ஞாயிறு, 14 ஜூன், 2020

*☀திராவிட முன்னேற்றக்கழகத்தின் மாவட்டச்செயலாளர்கூட்டம் பாவலர்.திரு.க.மீ.,அவர்களுக்கு அஞ்சலி*

திராவிட முன்னேற்றக்கழகத்தின் மாவட்டச்செயலாளர்கூட்டம் பாவலர்.திரு.க.மீ.,அவர்களுக்கு அஞ்சலி


தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில்  காணொளி காட்சி மூலம் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், மறைந்த சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன், மின்வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுச் செயலாளர் சிங்கார இரத்தினசபாபதி, பாவலர் க. மீனாட்சிசுந்தரம், நாகை மாவட்ட முன்னாள் செயலாளர் அம்பலவாணன், இனமான பேராசிரியரின் மகள் மணமல்லி ஆகியோரது மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

DSE Proceedings_ அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் கணித ஆசிரியர்களுக்கு பயிற்சி 12.6.2020



*🌟கொரோனாவுக்கான சிகிச்சை வழங்குவதில் மிக முக்கிய பங்காற்றும் சென்னை மருத்துவக் கல்லூரி (எம்.எம்.சி) மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் டீன் மதிப்புமிகு.* *ஆர்.ஜெயந்தி அவர்கள் விடுமுறையில் சென்றிருக்கிறார்.*

கொரோனாவுக்கான  சிகிச்சை வழங்குவதில் மிக முக்கிய பங்காற்றும் சென்னை மருத்துவக் கல்லூரி (எம்.எம்.சி) மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் டீன் மதிப்புமிகு.
ஆர்.ஜெயந்தி அவர்கள்  விடுமுறையில் சென்றிருக்கிறார்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், பரமத்தி ஒன்றியம்(கிளை). -------------------------------- *ஒன்றியச் செயற்குழுக் கூட்டம் அழைப்பு* --------------------------------

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
பரமத்தி ஒன்றியம்(கிளை).
--------------------------------
*ஒன்றியச் செயற்குழுக் கூட்டம் அழைப்பு*
--------------------------------
இடம்:பரமத்தி வட்டாரக்கல்வி அலுவலகம் அருகில்.

நாள்:15.06.2020-திங்கள்.
நேரம்: மாலை 04.30மணி

*தலைமை:*
திரு.ந.ரங்கசாமி

ஒன்றியத்தலைவர்.
*முன்னிலை:*
திருமதி.கு.பத்மாவதி.

ஒன்றியப்பொருளாளர்,

திரு.ப.சதீசு

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்.

*தொடக்க உரை:*
திரு.மெ.சங்கர்,
மாவட்டச்செயலாளர்.

*பொருள்:*
1)பொதுச்செயலாளர்-பாவலர் திரு.க.மீ.,அவர்களுக்கு
புகழ் அஞ்சலி செலுத்துதல்.
2)வட்டாரக்கல்வி அலுவலகச் செயல்பாடுகள்.
3) ஒன்றிய  ஆசிரியர் கோரிக்கைகள் .
4)எதிர்கால நடவடிக்கைகள்.
5)பிற.

*இயக்க உரை:*
முருகசெல்வராசன்,
மாநிலச்செயலாளர்.

*அனைவரும் தவறாது வாரீர்!*

க.சேகர்,
ஒன்றியச்
செயலாளர்.

Math App for Kids...

click here for download...

*🎤பேச்சுரிமை,* *எழுத்துரிமை,* *கருத்துரிமையை மறுக்கலாமா?* *நடத்தை விதி என்ற பெயரில் தடுக்கலாமா?* *உள்நோக்கம் உடைய செயல்முறை பிறப்பிக்கலாமா?* -------------------------------- *வாய்ப்பூட்டு சிறந்த செயலாகாது !*


பேச்சுரிமை,
எழுத்துரிமை,
கருத்துரிமையை மறுக்கலாமா?

 நடத்தை விதி என்ற பெயரில் தடுக்கலாமா?

உள்நோக்கம் உடைய செயல்முறை பிறப்பிக்கலாமா?
--------------------------------
வாய்ப்பூட்டு  சிறந்த செயலாகாது !
--------------------------------

ஆங்கிலேயே அரசாங்கம் இந்தியாவை ஆண்ட பொழுது இந்தியமக்கள் ஆங்கிலேய அரசின் முறையற்ற சட்டங்களால் ,
நடவடிக்கைகளால்,
செயல்பாடுகளால்
வரி-வசூல்களால், பல்வேறு வகை சுரண்டல்களால்  சொல்லொண்ணாத்  துன்ப-துயரங்களை அன்றாடம் அனுபவித்தனர்.

ஆங்கிலேய அரசால் அடைந்த இன்னல்களை கண்டித்தும்,
ஆட்சேபித்தும்,
எதிர்த்தும்,
முறையற்றச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும்
 இந்திய விடுதலைப்்போராட்ட  வீரர்களும் -
தீரர்களும் கூடியும்,பேசியும், எழுதியும்
,கூத்து நடத்தியும்
,நாடகம் போட்டும்,
பாடல்கள் பாடியும்,
வீரமிகு கதைகள் சொல்லியும்
 இந்திய மக்களை
 அணி திரட்டி  அறவழியிலும் ,
ஆயுதம் ஏந்தியும்  தொடர்ந்து போராடினர்.
ஆங்கிலேய அரசின் நடவடிக்கைகளை தொடர்ந்து கடுமையாக விமர்ச்சித்து வந்தனர்.
மக்களை விழிப்படையச் செய்தனர்.

அத்தகைய காலக்கட்டத்தில் ஆங்கிலேய அரசு போராட்டங்களை நசுக்குவதற்காகவும்,
பொதுமக்களை அச்சுறுத்துவதற்காகவும்,
அரசுக்கு எதிரான கருத்துகள் பரவலை தடுப்பதற்காகவும் பல்வேறு கடுமையான சட்டங்களை பிறப்பித்தது;
கொடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

" இம் "என்றால் சிறைவாசம்,
" ஏன் "என்றால் வனவாசம் என்று காட்டாட்சி நடத்திய ஆங்கிலேயர் அரசு ,
தனது அரசின் கொள்கைகளை எவரும் எதிர்த்து பேசக்கூடாது,
எழுதக்கூடாது என்பதற்காக பல்வேறு கொடுஞ்சட்டங்களை கொண்டு வந்து மக்களை  வாட்டி வதைத்தது.

அத்தகு கொடும் நடவடிக்கைகளின் நீட்சி - தொடர்ச்சி  இன்றளவும் காணப்படுகிறது என்று  சொல்லப்படுகின்றது.
இப்பணியாளர் நடத்தை விதிகளின் ஒருசில பிரிவுகள் அத்தகு கறுப்புச்சட்டங்களுக்கு
ஒத்ததாகும் - இணையானதாகும்  என்று சொன்னால் அதொன்றும் மிகையாகாது;
தவறாகாது.

இத்தகு  பணியாளர் நடத்தை விதிகள் காலத்தின் தேவைக்கேற்ப
திருத்தம் செய்யப்பட
வேண்டும்!
ஆசிரியர்-அரசு ஊழியர்களை அச்சுறுத்துவதற்காக பயன்படுத்தப் படுவது கைவிடப்பட வேண்டும்!
தந்தைபெரியார் பூமியில்  இருந்து இச்செயல்முறை வெளியாவது வேதனையளிக்கிறது!இச்செயல்முறை கவலைத்தருகிறது!
இச்செயல்முறை உள்நோக்கம் உடையதாகும்!

பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினர்சான்று வழங்குதல் கூடாது! தமிழக அரசு ஆணை!

பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினர்சான்று வழங்குதல் கூடாது!
தமிழக அரசு ஆணை!

*🌐ஜூன் 14, வரலாற்றில் இன்று:கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் பிறந்த தினம் இன்று.*

ஜூன் 14, வரலாற்றில் இன்று.

கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் பிறந்த தினம் இன்று.

மனிதனின் ரத்த வகையைக் கண்டறிந்த கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் 1868-ஆம் ஆண்டு ஜூன் 14 அன்று ஆஸ்திரியாவின் வியன்னாவில் பிறந்தவர்.  உயிரியலாளரான இவர், 1901ஆம் ஆண்டு வெவ்வேறு நபர்களின் ரத்த மாதிரிகளைக் கொண்டு ஆய்வு செய்தார். அதனடிப்படையில் A, B மற்றும் O என மூன்று வகையான ரத்த வகையைக் கண்டறிந்தார்.  சோதனை முயற்சிகள் வெற்றியடைந்தபின் 1907-ஆம் ஆண்டு முதன் முதலாக நியூயார்க்கின் மௌண்ட் சினாய் மருத்துவமனையில் ரத்த தானம் நடைபெற்றது. இக்கண்டுபிடிப்பிற்காக கார்ல் லேண்ட்ஸ்டெய்னருக்கு 1930ஆம் ஆண்டு உடலியல் மற்றும் மருத்துவத்துறைக்கான நோபல் விருது வழங்கப்பட்டது.

*🌐ஜூன் 14,* *வரலாற்றில் இன்று:தொலைக்காட்சியை கண்டுபிடித்த ஜான் லோகி பைர்டு நினைவு தினம் இன்று.*

ஜூன் 14,
வரலாற்றில் இன்று.

தொலைக்காட்சியை கண்டுபிடித்த ஜான் லோகி பைர்டு நினைவு தினம் இன்று.


ஜான் லோகி பைர்டு (13 ஆகஸ்ட் 1888 - 14 ஜூன் 1946) ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பிரபல கண்டுபிடிப்பாளர். உலகின் முதல் வெளிப்படையாக செயல்முறை செய்து காண்பிக்கப்பட்ட தொலைக்காட்சியை கண்டுபிடித்தவர். மேலும் இவர் வண்ண தொலைக்காட்சிக் குழாய் மற்றும் போனோவிஷன் எனப்படும் ஒளிப்பதிவுக் கருவியையும் கண்டுபிடித்தார்.

*🌐ஜூன் 14, வரலாற்றில் இன்று:உலக இரத்தக் கொடையாளர்கள் தினம் இன்று.*

ஜூன் 14, வரலாற்றில் இன்று.

உலக இரத்தக் கொடையாளர்கள் தினம் இன்று.

இரத்தத்தில் உள்ள வகைகளை முதன்முதலில் கார்ல் லான்ட்ஸ்டைனர் என்பவர் 1901ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார். இதன்மூலம் மனித இரத்தத்தை மற்றொருவருக்கு செலுத்துவது சாத்தியமானது. இரத்த தானம் செய்வதன்மூலம் பலரின் உயிர்கள் காப்பாற்றப்படுகிறது. இரத்தத்தை பணம் பெறாமல் தானம் வழங்குபவர்கள் உள்ளனர். அவர்களை கௌரவிக்கவே உலக இரத்தக் கொடையாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

*🌐சே குவேரா எனும் விடுதலைப் போராளி பிறந்த தினம்.*

ஜூன் 14, வரலாற்றில் இன்று.

சே குவேரா எனும் விடுதலைப் போராளி பிறந்த தினம் இன்று.

இந்த உலகம் மகா சுயநலமானது, போராட வருபவர்கள் கூட தன் இனம், தன் மதம், தன் மொழி, தன் நாடு என்றுதான் போராட வருவார்கள். அப்படித்தான் பல புகழ்பெற்ற போராளிகளை உலகம் கண்டிருக்கின்றது.
ஆனால் முதலும், கடைசியுமாக மனித அடக்குமுறைகு எதிராக, ஒருவன் நாடு கடந்து, எல்லை கடந்து, போராடும் மக்களுக்காக சென்று போராடி உயிர்விட்டான் என்றால் வரலாற்றில் நிலைத்துவிட்ட ஒரே பெயர் சே குவேரா.
அவர் இயற்பெயர் எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா (ஜூன் 14, 1928), அதாவது வாய் நிறைய கூழாங்கற்களை போட்டு, ஸ்பானிய‌ மொழியினை உச்சரித்தால் வரும் பெயர். சே என்பது ஒரு வியப்புச்சொல் என்கின்றார்கள், அதாவது நமது தமிழில் வியப்பின் உச்சத்தில் ஒரு ஆச்சரியமாக‌ சொல்வோம் அல்லவா? அந்த ஆச்சரியமான‌ உச்சரிப்புத்தான் என்கின்றார்கள்.
அர்ஜெண்டினாவில் பிறந்தவர், தந்தை இடதுசாரி, இவர் வீட்டில் பெரிய குடும்பத்தின் செல்லப் பிள்ளை. அக்காலங்களில் ஸ்பெயினை எதிர்த்து பெரும் போராட்டங்கள் நடந்த காலம், குவேரா அந்த பின்னணியில் வளர்ந்தார். ஒரு மனிதன் படிக்கவேண்டிய அத்தனை வரலாறுகளை, அதாவது மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் என சகலரையும் படித்தார்.
முக்கியமாக தென் அமெரிக்க நாடுகளில் முதல் புரட்சியாளனாக கருதப்படும் ஜோஸ் மார்த்தி எனும் பெரும் போராளியினை குருவாகவே நினைத்து வளர்ந்தார்,
பின் மருத்துவக் கல்லூரியில் படித்தார் ஆயினும் விடுமுறையில் மோட்டார் சைக்கிளில் தென் அமெரிக்காவைச் சுற்றினார். மனம் நொந்தார்.
காரணம் இந்த உலகிலே இயற்கை செல்வங்கள் கொட்டிகிடக்கும் பூமி அது, பெய்யாத மழை இல்லை, விளையாத பொருள் இல்லை. தரையினை தோண்டினால் முழுக்க கனிம வளம். ஆனால் மக்கள் ஏழைகள், இதுதான் அவரைச் சிந்திக்க வைத்தன.
அப்பொழுது கியூபா புலிக்கு தப்பி சிங்கத்திடம் விழுந்திருந்தது, அதாவது ஸ்பெயினிடமிருந்து சுதந்திரம் வாங்கி, அமெரிக்க கைப்பொம்மையான பாடிஸ்டாவிடம் சிக்கி இருந்தது. பிடல் காஸ்ட்ரோ கைது செய்யபட்டு நிபந்தனை பேரில் விடுவிக்கபட்டிருந்தார்.

பொதுவாக தென் அமெரிக்க நாடுகள் மகா வித்தியாசனமானவை, எல்லா ஊழலையும் ஆள்பவர் செய்வார், இதுக்குமேல் சுரண்ட ஒன்றுமில்லை என்றவுடன் சொத்து பத்துக்களோடு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிடுவார், அடுத்த அதிபர் வருவார், பின் அவர் சொத்து சேர்க்க ஆரம்பிப்பார்.
கனிம வளத்திற்காக, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் இப்படி ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தன. அப்படி கியூபாவின் பெரும் செல்வம் கரும்பும்  சீனியும்.
நான் இரும்பு மனிதன், எனக்கு பின் அமெரிக்கா இருக்கின்றது என காட்டாட்சி நடத்திகொண்டிருந்த பாடிஸ்டாவிற்கு எதிராக தாககுதல்களை நடத்திக் கொண்டிருந்தார் பிடல் காஸ்ட்ரோ, அது தோல்வியில் முடிந்து கொண்டிருந்தது.
அப்பொழுதுதான் அங்கு சென்றார் சே. அதுவரை நடந்த கொரில்லா முறையினை மாற்றினார். மிக துல்லியமான தாக்குதல்கள். அதன் பின்னணியில் மக்களை இணைக்கும் அரசியல் என கியூபாவில் பெரும் மாற்றத்தை நிகழ்த்திக் காட்டினார், பாடிஸ்டா பறந்தே விட்டார்.
ஆட்சி காஸ்ட்ரோவின் கைகளில் வந்தது. உலகெல்லாம் மிரட்டிய அமெரிக்காவிற்கு தன் காலடியில் பெற்ற தோல்வி சகிக்கவில்லை. ஆனாலும் மக்கள் சக்திமுன் என்ன செய்ய?
ஆட்சிக்கு வந்த காஸ்ட்ரோ, சே க்கு பெரும் பொறுப்புக்களை கொடுக்க முன்வந்தார், கிட்டதட்ட நம்பர் 1 இடம். நினைத்திருந்தால் சாகும்வரை கியூபாவில் ராஜதந்திரியாக வாழும் வாய்ப்பு சே விற்கு வந்தது.
பதவியினை துச்சமாக நினைப்பவன் போராளி. தனக்கு அதில் விருப்பமில்லை. உலகெல்லாம் போராடும் மக்களுக்கு உதவுவதே தன் பணி என சொல்லிவிட்டு , யாருக்கும் சொல்லாமல் கண்டம் கடந்தார்.
ஆம் எல்லை கடந்து கியூபா விடுதலைக்கு போராடியவர், இப்பொழுது ஆப்ரிக்காவின் காங்கோ நாட்டிற்கு வந்தார்.
ஆனால் ஆப்ரிக்கர்களை இணைப்பது அவருக்கு தமிழ்நாட்டில் தமிழர்களை ஒருங்கிணைப்பது போலவே வெகு சிரமாக இருந்தது, ஆளாளுக்கு ஒரு நியாயம் பேசிக்கொண்டிருந்தார்கள். மனம் நொந்த சே மீண்டும் தென் அமெரிக்கா திரும்பினார்.
இந்த காலகட்டத்திற்குள் சே குவாரோவை காணாத அமெரிக்கா, காஸ்ட்ரோ பதவி சண்டையில் கொன்றுவிட்டதாக கதை கட்டிவிட்டது. காஸ்ட்ரோவிற்கும் பதில் சொல்லத் தெரியவில்லை, காரணம் சே இருக்குமிடம் அவருக்கும் தெரியவில்லை,
ஆனால் இப்படிச் சொன்னார், "எனது நண்பன் நிச்சயம் எங்காவது அடிமைப்பட்ட இனத்திற்காக உழைத்துகொண்டிருப்பான்".

மீண்டும் சே வந்து மக்களிடம் தோன்றினார். தென் அமெரிக்கா முழுக்க அவருக்கு ஆதரவு பெருகிற்று. வாழும் லெனினாக கூட அல்ல, அதற்கும் மேலாக உலகம் அவரை கொண்டாடிற்று, அவரின் மனிதநேயம் அப்படி.
கியூபாஅரசின் சார்பாக உலகெல்லாம் சுற்றினார், உலகென்றால் அன்று சுதந்திரம் பெற்றிருந்த நாடுகளின் மக்களைக் காணச் சென்றார். இந்தியாவுக்கும் வந்து இந்திய விவசாயிகளின் நிலையினை கண்டு அதனை நேருவுடன் விவாதித்தார். இந்திய கியூபா உறவுகள் தொடரவேண்டும் என்றார்.
இலங்கைக்குச் சென்று தேயிலை தோட்ட தமிழர்களை சந்தித்தார். உலகிலே மலையக தமிழர்களையும் மனிதர்களாக மதித்து சந்தித்த தலைவர்  அவர்தான்.
இப்படியாக உலகெல்லாம் கொண்டாடப்பட்ட அந்த சே, அமெரிக்காவிற்கு எப்படி எரிச்சலூட்டியிருப்பார். அமெரிக்க தலைமை வேறுவிதமாக சிந்தித்தது, பக்கம் பக்கமாக அறிக்கைகள் மேலிடத்திற்கு அனுப்பபட்டன. அவை இப்படி சொன்னது:
உலகெங்கும் பெரும் செல்வாக்கினைப் பெற்றுவரும் சே, இப்படியே விட்டால் தென் அமெரிக்க நாடுகளை இணைத்து சோவியத் ஒன்றியம் போல ஒன்றை எளிதாக அமைத்துவிடலாம் ( சாத்தியம் இருந்தது). அதாவது மத உரிமைகளில் அவர் விட்டுக்கொடுத்தால் எல்லா கத்தோலிக்க நாடுகளும் இணையத் தயார். ஒரு லெனினை,ஸ்டாலினை மண்டையில் போட்டு தள்ளாததன் விளைவு, நமக்கு நிரந்தர எதிரியினை உருவாக்கிவிட்டது. சே உழைக்கும் மக்களால் கொண்டாடபடுகின்றார் என்றால், அதன் மறுஅர்த்தம் அமெரிக்கவிற்கு அவரின் வளர்ச்சி நல்லதே அல்ல."

அதற்காக சே வினை விமான நிலையத்தில் சுடமுடியாது. சே வின் பெரும் பலவீனம் அல்லது பெரும் பலம் எங்கு உரிமை போராட்டம் நடக்கின்றதோ அங்கு நிற்பது, சண்டையோடு சண்டையாக போட்டு தள்ள திட்டமிட்டது அமெரிக்கா.
சிஐஏ களத்தில் இறங்கிற்று, காஸ்ட்ரோ கடும் பாதுகாப்பில் கியூபாவில் வாழச்சொல்லியும் சொல்லாமல் கொள்ளாமல் பறந்தார் சே.

சிஐஏ கண்ணி வைத்த இடம் பொலிவியா, அங்கு சண்டையினை தீவிரப்படுத்தினார்கள், வழக்கம்போல வந்து நின்றார் சே. சண்டை உச்சத்தை அடைந்தது.
அக்டோபர் 9, 1969... அந்த மாலைபொழுதில் ஒரு ஆற்றைக் கடந்தார். அங்கு ஆடுமேய்த்துக் கொண்டிருந்த பெண்மணியினை பார்த்து பரிதாபப்பட்டு 50 பெசோ கொடுத்து நலம் விசாரித்து சென்றார், அப்பெண்மணி சி.ஐ.ஏ உளவாளி என்பது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.
அமெரிக்கப் படைகள் சுற்றி வளைத்தன. அக்கிராமத்தின் ஒரு பள்ளியில் சிறைவைக்கபட்டார். சுற்றிப் பார்த்து அவர் சொன்ன சொல் வரலாற்றில் நின்றது, "இது என்ன இடம், பள்ளிக்கூடமா? இவ்வளவு அசுத்தமா?, நல்ல பள்ளிக் கூடங்கள் நாட்டின் பெரும் தேவையல்லவா!"
சாகும்பொழுதும் எப்படி சிந்தித்திருக்கிறார் பார்த்தீர்களா? இதுதான் சே.
விசாரித்து தீர்ப்பளித்தால் சிக்கல் பெரிதாகும். உலகம் கொந்தளிக்கும் எனக் கருதிய அமெரிக்கா அங்கேயே சுட்டுகொல்லத் தீர்மானித்தது. நெஞ்சை நிமிர்த்தி இரு கைகளையும் விரித்து நின்றார் அவர், அன்று அவருக்கு வயது வெறும் 39.
எல்லை கடந்து வந்து தனது நாட்டிற்காய் போராடிய ஒப்பற்ற தலைவன் சே வின் மரணம் கியூபா மக்களை மட்டுமல்ல, உலக மக்களையே சோகக்கடலில் ஆழ்த்தியது
அவரை சுட்டவீரன் சொன்னான், "முகத்தில் தாடியோடு, கலைந்த முடியோடு அவர் கைவிரித்து நின்ற சே வின் காட்சி அப்படியே இயேசுபிரானை கண்முன் நிறுத்திற்று" என சொல்லி பின்னர் அழுதான்.

அது நிதர்சனமான உண்மை. ஒடுக்கப்பட்டோருக்கு போராடிய இயேசுவின் வரிசையில் நிச்சயம் இந்த நாத்திக சே விற்கும் இடம் உண்டு.
ஒரு தேசத்தில் போராடச் சென்றபொழுது அவரிடம் கேட்டார்கள், "எங்களுக்காக நீங்கள் ஏன் போராடவேண்டும்? என்ன அவசியம்"
ஆஸ்துமா நோயாளியான அவர், அன்று நோயின் அதிக தாக்கத்திலும் மெதுவாக சொன்னார், "அக்கிரமத்தினை கண்டு, விடுதலைக்காக போராடினால் நீ நிச்சயமாக எனது நண்பன்"
இன்று அவரின் பிறந்த தினம். அவரை நினைவு கூற கம்யூனிஸ்டாகவோ அல்லது தென் அமெரிக்கனாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை.
சக மனிதனை நேசிக்கத் தெரிந்த, உலகெல்லாம் சிதறி ஈழத் தமிழரை போல அகதிகளாய் வாழும், சிரியாவிலிருந்து, லிபியாவிலிருந்து, பர்மாவிலிருந்து பராரியாய் திரியும் மனிதர்களைப் பார்த்து ஒரு துளி கண்ணீர் விடும் மனம் போதும்.
மகான்களும், அவதாரங்களும் மட்டும் நிலையான அடையாளத்தைப் பெறுவதில்லை, மனிதனை மனிதனாக நேசிக்கத் தெரிந்த யாரையும் இந்த உலகம் மறக்காது.
அதில் சே என்றும் முதல் இடத்தில் இருப்பார்.
ஈழ மலையகத்தில் அவர் தன் கையினால் நட்டுவைத்த மரம் இன்றும் உண்டு. அது பெரிதாக வளர்ந்திருக்கும் அளவிற்கு இன்று அங்கு பிரச்சினைகளும் வளர்ந்திருக்கின்றன.

ஒன்றுமட்டும் உண்மை, சே வின் சம காலத்தில் ஈழப் போராட்டம் தீவிரமடைந்திருந்தால், நிச்சயம் அவர்களோடு இணைந்து கொள்ள சே ஓடிவந்து முதல் ஆளாக நின்றிருப்பார்.
காரணம் இதுவரை வரலாறு கண்ட மனிதநேயமிக்க போராளிகளில் எல்லை கடந்து மனிதம் வாழட்டும் எனப் போராடிய ஒரே போராளி சே மட்டுமே. சே குவாரேவிடம் தன்னலம் என்பதெல்லாம் இல்லை, அவர் மனதில் நிறைந்திருந்த தெல்லாம் மானிட நேயம் மட்டுமே.
அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு என்றான் வள்ளுவன், சே உயிரையும் கொடுத்து உயர்ந்து நின்றான், வரலாற்றில் நின்றான்.
அவனுக்கு அழிவே இல்லை.

*🌐ஜூன் 14, வரலாற்றில் இன்று:உலக வலைப்பதிவர் தினம் இன்று.*

ஜூன் 14, வரலாற்றில் இன்று.

உலக வலைப்பதிவர் தினம் இன்று.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மறைந்திருக்கும் படைப்பாக்கத் தாகமும் எழுதிய பதிவுகள் உடனே உலகெங்கும் பரவும் வேகமும் வலைப்பதிவுகளின் பரவலாக்கத்திற்கு அடிப்படைக் காரணங்களாகின்றன. உலக வலைப்பதிவுகளின் வரலாறு 1999 ஆம் ஆண்டில்தான் தொடங்குகிறது. கடந்த 16 ஆண்டுகளில் வலைப்பதிவுகள் பெற்றிருக்கும் வெற்றி நம்மை மலைக்க வைக்கிறது. வரும் காலங்களில் வலைப்பதிவுகள் எட்டிப்பிடிக்கப் போகும் சிகரங்கள் எத்தனையோ?