சனி, 6 ஜூன், 2020

*🌐ஜூன் 6, வரலாற்றில் இன்று:தமிழ் மொழி, செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தினம் இன்று.*

ஜூன் 6, வரலாற்றில் இன்று.

தமிழ் மொழி, செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தினம் இன்று.

செம்மொழி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட முதல் இந்திய மொழி தமிழ்.

2004 - ம் ஆண்டில் ஜூன் 6ந்தேதி, நாடாளுமன்றத்தில் அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தமிழ் மொழியை செம்மொழியாக அறிவித்தார்.

தொன்மை வாய்ந்த தமிழ் மொழி இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஆட்சி மொழியாக இருக்கிறது. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் ஆட்சி மொழிகளுள் ஒன்றாக தமிழ் மொழி உள்ளது. தென்னாப்பிரிக்கா விலும் தமிழ் மொழி அரசியலமைப்பு அங்கீகாரம் பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக