வியாழன், 18 ஆகஸ்ட், 2022

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ‌கபிலர்மலை ஒன்றியச் செயற்குழுக்கூட்ட நிகழ்வுகள் 18.08.2022

 கபிலர்மலை ஒன்றியப்

பொறுப்பாளர்களுக்கு 

பாராட்டு! வாழ்த்து!

💐💐💐💐💐💐💐💐


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ‌கபிலர்மலை ஒன்றியச் செயற்குழுக்கூட்டம் 

பொத்தனூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில்  18.08.2022 அன்று ஒன்றியத் தலைவர் திரு.ந.மணிவண்ணன் தலைமையில்,

மாவட்ட தணிக்கைக் குழு உறுப்பினர் திரு.த.தண்டபாணி, 

மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் திரு.இரா.ரவிக்குமார் ஆகியோர் 

முன்னிலையில் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் ...


ஒன்றியச் செயலாளராக 

திரு இர.மணிகண்டன் ,

(இடைநிலை ஆசிரியர், ஊ.ஒ.ந.நி.பள்ளி- சேளூர் செல்லப்பம்பாளையம்) 


ஒன்றிய இளைஞரணி அமைப்பாளராக 

திரு பா. நிர்மல்குமார் ( இடைநிலை ஆசிரியர்,  ஊ.ஒ.ந.நி.பள்ளி - வெங்கமேடு ) 



ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.



ஏனைய ஒன்றியப் பொறுப்பாளர்கள் அவரவர் முன்பு வகித்து வந்த அவரவர் 

பொறுப்புகளிலேயே தொடர்வது என்று இக்கூட்டத்தில் முடிவாற்றப்பட்டது. 



மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்

திரு ப.சதிஷ் , பரமத்தி ஒன்றியச் செயலாளர் 

திரு க.சேகர், மாவட்டச் செயலாளர் 

திரு.மெ.சங்கர்,

 ஆகியோர் 

தேர்வு செய்யப்பட்டுள்ள ஒன்றியப் பொறுப்பாளர்களுக்கு பாராட்டுத் தெரிவித்து வாழ்த்துரை வழங்கினர்.


மாநிலப்பொருளாளர் திரு.முருகசெல்வராசன்‌ இயக்கப் பேருரை ஆற்றினார்.


ஒன்றியச் செயலாளர் திரு.இர.மணிகண்டன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் திரு பா.நிர்மல்குமார் ஏற்புரை ஆற்றினர்


கூட்ட நிறைவில் ஒன்றியப் பொருளாளர் 

திரு.பொ.முத்துசாமி நன்றி நவின்றார்.


இக்கூட்டத்தில் 15 பெண் ஆசிரியர்கள் உள்பட 35 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.









தலைமை உரை... 
ஒன்றியத்தலைவர் திரு.ந.மணிவண்ணன் அவர்கள்..

தொடக்கவுரை...
மாவட்டச் செயலாளர் திரு மெ.சங்கர் அவர்கள்..
இயக்கப் பேருரை...
மாநிலப் பொருளாளர் திரு.முருக செல்வராசன் அவர்கள்..
வாழ்த்துரை..
மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு.இரா.இரவிக்குமார் அவர்கள்..
பாராட்டுரை..
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு.ப.சதீஷ் அவர்கள்..
வாழ்த்துரை..
பரமத்தி ஒன்றியச் செயலாளர் திரு.க.சேகர் அவர்கள்..
நன்றியுரை..
ஒன்றியப் பொருளாளர் திரு.பொ.முத்துசாமி அவர்கள்..

கூட்டத்தில் கலந்துக்கொண்ட மன்ற மறவர்கள், மறத்தியர்கள்...






G.O.No.254/18.08.2022 தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படியை 3% உயர்த்தி அரசாணை வெளியீடு!