செவ்வாய், 10 டிசம்பர், 2019

*அரசாணை நிலை எண்:270, உயர் கல்வித்(J1)துறை நாள்: 03.12.2019ன் படி* *BE. எந்தப் பிரிவு பயின்று இருந்தாலும் (with B.Ed.,) அவர்கள் 6-8 வகுப்புகளுக்கு கணிதம் கற்பிக்க தகுதியானவர்கள் என அரசாணை வெளியீடு!* *பக்கம் 10, வரிசை எண் 20, Resolution No.2.30.*

டிசம்பர் 26ம் தேதி சூரிய கிரகணம் ~ சூரியன் நெருப்பு வளையமாக மாறும்…


டிசம்பர் 10,
வரலாற்றில் இன்று.

 ராஜாஜி என்று அழைக்கப்படும் ராஜ
கோபாலாச்சாரியார் அவர்களின்
பிறந்த தினம் இன்று.

இளம்வயதிலேயே கிட்டப்பார்வையால் கண்ணாடி போட்ட அவருக்கு பள்ளிக்காலத்தில் நண்பர்கள் வெகு குறைவாகவே இருந்தனர்.

 அரசுப்பள்ளியில் படித்து முடித்த பின்னர் மெட்ரிகுலேசன் தேர்வில் சாதித்துக்காட்டினார் அவர்.

பின்னர் சட்டம் படித்து முடித்த பின்னர் சேலத்தில் பிரபல வழக்கறிஞர் ஆனார் அவர்.

அப்பொழுதே ஆயிரம் ரூபாய் ஒரு வழக்குக்கு வாங்குகிற அளவுக்கு வருமானம்
உடையவராக இருந்தார் அவர்.


1917 இல் சேலம் நகராட்சி தலைவர் ஆனார் அவர். சம்பளமே வாங்கிக்கொள்ளாமல் ஆறு மணிநேரம் தினமும் உழைத்து அடிப்படை வசதிகளை மேம்படுத்தினார் ராஜாஜி.


1909ஆம் ஆண்டு மகாகவி பாரதியாருடன் பழகும் வாய்ப்பு ராஜாஜிக்குக் கிடைத்தது. நாட்டு விடுதலைக்கான போராட்டம் குறித்து இருவரும் பல சந்திப்புகளில் விவாதித்தனர். இது பற்றி காந்தியடிகளையும் சந்தித்து ராஜாஜி பேசினார்.

 சென்னையில் இருந்த ராஜாஜியின் வீட்டில்தான் மகாகவி பாரதியார் முதன்முறையாக காந்தியடிகளைச் சந்தித்தார்.

 காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கம் ஈர்க்க பல்லாயிரம் ரூபாய் வருமானம் தந்து கொண்டிருந்த வக்கீல் தொழிலை துறந்தார் அவர்.


உப்பு சத்தியாகிரகத்தை தமிழ்நாட்டில் முன்னின்று நடத்தினார் அவர்.


1937 இல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வென்ற
பின்னர் முதல்வர் ஆனார் அவர்.

மது விலக்கை சேலத்தில் முதன் முதலில் அமல்படுத்தினார் ராஜாஜி. பின்னர் கடப்பா,சித்தூர்,வட ஆற்காடு மாவட்டங்களில் மதுவிலக்கை விரிவுபடுத்தினார் ராஜாஜி. அரசுக்கு ஏற்பட்ட வருமான இழப்பை சரிசெய்ய இந்தியாவிலேயே முதல் முறையாக விற்பனை வரியைக்கொண்டு வந்தார் அவர்.


 ஆலய பிரவேசத்தை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சாத்தியப்படுத்தினார் விவசாயிகளின் கடன் சுமையை
குறைக்கவும் சட்டமியற்றினார்.


அடுத்து ஹிந்தி மொழியை 125 பள்ளிகளில் 6,7,8 ஆம் வகுப்புகளில் கொண்டு வந்தார்.

 இந்தியாவின் அரசியல் மற்றும் வணிகத்தை செலுத்த ஹிந்தி அவசியம் என்று ராஜாஜி நினைத்தார்.

 "குழந்தைகளுக்கு பாலூட்டும் பொழுது தாய் பலவந்தம் செய்தாலும் பரவாயில்லை. தமிழ்மொழி கால் போன்றது ; ஹிந்தி வண்டி மாதிரி ,ஆங்கிலம் ரயில் மாதிரி !" என்று விளக்கம் தந்தார் அவர்.


 நாவலர்
சோமசுந்தர பாரதியார் தலைமையில் திருச்சியில் ஹிந்தி எதிர்ப்புக்குழு உருவானது.

 பெரியார் ,"ஆச்சாரியார் ஹிந்தி புகுத்துவதால் தமிழ் கெடாது என்று பித்தலாட்டம் பேசுகிறார். இங்கே தமிழ் எங்கே இருக்கிறது ?" என்று முழங்கினார்.

 அண்ணா,பெரியார் உட்பட ஆயிரக்கணக்கானோர் சிறை புகுந்தார்கள். தாளமுத்து, நடராசன் எனும் இருவர் சிறையில் மரணம் அடைந்தார்கள். ஹிந்தி திணிப்புக்கு எதிராக சிறை சென்றவர்களை ,"அற்ப கூலிக்கு அமர்த்தப்பட்ட அடியாட்கள் !" என்று அழைத்தார் ராஜாஜி.

 இரண்டாம் உலகப்போரில் ஆங்கிலேய அரசு ஈடுபடுவதை கண்டித்து காங்கிரஸ் அரசுகள் பதவி விலகியதால் ஹிந்து திணிப்பு அதோடு நின்று போனது.


ராஜாஜி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சியைவிட்டு வெளியேறினார்.

 போர்க்காலத்தில் ஆங்கிலேயருக்கு உதவ வேண்டும் என்று சொன்னார் அவர்.

 பின்னர் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்குள் வந்தார். 1951இல் நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கம்யூனிஸ்ட்கள் அதிக இடங்களில் வென்றிருந்தார்கள். ராஜாஜியை அழைத்தார்கள். காமன் வீல் கட்சி,தொழிலாளர் கட்சி ஆகியவற்றை சேர்த்துக்கொண்டு ஆட்சி அமைத்தார் அவர்.


ராஜாஜி தன் வாழ்நாளில் நேரடியாக தேர்தலில் போட்டியிடுவதை பெரும்பாலும் தவிர்த்தே வந்திருக்கிறார்.
பதவிக்கு வந்ததும் போட்ட முதல் உத்தவரவு கைதிகளுக்கு மோர் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது தான்.


குலக்கல்வி முறையை அடுத்து கொண்டுவந்தார் அவர். ஐந்து பாடவேளைகள் என்பதை மூன்று பாடவேளைகள் என்று குறைத்தார் ராஜாஜி. ஷிப்ட் முறையில் ஒரே நாளில் இரண்டு பிரிவாக வகுப்புகள் நடக்கும். காலையில் பள்ளியில் படித்துவிட்டு மதியம் போய் பெற்றோர்கள் செய்யும் தொழிலில் பிள்ளைகள் உதவவேண்டும் என்று ராஜாஜி சொன்னார். அது சாதியத்தை காப்பாற்றவும், வலுப்படுத்தவும் செய்யும் என்று எதிர்த்தார்கள்.


 பெரியார் ,"ராஜாஜி கிராமத்து பையனுக்கு கல்வி வேண்டாம் என்று சொல்கிறாரா ? மூன்றே பாடவேளைகள் என்பதால் மிச்ச நேரத்தில் அவன் கழுதை மேய்த்துக்கொண்டும், முடி வெட்டிக்கொண்டும், துணி துவைத்துக்கொண்டும்
இருக்க வேண்டுமா ?" என்று பொங்கினார்.

 தொழிற்கல்வித்திட்டம் குலக்கல்வி என்று அழைக்கப்பட்டது.
ராஜாஜி, அமைச்சரவையை கலந்து ஆலோசிக்காமல் இப்படி முடிவை எடுத்ததற்கும் எதிர்ப்பு கிளம்பியது.

 "ராமானுஜர்,சங்கரர் முதலானோர் மற்றவரை கேட்டுவிட்டா தங்களின் தத்துவங்களை வெளியிட்டார்கள் ? இது நிர்வாக ரீதியான முடிவு " என்றார் ர
டிசம்பர் 10,
வரலாற்றில் இன்று.


கல்வியாளரும், நீர்வளத் துறை வல்லுநருமான வா.செ.குழந்தைசாமி (V.C.Kulandaiswamy) நினைவு தினம் இன்று.

*
கரூர் மாவட்டம் வாங்கலாம் பாளையத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் (1929).

 கரக்பூர் ஐஐடி-யில் முதுநிலை பட்டம் பெற்றவர். ஜெர்மனி, அமெரிக்காவில் உயர்கல்வி பயின்றார். இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நீர்வளத் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.

*
நீர்வளத் துறையில் இவரது கண்டுபிடிப்பு ‘குழந்தைசாமி மாதிரியம்’ எனப்படுகிறது. யுனெஸ்கோ நீர்வளத் துறைத் திட்டக் குழு உறுப்பினர் உட்பட உலக அளவில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

*
தமிழகத் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர், நீர்வளத்துறை பேராசிரியர் போன்ற பொறுப்புகளிலும் சென்னை அண்ணா, மதுரை காமராஜர், இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மொத்தம் 15 ஆண்டுகள் துணைவேந்தராகவும் இருந்தவர்.

*
சர்வதேச தொலைநிலைக் கல்விக் குழுவின் ஆசிய துணைத் தலைவராக, காமன்வெல்த் நாடுகளின் பல்கலைக்கழகங்கள் குழுத் தலைவராக பணியாற்றியவர். சிறந்த கல்வியாளர்.

*
நீரியல், நீர்வளம், கல்வி போன்றவை தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். தமிழ் இலக்கியத்தில் ஆர்வமும், படைப்பாற்றலும் மிக்கவர்.

*
சிறந்த கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர், பேச்சாளர். குலோத்துங்கன் என்ற பெயரில் பல கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். இவரது படைப்புகள் தமிழில் 10 கவிதைத் தொகுப்புகள், 12 உரைநடை நூல்களாக மட்டுமல்லாமல் ஆங்கிலத்தில் 6 உரைநடை நூல்களாகவும் ஒரு கவிதை நூலாகவும் வெளிவந்துள்ளன. இவரது அனைத்து கவிதைகளின் தொகுப்பு ‘குலோத்துங்கன் கவிதைகள்’ என்ற தலைப்பில் 2002இல் வெளிவந்தது.

*
தனது சில கவிதைகள், நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். இவரது நூல்கள், கட்டுரைகள் பல பல்கலைக் கழகங்களில் பாட நூல்களாகவும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பாடமாகவும் இடம்பெற்றுள்ளன.

*
தமிழக அரசின் திருவள்ளுவர் விருது, தமிழ் இலக்கிய பங்களிப்புக்காக சாகித்ய அகாடமி விருது, கல்வி, அறிவியல் துறை பங்களிப்புக்காக பத்ம, பத்மபூஷண் விருது பெற்றவர். தமிழில் அறிவியல் தொழில்நுட்ப இலக்கியங்களைப் படைத்தல், தமிழ் மொழியை நவீனப்படுத்துதல், தமிழ் கற்பதை எளிமையாக்குதல் ஆகியவற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.

*
கலைச் சொல்லாக்கம், புதிய சொற்களை உருவாக்கும் உத்திகள் குறித்து பல நூல்கள், கட்டுரைகளை எழுதியுள்ளார். தமிழ் எழுத்துச் சீரமைப்புப் பணியை லட்சியமாக கொண்டவர். வரிவடிவச் சீரமைப்புப் பணியை கடந்த 36 ஆண்டுகளாக ஓர் இயக்கமாகவே நடத்தி வருகிறார். 247 தமிழ் ஒலி எழுத்துகளைக் குறிப்பிட அதிகபட்சம் 39 குறியீடுகளுக்கு மேல் தேவை இல்லை என்பது இவரது உறுதியான கருத்து.

*
தமிழ் இணையப் பல்கலைக்கழக நிறுவனத் தலைவரான இவர், தமிழ் மெய்நிகர்ப் பல்கலைக்கழக சமூகத்தின் தலைவர், சென்னை தமிழ் அகாடமி தலைவர், உலகத் தமிழ் ஆய்வுக்கழகத் துணைத் தலைவர், தமிழ் மொழி மேம்பாட்டு வாரியத் தலைவர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்தார்.

வா.செ.குழந்தைசாமி 2016ஆம் ஆண்டு டிசம்பர் 10இல் காலமானார்.
டிசம்பர் 10,
வரலாற்றில் இன்று.

 உலகப் புகழ்பெற்ற அமெரிக்கப் பெண் கவிஞரும் ஆங்கிலக் கவிதையுலகின் குறிப்பிடத்தக்கப் படைப்பாளிகளுள் ஒருவருமான  எமிலி டிக்கின்சன் (Emily Dickinson)  பிறந்த தினம் இன்று.

எமிலி டிக்கின்சன் (டிசம்பர் 10, 1830 – மே 15, 1886) ஒரு அமெரிக்கப் பெண் கவிஞர் ஆவார். ஆங்கிலக் கவிதையுலகின் குறிப்பிடத்தக்க படைப்பாளிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர். ஐக்கிய அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த இவர் தனிமையைப் பெரிதும் விரும்பியவர்.

 வெள்ளை நிற ஆடைகளை மட்டும் அணிதல், விருந்தினருடன் பேசுவதில் தயக்கம் காட்டுதல், அறையை விட்டு வெளியே வராதிருத்தல் போன்ற பழக்க வழக்கங்களால் விந்தையான பெண்ணாக அறியப்பட்டார்.

டிக்கின்சன் ஆயிரத்து எண்ணூறு கவிதைகளை எழுதினாலும் அவரது வாழ்நாளில் அவற்றுள் வெகு சிலவே அச்சில் வெளியாகின. அவ்வாறு வெளியானவையும் பதிப்பாளர்களால் அக்கால கட்ட கவிதை மரபுகளுக்கேற்ப மாற்றங்கள் செய்யப்பட்டு வெளியிடப்பட்டன. டிக்கின்சனின் கவிதைகள் அவரது காலகட்டத்தின் கவிதை மரபுகளை மீறி புதிய வடிவங்களைக் கொண்டிருந்தன. மரணம் மற்றும் மரணமின்மை ஆகியவற்றை கருப்பொருள்களாகக் கொண்டிருந்தன.

 டிக்கின்சன் தன் நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களும் இவ்விசயங்களையே கருப்பொருள்களாகக் கொண்டிருந்தன.

டிக்கின்சனின் நண்பர்களுக்கு அவர் கவிதை எழுதுவது தெரிந்திருந்தாலும் அவரது மரணத்துக்குப் பின்னரே அவர் பெரும் எண்ணிக்கையில் கவிதை எழுதியிருந்தது கண்டுபிடிக்கபபட்டது. அவரது முதல் கவிதைத் தொகுப்பு அவர் மரணமடைந்து நான்காண்டுகளுக்குப் பிறகு வெளியானது. 1955 முதல் டிக்கின்சனின் கவிதைகள் அனைத்தும் அவற்றின் மூல வடிவில் முதன்முறையாக வெளியேறின. 19ம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் அவரது கவிதைகள் விமர்சகர்களின் வரவேற்பைப் பெறவில்லை. ஆனால் காலப்போக்கில் இலக்கிய உலகின் நிலைப்பாடு மாற்றமடைந்து தற்போது டிக்கின்சன் குறிப்பிடத்தக்க அமெரிக்கக் கவிஞர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.

அமெரிக்காவின், மசாசூசெட்ஸ் மாநிலத்தில் பிறந்தவர் (1830)  தந்தை ஒரு வியாபாரி. சிறுவயது முதலே புத்தி கூர்மையான பெண்ணாக இருந்த இவர், இயல்பான பல திறன்களைப் பெற்றிருந்தார் எனவும் கூறப்படுகிறது

உள்ளூரிலேயே ஆரம்பக்கல்வி கற்றார். ஆங்கிலம், செம்மொழி இலக்கியம், லத்தீன், தாவரவியல், மண்ணியல், வரலாறு, உளவியல், தத்துவம், எண்கணிதம் ஆகியவைக் கற்றார்.

இவருக்கு 8 வயதாக இருந்தபோது குடும்ப நண்பர் ஒருவர் சிறுமிக்கு வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்தின் எழுத்துகளை அறிமுகம் செய்துவைத்தார். மேலும் ரால்ஃப் வால்டோ எமர்சனின் பாடல் தொகுப்புகள், லெட்டர்ஸ் ஃபிரம் நியுயார்க் உள்ளிட்ட மேலும் பல நூல்களையும் பரிசளித்தார்.

இவரது சகோதரரும் தோழிகளும் ஷேக்ஸ்பியர் உள்ளிட்ட பல புகழ்பெற்ற இலக்கிய நூல்களை இவருக்குக் கொடுத்தனர். வாசிப் பில் நாட்டம் கொண்டிருந்த சிறுமி பைபிளுடன் இந்த அனைத்து நூல்களையும் படித்தார். அப்போதே கவிதைகள் எழுதிவந்தார்.

1847இல் பள்ளிக் கல்வி முடிந்தவுடன் மவுன்ட் ஹோல்யோக் பெண்கள் இறையியல் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். உடல்நிலை காரணமாகவும் அங்குள்ள ஆசிரியர்களை வெறுத்ததாலும் அங்கு படிப்பை முடிக்காமல் வீடு திரும்பினார்.

தாய் உட்பட வாழ்வில் பல உறவுகளையும், நட்புகளையும் இழந்ததால் தனிமை விரும்பியாக மாறினார். மெல்ல மெல்ல வெளிஉலகத்திலிருந்து தன்னை ஒதுக்கிக்கொண்டு 1858 முதல் முழு மூச்சுடன் எழுத ஆரம்பித்தார். ஏழாண்டு காலத்தில் மட்டும் 40 தொகுதிகளில் சுமார் 800 கவிதைகள் அடங்கியிருந்தன.

இவரது பெரும்பாலான கவிதைகள் மரணம், மரணமின்மை, தனிமை, வேதனை, மகிழ்ச்சி, காதல், மதம், ஒழுக்கம் ஆகிய வற்றைக் கருப்பொருளாகக் கொண்டவை. உயிரோடு இருந்த போது வெகுசில கவிதைகளே அச்சேறின. அவையும் அந்தக் காலகட்டத்துக்குப் பொருந்ததாதவை என்றும் கவிதை மரபுகளை மீறியவை என்றும் விமர்சிக்கப்பட்டன.

ஆனால், இவர் தன் நூல்கள் வெளிவருவது, வராமல் இருப்பது, புகழ்ச்சி, இகழ்ச்சி, வருமானம், விமர்சனங்கள் எதையும் பொருட்படுத்தாமல் எழுதிக்கொண்டே இருந்தார். 1800 கவிதைகளை எழுதியுள்ளார். இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் எழுதியது இவர் நண்பர்கள், உறவினர்களுக்கேகூடத் தெரியவில்லை. அந்த அளவு தனிமை விரும்பியாக இருந்தார்.

இவரது மரணத்துக்கு 4 ஆண்டுகளுக்குப் பின் இவரது சகோதரி, சிறுசிறு கோப்புகளாக நூலால் கட்டி ஆங்காங்கே இவர் வைத்திருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகளைத் தேடி எடுத்தார். இந்தக் கவிதைகள் ‘தி போயம்ஸ் ஆஃப் எமிலி டிக்கின்சன்’ எனப் பல தொகுதிகளாக வெளியிடப்பட்டன. அப்போதும்கூட இவரது கவிதைகள் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை.

ஆனால், 1924 முதல் தொடர்ந்து இவரது கவிதைகள், ‘லைஃப்’, ‘நேச்சர்’, ‘லவ்’, ‘டைம் அன்ட் எடர்னிட்டி’, ‘தி சிங்கிள் ஹவுன்ட்’ ஆகிய தலைப்
டிசம்பர் 10,
வரலாற்றில் இன்று.

 டிஸ்கவரி  ஓடத்தில் சுனிதா வில்லியம்ஸ்
விண்வெளியில் பயணித்த தினம் இன்று.


கேப் கெனவரல்: இரண்டு நாள் தாமதத்திற்கு பிறகு "டிஸ்கவரி' விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் உட்பட ஏழு விஞ்ஞானிகள் அதில் பயணம் மேற்கொண்டுள்ளனர். சர்வதேச விண்வெளி மையத்திற்குச் செல்லத் தயாராக இருந்த "டிஸ்கவரி' விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. டிசம்பர் 8 அன்று இதற்கான "கவுன்ட் டவுன்' துவக்கப்பட்டது. ஆனால், மோசமான வானிலை காரணமாக குறிப்பிட்ட நேரத்தில் "டிஸ்கவரி'யை செலுத்த முடியவில்லை.

இரண்டு நாள் தாமதத்திற்குப் பின், இந்திய நேரப்படி காலை 7.17 மணியளவில், அமெரிக்காவிலுள்ள புளோரிடா மாகாணத்தில், கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து "டிஸ்கவரி' விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் விண்கலத்தில் இணைக்கப்பட்ட "ராக்கெட் பூஸ்டர்கள்' வெற்றிகரமாக தனித்தனியே பிரிந்தன. ரூ.50 கோடி மதிப்பிலான சர்வதேச விண்வெளி மைய கட்டுமான பொருட்கள் இதில் கொண்டு செல்லப்படுகின்றன. இந்த விண்கலத்தில் இந்திய வம்சாவளி பெண் சுனிதா வில்லியம்ஸ்(41), ஸ்வீடன் நாட்டின் முதல் விண்வெளி வீரர் மார்க் போலன்ஸ்கி, கிரிஸ்டர் பக்லசெங், வில்லியம் டெபலைன், ராபர் குர்ஹம், நிகோலஸ் பேட்ரிக், ஜான் ஹிக்கிங்பாதம் ஆகிய ஏழு பேர் பயணம் செய்கின்றனர். சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட ஐந்து பேர் முதன் முறையாக விண்வெளி பயணம் செய்கின்றனர்.

விண்வெளி மையத்தில் புதிய மின்சாதன உபகரணங்களை இணைப்பது, பழுது பார்த்தல் மற்றும் கட்டமைப்பு பணிகளை இவர்கள் மேற்கொள்ள உள்ளனர். சுனிதா வில்லியம்ஸ் தவிர மற்ற விஞ்ஞானிகள் வரும் 21ம் தேதி "டிஸ்கவரி' விண்கலம் மூலம் பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டது. சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள ஜெர்மனி விஞ்ஞானி தாமஸ் ரெய்டருக்கு பதிலாக சுனிதா வில்லியம்ஸ் ஆறு மாதம் அங்கு தங்கியிருந்து, கட்டுமான பணிகளில் ஈடுபட்டார்.

கடந்த 2003ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட "கொலம்பியா' விண்கலம், தரையிறங்குவதற்கு முன்னதாக அதன் வெளிப்புற பகுதியிலிருந்து ஒரு தகடு கழன்று விழுந்ததால், வெப்பம் தாங்காமல் விண்கலம் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் இந்தியவில் பிறந்த கல்பனா சாவ்லா உள்ளிட்ட ஏழு விஞ்ஞானிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு மூன்று முறை விண்கலங்களை "நாசா' அனுப்பியுள்ளது. ஆனால், அந்த விண்கலங்கள் அனைத்தும் பாதுகாப்பு கருதி பகல் நேரத்திலேயே விண்ணில் செலுத்தப்பட்டன. தற்போது நான்கு ஆண்டுகளுக்கு, மீண்டும் இரவு நேரத்தில் "டிஸ்கவரி' விண்கலம் செலுத்தப்பட்டுள்ளது. கல்பனா சாவ்லாவை தொடர்ந்து விண்வெளிக்கு பயணம் செய்யும் இரண்டாவது இந்திய வம்சாவளி வீராங்கனை என்ற பெருமையை சுனிதா வில்லியம்ஸ் பெற்றுள்ளார்.

"டிஸ்கவரி' புறப்படுவதற்கு சற்று முன்னதாக சுனிதா வில்லியம்ஸ் கூறுகையில்,""தற்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். நீண்ட காலத்திற்கு பிறகு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. விண்வெளியில் நடக்க இருப்பது இதுவே முதல் அனுபவம். விண்வெளியில் இருந்தபடி பூமியை பார்ப்பதில் ஆவலாக உள்ளேன். அது வியக்கத்தக்க காட்சி,'' என்றார். கல்பனா சாவ்லா அரியானா மாநிலத்தில் பிறந்து பின்பு அமெரிக்காவில் குடியேறியவர். ஆனால், சுனிதா வில்லியம்ஸ் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த இந்திய வம்சாவளி பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் 10,
 வரலாற்றில் இன்று.

 சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று.

சர்வதேச மனித உரிமைகள் தினம் ஆண்டு தோறும் டிசம்பர் 10ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டதே இந்த மனித உரிமைப் பிரகடனம். மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க முடியாத, மறுக்க முடியாத உரிமைகளை மனித உரிமைகள் என்று அழைக்கிறோம்.

1945ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை உருவான அடுத்தாண்டு, பிப்ரவரி மாதம் 16ம் தேதி ஐக்கிய நாடுகள் 'மனித உரிமை ஆணைக் குழு' உதயமானது. ஐம்பத்து மூன்று நாடுகளை அங்கமாகக் கொண்ட இக்குழு, முதல் வேலையாக 'சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தை உருவாக்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி எலினா ரூஸ்வெல்ட் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது.

இக்குழுவின் சிபாரிசின் படி 30 பிரிவுகளின் கீழ் மனித உரிமைகள் இனங்காணப்பட்டு அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.  டிசம்பர் 10, 1948ம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் இந்தப் பிரகடனத்திற்கு 58 நாடுகள் அங்கீகாரம் வழங்கியது.

எனவே இந்த நாளை 1950-ம் ஆண்டிலிருந்து 'சர்வதேச மனித உரிமைகள் தினமாக' அறிவித்து  உலக நாடுகளால் கொண்டாடப்பட்டு வருகிறது.

நோக்கம்

ஒவ்வொரு தனி மனிதனும் தான் வாழ்வதற்கான உரிமையை பெறுவதும், மற்ற மனிதரையும் வாழ விடும் நெறிமுறையை உணர்த்துவதே இப்பிரகடனத்தின் முக்கியக் கருத்தாகும். எல்லா மனிதர்களும் சுதந்திரமானவர்களாகவும், உரிமையிலும், கண்ணியத்திலும் ஒருவருக்கொருவர் சமமானவர்கள் என்பதை இப்பிரகடனம் வலியுறுத்துகிறது. இனம், நிறம், பாலினம், மொழி, மதம், அரசியல், நாடு, சமுதாய தோன்றல், சொத்து, பிறப்புஅல்லது சமூக உயர்வு போன்ற எந்த வித வேறுபாடுகளும் இன்றி ஒவ்வொரு மனிதனும் வாழ்வதன் அவசியத்தையும் உணர்த்தவே இந்நாள் கொண்டாடப்படுகிறது.