திங்கள், 29 ஜனவரி, 2018

வருமான வரி செய்திகள்...


✍ஆசிரியர்கள் கவனத்திற்கு  நிதி ஆண்டிற்கு Quarter 1,2,3&4 என வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் அதை தாங்கள் தான் தாக்கல் செய்ய வேண்டும் என கல்வி அலுவலர் தலைமை ஆசிரியர் கூட்டத்தின் வாயிலாக கூறியிருப்பார்.........

✍Income Tax Act -1961 ல் Section 203 ன் படி சம்பளம் பெற்று தரும் அலுவலர் தான் நாம் வாங்கும் ஊதியத்தில் வருமான வரி பிடித்தம் செய்து மத்திய அரசு கணக்கில் செலுத்த வேண்டும்.

✍சம்பளம் வழங்கும் அலுவலர் Section 203 ன் படி Quarter 1,2,3&4 ல் நமது வங்கி கணக்கில் வழங்கப்பட்ட  ஊதியம் (credited pay) மற்றும் ஊதியத்தில் பிடித்தம் செய்த வருமான வரி தொகை (Amount of Tax Deducted) , ஆசிரியரின் வருமான வரி தொகையை மத்திய அரசின் கணக்கில் BIN (Book Identification Number) அல்லது CIN (Challan Identification Number) வழியாக செலுத்தியதை Rule 31(1)(a) ன் Form -16 Part A உறுதிமொழி படிவம் , Part B நிதி ஆண்டில் வழங்கிய ஊதியம் மற்றும் வருமான வரி பிடித்தம் செய்த தொகை Annexure நமக்கு வழங்க வேண்டும். இதனுடன் Income Tax Return Form அதாவது ITR-V தர வேண்டும்....

✍ நாம் எவ்வித பணமும் யாரிடமும் கொடுக்க தேவையில்லை...

✍பணம் கொடுக்காமல் இருந்தால் நமக்கு அலுவலர் கட்டாயம் Income Tax Return Form (ITR-V) வழங்கிவிடுவார்..... 

✍பின் சதுரங்க வேட்டை படம் மாதிரி நம் மனதை வசியப்படுத்தும் வார்தையாக ஆசிரியர்களே தாங்கள் ஏதேனும் வங்கியில் Loan பெற சென்றால் Form-16 கட்டாயம் தேவைப்படும். ஆகையால், Form-16 தேவைப்படுபவர்கள் ரூ.200 கொடுத்து வாங்கி கொள்ளுங்கள் என கூறும் நிலை தொடரும்.....
 
✍வருமான வரி தாக்கல் செய்யும் போதே Automatically generate Form -16 ...... .                               ✍வருமான வரி பிடித்தம் செய்வது சம்பளம் வழங்கும் அலுவலரின் கடமை. Form-16 வழங்குவதும் Drawing Offer கடமை.

✍தமிழ்நாடு  நிதி விதி தொகுப்பு 86(a) -ன்படி வருமான வரி பிடித்தம் IT சம்மந்தப்பட்ட அலுவலர் மற்றும் பணம் பெற்று வழங்கும் அலுவலரே பொறுப்பாளர்.

✍தங்களது ஊதியத்தில் வருமான வரி பிடித்தம் செய்து Form-16 ஐ சம்பளம் வழங்கும் அலுவலர் தர மறுத்தால் புகார் அளிக்கும் முகவரி👇

The Commissioner,
Income Tax (TDS) ,
7th Floor , New Block ,
Aayakar Bhawan ,
121, M.G.Road ,
Chennai-34.

நாமகிரிப்பேட்டை ஒன்றிய ஆசிரியர்களுக்கு சேலம்மாநகராட்சிக்குரிய 1(பி)வீட்டு வாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படி கோரும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமகிரிப்பேட்டை ஒன்றியச்செயலாளர் திரு.சி.மோகன்குமார் அவர்களின் கடிதம்...

ஆதார் அடையாள ஆவணம் மட்டுமே,ஆதார் ஆணையம்...


புதுடில்லி: ஆதார் அடையாள ஆவணம் மட்டுமே
என ஆதார் ஆணையம், விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து இந்திய பிரத்யேக அடையாள ஆணையத்தின் (யு.ஐ.டி.ஏ.ஐ.,) சி.இ.ஓ., அஜய் பூஷன் பாண்டே டுவிட்டரில் அளித்த பதிலில் தெரிவித்ததாவது: ஆதார் விவரங்களில் கை ரேகை பதிவு, கண் விழி படலம் மற்றும் புகைப்படம் மட்டுமே பதிவுசெய்யப்படுகிறது. இதன்மூலம் போலி அடையாள ஆவணம் உருவாக்கப்படுவது தடுக்கப்படும்.

வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்தால் கணக்கு விவரங்களை யு.ஐ.டி.ஏ.ஐ.,யால் பார்க்க முடியாது. ஆதார் அடையாள ஆவணம் மட்டுமே. வங்கி கணக்கை மத்திய அரசு முடக்கும் என்ற அச்சம் மக்களுக்கு வேண்டாம். ஆதார் தகவல்கள் எதுவும் கசியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCHOOL CALENDAR, FEBRUARY~2018...

பொதுக்கல்வியை வலுப்படுத்துவோம்...

EMIS மற்றும் AADHAR சார்பான கூட்டம்(30-01-18)~நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்…

தமிழக அரசு அலுவலகங்களில் கடிதங்களில் பயன்படுத்தப்படும் ந.க.எண். / ஓ.மு.எண். / மூ.மு.எண். / நி.மு.எண். / ப.மு.எண். / தொ.மு.எண். / ப.வெ.எண். / நே.மு.க.எண். என்றால் என்ன?~விளக்கம்...

மத்திய அரசின் தேர்வுகளை எதிர்கொள்ள வரும் பிப்ரவரி-3 ம் தேதிக்குள் 412 பயிற்சி மையங்கள்~அமைச்சர் தகவல்...

விபத்தில் தாய்/ தந்தை இறந்தாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ கல்வி உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பம்...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்-நாமக்கல் மாவட்ட கிளையின் ஒன்றிய செயலாளர்கள் கூட்டம்(27.01.2018) -இராசிபுரம் ~நாளிதழ் செய்திகள்...