம் ஒப்புதல் வழங்கவில்லை. சீரம் நிறுவனத்தின் கோவாவாக்ஸ் 2 - 17 வயதுடைய குழந்தைகள் மத்தியில் இந்த மருந்துக்கான ஆய்வு நடக்கிறது. இதற்கும், இரண்டாம்/மூன்றாம் கட்ட நிலையில் ஆய்வுகள் இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 920 பேர் மத்தியில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பயோலாஜாக்கில்-இ நிறுவனத்தின் ஆர்.பி.டி தடுப்பூசி 5 - 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மத்தியில் தனது ஆய்வை மேற்கொண்டு வருகிறது. இதன் ஆய்வும் இரண்டாம்/மூன்றாம் கட்ட நிலையில் இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 624 பேர் மத்தியில் இந்த ஆய்வு கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் ஏடி.2எஸ் தடுப்பூசி இது, 12 - 17 வயதுக்குட்பட்ட பதின் பருவ குழந்தைகள் மத்தியில் தனது ஆய்வை மேற்கொண்டு வருகிறது. இரண்டாம் / மூன்றாம் கட்ட நிலையில் ஆய்வுகள் உள்ளன. 920 பேர் மத்தியில் இந்த ஆய்வுகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றது. ஐந்து தடுப்பூசிகளிலும், ஒவ்வொன்றும் 2 - 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்குமே தடுப்பூசி கிடைக்கும் வகையில் வெவ்வேறு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்தத்தகவல்களை,நாடாளுமன்றத்தில் ஒன்றிய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் கூறியிருந்தார். உலகளவில் அமெரிக்கா, கிரீஸ், இத்தாலி, இந்தோனேஷியா, ஸ்பெயின், சுவீடன், பின்லாந்து, சுவிட்சர்லாந்து, கனடா, அர்ஜென்டி னா, கியூபா, கொலம்பியா, ரஷ்யா, நார்வே, பஹ்ரைன், இஸ்ரேல், சவூதி அரேபியா உட்பட பல நாடுகள் குழந்தைகளை கொரோனாவில் இருந்து பாதுகாக்க தடுப்பூசிகளை வழங்கி வருகின்றன. ஒவ்வொரு நாடும், வெவ்வேறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி தருகிறது. உதாரணத்துக்கு, இந்தோனேஷியா 6- 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு; கனடா 12 - 17 வயதுக்குட்பட்டோருக்கு; அமெரிக்கா 5 - 18 வயதுக்குட்பட்டோருக்கு என தடுப்பூசி வழங்கி வருகிறது. அந்தந்த நாடுகள் செய்த ஆய்வின்படி வயது நிர்ணயிக்கப்படுகிறது. தடுப்பூசி தினம் வயது மட்டுமன்றி குழந்தைகளின் உடல்நல னும் கவனத்தில் கொள்ளப்பட்டு தடுப்பூசி போடப் படுவதாக சொல்லப்படுகிறது. உதாரணத்துக்கு டென்மார்க்கில் தொற்றுக்கான சாத்தியமுள்ள குழந்தைகளுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது. இதுவே இத்தாலியில் “தடுப்பூசி யென்பது மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு அது இன்னும் எளி மையாக்கப்பட்டுள்ளது” எனக்கூறப்பட்டு Vax Day (தடுப்பூசி தினம்) என்ற பெயரில் தனி யொரு தினமே இன்று (டிச.15) கொண்டாடப்பட உள்ளது. குழந்தைகள் மத்தியில் உலக நாடுகள் தடுப்பூசி விநியோகத்தை அதிகரித்து வருவதன் விளைவாக கனடாவில், குழந்தைகளில் கிட்டத்தட்ட 7.25 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஸ்பெயினில் 12 வயதுக்கு மேற்பட்ட 90% பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்னும் இந்த எண்ணிக்கை யை உயர்த்தவும் வாய்ப்புள்ளதாக ஸ்பெயின் கூறுகிறது. இப்படி பல நாடுகள் குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்குவதை கருத்தில் கொண்டு, இந்தி யாவிலும் சிறார்களுக்கான தடுப்பூசி விநியோ கத்தை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும், அதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட வேண்டுமென்று மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக