சனி, 6 ஜூன், 2020

நாமக்கல் மாவட்டத்தில் 308 மையங்களில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு...

10ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்கள்ஆன்லைன் மூலம் ஹால்டிக்கெட் பெறலாம்...

*☀Income Tax News - வருமான வரி கணக்குத் தாக்கல் ITR(Filing of Income Tax Return) பணியை தொடங்கலாம்.*

*☀Income Tax News - வருமான வரி கணக்குத் ITR பணியை தொடங்கலாம்.*
*அனைவருக்கும் வணக்கம்!!*


*2019-20 நிதியாண்டிற்கான (Financial Year) அதாவது 2020-21 மதிப்பீட்டு ஆண்டிற்கான (Assessment Year) வருமான வரி கணக்குத் தாக்கல் (Filing of Income Tax Returns) செய்வதற்கான இணையதளம் https://www.incometaxindiaefiling.gov.in தற்போது தயாராக உள்ளது.*

*வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு முன் Form 26AS ல் நாம் செலுத்திய வருமான வரி சரியாக வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்த பின் ITR பணியை தொடங்கலாம்.*
*எப்போதும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31ம் தேதி  கடைசி நாள் ஆகும். இந்த ஆண்டு கோவிட்-19 காரணமாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிப்பு செய்து மத்திய நிதியமைச்சர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது*

20 ஆண்டுகளாக பொறியியல் படிப்பில் அரியர் வைத்து இருப்பவர்களுக்கு இறுதிவாய்ப்பு- அண்ணா பல்கலைக்கழகம்


முதல் தலைமுறை இளைஞர்கள் தொழில் தொடங்க மானியக் கடன்_மாவட்ட தொழில் மையம் அறிவிப்பு


Provident Fund-Letter_No_1074_Subscription for the old period due to age of retirement on superannuation of superior service employees/teachers extended from 58 years to 59 years - Instructions - Regarding.



*🌐மன்ற வரலாற்றில்இன்று: கடந்தாண்டு.இதே நாளில் (06.06.2019)இனக்காவலர்-.பாவலர் திரு.க.மீ.,அய்யா அவர்களுடன் நாமும்.நாமக்கல் மாவட்டமும்...*

*

🌐மன்ற வரலாற்றில்இன்று: கடந்தாண்டு
இதே நாளில் (06.06.2019)இனக்காவலர்-பாவலர் திரு.க.மீ.,அய்யா அவர்களுடன்  நாமும்.நாமக்கல் மாவட்டமும்...

*🌐ஜூன் 6, வரலாற்றில் இன்று:திரைப்பட பாடலாசிரியர் ஆலங்குடி சோமு நினைவு தினம் இன்று.*

ஜூன் 6,
வரலாற்றில் இன்று.

திரைப்பட பாடலாசிரியர் ஆலங்குடி சோமு நினைவு தினம் இன்று.



ஆலங்குடி சோமு (12 டிசம்பர் 1932 - 6 ஜூன் 1990) தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும், தயாரிப்பாளரும் ஆவார். இந்தியாவின் தமிழக அரசினால் வழங்கப்படும் கலைமாமணி விருது (1973 - 1974) பெற்றுள்ளார்.

தமிழ்நாடு, சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை அடுத்த ஆலங்குடியைச் சேர்ந்தவர் .1960 முதல் 1985 வரை திரைப்பட பாடல்களை எழுதியுள்ளார். 1960இல் வெளிவந்த யானைப்பாகன் திரைப்படத்திற்காக "ஆம்பளைக்கு பொம்பள அவசியந்தான்" என்பது இவர் எழுதிய முதற்பாடல்.

இவர் எழுதிய பாடல் தமிழக அரசியலில் ஒலிக்கும் பல்லவி


ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை.

சில பிரபல பாடல்கள்

ஆண்டவன் உலகத்தின் முதலாளி... (தொழிலாளி)
பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள்...
தாயில்லாமல் நானில்லை தானே எவரும் பிறந்ததில்லை... (அடிமைப் பெண்)
வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒன்று... (பத்தாம்பசலி)
ஒரு கொடியில் (காஞ்சித்தலைவன்)
பொட்டிருந்தும் பூவிருந்தும் (பூம்புகார்)
கத்தியை தீட்டாதே (விளக்கேற்றியவள்)
மலருக்கு தென்றல் (எங்க வீட்டுப் பிள்ளை)
என்னடி செல்லகண்ணு (தேன்மழை)
மேகங்கள் திரண்டுவந்தால் (நான் ஆணையிட்டால்)
வெள்ளி நிலா வானத்திலே (காதல் படுத்தும் பாடு)
ஆடலுடன் பாடலைக்கேட்டு (குடியிருந்த கோயில்)
என்னம்மா ராணி (குமரிக்கோட்டம்)
இரவும் பகலும், கார்த்திகை தீபம் ஆகிய படங்களின் பாடல்கள் அனைத்தையும் இவரே எழுதியுள்ளார்.

*🌐ஜூன் 6, வரலாற்றில் இன்று:பீகார் ரயில் விபத்து தினம் இன்று.*

ஜூன் 6, வரலாற்றில் இன்று.

பீகார் ரயில் விபத்து நடந்த தினம் இன்று.

1981 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி இந்திய ரயில்வே வரலாற்றில் மிக கோரமான விபத்தை சந்தித்த நாளாகும். மான்சி முதல் சஹார்சா நோக்கி பயணித்த இந்த தொடர்வண்டியில் 9 பெட்டிகளில் சுமார் 800 க்கு மேற்பட்ட பயணிகள் இருந்திருக்கலாம், என்று நம்பப்படுகின்றது.

மான்சிலிருந்து சஹார்சா நோக்கி மிக கடுமையான மழையில் பயணித்து கொண்டிருந்த இந்த ரயில் நேபாள நாட்டின் சிவபுரி எனும் இடத்தில் தொடங்கும் பாக்மதி (இந்தியாவின் கங்கை போன்ற பெருமையை நேபாள நாட்டில் பெற்றுள்ளது ) என்ற ஆற்றின் குறுக்கே பாலகாட் எனுமிடத்தில் கடக்க வேண்டிய பாலத்தில் மாடுகள் குறுக்கே வந்ததில் எஞ்சின் ஓட்டுநரின் மிக கடுமையான பிரேக்கினால் தடம் புரண்டதில் 9 பெட்டிகளும் காட்டாற்று வெள்ளத்தில் விழுந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ரெயிலில் பயணித்த பயணிகளில் 400 முதல் 600 பயணிகள் உயிரிழந்திருக்கலாம் என அறியப்படுகின்றது.

1981 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த விபத்தில் 5 நாட்களுக்கு பிறகு 286 சடலங்கள் மீட்கப்பட்டாலும், 300 க்கு அதிகமான மற்றவர்களின் நிலை பற்றிய எந்த தகவலும் இல்லை.

இந்த விபத்திற்கான உண்மையான காரணம் குறித்து எங்கேயும் உறுதியான தகவல் வழங்கப்படவில்லை. மேலும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 400 என குறிப்பிடப்படுகின்றது. இந்திய ரயில் வரலாற்றில் மிக கோரமான விபத்தாக கருதப்படுகின்றது.

*🌐ஜூன் 6, வரலாற்றில் இன்று:கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் பிறந்த தினம் இன்று.*

ஜூன் 6,  வரலாற்றில் இன்று.

கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் பிறந்த தினம் இன்று.

கார்ல் பெர்டினாண்ட் பிரவுன்
(Karl Ferdinand Braun)
 ஜெர்மானியக் கண்டுபிடிப்பாளர். இயற்பியலாளர். கம்பியற்ற தகவல்தொடர்பு முறை, வானொலி மற்றும் தொலைக்காட்சி தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு வித்திட்டவர். கம்பியற்ற தகவல்தொடர்பு முறையில் ஆய்வு செய்து, வானொலியைக் கண்டறிந்த அறிஞர் மார்க்கோனியுடன் 1909-ல் நோபல் பரிசினைப் பகிர்ந்து கொண்டவர்.

கார்ல் பெர்டினாண்ட் பிரவுன், ஜெர்மனியில் உள்ள 'ஹெஸ்ஸன் கேசல்' என்ற பகுதியில் புல்டா என்ற நகரத்தில் 1850 ஆம் ஆண்டு ஜூன் 6 அன்று பிறந்தார். உள்ளூரில் இலக்கணப்பள்ளி ஒன்றில் சேர்ந்து கல்வி பயின்றார். இவர் இளமையில் கல்வியில் ஆர்வம் மிகுந்தவராகவும், அறிவியலில் மிகச் சிறந்த அறிவு படைத்தவராகவும் திகழ்ந்தார். இவர் சிறுவயதிலேயே அறிவியல் கட்டுரைகள் எழுதி அவை அனைத்தும் பல இதழ்களில் வெளியிடப்பட்டன.
அறிவியல் ஆசிரியராக உருவாக வேண்டும் என்ற ஆர்வத்துடன் அறிவியலையும், கணிதத்தையும் பாடங்களாக எடுத்துக்கொண்டு 'மார்பர்க் பல்கலைக் கழகத்தில்' (University of Marburg) சேர்ந்தார். பிறகு பெர்லின் பல்கலைக் கழகத்திற்கு மாறி அங்கு இயற்பியலைச் சிறப்புப் பாடமாக எடுத்துப் படித்தார். 1872-ல் முதுகலைப் பட்டத்தையும் பிறகு முனைவர் பட்டத்தையும் பெற்றார். 1885-ல் அமெலி புக்லர் என்ற பெண்ணை மணந்தார்.

ஆய்வுகள்

மீள்சக்தியுடைய கம்பிகள், சுருள்கள் ஆகியவற்றின் அலைவுகள் (Oscillations of strings and elastic)குறித்து இவருடைய முதல் ஆய்வு அமைந்தது. கம்பிகள் இயங்கும் சூழ்நிலை, கம்பி அசையும் வீச்சின் தனமை ஆகியவற்றைப் பொருத்து அவற்றின் அலைவுகள் எவ்வாறு அமைகின்றன என ஆரய்ந்தார். வெப்ப இயக்கவியல் கொள்கையையும், திடப்பொருள்களின் கரை தன்மை, அழுத்தத்தைப் பொருத்து எவ்வாறு மாற்றமடைகின்றன என்ற ஆய்வினையும் மேற்கொண்டார்.

இவருடைய முதன்மையான ஆய்வுப்பணிகள் மின்னியலைப் பொருத்தே அமைந்தன. ஓம் விதியிலிருந்து மாறுபட்டவைகள் பற்றியும், வெப்ப மூலங்களிலிருந்து மீளும் தன்மை கொண்ட தனிமங்களில் மின்னியக்கு விசையைக் கணக்கிடுவது பற்றியும் ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டார். மின் பகுளிகளில் கரைந்துள்ள உலோக உப்புகளின் மின் கடத்தும் தன்மை பற்றி ஆய்வதில் தனிக்கவனம் செலுத்தினார். அவற்றில் கரையாத உலோக சல்பைடு படிகங்கள், பிற படிக வடிவமுள்ள திடப் பொருள்களின் மின்கடத்தும் தன்மை பற்றி ஆராய்ந்தார்.

பல உலோக சல்பைடுகளில் மின்தடையின் அளவு செலுத்தப்படும் மின்னழுத்தத்தின் திசைகள் மற்றும் அளவுகளைப் பொருத்து மாறுபடுகிறது என்பதைக் கண்டறிந்தார். காரீய சல்பைடு கலந்த குறை மின்கடத்தியான கலினா(galena) என்ற படிகத்தின் மின் திருத்தும் தன்மையை இரு மின்வாயாக உருவாக்கிப் பயன்படுத்தினார். இதுதான் அன்றைய முதல் குறை மின்கடத்தியாகும். அப்போது அதை அதிகமாகப் பயன்படுத்தப்படவில்லை எனினும் 1948 -இலிருந்து இது அதிகமாகப் பயன்பட ஆரம்பித்தது.

1898-இல் கம்பியில்லாத் தந்தி முறை ஆய்வுகளில் கவனஞ்செலுத்தினார். அதிக அதிர்வெண் கொண்ட மின்னோட்டத்தின் உதவியுடன் நீரின் வழியே மோர்ஸ் சைகைகளைப் பரப்பினார். அலைவின் மூடிய சுற்றை இதில் அறிமுகப்படுத்தினார். குறிப்பிட்ட திசைகளில் மின் சைகைகளைச் செலுத்தினார். 1902-ல் சாய்தள அலைபரப்பி சாதனம் மூலம் அனுப்பிய அலைகளைத் திரும்பப் பெறுவதில் வெற்றி கண்டார்.நீரிலும், காற்றிலும் கம்பியில்லாத் தந்திமுறை என்ற தலைப்பில் இவற்றை விவரமாக எழுதி வெளியிட்டார்.

முதல் உலகப் போருக்குப் பிறகு சட்டப்பூர்வமான காப்புரிமை பற்றிய ஒரு வழக்கில் சாட்சி கூறுவதற்காக அமெரிக்கா சென்றார். அதன்பின் இவர் ஆய்வுகளில் ஈடுபடவில்லை. தன்னுடைய இறுதிக்காலத்தை அமெரிக்காவில் கழித்த இவர் 1918, ஏப்ரல் 20 ஆம் நாள் அங்கு காலமானார்.

கார்ல் பெர்டினாண்ட் பிரவுன்
(Karl Ferdinand Braun)
 ஜெர்மானியக் கண்டுபிடிப்பாளர். இயற்பியலாளர். கம்பியற்ற தகவல்தொடர்பு முறை, வானொலி மற்றும் தொலைக்காட்சி தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு வித்திட்டவர். கம்பியற்ற தகவல்தொடர்பு முறையில் ஆய்வு செய்து, வானொலியைக் கண்டறிந்த அறிஞர் மார்க்கோனியுடன் 1909-ல் நோபல் பரிசினைப் பகிர்ந்து கொண்டவர்.

கார்ல் பெர்டினாண்ட் பிரவுன், ஜெர்மனியில் உள்ள 'ஹெஸ்ஸன் கேசல்' என்ற பகுதியில் புல்டா என்ற நகரத்தில் 1850 ஆம் ஆண்டு ஜூன் 6 அன்று பிறந்தார். உள்ளூரில் இலக்கணப்பள்ளி ஒன்றில் சேர்ந்து கல்வி பயின்றார். இவர் இளமையில் கல்வியில் ஆர்வம் மிகுந்தவராகவும், அறிவியலில் மிகச் சிறந்த அறிவு படைத்தவராகவும் திகழ்ந்தார். இவர் சிறுவயதிலேயே அறிவியல் கட்டுரைகள் எழுதி அவை அனைத்தும் பல இதழ்களில் வெளியிடப்பட்டன.
அறிவியல் ஆசிரியராக உருவாக வேண்டும் என்ற ஆர்வத்துடன் அறிவியலையும், கணிதத்தையும் பாடங்களாக எடுத்துக்கொண்டு 'மார்பர்க் பல்கலைக் கழகத்தில்' (University of Marburg) சேர்ந்தார். பிறகு பெர்லின் பல்கலைக் கழகத்திற்கு மாறி அங்கு இயற்பியலைச் சிறப்புப் பாடமாக எடுத்துப் படித்தார். 1872-ல் முதுகலைப் பட்டத்தையும் பிறகு முனைவர் பட்டத்தையும் பெற்றார். 1885-ல் அமெலி புக்லர் என்ற பெண்ணை மணந்தார்.

ஆய்வுகள்

மீள்சக்தியுடைய கம்பிகள், சுருள்கள் ஆகியவற்றின் அலைவுகள் (Oscillations of strings and elastic)குறித்து இவருடைய முதல் ஆய்வு அமைந்தது. கம்பிகள் இயங்கும் சூழ்நிலை, கம்பி அசையும் வீச்சின் தனமை ஆகியவற்றைப் பொருத்து அவற்றின் அலைவுகள் எவ்வாறு அமைகின்றன என ஆரய்ந்தார். வெப்ப இயக்கவியல் கொள்கையையும், திடப்பொருள்களின் கரை தன்மை, அழுத்தத்தைப் பொருத்து எவ்வாறு மாற்றமடைகின்றன என்ற ஆய்வினையும் மேற்கொண்டார்.

இவருடைய முதன்மையான ஆய்வுப்பணிகள் மின்னியலைப் பொருத்தே அமைந்தன. ஓம் விதியிலிருந்து மாறுபட்டவைகள் பற்றியும், வெப்ப மூலங்களிலிருந்து மீளும் தன்மை கொண்ட தனிமங்களில் மின்னியக்கு விசையைக் கணக்கிடுவது பற்றியும் ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டார். மின் பகுளிகளில் கரைந்துள்ள உலோக உப்புகளின் மின் கடத்தும் தன்மை பற்றி ஆய்வதில் தனிக்கவனம் செலுத்தினார். அவற்றில் கரையாத உலோக சல்பைடு படிகங்கள், பிற படிக வடிவமுள்ள திடப் பொருள்களின் மின்கடத்தும் தன்மை பற்றி ஆராய்ந்தார்.

பல உலோக சல்பைடுகளில் மின்தடையின் அளவு செலுத்தப்படும் மின்னழுத்தத்தின் திசைகள் மற்றும் அளவுகளைப் பொருத்து மாறுபடுகிறது என்பதைக் கண்டறிந்தார். காரீய சல்பைடு கலந்த குறை மின்கடத்தியான கலினா(galena) என்ற படிகத்தின் மின் திருத்தும் தன்மையை இரு மின்வாயாக உருவாக்கிப் பயன்படுத்தினார். இதுதான் அன்றைய முதல் குறை மின்கடத்தியாகும். அப்போது அதை அதிகமாகப் பயன்படுத்தப்படவில்லை எனினும் 1948 -இலிருந்து இது அதிகமாகப் பயன்பட ஆரம்பித்தது.

கம்பியில்லாத் தந்தி முறை

1898-இல் கம்பியில்லாத் தந்தி முறை ஆய்வுகளில் கவனஞ்செலுத்தினார். அதிக அதிர்வெண் கொண்ட மின்னோட்டத்தின் உதவியுடன் நீரின் வழியே மோர்ஸ் சைகைகளைப் பரப்பினார். அலைவின் மூடிய சுற்றை இதில் அறிமுகப்படுத்தினார். குறிப்பிட்ட திசைகளில் மின் சைகைகளைச் செலுத்தினார். 1902-ல் சாய்தள அலைபரப்பி சாதனம் மூலம் அனுப்பிய அலைகளைத் திரும்பப் பெறுவதில் வெற்றி கண்டார்.நீரிலும், காற்றிலும் கம்பியில்லாத் தந்திமுறை என்ற தலைப்பில் இவற்றை விவரமாக எழுதி வெளியிட்டார்.

இறுதிக்காலம்

முதல் உலகப் போருக்குப் பிறகு சட்டப்பூர்வமான காப்புரிமை பற்றிய ஒரு வழக்கில் சாட்சி கூறுவதற்காக அமெரிக்கா சென்றார். அதன்பின் இவர் ஆய்வுகளில் ஈடுபடவில்லை. தன்னுடைய இறுதிக்காலத்தை அமெரிக்காவில் கழித்த இவர் 1918, ஏப்ரல் 20 ஆம் நாள் அங்கு காலமானார்.

*🌐ஜூன் 6, வரலாற்றில் இன்று:இந்திய தேசிய காங்கிரசை உருவாக்கிய ஆலன் ஆக்டேவியன் ஹியூம் பிறந்த தினம் இன்று.*

ஜூன் 6, வரலாற்றில் இன்று.

இந்திய தேசிய காங்கிரசை உருவாக்கிய ஆலன் ஆக்டேவியன் ஹியூம் பிறந்த தினம் இன்று.

ஆலன் ஆக்டேவியன் ஹியூம் இங்கிலாந்து நாட்டின் கென்ட் நகரில் 1829-ஆம் ஆண்டு ஜூன் 6-ல் பிறந்தார். மரியா மற்றும் ஜோசப் இவரது பெற்றோர் ஆவர். தந்தை இங்கிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினராவர். ஆலன் கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் பிரிட்டிஷ் இந்தியாவில் 1850-ல் உத்திரப்பிரதேசத்தில் தம் ஐ.சி.எஸ் பணியைத் தொடங்கினார்.

 கிழக்கிந்தியப் படையின் சட்டங்கள் அனைத்தும் இந்திய மக்களின் உழைப்பு, வரி, லாபம் ஆகியவற்றை சுரண்டுவதையே நோக்கமாகக் கொண்டிருந்ததைக் கண்டு ஆலன் ஆக்டேவியன் மனம் வருந்தினார். இந்திய மக்கள் கருத்து சுதந்திரம், ஆங்கிலேயருக்கு நிகரான சம உரிமை, சுரண்டலுக்கெதிரான உரிமை மற்றும் சுதந்திரம் ஆகியவற்றைப் பெற வேண்டுமானால் அமைப்பு ரீதியாக அனைவரும் ஒன்று சேர்ந்து போராட ஒரு தேசிய அமைப்பு தேவை என்பதை உணர்ந்தார்.

 தன் நண்பர் வெட்டர்பர்ன்(மும்பை நகரின் உயர்நீதிமன்ற ஆங்கிலேயே நீதிபதி) ஆலோசனைப்படி இந்தியாவிலேயே எம்.ஜி ரானடே, சுப்பிரமணிய அய்யர், w.c பானர்ஜி ஆகியோர் கலந்து கொண்ட முதல் இந்திய தேசிய காங்கிரஸ் 1885 டிசம்பர் 28-ல் மும்பையில் நடந்தது. இதன் மூலமாக இந்தியர்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஒரே தலைமையின் கீழ் போராடி சுதந்திரம் பெறுவதற்கு ஆங்கிலேயரான ஆலன் ஆக்டேவியன் ஹியூம் வழிவகுத்துச் சென்றார்.

*🌐ஜூன் 6, வரலாற்றில் இன்று:தமிழ் மொழி, செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தினம் இன்று.*

ஜூன் 6, வரலாற்றில் இன்று.

தமிழ் மொழி, செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தினம் இன்று.

செம்மொழி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட முதல் இந்திய மொழி தமிழ்.

2004 - ம் ஆண்டில் ஜூன் 6ந்தேதி, நாடாளுமன்றத்தில் அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தமிழ் மொழியை செம்மொழியாக அறிவித்தார்.

தொன்மை வாய்ந்த தமிழ் மொழி இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஆட்சி மொழியாக இருக்கிறது. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் ஆட்சி மொழிகளுள் ஒன்றாக தமிழ் மொழி உள்ளது. தென்னாப்பிரிக்கா விலும் தமிழ் மொழி அரசியலமைப்பு அங்கீகாரம் பெற்றுள்ளது.