திங்கள், 20 ஜனவரி, 2020

கல்வித்தரத்தில் பின்தங்குகிறதா தமிழகம்? எழுத்துக்கூட்டிப் படிக்க முடியாத நிலை என ஆய்வு தகவல்



ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டோரால் இரண்டாம் வகுப்பு புத்தகங்களைக் கூட படிக்க முடியவில்லை. மேலும் கடந்த பத்து ஆண்டுகளாகக் கல்வியின் தரம் இந்தியாவில் குறைந்துகொண்டே வருவதாகவும் அசர் (The Annual Status of Education Report - ASER) அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் அசர் நிறுவனம் பல ஆண்டுகளாக இந்தியா முழுவதும் உள்ள எல்லா மாநிலங்களிலும் பள்ளிகளிலும் ஆய்வு நடத்தி, நாட்டின் கல்வித் தரம் குறித்து ஆய்வறிக்கையை வெளியிட்டு வருகிறது. 2018-19 ஆம் ஆண்டுக்கான ஆய்வறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக பள்ளிக்கல்வியின் தரம் தொடர்ந்து குறைந்துகொண்டே வருவதாகவும் இந்த ஆண்டும் வீழ்ச்சி நிற்கவில்லை என்றும் இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

2018-19 ஆம் ஆண்டின் கல்வித் தரத்தைப் பொறுத்தவரையில் 2007-2008ஆம் ஆண்டின் கல்வித் தரத்தை விடக் குறைவாகவே உள்ளதாகவும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. அப்படியென்றால் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதி என்ன ஆனது? கல்வி தரத்தை உயர்த்துவதில் மத்திய மாநில அரசுகள் கவனக்குறைவாகச் செயல்படுகின்றனவா போன்ற பல கேள்விகளை இந்த அறிக்கை எழுப்புகிறது.

2012ஆம் ஆண்டு அன்றைய திட்ட கமிஷன்தான் முதன் முதலில் இந்தியக் கல்வித் தரத்தில் குறைபாடு உள்ளதைக் குறிப்பிட்டிருந்தது. ஆனால், இதை அப்போதைய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மறுத்துவிட்டது. அதற்குப் பின் மாணவர்களின் படிக்கும் ஆற்றல், அடிப்படை கணித ஆற்றல் போன்றவை குறித்து எந்த விதமான தகவலும் வெளிவரவில்லை.

குழந்தைகளின் படிக்கும் ஆற்றலையே கல்வியின் தரமாக இந்த ஆய்வு எடுத்துக் கொள்கிறது. இதன்படி 2008 ஆம் ஆண்டிலிருந்து கல்வியின் தரம் 9 சதவீதம் குறைந்துள்ளது.

கவலை அளிக்கும் அரசுப் பள்ளிகள்

கல்வியின் தரத்தை பொறுத்தவரையில் தனியார் பள்ளிகளின் தரம் அதிகஅளவில் குறையவில்லை. ஆனால் அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் கவலைக்குரியதாக இருக்கிறது.

2008ஆம் ஆண்டு தனியார் பள்ளிகளின் தரம் 67.9 சதவீதமாக இருந்ததாகவும் தற்போது இது குறைந்து 65.1 சதவீதமாக குறைந்துள்ளது. அதேசமயம் 53 சதவீதமாக இருந்த அரசுப் பள்ளிகளின் தரம் தற்போது 44.2 சதவீதமாகச் சரிந்துள்ளது.

இதேபோல மேல்நிலைக்கல்வியின் தரமும் வெகுவாக குறைந்துள்ளது.2007-08 ஆம் ஆண்டு எட்டாம் வகுப்பு மாணவர்கள் பத்தில் எட்டு பேருக்குப் படிக்கும் ஆற்றல் இருந்தது. இது தற்போது வெகுவாக குறைந்து ஆறு அல்லது ஏழு பேருக்குத் தான் படைப்பாற்றல் இருக்கிறது.

கணக்குப் போடும் ஆற்றலில் பின்தங்கும் தமிழக மாணவர்கள்

கூட்டல் கழித்தல் வகுத்தல் போன்ற அடிப்படைக் கணித அறிவில் தமிழக மாணவர்களின் நிலை தொடர்ந்து வருத்தமளிப்பதாகவே இருந்துவருகிறது. 2008ஆம் ஆண்டு கணித அறிவில் தமிழகம் இந்திய அளவில் மிகவும் பின்தங்கியே இருந்தது. தமிழகத்தில் 100-இல் பத்துக்கும் குறைவான மாணவர்களுக்கே வகுத்தல் கணக்குகளைச் செய்யமுடிந்தது. இந்த நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டு, தற்போது 100-இல் இருபது மாணவர்களால் வகுத்தல் கணக்குகளைச் செய்ய முடிவதாக இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. ஆனால், இந்த எண்ணிக்கையும் மிக மிகக் குறைவே.

பஞ்சாப் போன்ற மாநிலங்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு வகுத்தல் கணக்குகளைப் போட முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அசாம், குஜராத், கர்நாடகா, ராஜஸ்தான் மாணவர்களைவிடத் தமிழக மாணவர்களின் கணக்காற்றல் குறைவாகவே உள்ளது.

இந்த தரம் ஏன் குறைவாகவே பத்து ஆண்டுகளுக்கு மேலாகக் குறைவாகவே உள்ளது என்பதைத் தமிழக பள்ளிக் கல்வித்துறை கட்டாயம் ஆய்வு ஒன்றை நடத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.

எதை நோக்கிச் சொல்கிறது நம் கல்விக் கொள்கை?

முன்பை காட்டிலும் மாணவர்களின் வருகை நாடு முழுவதிலும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நம் கல்வி வளர்ச்சி எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது? நம் கல்வியின் வளர்ச்சி எதை நோக்கிச் செல்ல வேண்டும்? அனைவருக்கும் கல்வி என்ற ஒற்றை இலக்கை நோக்கி மட்டும் முன்னேறாமல் அனைவருக்கும் தரமான கல்வி என்ற இலக்கை நோக்கி நாம் எப்போது பயணிக்கப்போகிறோம்?. இது போன்ற பல கடுமையான கேள்விகளை இந்த அறிக்கை முன்வைத்திருக்கிறது.

இந்த கேள்விகளுக்கான பதில்கள் கடினமானவை. குழந்தைகளின் பாடச்சுமையை குறைக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து கூறிவருகின்றன. இது சரியானதுதான் என்று இந்த அறிக்கை கூறுகிறது. ஆனால், பாடச் சுமையை குறைப்பது என்ற பெயரில் கல்வித் தரத்தைக் குறைப்பது எப்படித் தீர்வாகும்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு செயல்வழிக் கற்றல் வெற்றிகரமாக அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அதை ஏன் நாடு முழுவதிலும் அரசு முன்னெடுத்து செல்லவில்லை?. இந்த கல்வி ம

இதை பின்வாங்குங்கள் - இல்லையென்றால், மக்கள் பாடம் கற்பிப்பார்கள் - என்பதில் அய்யமில்லை!


கல்வியில் பார்ப்பனத்தனம்: குலக்கல்வித் திட்டத்தை நோக்கி பாய்கிறதா அ.தி.மு.க. ஆட்சி?
------------------------------------------
அ.இ.அ.தி.மு.க. ஆட்சி பல வகைகளிலும் பாரதீய ஜனதாவின் தொங்கு சதையாக செயல்பட்டுக் கொண்டு இருப்பதை நாடு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.

அதிலும் கல்வித் துறையில் பா.ஜ.க. ஆட்சி ‘எள்' என்றவுடன் எண்ணெய்யாகக் கொதிக்கிறது!

‘நீட்' தேர்வில் விலக்குக் கோரி ஒப்புக்காக இரு மசோதாக்களை நிறைவேற்றிவிட்டு, தன் கடன் முடிந்துவிட்டதாக கைவிரித்துவிட்டது.

சமூகநீதிக்குக் கல்லறை கட்டும் சேவகத்தில்...

உயர்ஜாதியில் ஏழைகளுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு குறித்து, அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டியும் பெரும்பாலானவர்கள் தெரிவித்த கருத்துகளுக்கு எதிராக பா.ஜ.க.வே சரணம் என்று  கைதூக்கி தமிழ் மண்ணுக்கே உரித்தான சமூகநீதிக்குக் கல்லறை கட்டும் சேவகத்தில் ஈடுபட்டுவிட்டது.

தேசிய கல்வி என்ற குலதர்மக் கல்வி திட்டத்தை மத்திய பி.ஜே.பி. ஆட்சி அறிவித்தது.

கடும் எதிர்ப்பு எரிமலைக் குழம்பில் அத்திட்டம் கருகிக் கொண்டு இருக்கும்போது, நீதிமன்றத்திலும் வழக்குகளில் சிக்கிக் கொண்டு இருக்கும் நிலையில்,

‘‘ராஜாவை விஞ்சிய விசுவாசியாக'' அ.தி.மு.க. அரசின் கல்வித் துறை காட்டுக் குதிரை வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

மாற்றிப் பேசும் கல்வித் துறை அமைச்சர்!

அவசர அவசரமாக 5 ஆம் வகுப்பு, 8 ஆம் வகுப்பு களுக்கும் அரசுப் பொதுத் தேர்வு என்று அறிவித்தது.

தொடக்கத்தில் அத்தகைய தேர்வு இல்லை என்று சொன்ன அமைச்சரே பிறகு ‘பிளேட்டை'த் திருப்பிப் போட்டார்.

அடுத்த கட்டமாக 5, 8 ஆம் வகுப்புகளுக்குத் தேர்வு உண்டு; ஆனால், இத்தேர்வில் தோல்வி கிடையாது. அடுத்த வகுப்புக்குச் செல்லலாம் என்றாரே!

(நல்ல கல்வி ஆலோசகர்கள் இருந்தும், அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள் - என்ன காரணத்தாலோ!)

பி.ஜே.பி.யின் ‘பி' டீமான அ.தி.மு.க. அரசு!

இப்பொழுது இன்னொரு அதிரடி அறிவிப்பு.

அய்ந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு தேர்வுகளை மாணவர்கள், அவர்கள் படிக்கும் பள்ளிகளில் எழுதக் கூடாதாம். ஒரு கிலோ மீட்டர் முதல் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வேறு பள்ளிகளில்தான் தேர்வுகளை  நடத்தவேண்டுமாம்.

என்னே கொடுமை!

‘நீட்' தேர்வு எழுத வெளிமாநிலங்களில் தேர்வு மய்யம் உண்டாக்கியது பி.ஜே.பி. அரசு என்றால், 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களை மூன்று கிலோ மீட்டர் தூரத்துக்கு விரட்டுகிறது பி.ஜே.பி.யின் ‘பி' டீமான அ.தி.மு.க. அரசு.

நடைமுறையில் இதில் எவ்வளவு சிரமங்கள் உண்டு என்பது அவர்களுக்குத் தெரியாதா? ஏழை, எளிய பெற்றோர்கள், அன்றாடம் கூலி வேலைக்குச் சென்று சம்பாதித்தால்தான் உலை கொதிக்கும் என்ற நிலையில் உள்ள பெற்றோர்கள், தேர்வு நடத்தும் அத்தனை நாள் களிலும் வேலைக்குச் செல்ல முடியாமல், பிள்ளைகளை அழைத்துச் செல்லுவது, தேர்வு முடிந்தவுடன் அழைத் துக் கொண்டு வருவது என்ற அல்லலை ஈவு இரக்கத் துடன், மனிதாபிமானத்துடன் தமிழ்நாடு அரசின் கல்வித் துறை நினைத்துப் பார்க்க வேண்டாமா?

இதுதான் அண்ணா பெயரில் உள்ள கட்சியின் - ஆட்சியின் செயல்பாடா?

‘‘நீ படித்தது போதும், என்னோடு கூலி வேலைக்கு வா'' என்று பெற்றோர்கள் சொல்லவேண்டும் என்று அ.தி.மு.க. அரசு எதிர்பார்க்கிறதா? இதுதான் அண்ணா பெயரில் உள்ள கட்சியின் - ஆட்சியின் செயல்பாடா?

கல்வி வளர்ச்சித் திசையில் காலடி எடுத்து வைத்துக் கொண்டிருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் கால்களை முடமாக்கத்தான் ‘நீட்' என்றும், புதிய கல்வி என்றும், குருகுலக் கல்வி என்றும் கண்ணிவெடிகள் வைக்கப்படு கின்றன.

இதனையெல்லாம் புரிந்துகொள்ளும் பொறுப் புணர்வு அ.தி.மு.க. ஆட்சிக்கு இல்லவே இல்லையா?

அன்றைக்கு ஆச்சாரியார் (ராஜாஜி) குலக்கல்வித் திட்டம் கொண்டு வந்து கவிழ்ந்து போனார்.

அதற்குப்பின் எம்.ஜி.ஆர். இட ஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் கொண்டு வந்து 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்தார்.

மக்கள் பாடம் கற்பிப்பார்கள்!

அந்தத் திசையில் அ.தி.மு.க. அரசு கல்வித் துறையில் அசல் பார்ப்பனத் தனமாக நடந்துகொண்டுள்ளது. ஏழை, எளிய மக்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டி எவ்வளவு நாட்களுக்கு ஆட்சி நடத்த முடியும் அ.தி.மு.க.?

இதை பின்வாங்குங்கள் - இல்லையென்றால், மக்கள் பாடம்   கற்பிப்பார்கள்  - என்பதில் அய்யமில்லை!

கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
18.1.2020
ஜனவரி 20,
வரலாற்றில் இன்று.

தலைசிறந்த எழுத்தாளரான ஜோஹன்னஸ் வில்ஹெம் ஜென்சன் பிறந்த தினம் இன்று.

இவர் 1873ஆம் ஆண்டு டென்மார்க்கின் ஃபார்சோ நகர் அருகே உள்ள ஹிம்மர்லேண்ட் கிராமத்தில் பிறந்தார்.

பல அறிவியல் துறைகளை உள்ளடக்கிய மருத்துவ படிப்பு படிக்கும்போது, இவருக்கு படைப்புக் களத்தில் ஆர்வம் அதிகமானதால் இறுதியில், எழுத்தாளராக வேண்டும் என தீர்மானித்தார்.

1898 முதல் 1910 வரை வெளிவந்த "ஹிம்மர்லேண்ட் ஸ்டோரிஸ்" (Himmerland stories) என்ற கதைத்தொடர் இவருக்கு பெயரையும், புகழையும் பெற்றுத் தந்தது. இவர் எழுதிய கொன்ஜென்ஸ் ஃபால்ட் (தி ஃபால் ஆஃப் தி கிங்) என்ற வரலாற்று நாவல்கள் டென்மார்க்கின் குறிப்பிடத்தக்க வரலாற்று நாவல் என்று போற்றப்படுகிறது.

பரிணாம வளர்ச்சி குறித்து ஆராய்ந்து அவற்றுக்கான கோட்பாடுகளின் அடிப்படையில் "டென் லாங்கெ ரெஜ்சி" என்ற தலைப்பில் 6 நூல்களை எழுதியுள்ளார்.

1944இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசை பெற்றார். கவிதைக் களத்தில் சிறப்பாக பங்காற்றிய ஜோஹன்னஸ் வில்ஹெம் ஜென்சன் 77ஆவது வயதில் (1950) காலமானார்
ஜனவரி 20,
வரலாற்றில் இன்று.

எல்லை காந்தி என அழைக்கப்படும் கான் அப்துல் கப்பார் கான் நினைவு தினம் இன்று.

கான் அப்துல் கப்பார் கான்(Khan Abdul Ghaffar Khan, 06 பிப்ரவரி 1890 - 20 ஜனவரி 1988)  பிரிட்டிஷ் இந்தியாவின் முக்கிய தலைவர்களுள் ஒருவர். இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியை அகிம்சை முறையில் எதிர்த்தவர். மகாத்மா காந்தியின் நெருங்கிய நண்பர்.

இளம் வயதில் தனது குடும்பத்தால் பிரிட்டிஷ் போர்ப்படையில் சேர்க்கப்பட்டார்.

இவர் ஒருமுறை ஆங்கிலேயர் ஒருவர், ஒரு இந்தியன் மீது காட்டிய கொடுமையைக் கண்டு சலிப்படைந்தார். இங்கிலாந்தில் இவர் படிக்க வேண்டும் என்று இவர் குடும்பம் முடிவு செய்தததை இவரது தாய் தடுத்ததால் போகவில்லை.

குதை கித்மத்கர் (அதாவது "இறைவனின் தொண்டர்கள்") என்ற புரட்சிப் படையை அமைத்த இவர் பலமுறை ஆங்கிலேயர் ஆட்சியில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தியப் பிரிவினையைக் கடுமையாக எதிர்த்த இவர், காங்கிரஸ் கட்சி பிரிவினைத் திட்டத்தை ஆதரித்தவுடன், "எங்களை ஓநாய்களிடம் எறிந்துவிட்டீரே" என்று காங்கிரஸ் தலைவர்களிடம் சொன்னார்.

இந்தியப் பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானில் வாழ்ந்த இவர் பலமுறை பாகிஸ்தான் ஆட்சியால் சிறையில் அடைக்கப்பட்டார். இந்திய உளவாளி என்று தூற்றப்பட்டார்.

1985இல் நோபல் அமைதி பரிசுக்கு தேர்வு செய்யப்பட்ட இவர், 1987இல் பாரத ரத்னாபெற்ற முதல் அயல்நாட்டவர் என்ற பெருமை பெற்றவர்.

1988இல் இவர் காலமானார்.
ஜனவரி 20,
வரலாற்றில் இன்று.

நிலவில் கால் வைத்த இரண்டாவது மனிதர் பஸ் ஆல்ட்ரின் பிறந்த தினம் இன்று.

✈ அமெரிக்க விண்வெளி வீரரும், விமானியுமான பஸ் ஆல்ட்ரின் 1930ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி நியூ ஜெர்சியிலுள்ள கிளென் ரிட்ச்சில் பிறந்தார். இவரின் இயற்பெயர் எட்வின் யூஜின் ஆல்ட்ரின் ஆகும்.

✈ இவர் பஸ் (BUZZ) என்ற பெயரிலேயே பிறப்பில் இருந்து அழைக்கப்பட்டு வந்தார். எனவே இவர் தனது பெயரை "பஸ் ஆல்ட்ரின்" என அதிகாரப்பூர்வமாக 1988ல் மாற்றிக் கொண்டார். 1963ல் நாசா விண்வெளிப் பயிற்சியில் இணைந்தார். ஜெமினி 12 விண்கலத்தில் செல்வதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

✈ முதன்முதலாக சந்திரனுக்கு மனிதரை ஏற்றிச் சென்ற அப்பல்லோ 11 விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங் உடன் நிலாவை நோக்கி பயணம் செய்த இவர் சந்திரனில் இறங்கிய இரண்டாவது மனிதர் என்ற பெருமைக்குரியவர்.
ஜனவரி 20,
வரலாற்றில் இன்று.


பெ. தூரன் என்கிற  பெரியசாமி தூரன் நினைவு தினம் இன்று.

பெரிய.தூரன் (செப்டம்பர் 26, 1908 - ஜனவரி 20, 1987) ஒரு சிறந்த எழுத்தாளரும் தமிழில் கலைக்களஞ்சியம் தொகுத்த அறிஞரும் ஆவார். பெ. தூரன் ஒரு நாட்டுப்பற்றாளராகவும் தமிழ்ப் புலவராகவும் கருநாடக இசை வல்லுநராகவும் அறியப்படுகிறார்; நாடகங்களும் இசைப்பாடல்களும் சிறுகதைகளும் சிறுவர் இலக்கியங்களும் எழுதியுள்ளார்; மொழிபெயர்ப்புக்களை மேற்கொண்டுள்ளார்; பதிப்புப் பணிகளும் செய்துள்ளார். இவரின் நூல்கள்  நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.ர