வெள்ளி, 31 ஜூலை, 2020

விடுதலைநாள்விழாகொண்டாட்டம்!பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறை!

விடுதலைநாள்விழாகொண்டாட்டம்!பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறை!

ஜூலை 31, வரலாற்றில் இன்று.இந்திய சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினம் இன்று

ஜூலை 31,  வரலாற்றில் இன்று.

இந்திய சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினம் இன்று
.

பாண்டிய மண்டலத்தின் படைத்தளபதியாக இருந்த கரியான் சர்க்கரை என்ற தளபதிக்கு பாண்டி வேந்தன் காங்கயத்தை ஒட்டிய நத்தக் கரையூரை பரிசாக அளித்தான். இந்த சர்க்கரை மரபில் பிறந்தவர்தான் சின்னமலை. பெற்றோர் வைத்த பெயர் தீர்த்தகிரி. பழையகோட்டைக்குப் பக்கத்தில் மேலப் பாளையத்தில் 1756 ஏப்ரல் 17ஆம் தேதி பிறந்தார் என்று பழையகோட்டை ஜமீன் பரம்பரைக் கணக்குப் பிள்ளையின் வீட்டில் அண்மையில் கிடைத்த ஓலைச்சுவடிகள் தெரிவிக்கின்றன.

1760இல் மைசூர் மன்னர் ஆனார் ஹைதர் அலி. அப்போது கொங்குநாடு மைசூரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த்து. தென் கொங்கு மண்டலத்தில் வசூலிக்கப்படும் வரிப்பணம் மைசூருக்கு அனுப்பப்பட்டு வந்தது. ஆங்கிலேயருக்கு எதிராகப் போரில் தோற்று விட்டார் ஹைதர் அலி.

மைசூருக்குச் செல்ல வேண்டிய வரிப்பணத்தைப் பறித்து ஏழைகளுக்குப் பகிர்ந்தளித்தார் தீர்த்தகிரி. திவானுக்கு என்ன பதில் சொல்வது என்று சிப்பாய்கள் கேட்டதற்கு, “சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் நடுவே ஒரு சின்னமலை பறித்துக்கொண்டான்” என்று சொல் என்றாராம் தீர்த்தகிரி. அது முதலாக, சின்னமலை என்ற பெயர் நிலைத்து விட்டது.

ஹைதர் அலிக்குப் பிறகு பதவியேற்ற திப்பு சுல்தானை சந்திக்கச் சென்ற சின்னமலை அங்கேயே போர்ப் பயிற்சி பெற்றார். பின்னர் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் சின்னமலையை தளபதியாக்கினார் திப்பு சுல்தான்.

மாலஹள்ளி என்ற இடத்தில் நடைபெற்ற போரில் 40,000 சிப்பாய்களை விரட்டியடித்தார் சின்னமலை. பின்னர் 1799ஆம் ஆண்டு நான்காவது மைசூர் போரில் திப்பு சுல்தான் சேனை வீழ்ந்த்து. தப்பிவந்த சின்னமலை, நொய்யல் ஆற்றின் கரையில் ஓடாநிலை என்னும் இடத்தில் வலுவான கோட்டை ஒன்றை அமைத்துக் கொண்டார்.

கோவை கோன் என்றழைக்கப்பட்ட சின்னமலை ஐந்தாண்டுகள் சிறப்பாக ஆட்சி புரிந்தார். திப்புவின் ஆட்சிக்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளும் ஆங்கிலேயர் வசமாகி விட்டன. ஆனால் கொங்கு மண் மட்டும் அவர்களுக்கு பெரிய சவாலாக இருந்த்து.

சின்னமலையை வீழ்த்த வேண்டும் என்று கர்னல் மேக்ஸ்வெல் தலைமையில் திரண்டு வந்த ஆங்கிலேயப் படைக்கும் சின்னமலையின் படைக்கும் இடையே 1801ஆம் ஆண்டு முதல் போர் நிகழ்ந்தது. வெற்றி சின்னமலைக்கே கிடைத்த்து. 1802ஆம் ஆண்டு மேக்ஸ்வெல் மீண்டும் படை திரட்டி வந்தான். அவனுடைய தலையைக் கொய்து காட்சிக்கு வைத்தார் சின்னமலை.

சின்னமலையின் படைத்தலைவர் கருப்பச் சேர்வை பிரெஞ்ச் மொழி பயின்றிருந்தார். பிரெஞ்சுக்காரர்களை வரவழைத்து துப்பாக்கிப் பயிற்சிகள் தரப்பட்டது. பீரங்கிகளையும் துப்பாக்கிகளையும் தயாரிக்கும் தொழில் நுட்பத்தையும் அறிந்து கொண்டார் சின்னமலை.

1804ஆம் ஆண்டு கர்னல் ஹாரிஸ் தலைமையில் ஆங்கிலேயப் படை சின்னமலையுடன் மோதியது. அப்போதும் சின்னமலை வெற்றி பெற்றார். ஆத்திரமடைந்த ஆங்கிலேயர்கள் பெரும்பெரும் பீரங்கிகளுடன் புறப்பட்டனர். பீரங்கிகளை எதிர்த்துப் போரிட முடியாது என்பதால், பழனி மலைப்பகுதியில் இருந்த கருமலையில் தஞ்சம் புகுந்து விட்டார் சின்னமலை. அவரது கோட்டை தகர்க்கப்பட்டது.

வீரத்தால் அவரைப் பிடிக்க முடியாத ஆங்கிலேயர்கள் தமது வழக்கமான சூழ்ச்சியைப் பயன்படுத்தினர். வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு ஒரு எட்டப்பன் வாய்த்தது போல, சின்னமலையைக் கைது செய்ய அவருடைய சமையல்காரனாக இருந்த நல்லப்பன் வாய்த்தான். சூழ்ச்சியால் சின்னமலையைக் கைது செய்த ஆங்கிலேயர்கள் 1805 ஜூலை 31ஆம் நாள் அவரைத் தூக்கிலிட்டனர்.

வெள்ளையரை எதிர்த்து போரில் மூன்றுமுறை வெற்றி பெற்ற சின்னமலையின் வரலாறு இன்னும் பலருக்கும் தெரியாது, முழுமையாகவும் தெரியாது.

சின்னமலை தூக்கிலிடப்பட்ட சங்ககிரியில் தீரன் சின்னமலை நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

ஜூலை 31, வரலாற்றில் இன்று. உத்தம் சிங் நினைவு தினம் இன்று (1940).

ஜூலை 31, வரலாற்றில் இன்று.

உத்தம் சிங் நினைவு தினம் இன்று (1940).

ஜாலியன் வாலாபாக்கில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த ஜெனரல் டையரை நமக்குத் தெரியும்...

இந்திய வரலாற்றின் மறக்க முடியாத அந்தக் ஜாலியன் வாலாபாக் கோரச் சம்பவம், 15 நிமிடங்களுக்குள் நடந்தேறியது.

 1000 பேருக்கும் மேலான மக்கள் ஜெனரல் டயர் என்பவனால், கொன்று குவிக்கப்பட்டனர்.

 2,000 பேருக்கும் அதிகமானோர் குற்றுயிரும் குலை உயிருமாகத் துடித்துக்கொண்டு இருந்தனர்.

 ஒவ்வொரு துப்பாக்கி வீரனும் 33 ரவுண்ட் சுட்டு இருந்தான். மொத்தம் 1,650 ரவுண்ட் சுடப்பட்டது. செத்து விழுந்த உடல்கள் ரத்த வெள்ளத்தில் மிதந்தன. தப்பிப் பிழைத்தவர்கள், நடக்க முடியாமல் வீதியில் விழுந்து கிடந்தனர்.

"என்னை மதிக்காத இந்தியர்களுக்கு நான் அளித்த தண்டனை இது. ஒரு ராணுவ அதிகாரியாக இந்தச் செயலுக்காக நான் சந்தோஷம் அடைகிறேன். என்னிடம் இன்னும் அதிக ஆயுதங்கள் இருந்திருந்தால், அதிக நேரம் சுட்டிருப்பேன்’ என்று வெளிப்படையாகத் தெரிவித்தான் ஜெனரல் டயர்.

இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் 'மார்னிங் போஸ்ட்’ என்ற பத்திரிகை ஜெனரல் டயரை 'வெற்றி நாயகன்’ என்று பாராட்டி எழுதியது..

ஜாலியன் வாலாபாக் படுகொலை, இந்தியாவை உலுக்கியது. அந்தப் பாதகச் செயலுக்கு காரணமாக விளங்கிய பஞ்சாப் கவர்னர் மிக்கேல் ஓ டயர் மற்றும் ஜெனரல் டயர் ஆகியோரைப் பழிவாங்குவேன் என்று, உத்தம்சிங் என்ற பஞ்சாப்  இளைஞன் சபதம் செய்தான்...

சொன்னபடியே சரியாக 21 ஆண்டுகள் காத்திருந்து இங்கிலாந்தில் எச்சில் தட்டு கழுவி, கூலி வேலை செய்து கிடைத்த பணத்தில் துப்பாக்கி வாங்கி 1940-ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதி கவர்னர் ஓ டயரைச் சுட்டுத் தள்ளினார் உத்தம் சிங்.

உத்தம் சிங்கின் செயல் இந்திய மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால் இதை “பைத்தியகாரத்தனமான செயல்” என்று கூறி காந்தி அறிக்கை வெளியிட்டார்.

இதனை கடுமையாக எதிர்த்து, உத்தம் சிங்கின் செயலைப் பாராட்டி கடிதம் எழுதினார் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.

அந்தக் கொலை வழக்கில், உத்தம் சிங்குக்கு தூக்குத் தண்டனை விதித்தது இங்கிலாந்து நீதிமன்றம்.

"தூக்கில் போட்டவுடன் இங்கிலாந்து மண்ணிலேயே என்னைப் புதைத்து விடுங்கள்.
இத்தனை ஆண்டுகள் இந்திய மண்ணை இங்கிலாந்து ஆண்டது போல், இங்கிலாந்தின் ஆறடி மண்ணை ஓர் இந்தியன் நிரந்தரமாக அபகரித்துக் கொண்டான் என்பது ஒரு மாறாத அவமானமாக உங்களுக்கு அமையட்டும்"
என்று முழங்கினர் உத்தம் சிங்.

ஜூலை 31, 1940 அன்று அவர் வந்தே மாதர கோஷத்துடன் தூக்குக் கயிறை முத்தமிட்டார்.

“தியாகச்சிங்கம்” என அழைக்கப்பட்ட அவரது உடல் சீக்கிய மதச்சடங்குகளுக்கு தடை விதிக்கப்பட்டு சிறைச்சாலையில் புதைக்கப்பட்டது.

பஞ்சாப் மாநிலம் சுல்தான்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் எஸ்.சாது சிங்,

“உத்தம் சிங்கின் எலும்புக் கூடுகளையாவது இந்தியாவிற்கு எடுத்து வர வேண்டும்” என்று மைய அரசிடம் கேட்டுக் கொண்டார். அன்றைய பிரதமர் இந்திரா காந்தி இதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.

முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர், 1975 ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசு உத்தம் சிங் புதைக்கப்பட்ட இடத்தை மீண்டும் தோண்டி, மிச்சம் மீதி எலும்புக் கூடுகளை பொறுக்கிக் கட்டி இந்தியாவிற்கு அனுப்பியது.

உத்தம்சிங்கின் எலும்புக்கூடுகள் ராஜ மரியாதையோடு இந்தியாவில் வரவேற்கப்பட்டு, உத்தம்சிங்கின் சொந்த ஊரில் எரியூட்டப்பட்டு, சாம்பல் கங்கை ஆற்றில் கரைக்கப்பட்டது.

தேசத்தை நேசிக்கும் அனைவரும் அவரது தியாகத்தைப் போற்றுவோம். எத்தனை பேர் அறிந்திருப்பீர்கள் உத்தம்சிங் பற்றி? இந்த பதிவைப் படித்தறிந்து இக்கால தலைமுறையினரையும் உத்தம் சிங் பற்றி தெரிந்து கொள்ள செய்யுங்கள்.

உங்கள் குழந்தைகளுக்கு வீர வரலாற்றை உணர்வாக சொல்லிக் கொடுங்கள்.

ஜூலை 31, வரலாற்றில் இன்று.இந்தியாவில் செல்போன் சேவை தொடங்கிய தினம் இன்று (1995).

ஜூலை 31,
வரலாற்றில் இன்று.

இந்தியாவில் செல்போன் சேவை தொடங்கிய தினம் இன்று (1995).


1995 ஆம் ஆண்டு இதே நாளில் முதன் முதலாக மக்களுக்கான செல் போன் சேவை இந்தியா- கொல்கத்தாவில் துவங்கியது....
1995 ஜூலை 31 அன்றே மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சர் சுக்ராம் அவர்கள் மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு அவர்களுடன்  செல்போனில் பேசி தொடங்கி வைத்தார்.

ஜூலை 31, வரலாற்றில் இன்று. சாரணர் இயக்கம் தொடங்கப்பட்ட தினம் இன்று.

ஜூலை 31,
வரலாற்றில் இன்று.


சாரணர் இயக்கம் தொடங்கப்பட்ட தினம் இன்று.

சாரணர் இயக்கம் உலகளாவிய அளவில் செயல்படும் ஓர் இளைஞர் இயக்கமாகும். இது 1907 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதி சர் பேடன் பவல் பிரபு என்பவரால் தொடங்கப்பட்டது. இவ்வியக்கம் இளைய சமூகத்தினர் மத்தியில் உடல், உள, சமூக ரீதியான பல மேம்பாடுகளை ஏற்படுத்தவே உருவாக்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் சாரணர் இயக்கம் ஆண்கள் மட்டும் இந்த இயக்கத்தில் இருந்தனர். அதன்பின் 1910 ஆம் ஆண்டில் பெண்களுக்காக இவ்வமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. தற்போது உலகின் 216 நாடுகளில் 8 மில்லியனுக்கும் அதிகமான சாரணர்கள் உள்ளனர்.

இணையவழி வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அரசாணை வெளியீடு _ தமிழக பள்ளிக்கல்வித்துறை

இணையவழி வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அரசாணை வெளியீடு _
தமிழக பள்ளிக்கல்வித்துறை........


Click here to G.O

புதியகல்விக்கொள்கை-2020 வெளியீடு! மத்திய அரசின் கல்வித்துறை வலைத்தளத்தில் பதிவேற்றம்!

புதியகல்விக்கொள்கை-2020 வெளியீடு!
மத்திய அரசின் கல்வித்துறை
வலைத்தளத்தில் பதிவேற்றம்!


 For English Version Click Here


For Tamil Version Click Here

பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான சம்பளம் வழங்க கல்வித்துறை உத்தரவு..

பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான சம்பளம் வழங்க கல்வித்துறை உத்தரவு..

மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு - தமிழ்நாடு” (FSO-TN) கலந்துரையாடல் கூட்டத்தில் ‘தேசியக் கல்விக் கொள்கை-2019யை ஒழித்துக் கட்டுவோம்!’ என்பது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

‘தேசியக் கல்விக் கொள்கை 2019-யை ஒழித்துக்கட்டுவோம்!

"""""""”""""""""""""'"'''''''''''''''''''''''''''''''''''''''""""'''
மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு - தமிழ்நாடு” (FSO-TN) கலந்துரையாடல் கூட்டத்தில் ‘தேசியக் கல்விக் கொள்கை-2019யை ஒழித்துக் கட்டுவோம்!’ என்பது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

29.07.2020 புதன்கிழமை மாலை 3 மணியளவில் காணொலி வாயிலாக நடைபெற்ற ”மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு - தமிழ்நாடு” (FSO-TN) கலந்துரையாடல் கூட்டத்தில் கீழ்க்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கலந்துரையாடல் கூட்டத்திற்கு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளரும் தி.மு.க மாநில மாணவர் அணி செயலாளருமான சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் கூட்டத்தை ஒருங்கிணைத்தார். அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாநிலத் தலைவர் குணசேகரன், மாநிலச் செயலாலர் சீ.தினேஷ், இந்திய மாணவர் சங்க மாநிலப் பொறுப்பாளர் நிரூபன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாணவர் அணிச் செயலாளர் பால சசிக்குமார், சமூகநீதி மாணவர் இயக்கத்தின் குர்ஷித், இர்ஷத், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கஸாலி, அகில இந்திய கிராமப்புற மாணவர் சங்கச் செயலாலர் கா.அமுதரசன், ஸ்டூடண்ட்ஸ் இஸ்லாமிக் ஆர்கனைசேசன் முகமது ரியாஸ், தி.மு.க. மாணவரணி மாநில துணைச் செயலாளர்கள் பூவை.ஜெரால்டு, மன்னை த.சோழராஜன், வீ.கவி கணேசன், உள்ளிட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு :

தீர்மானம்-1 :

தேசியக் கல்விக் கொள்கை-2019யை ஒழித்துக் கட்டுவோம்!

2016-ஆம் ஆண்டும், அதற்குப் பிறகு 2019-லும் தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் மாணவர், ஆசிரியர், பெற்றோர் அனைவருக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும், கல்வி உரிமையையும், கல்வி துறையில் மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் வகையிலும், குலக் கல்வி முறையைக் கொண்டு வந்து, பள்ளிகளின் எண்ணிக்கையை குறைத்து, கல்வி உதவித் தொகை, இட ஒதுக்கீடு போன்ற சமூகநீதி வாய்ப்புகளை ஒழித்து கல்வியை முழுக்கவும் வணிகப் பொருளாக மாற்றவும், உயர்கல்விக் கட்டமைப்பை ஒழித்து வணிகக் கொள்ளைக்கு வழிவகுக்கவும், காவி+கார்ப்பரேட் கூட்டணிக்குள் மாணவர்களைச் சிக்க வைக்கவும் மத்திய பா.ஜ.க. அரசு திட்டமிட்டுள்ளதை மக்கள் மத்தியில் தொடர்ந்து அம்பலப்படுத்தி, காரண காரிய விளக்கங்களோடு, கடும் எதிர்ப்பலையைப் பதிவு செய்துள்ளோம். இத்தனை எதிர்ப்புக்குப் பிறகும், இந்தக் கொரோனா பெருந் தொற்றுக்காலத்தைப் பயன்படுத்தி, தேசியக் கல்விக் கொள்கை வரைவை மத்திய அமைச்சரவை ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்தத் தயாராக இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இதை ஒழித்துக் கட்டும் வரை தொடர்ந்து போராடுவது என்று முடிவு செய்யப்படுகிறது. ஒருபோதும் காவிகளின் கனவு நிறைவேற மாணவர் சமூதாயம் அனுமதிக்காது என்பதையும் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

‘தேசியக் கல்விக் கொள்கை 2019-யை ஒழித்துக் கட்டுவோம்!’ : மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு தீர்மானம்!

தீர்மானம் - 2 :

மருத்துவக் கல்விக்கான அகில இந்தியத் தொகுப்பு இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி உடனடியாக அமல்படுத்துக !

மருத்துவக் கல்விக்கான அகில இந்தியத் தொகுப்பு இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த எந்தத் தடையும் இல்லை என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை பாராட்டி வரவேற்கிறோம். சமூகநீதியை நிலைநாட்ட ஒரே குரலில் ஒலித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த அனைத்து கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும், தமிழ்நாடு என்றென்றும் சமூகநீதி மண், தந்தை பெரியார் மண், இந்தியாவிற்கு வழிகாட்டும் முன்னோடி மாநிலம் என்ற சிறப்பை உறுதி செய்து வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளுக்கும், வாதாடிய வழக்குரைஞர்களுக்கும் நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வளவு கடுமையான சட்டப் போராட்டத்திற்குப் பிறகும், மருத்துவ மேல்பட்டப்படிப்புக்கான இடங்களுக்கு, இந்த தீர்ப்பு இவ்வாண்டுக்குப் பொருந்தாது என்பது ஏமாற்றமே! எனினும், எம்.பி.பி.எஸ் படிப்புக்கு இவ்வாண்டே இத்தீர்ப்பை அமல் செய்வதற்கு வாய்ப்பு இருப்பதாகவே தீர்ப்பை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அந்த வாய்ப்பை நழுவ விடாமல் தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்பதோடு, மத்திய அரசிடம் விழிப்பாக இருந்து போராட வேண்டும் என்று ‘மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு-தமிழ்நாடு’ வலியுறுத்துகிறது.

தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீடு சட்டம் அமலில் உள்ளதால் பிற்படுத்தப்பட்டோருக்கான (தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இணைந்து) 50% இடஒதுக்கீடு என்ற கோரிக்கையை நிராகரிக்க முடியாது என்பது தெளிவாகி உள்ளது. எனவே பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்கான இடஒதுக்கீடு மற்றும் உள்ஒதுக்கீட்டை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அதை விடுத்து, இதில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்குச் சென்று பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மீண்டும் துரோகம் இழைக்க மத்திய அரசு முயலக் கூடாது.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டிற்காக அமைக்கப்பட வேண்டிய கமிட்டியை அமைப்பtஹை தாமதப்படுத்தியோ, அல்லது அந்தக் குழுவின் பரிந்துரைகளிலோ இத் தீர்ப்பின் சாரத்தை நீர்த்துப் போகச்செய்யும் நடவடிக்கைகளில் இறங்காமல், உடனடியாக கமிட்டி அமைத்து சமூகநீதியைக் காக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்படுகிறது.

‘தேசியக் கல்விக் கொள்கை 2019-யை ஒழித்துக் கட்டுவோம்!’ : மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு தீர்மானம்!

தீர்மானம் 3 :

நீட் தேர்வை ரத்து செய்க !

கிராமப்புற, ஏழை, எளிய மாணவர்கள் மற்றும் சமூக நீதிக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் நீட் தேர்வினை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பது எல்லா தரப்பு மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. கொரோனா பெருந்தொற்று பாதிப்பில் உலக அளவில் மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில், தொடர்ந்து நிலவி வரும் அசாதாரணமான சூழலையும் , மாணவர்களின் மனநிலையையும், எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு நடைபெற உள்ள நீட் ஆன்லைன் தேர்வை ரத்து செய்ய வேண்டும். நேரடியாகப் பங்கேற்ற கடந்த ஆண்டுத் தேர்வுகளிலேயே, கடும் சோதனைகளையெல்லாம் மேற்கொண்டு தமிழ்நாட்டு மாணவர்களின் மனநிலையைக் குலைத்துச் சதி செய்த அதே வேளையில், பணக்கார, பிற மாநில ஆதிக்க சக்திகள் எண்ணற்ற ஆள்மாறாட்டங்கள், தில்லுமுல்லுகளில் ஈடுபட்டதும், அவை வெளிச்சதுக்கு வந்ததும் நீட் தேர்வின் லட்சணத்தை அம்பலப்படுத்தியுள்ளன. இந்நிலையில் ஆன்லைன் தேர்வு என்பது மோசடிகளின் மொத்தக் கூடாரமாகவே அமையும் என்பதால், நீட் ஆன்லைன் தேர்வு என்ற சிந்தனையை அடியோடு விட்டுவிட்டு, பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளுக்கு இடம் ஒதுக்கப்படவேண்டும்.

நீட் தேர்வு என்பது நகர்ப்புற மேல்தட்டு மாணவர்களுக்கும், வசதிவாய்ப்புள்ளவர்களுக்குமான தேர்வாக இருந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் உள்ள காலத்தில் நீட் தேர்வை நடத்தினால் அது ஏழை, எளிய மாணவர்கள், கிராமப்புற மற்றும் மலைவாழ் மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி. ஆகவே இந்த ஆண்டு மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கையை, பன்னிரெண்டாம் வகுப்பின் மதிப்பெண்கள் அடிப்படையில் நடத்த வேண்டும் எனவும், இனி வரும் ஆண்டுகளிலும் இதே முறையை நடத்த வேண்டும் எனவும் மத்திய, மாநில அரசுகளை இக் கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் - 4 :

கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களின் பருவத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்!

கொரோனா பெருந் தொற்றால் கல்லூரிகள் இயங்க முடியாத சூழலும், தேர்வுகள் நடத்த முடியாமலும் உள்ளது. கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களைத் தவிர மற்ற மாணவர்களின் செமஸ்டர் எனும் பருவத் தேர்வை UGC ரத்து செய்வதாக அறிவித்து இருந்தது. கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் பருவத் தேர்வை ரத்து செய்து, முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் அவர்களுக்கு தேர்ச்சி அளிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை இக் கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 5 :

CAA போராட்டத்தில் கைதான மாணவர்களை விடுதலை செய்க - பழிவாங்கும் நடவடிக்கையைக் கைவிடுக !

கொரோனா தொற்றுக்கு முன்பாக நாடு முழுவதும் எழுச்சியாக நடைபெற்று வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்களைப் பழிவாங்கும் நோக்கில் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்த மத்திய அரசு, அவர்களை விடுதலை செய்யத் தொடர்ந்து மறுத்து வருகிறது. மேலும் போராடிய மாணவர்களைப் பழிவாங்கும் நோக்கில் வழக்குப் பதிவு செய்து வருகிறது.குறிப்பாக டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் இந்த பழிவாங்கும் நடவடிக்கை தொடர்ந்து வருவதை மிக வன்மையாக கண்டிக்கிறோம். போராடுவது என்பது ஜனநாயகத்தின் அடிப்படை உரிமை! ஜனநாயக வழியில் போராடிய மாணவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறுவதுடன், கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறோம்.

காஷ்மீர், குடியுரிமைச் சட்டம் தொடர்பாக ட்விட்டரில் கருத்துத் தெரிவித்த காரணத்துக்காக கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசியத் தலைவர் மீது பதியப்பட்டிருக்கும் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், கருத்துரிமையை நசுக்கக் கூடாது என்றும் வலியுறுத்துகிறோம்.

தீர்மானம் - 6:

ஆன்லைன் கல்விக் குளறுபடிகள்

ஆன் லைன் வகுப்புகளால், பள்ளி, கல்லூரி வகுப்பறைகளை ஈடு செய்ய முடியாது என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். இந்தியா போன்ற வளரும் நாட்டில், அனைவருக்கும் தடையில்லா மின்சாரம், இணைய இணைப்பு, கருவிகள் போன்றவை கிடைக்காத நாட்டில், ஆன்லைன் கல்வி என்பது நடைமுறைக்குச் சாத்தியமற்ற ஒன்று. தனியார் பள்ளிகள் ஆன்லைன் கல்வி என்ற பெயரால் மாணவ்வர்கள் மீது நிகழ்த்தும் அராஜகம் ஏற்கக்கூடியதல்ல. கணினியின் முன்னால், திறன்பேசிக் கருவிகளின் முன்னால் நாள்தோறும் மாணவர்களை அமர்த்துவதன் மூலம் உடல், மனநில்லையில் சிக்கல் எழும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தேவையான கருவிகளையும், தடையில்லா இணைய இணைப்பையும், ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், அத்தனை பேரும் படிக்க அத்தனை கணினிகள்/ கருவிகளையும் வாங்க வழியில்லாமல் மன உளைச்சலுக்கு பெற்றோரை உள்ளாக்குவதும் குரூரமானது. எனவே, இத்தகைய போக்குகளை இளம் பிஞ்சுகள் மீது திணிப்பதைப் பிற மாநிலங்கள் தடுத்திருப்பதைப் பார்த்தாவது, தமிழக அரசு அது குறித்துச் சிந்திக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

ஆன்லைன் கல்வி என்னும் போக்கால் சந்திக்கும் பிரச்சினைகளையும், கட்டணக் கொள்ளை குறித்தும் விவரம் திரட்டி, நடவடிக்கை எடுக்க ஒரு குழு அமைத்து செயல்படுவதெனத் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் - 7:

வெளிநாட்டில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பும், திரும்புவதற்கான ஏற்பாடுகளும் தேவை

வெளிநாட்டில் பயின்று வரும் தமிழக மாணவர்களில் சிலர் தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் நிலை இருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளமையால், அத்தகைய மாணவர்கள் குறித்து விவரங்களைத் திரட்டி நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒரு குழு அமைக்கப்படுகிறது. அம் மாணவர்கள் தாயகம் திரும்பத் தேவையான நடவடிக்கைகளை மாநில அரசும், இந்திய அரசும் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்று இக் கூட்டம் வலியுறுத்துகிறது. அந்தந்த நாடுகளிலேயே இருக்க வேண்டிய அவசியமுள்ள மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் அரசுகள் கவனமெடுக்க வேண்டுமென்பதையும் இக்கூட்டம் சுட்டிக் காட்டுகிறது.

இவ்வாறாக தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

வியாழன், 30 ஜூலை, 2020

தமிழ்நாட்டின் முன்னாள் கல்வி அமைச்சர் திரு.தங்கம்.தென்னரசு அவர்கள் புதிய கல்விக்கொள்கையின் மீது தமிழக அரசின் நிலைப்பாடு பற்றிய எதிர்பார்ப்பு ! முகநூல் பதிவு!

தமிழ்நாட்டின் முன்னாள் கல்வி அமைச்சர் திரு.தங்கம்.தென்னரசு அவர்கள்
 புதிய கல்விக்கொள்கையின் மீது தமிழக அரசின் நிலைப்பாடு பற்றிய எதிர்பார்ப்பு !
முகநூல் பதிவு!
-----------------------------------------

மும்மொழிக் கொள்கை அமலாக்கப்படும்!

சமஸ்கிருதத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்!

மூன்று மொழிகளில், மாணவர்கள் தேர்ந்தெடுக்கும்  இரண்டு மொழிகள் கண்டிப்பாக இந்திய மொழிகளாக இருக்கவேண்டும்!

மத்திய அரசின் மேற்கண்ட கல்விக்கொள்கை அறிவிப்புகள் எதைச் சுட்டிக்காட்டுகின்றன; எதை நோக்கிக் கல்வித்துறையை நகர்த்துகின்றன என்பததெல்லாம் பதவுரை- பொழிப்புரை- தெளிவுரை எல்லாம் அவசியம் இல்லாமலேயே  எல்லோருக்கும் எளிதாகப் புரியக்கூடியதுதான். கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவை இல்லை.

கத்தரிக்காய் முற்றி இப்போதுக் கடைத்தெருவுக்கும் வந்துவிட்டது!

இந்தித் திணிப்பை மத்திய அரசு கைவிடுவதாக இல்லை என்பது மட்டுமல்ல;  சமஸ்கிருதத் திணிப்பையும் இப்போது கையிலே எடுத்துக் கொண்டிருக்கின்றது.

செம்மொழித் தமிழுக்குத் தெரிந்தே இழக்கப்பட்டுள்ள மற்றொரு பச்சைத் துரோகம் ஒன்றும் இந்தப் புதிய கல்விக் கொள்கை அறிவிப்பில் ஒளிந்து கொண்டு இருக்கின்றது.

அதாவது, தன்னாட்சி பெற்றத் தனி நிறுவனமாகச் செயல்படும்  “ செம்மொழித் தமிழாய்வு மத்திய  நிறுவனம்” இனிமேல் பல்கலைக்கழகத்தில் இணக்கப்பட்டுவிடும்.
ஏற்கனவே திருவாரூரில் இயங்கி வரும் மத்தியப் பல்கலைக்கழகத்துடன் இந்நிறுவனத்தை இணைக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டபோது, கழகத் தலைவர் தளபதியார் அவர்கள் பேரவையிலும், அறிக்கைகள் வாயிலாகவும் எழுப்பிய அழுத்தத்தின் விளைவாக, “ அப்படி ஏதும் திட்டமில்லை” எனத் தெரிவித்து அது நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால், இப்போது பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது.

அதனால்தான்  72 வருடங்களுக்கு முன்பே அபிமன்யு திரைப்படத்தில் தலைவர் கலைஞர் எழுதினார், “ அர்ச்சுனனால் உடைக்க முடியாத சக்கர வியூகத்தை அபிமன்யு உடைக்கின்றான் என்றால், அங்கே தான் இருக்கின்றது ஆச்சாரியாரின் விபீஷண வேலை” என்று!

2016ம் ஆண்டு அம்மையார் ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்த போது, சட்டமன்றத்தில் கல்வித்துறை மானியக் கோரிக்கையில் உரையாற்றும் போது, “ safronisation and sanskritisation “ எனக் குறிப்பிட்டு, மொழிப்பிரச்சனையில் இந்த புதிய கல்விக்கொள்கை கொண்டுவரவிருக்கும் ஆபத்துக்களை நான் விளக்கியபோது, அம்மையாரின் கண்ணசைவில் எழுந்த அன்றைய பள்ளிக்கல்வி அமைச்சர் திரு. பெஞ்சமின் அவர்கள், ஒருபோதும் அதிமுக அரசு இதை அனுமதிக்காது என்று முழங்கினார்.

இன்றைக்கு இருக்கும் எடப்பாடி அரசு இன்னும் அந்தத் திராணியோடு எழுந்து நின்று எதிர்க்கப்போகின்றதா அல்லது வழக்கம் போல வெண் சாமரம் வீசி விசுவாசத்தைக் காட்டப்போகின்றதா ?

பார்க்கலாம்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,பரமத்தி ஒன்றியச் செயற்குழுக் கூட்டம்(இணைய வழி) அழைப்பிதழ்.*

*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,பரமத்தி* *ஒன்றியம்(கிளை)*
*நாமக்கல் மாவட்டம்.*

*தலைப்பு: ஒன்றியச் செயற்குழுக் கூட்டம்(இணைய வழி)*

*நேரம்:01.08.2020 சனிக்கிழமை  முற்பகல்  11:00 மணி*

*தலைமை:*

*திரு.நா.ரங்கசாமி,*
*ஒன்றியத் தலைவர்.*

*முன்னிலை:*

*திரு.மெ.சங்கர், மாவட்டச் செயலாளர்.*

*திரு.முருக.செல்வராசன்.*

*மாநிலச் செயலாளர்.*

*பொருள்:*

*06.07.2020 செயற்குழுக்கூட்ட முடிவுகள் மீதான 07.07.2020 ஆர்ப்பாட்டம் மற்றும் 15.07.2020 உண்ணாவிரத போராட்டம் 02.08.2020 வரை ஒத்திவைக்கப்பட்ட போராட்ட நடவடிக்கையினை தொடர்ந்து  அடுத்த கட்ட நடவடிக்கை.*

*கூட்டத்தில் தவறாது பங்கேற்பீர்.*

                              *க.சேகர்.*
                         *ஒன்றியச் செயலாளர்.*

Join Zoom Meeting
https://us04web.zoom.us/j/6272104657?pwd=L1NKYmFSWmJPclp0bkpFYnVlVDRhZz09

Meeting ID: 627 210 4657
Passcode: 3HvxG7

*📘🎒2, 3, 4, 5, 7, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், விலையில்லா புத்தகப்பை வழங்க பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் மற்றும் 2019-20 கல்வியாண்டிற்கான விலையில்லா புத்தகப் பைகள் வழங்குதல் சார்பான நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள்.*

*📘🎒2, 3, 4, 5, 7, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், விலையில்லா புத்தகப்பை வழங்க பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்  மற்றும் 2019-20 கல்வியாண்டிற்கான விலையில்லா புத்தகப் பைகள் வழங்குதல் சார்பான நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள்.*

*2 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 3 முதல் பாடப்புத்தகங்கள் வழங்க உத்தரவு.*

*ஒரு மணிநேரத்திற்கு 20 மாணவர்களை அழைத்து பாடப்புத்தகங்களை வினியோகிக்க அறிவுறுத்தல்*


*✍️பரமத்தி ஒன்றியத்தில் ஊ.ஒ.தொ.பள்ளி, கவுண்டிபாளையம் தொகுப்பூதிய இடைநிலை ஆசிரியருக்கு மார்ச்சு மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு தொகுப்பூதியம் வழங்கிட வேண்டி நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுக்கு ஆசிரியர் மன்றம்,பரமத்தி ஒன்றியக்கிளையின் சார்பில் ஒன்றியச் செயலாளர் அனுப்பிய கடிதம் நாள்:30.07.2020.*

*✍️பரமத்தி ஒன்றியத்தில் ஊ.ஒ.தொ.பள்ளி, கவுண்டிபாளையம் தொகுப்பூதிய இடைநிலை ஆசிரியருக்கு மார்ச்சு மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு தொகுப்பூதியம் வழங்கிட வேண்டி நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுக்கு ஆசிரியர் மன்றம்,பரமத்தி ஒன்றியக்கிளையின் சார்பில் ஒன்றியச் செயலாளர் அனுப்பிய கடிதம் நாள்:30.07.2020.*

*✍️பரமத்தி ஒன்றியத்தில் 12 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளுக்கு 15 மாதங்களுக்கு தூய்மைப் பணியாளர் ஊதியம் வழங்கிட வேண்டி திட்ட இயக்குநர்,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை,நாமக்கல் அவர்களுக்கு ஆசிரியர் மன்றம்,பரமத்தி ஒன்றியக்கிளையின் சார்பில் ஒன்றியச் செயலாளர் அனுப்பிய கடிதம் நாள்:30.07.2020.*

*✍️பரமத்தி ஒன்றியத்தில் 12 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளுக்கு 15 மாதங்களுக்கு தூய்மைப் பணியாளர் ஊதியம் வழங்கிட வேண்டி திட்ட இயக்குநர்,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை,நாமக்கல் அவர்களுக்கு ஆசிரியர் மன்றம்,பரமத்தி ஒன்றியக்கிளையின் சார்பில் ஒன்றியச் செயலாளர் அனுப்பிய கடிதம் நாள்:30.07.2020.*

*🌟மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு பற்றிய பத்திரிக்கைச் செய்தி நாள்:30.7.2020*

*🌟மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு பற்றிய  பத்திரிக்கைச் செய்தி நாள்:30.7.2020*

*








தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு.*

*தமிழகத்தில் ஊரடங்கை ஆகஸ்ட் 31ந் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு.*

*ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுகிழமைகளிலும் தளர்வுகளற்ற ஊரடங்கு.*

EIA 2020: சூழல் பயங்கரவாதச் சட்டம்! //நன்றி: இரா. மோகன்ராஜன் -புதியபரிமாணம்//

EIA 2020: சூழல் பயங்கரவாதச் சட்டம்!
//நன்றி:
இரா. மோகன்ராஜன்
-புதியபரிமாணம்//
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
TNREAJECTSEIA2020 என்ற குறியீட்டுச் சொல் சமூக வளைதளங்களின் முதன்மைப் பொருளாகியிருப்பதை, ஒரு எதிர்ப்புச் சொல்லாகியிருப்பதை நாம் எளிதில் கடந்து போய்விட முடியாது. நமது வாழ்விடங்களை, நமது நிலங்களை, நமது சூழலைவிட்டு நமது ஒப்புதல் இல்லாமல் சட்டங்களைக் காட்டி நம்மை வெளியேறச் சொன்னால், அவ்வாறு வெளியேற ஒருபோதும் சம்மதிப்பதில்லை. தற்போது நடுவணரசு கொண்டுவந்திருக்கும் சூழல்சார்ந்த வரைவறிக்கை அவ்வாறான வெளியேற்றத்திற்கான ஒன்று என்று சொன்னால் நம்பித்தான் ஆகவேண்டும்.


முத்துப்பேட்டை சதுப்புநிலக் காடுகள்
உலகமயப் பொருளாதார தாராளவாத முதலீட்டின் பகுதியாக நமது வளங்கள் ஏற்கனவே கொள்ளை போய்கொண்டிருக்கும் நிலையில், அவ்வாறான முதலீட்டினை, ஊக்கப்படுத்தவும், அதற்கு வழியமைத்துக் கொடுக்கவுமாக இருந்த சூழல் சார்ந்த அனுமதிக்கான அறிக்கையை நடுவணரசு திருத்தி அமைத்திருப்பதன் வழியாக பெருமுதலாளிகள் தமக்கு விருப்பமான இடங்களை, நிலங்களை அரசின் அனுமதியுடன், தற்போதய சூழல் அறிக்கையை கையில் வைத்துக் கொண்டே கையகப்படுத்திக் கொள்ள, கொள்ளையிட்டுக் கொள்ள நடுவணரசு தாராளமாக வழி அமைத்துக் கொடுத்துக் கொண்டுள்ளது.

திருடனை அழைத்து வருவதுடன் அல்லாமல் அவன் வீட்டில் புகுந்து கொள்ளை அடிப்பதற்காக நமது வீட்டுக் கதவுகளை நம்மைக் கேட்காமலே திறந்து வைப்பதை எப்படி புரிந்து கொள்கிறோமோ அவ்வாறே நடுவணரசு நம்மை, நமது வீட்டை, சுற்றுப்புறத்தைக் கொள்ளையடிப்பதற்கான முன் அனுமதியை, வீட்டுத் திறப்பை பெருமுதலாளிகள் என்ற கொள்ளைக் காரர்களுக்குத் தூக்கிக் கொடுத்துக் கொண்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையின் சூழல் மற்றும் வாழ்வாதாரச் சீர்கேட்டை சட்ட, நீதி நிறுவனங்களால்தடுத்து நிறுத்த முடியாமல் போனதால்தான், மக்கள் இயல்பாக எழுந்து திரண்டு போராடி 13 உயிர்களை பறி கொடுத்து 13 பேரின் குடும்பங்ளைத் தவிக்கவிட்டுத் தற்காலிகத் தடையேனும் பெற முடிந்தது.

இனி அப்படியான போராட்டங்களுக்கும், ஒன்றுதிரள்வதற்குமான எல்லா உரிமைகளும் பறிக்கப்படுவதுடன் பொது மக்களின் ஒப்புதலிலும், சம்மதத்திலுமே அவ்வாறான ஆலைகள் திறக்கப்படப்போகின்றன, அல்லது நமது ஒப்புதல் ஏதும் தேவைப்படாமலே அவை இயங்கப்போகின்றன. உயிர்களை இழந்து, குருதி சிந்திய போராட்டங்களை ஒரு சட்டக்காகிதம் முற்றாக துடைத்தழிக்கப் போகிறது.


இதுவரையிலுமாகச் சூழல் அறிக்கையில் இருந்த சூழல் சட்டப் பாதுக்காப்புகளில் திருத்தங்கள் செய்யப்படுவதன் வழி இந்த எதிர் கூறல்கள் மெய்யாகப் போகின்றன என்றால் கவலைப்படத்தான் வேண்டும். Environmtal Impact Assessment – EIA என்ற சுற்று சூழல் அறிக்கையில்தான் இவ்வாறான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. முக்கியமாக இந்தத் திருத்தம் என்ன சொல்ல வருகிறதென்றால், சூழல் பாதுகாப்பு முக்கியமல்ல பெரு முதலாளிகளின் முதலீடுகளைப் பாதுகாப்பதே முக்கியமானதாகும். முன்பிருந்த சூழல்பாதுகாப்புச் சட்டங்களை வெளியேற்றியதன் வழி பாஜக அரசு இதை முதலாளிகளுக்கும், முதலீட்டிற்குமாக மாற்றி எழுதிக் கொண்டுள்ளது.

நாடும், வீடும், வீதிகளும் கொரோனா முடக்கத்திலிருக்கும் காலத்தில் வெறிநாயை அவிழ்த்துவிடுவது போல கொரோனா குறித்த அச்சங்களை அவிழ்த்துவிட்டு சூழல் மண்டலங்களை, நிலங்களை தனியாருக்கு தாரைவார்க்கச் சுதேசியம் பேசும் பாசக அரசு முயன்று வருவதன் ஒரு பகுதி தனியர்மயமாக்க பயங்கரவாத அரசியலே இந்தச் சட்டதிருத்தமாகும்.

விடுதலைக்கு முன்பும் பிரித்தானியர் காலத்தில் கட்டற்ற இயற்கை வளச் சுரண்டல் பல சட்டங்கள் வழியும் அது அல்லாத வழிகளிலும் கொள்ளையடிக்கப்பட்டுவந்தன. விடுதலைக்குப் பிறகாக சொந்த வீட்டையே கொள்ளையடிக்கும் நோக்குடன் இன்றைய அரசுகள் சட்டங்களைத் திருத்த முனைந்துள்ளன. அதில் ஒன்றுதான் இந்த சூழல் திருத்த அறிக்கையாகும்.

பிரித்தானியரின் கொள்ளைச் சட்டங்கள் போக விடுதலைக்குப் பிறகு இந்திய வளங்களையும், வனங்களையும் கண்காணிப்பதற்கென்று கொண்டுவரப்பட்ட சூழல் தொடர்பான சட்டங்கள், குழுக்கள் என்பவை சுரங்கம், பெரும் அணைக்கட்டுக்கள், தொழிற்சாலைகள் போன்றவை இயற்கை வளங்கள் மீது செலுத்தும் தாக்கங்கள் குறித்து கண்காணிக்க அமைக்கப்பட்டன. 1986 சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பெரு நிறுவனங்கள், மற்றும் தொழிற்சாலைகளைத் தொடங்க முறையான அனுமதி பெற வேண்டும் மேலும் இந்நிறுவனங்கள் 1994 இல் கொண்டுவரப்பட்டு 2006 இல் திருத்தப்பட்டிருந்த சூழலியல் மதிப்பீட்டுச் சட்டத்தின் கீழ் அறிக்கைத் தாக்கல் செய்யவேண்டும்.


வசிப்பிடத்திலிருந்து தொழிற்சாலை, நிறுவனங்கள் அமைந்துள்ள பரப்பு, தொலைவு, சூழலியல் மண்டலம், கழிவுகளின் அளவு, கழிவு மேலாண்மை, சூழலில் அதன் தாக்கம் பற்றிய அறிக்கையை அவை இந்த சுற்றுச்கசூழல் சட்டங்களுக்கு அமைய அறிக்கை அளிக்க வேண்டும் இந்த அறிக்கையை அரசுக் குழு மதிப்பிட்டு ஆய்வு செய்து மறுக்கவோ, ஏற்கவோ செய்யும்.

தற்போது பாஜக அரசு கொண்டுவரும் திருத்த அறிக்கை முற்றிலும் பல மாறுதல்களுடன், தலைகீழ் அம்சங்களுடனும் உள்ளது. முக்கியமாக சூழல்பாதுகாப்பை முன் வைக்கும் அறிக்கையாக அல்லாமல் தொழில்பாதுகாப்பை முதன்மைப்படுத்தி அதன் வழியாக சூழல் பாதுகாப்பை மாசுபடுத்தி கேட்பாரற்று இயற்கை வளங்களைச் சுரண்டிச் செல்வதை உறுதிபடுத்துவதாக இருக்கிறது.

சூழல், மற்றும் இயற்கை பாதுகாப்புக்கு என இருந்த முந்தய சட்டங்களைத் திருத்துவதன் வழி இவற்றை நடைமுறைக்கு கொண்டுவர இருக்கிறது இன்றய பாஜக சுதேசி அரசு.

இந்த வரைவறிக்கையானது நீங்கள் சூழலை எவ்வளவு மாசுபடுத்த முடியுமோ, எவ்வளவு கனிம வளங்களை உங்கள் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் வழி கொள்ளையிட முடியுமோ அவ்வளவையும் முடித்துவிட்டு பிறகு நிதானமாகச் சூழலுக்கு எதுவித பாதிப்புமில்லை என்று அறிக்கை தரலாம் என்கிறது புதிய வரைவு திட்ட அறிக்கை (post-facto clearance).

புதிய வரைவின் படி,


1) மக்கள் ஒப்புதல் தேவையில்லை.

2) சுற்றுச் சூழல் தாக்க அறிக்கையை தொழில் நிறுவனங்கள் முன்பு ஆண்டுக்கு இரண்டு முறை என்பதை தற்போதைய அறிக்கை ஆண்டுக்கு ஒரு முறை என்று திருத்திக் கொண்டுள்ளது.

3) 2000 இலிருந்து 10000 ஏக்கர் நிலத்திற்குள் நிறுவனங்கள் தொழிற்சாலைகள் நிறுவுவதற்கு இத்திட்டத்தின் அனுமதி தேவையில்லை.

4) நடுவண், மற்றும் மாநிலங்களுக்கு என இரண்டு குழுக்கள் செயற்பட்டுவந்த நிலையில் நடுவண் குழு மட்டுமே இயங்கும் அதேசமயம் மாநிலக் குழுவை தேவைப்பட்டால் நடுவணரசு நியமிக்கும் ஆட்களே பணியாற்றுவார்கள்.

6) வல்லுநர் குழு இன்றியே தொழிற்சாலைகளை நிறுவிக் கொள்ள முடியும்.

7)தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களுக்கு எதுவித அனுமதியும் தேவையில்லை.

இந்த அறிக்கையின் மேற்கண்ட திருத்தங்களின் விளைவுகள் சொல்லித் தெரிய வேண்டும் என்பதில்லை. ஒரு பகுதியில் அமையவிருக்கும் தொழிற்சாலைக்கு அப்பகுதியின் மக்கள் அனுமதி பெற வேண்டிய தேவை அவசியம் என்பதை அடிப்படையிலேயே முற்றாக நிராகரிக்கிறது வரைவறிக்கை. பெருந்தொழில் நிறுவனங்களுக்குப் பெருந்தடையாக இருந்த மக்கள் ஒப்புதல் என்ற முன்பிருந்த சட்டத்தைத் திருத்தவதன் வழி மக்களின் வாழ்வுரிமையையை பறித்தெடுக்கிறது.

இந்திய சட்டம் வகுத்தளித்துள்ள வாழ்வுரிமையை இந்தத் திருத்தம் முற்றாக நிராகரிப்பதுடன், பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு மற்றும் கருத்து ஏற்புப் பதிவு நாட்களை30லிருந்து 20 நாட்களாக வெகுவாகச் சுருக்கிக் கொண்டுள்ளது. அதே போல கருத்துகணிப்புக்கான நாட்கள்45 லிருந்து 40 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே பல தொழிற்சாலைகள் பகுதி மக்களிடம் கேட்காமலே கருத்துக் கணிப்பு நடத்தியதாகச் சொல்லி தமக்கு ஆதரவான ஆட்களை வைத்து கருத்துக் கணிப்பு நாடகங்களை அரங்கேற்றியதை கண்டிருக்கிறோம். குறிப்பாக புதுக்கோட்டை மற்றும் கதிராமங்களத்திலும் ஷெல்காஸ் நிறுவனத்தினர் அவ்வாறு செய்ததை மறந்திருக்க முடியாது. இனி இந்த நிறுவனங்கள் எதுவிதத் தடையுமின்றி செயல்பட முடியும். டெல்டாவின் எந்தவொரு பகுதியிலும் யாதொருவர் அனுமதியின்றியும் தமது கொள்ளையிடலைத் தொடர முடியும். அப்படித்தான் இந்த அறிக்கை தெளிவுபடுத்துகிறது.

கூடங்குளம் போன்ற ஆபத்தான அணுமின் நிலையங்கள் தமது அணு உலைகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில் நிறுவிக் கொள்ள முடியும். அதற்கு யார் அனுமதியும் தேவைப்படாது. ஏற்கனவே இருக்கும் அனுமதியைக் காட்டியே நிறைவேற்றிக் கொள்ள முடியும். குறிப்பாக நான்காவது, அல்லது ஐந்தாவது என அடுத்தடுத்த உலைகளுக்கு பொதுமக்கள் கருத்துக்கள், ஏற்புகள், எதிர்ப்புகள் தேவையில்லை.

அப்படி எதிர்ப்பதற்கோ, திரள்வதற்கோ பொதுமக்களுக்கு உரிமையில்லை. அதற்கென நிறுவப்படும் அரசுக் குழுக்களே அவற்றை முன்னெடுக்கும். பொதுமக்கள் நீதிமன்றம் செல்ல உரிமை கிடையாது. அப்படி அரசு, நீதி நிறுவனங்களை மீறிப் போராட்டம் நடத்தும் மக்கள் மீது சட்ட நடவடிக்கையும், தேசத் துரோக வழக்கையும், தேசத்துரோகி பட்டத்தையும் சந்திக்க வேண்டியிருக்கும்.

நாட்டின் எந்த பகுதியையும் பெரு முதலாளிகளுக்குத் திறந்துவிட, மாநில அரசுகளின் ஒப்புதலும் தேவைப்படாது. 2006 சுற்றுசூழல் தாக்கல் அறிக்கையின் படி இயங்கிய மாநிலக்குழுக்களுக்கு இனி முழு சுதந்திரம் கிடையாது நடுவணரசின் ஆட்களே மாநில குழுக்களாக செயற்படுவார்கள். மாநிலத்தின் இயற்கை வளங்களை சுரண்டும் முழு அதிகாரம் இனி நடுவணரசுக்கானதாகும்.

ஏற்கனவே பழங்குடிகள் வதியும், கனிம வளங்கள் நிறைந்த வனப்பகுதிகள் சுரண்டப்பட்டதற்கு சுரண்டுவதற்கு இணையாக தற்போதைய அறிக்கை சமவெளிப் பகுதிகளை நோக்கித் திரும்பியுள்ளதை புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது.

குறிப்பாக சதுப்பு நிலங்களைக் கையகப்படுதி, மணல் போன்றவற்றை நிரவி அவற்றை தொழில் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள இனி எதவித அனுமதியும் தேவையில்லை என்கிறது அது.இதைச் சற்றே விரிவுபடுத்தி வளமற்றக் காடுகள், காடுகளை ஒட்டிய புல்வெளிகள், என்பவற்றையும் பயனற்ற நிலங்கள் என்று காட்டி அவற்றை முற்று முழுதாக பகாசுர நிறுவனங்களால் விழுங்க முடியும்.

சதுப்பு நிலம் என்பது அரசு மற்றும் பெருமுதலீட்டு நிறுவனங்களின் காமாலைக் கண்களில் பயனற்றதாகவே கருதப்படுகிறது.

சதுப்புநிலம் என்பது சூழல் மண்டலத்தின் மிக முக்கியமான உறுப்பு, பல்லுயிரி பெருக்கத்திலும் முக்கியமாக நிலத்தடி நீர்வளத்தின் பெரும் பகுதி சதுப்புநிலத்தின் நீர்மையே காரணம் என்பதெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல.

அப்படியான சதுப்புநிலங்களைக் குறிவைத்து இந்ததிட்டம் வரையப்பட்டிருப்பது சூழல் மண்டலத்தின் மீதான மிகப்பெரிய வல்லுறவாகும். பயங்கரவாதமாகும்.

சதுப்ப நிலமானது தனது பரப்பளவு போல பத்துமடங்கு பரப்பளவு நீரை நிலத்தடியில் சேமிக்கக்கூடிய மிகப்பெரிய நிலத்தடி சுரப்பு மண்டலமாகும். இந்திய சுரண்டல் வர்க்கத்திற்கு சதுப்புநிலங்கள் என்பன குட்டிப் பாலைநிலமாகும்(waste land)  அவற்றை அவ்வாறே அவர்கள் பதிவேடுகளில் குறிப்பிட்டு வந்தனர். 1985-86 ஆண்டுகளில்தாம் நடுவணரசு, சதுப்புநில பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்திட்டம் உருவாக்கப்பட்டு, நாட்டிலுள்ள 94 சதுப்பு நிலங்கள் அதன் கீழ் கொண்டுவரப்பட்டன அவற்றில் பள்ளிக்கரனை, கோடிமுனை உள்ளிட்டப்பகுதிகளும் அடங்கும்.

பள்ளிக்கரனைப் பகுதி 35 ஆண்டுகளுக்கு முன்பு 5ஆயிரம் எக்டேரில் பரந்துவிரிந்திருந்தது என்றால் நம்பமுடியுமா என்ன. அதன் காரணமாக அதன் சுற்றளவில் 50ஆயிரம் எக்டேருக்கு நிலத்தடி நீர் வளத்துடனும், செரிவுடனும் இருந்ததை ஆய்வாளாகள் சுட்டிக்காட்டுகின்றனர். இன்றைக்கு 500 எக்டேருக்கும் கீழே அதன் பரப்பளவு சுருங்கிவிட்டது. சென்னை மாநகராட்சியின் குப்பைக் கிடங்காக ஒரு பக்கம், குடியிருப்பு சாக்கடைகள், சாலைகள் என மாறியிருக்கும், மாற்றப்பட்டிருக்கும் நிலையில் தற்போது அதன் மூன்றில்ஒரு பகுதியை அரசு கையகப்படுத்த விரும்புகிறது. 2007 இல் பள்ளிக்கரனைச் சதுப்புநிலம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் இந்த திட்ட அறிக்கை நடைமுறைக்கு வருமானால் மொத்தத்தையும் விழுங்க எந்தத் தடையுமிருக்கப்போவதில்லை.


அரசுகள் என்பன பன்னாட்டு நிறுவனங்களின் இடைத்தரகர்களாக மாறிவிட்ட நிலையில், நீதிக்கான இடம் என்று ஒன்று இருக்கப்போவதில்லை என்பதைத்தான் இந்தத் திட்ட அறிக்கையும் சொல்கிறது.
 காசுமீரில் நிலசட்டங்களைத் திரும்பப்பெற்றுக் கொண்டதும். வடக்குகிழக்கில் பழங்குடிகள் மட்டுமே நிலங்களை வாங்கவும், விற்கவும்முடியும் என்ற சட்டங்களில் செய்யப்பட்டத் திருத்தங்களும் இந்த வரைவு அறிக்கையுன் சேர்த்துப் புரிந்து கொள்ளலாம்.

இனி சார்க்கண்ட் மாநிலத்தில் பசுமை வேட்டை என்கிற பெயரில் வளங்களைச் சுரண்ட பெருமுதலாளிகளும், துணை காவல்படையினரும், அரச ஆதரவுடன் அமைத்த சல்வாஜுடும் போன்ற தனியானதொரு குண்டர் படைத் தேவைப்படப் போவதில்லை. இந்த அறிக்கை அதை மேலும் எளிமைப்படுத்திவிடும் அல்லது அரசே அந்த வேலையைச் செய்தவிடும் என்று உறுதியாகச் சொல்ல முடியும்

கடல்சார்ந்த பகுதிகளை சூறையாடும் வகையில் கடல்பழங்குடிகளை வெளியேற்றி பன்னாட்டு சுற்றுல, சொகுசுவிடுதிகள் மற்றும் மீன்பிடி நிறுவனங்களிடம் பறித்துத் தரும் சாகர்மாலா திட்டம் போலவே அதன் பகுதியாகவே சமவெளி மற்றும் வனம் சார்ந்த பழங்குடிகளை,மக்களை வெளியேற்றும் வகையில் இந்த சூழல் தாக்கல் அறிக்கை வெளியாகிக் கொண்டுள்ளது.

முன்னைய காங்கிரசு அரசின் சுற்றுசூழல்துறை அமைச்சர் பல முரண்பாடானத் திட்டங்களைக் கொண்டுவந்து எதிர்ப்பின் காரணமாகத் திரும்பப் பெற்று கொண்டவராக இருந்தாலும் இந்த வரைவுத்திட்டம் அபாயகரமானது என்று கண்டித்திருப்பது முக்கியமானதாகும். ஜவடேகருக்கு அவர் கடிதம் எழுதியிருக்கும் அவர் இச்சட்டத்தைத் திரும்பப் பெற கோரிக் கொண்டுள்ளார்.மாநில சுற்று சூழல் குழுவை கலைப்பதன் வழி கூட்டாச்சி கொள்கையை சவப்பெட்டிக்குள் தள்ளிஆணி அடிக்கும் வேலையைச் செய்துள்ளீர்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த வரைவு சட்டம் தான் ஏற்கும் சகலத்திட்டங்களையும் ‘தேசிய முக்கியத்துவம் அல்லது தேசிய நலன்’ என்று சொல்லிக் கொள்வதன் வழி அனைத்து பாதகமானத் திட்டங்களையும் முன் அனுமதியின்றிக் கொண்டுவர முடியும் என்பதற்குள் அடங்கியுள்ள பேரழி சதிக்கு நேரெதிராக இத்திட்டங்களை எதிர்ப்போர் தேசவிரோதி ஆக்கப்படுவர்!

ஆறுதல் தரும் ஒரே அம்சம் என்னவென்றால் இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த அறிக்கையின் மீது கருத்துத் தெரிவிக்க விரும்புவோருக்கு ஆகஸ்ட் 11 வரையில் காலக் கொடு கொடுத்திருப்பதுதான். மேலும்,இந்த வரைவு அறிக்கையானது ஆங்கிலம் மற்றும் இந்தியில் வெளியாகியிருப்பதால் தென் மற்றும் தென் மேற்கு கிழக்கு மாநில மக்கள் இந்த அறிக்கையை படித்துப் புரிந்து கொள்ள வழியில்லாமல் செய்திருக்கும் அரசியல் பயங்கரவாதத்திற்கு எந்த மன்னிப்பும் இருக்க முடியாது.


ஐ.நாவின் சூழல் மாநாட்டிற்கு வருகைதந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பைப் பார்த்து கண்ணீர் மல்க அறச்சீற்றத்துடன் சீறினாலே க்ரேட்டா துன்பாக் அவளது வார்த்தைகளில் சொன்னால், தயவு செய்து எங்கள் பருவத்தை, எதிர்காலத்தைத் திருடிவிடாதீர்கள்!” என்றுதான் இந்த அறிக்க்கையிட்டவர்களைப் பார்த்து சொல்ல வேண்டியிருக்கிறது. சொல்ல வேண்டும்.

*+2 முடித்தவர்கள் அரசு பல்கலைக்கழகம் மூலம் கல்லூரிகளில் ஆன்லைன் விண்ணப்பிக்க லிங்குகள்...*

*+2 முடித்தவர்கள் அரசு பல்கலைக்கழகம்  மூலம் கல்லூரிகளில் ஆன்லைன் விண்ணப்பிக்க லிங்குகள்...*


* சட்ட படிப்பு  - விண்ணப்பம்👇🏻*
http://tndalu.ac.in

* மருத்துவ படிப்பு - விண்ணப்பம்👇🏻*
https://tnhealth.tn.gov.in/

* செவிலியர் / பாரா மெடிக்கல் படிப்பு - விண்ணப்பம்👇🏻*
https://www.tnmgrmu.ac.in

* கால்நடை மருத்துவ படிப்பு - விண்ணப்பம்👇🏻*
http://www.tanuvas.ac.in/

* பொறியியல் படிப்பு - விண்ணப்பம்👇🏻*
https://www.tneaonline.org/


* பொறியியல் Marine படிப்பு - விண்ணப்பம்👇🏻*
http://www.imu.edu.in

*வேளாண்மை படிப்பு  - விண்ணப்பம்👇🏻*
https://tnauonline.in/

*மீன் வளம் படிப்பு  - விண்ணப்பம்👇🏻*
www.tnfu.ac.in

* ஆசிரியர் படிப்பு - விண்ணப்பம்👇🏻*
http://www.tnteu.ac.in

* உடற்கல்வி ஆசிரியர் படிப்பு - விண்ணப்பம்👇🏻*
http://www.tnpesu.org/about.html


* கலை, அறிவியல் படிப்பு - விண்ணப்பம்👇🏻*
http://www.tngasa.in
http://www.tndgeonline.org/

*📘✍️கொரோனா தொற்றிலிருந்து மாணாக்கர்களை பாதுகாக்க தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் சான்றிதழ் பதிவேற்றம் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு குறித்த உயர்கல்வித்துறை அமைச்சரின் பத்திரிக்கைச் செய்தி.*

*📘✍️கொரோனா தொற்றிலிருந்து மாணாக்கர்களை பாதுகாக்க தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் சான்றிதழ் பதிவேற்றம் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு குறித்த உயர்கல்வித்துறை அமைச்சரின் பத்திரிக்கைச் செய்தி.*


தமிழக அரசே! @ ஜாக்டோ-ஜியோ வின் கோரிக்கைகளை நிறைவேற்றுக! @ காவல் துறையின் பொய்வழக்குகள்,துறைரீதியான ஒழுங்குநடவடிக்கைகளை விலக்கிக்கொள்க! @ ஜாக்டோ-ஜியோவின் தலைவர்களை அழைத்துப்பேசுக! தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் மாநிலத்தலைவர் முனைவர்.மன்றம். நா.சண்முகநாதன் வேண்டுகோள்!

தமிழக அரசே!

@ ஜாக்டோ-ஜியோ வின் கோரிக்கைகளை நிறைவேற்றுக!

@ காவல் துறையின் பொய்வழக்குகள்,துறைரீதியான ஒழுங்குநடவடிக்கைகளை விலக்கிக்கொள்க!

@ ஜாக்டோ-ஜியோவின்  தலைவர்களை அழைத்துப்பேசுக!

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் மாநிலத்தலைவர் முனைவர்.மன்றம்.
நா.சண்முகநாதன் வேண்டுகோள்!

புதன், 29 ஜூலை, 2020

*🖥️தற்போது நடைமுறையில் உள்ள pay software ல் (IFHRMS)தங்களது Pay slip பதிவிறக்கம் செய்வது எப்படி? என்ற எளிய விளக்கம்!*

*🖥️தற்போது நடைமுறையில் உள்ள pay software ல் (IFHRMS)தங்களது Pay slip பதிவிறக்கம் செய்வது எப்படி? என்ற எளிய விளக்கம்!*











*🟣ஊடங்கு தளர்வுகள் என்னென்ன? மத்திய அரசு அறிவிப்பு.-MHA - Unlock 3 Order and Guidelines Dated 29.7.2020.*

*🟣ஊடங்கு தளர்வுகள் என்னென்ன? மத்திய அரசு அறிவிப்பு.-MHA - Unlock 3 Order and Guidelines Dated 29.7.2020.*

*ஊரடங்கு தளர்வுகள்... மத்திய அரசு அறிவிப்பு..!*

ஊரடங்கு தளர்வுகள் அறிவிப்பு

நாடு தழுவிய அளவில் அமலில் உள்ள ஊரடங்கில் தளர்வுகளை அளித்து மத்திய அரசு அறிவிப்பு

3ஆம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது

யோகா, ஜிம் பயிற்சி மையங்களை ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் திறக்க அனுமதி

தனிநபர்கள் இரவு நேரங்களில் நடமாட விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கம்

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆகஸ்ட் 31ஆம் தேதி ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்

பள்ளி, கல்லூரிகள் திறப்புக்கான தடை
தொடரும் என மத்திய அரசு அறிவிப்பு

ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிப்பு

சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்

சுதந்திர தின நிகழ்ச்சியில் ஏற்கனவே உள்ள அளவீடுகளை விட, கூடுதல் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்

எவை, எவை இயங்காது....

பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை
மூடப்பட்டிருக்கும்

மெட்ரோ ரயில், தியேட்டர்கள், கேளிக்கை பூங்காக்கள் இயங்குவதற்கு தடை தொடர்கிறது

நீச்சல் குளங்கள், மதுபான பார்களை திறப்பதற்கான தடை தொடரும் என அறிவிப்பு

மத நிகழ்ச்சிகள், அரசியல் நிகழ்வுகள், பொது நிகழ்ச்சிகளுக்கு தடை நீடிப்பதாக அறிவிப்பு

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்

எவற்றிற்கு அனுமதி உண்டு.!

வந்தே பாரத் திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் சிக்கியிருப்போர் தாயகம் திரும்ப கட்டுப்பாடுகளுடன் அனுமதி

வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்ப
விருப்பம் தெரிவிப்போர், குறைந்த அளவிலேயே அனுமதிக்கப்படுவர்

மாஸ்க் அவசியம், தனிநபர் இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் சுதந்திர தின நிகழ்வுக்கு அனுமதி

மாநிலத்திற்குள்ளும், மாநிலங்களுக்கு இடையிலும், சரக்குப் போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகள் கிடையாது

மாநிலத்திற்குள்ளும், மாநிலங்களுக்கு இடையிலும், தனிநபர் போக்குவரத்து பற்றி மாநிலங்கள் முடிவெடுக்க அனுமதி