சனி, 16 டிசம்பர், 2017

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்_ நாமக்கல் மாவட்ட இணையக்குழுக் கூட்டம் ( 16/12/17_ சனிக்கிழமை) கபிலர்மலை ஒன்றிய மன்றம் அலுவலகம்_ வேலூர்~நிகழ்வுகள்...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ,
நாமக்கல் மாவட்ட இணையக்குழுக்
கூட்டம்
மாவட்ட அமைப்பாளர்
திரு .மெ.சங்கர் தலைமையில் கபிலர்மலை ஒன்றிய மன்ற அலுவலகத்தில் 16.12.17(சனி)
முற்பகல் 11.30 மணிக்கு நடைபெற்றது.

இக்கூட்டத்தில்
பங்கேற்ற
சமூக வலைதள
செயற்பாட்டாளர்களின் கருத்துக்களின் அடிப்படையில் அறிவியல் தொழில்நுட்பங்களை கையாண்டு ஆசிரியருக்கு தகவல்களை  பரப்புவது, பரிமாற்றம் செய்துகொள்வது  என்றும், அறிவியல் தொழில்நுட்பக் கருவிகளை பரப்புரைக்கு 
(பிரச்சார) பயன்படுத்திக் கொள்வது என்றும் முடிவாற்றப்பட்டது.

உற்சாகமாகப் பணியாற்றும் சூழல் தேவை~ தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல்...


நன்றி:தினமணி-16.12.17 

ஆசிரியர்களை கல்வி அதிகாரிகள் அவமரியாதையாகப் பேசாமல், கனிவுடன் பேசி உற்சாகமாகப் பணியாற்றும் சூழலை ஏற்படுத்த வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக அமைப்பின் மாவட்டச் செயலர் முருக செல்வராசன், மாவட்டத் தொடக்க கல்வி அலுவலருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் அரசு துவக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை கல்வித் துறை உயர் அதிகாரிகள் மரியாதையாக நடத்த வேண்டும். கற்றல், கற்பித்தல் பணியில் சுதந்திரமான சூழ்நிலையில் பணியாற்ற வழிவகை செய்ய வேண்டும்.
பள்ளிப் பார்வை, ஆய்வு, ஆய்வுக் கூட்டங்களில் காணப்படும் குறைபாடுகளை நாகரிகமான வார்த்தைகளால், சூழலுக்கு ஏற்ப புதிய யுக்தியுடன் சுட்டி காட்டி குறைகளைக் களைந்திட வேண்டும்.
தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை மனித தன்மையுடன் நடத்த வேண்டும். இதுதொடர்பாக உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு கல்வித் துறையினர் அறிவுரைகளை வழங்க வேண்டும். மேலும், ஆசிரியர்கள் உற்சாகமாகப் பணியாற்றும் சூழலையும் ஏற்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

ஓய்வூதிய உரிமையை பறிக்காதீர்! மத்திய,மாநில அரசுகளிடம் ஆசிரியர் மன்றம் வலியுறுத்துகிறது...

ஓய்வூதியர் நாள் 

ஓய்வூதியர் நாள்
(Pensioners' Day), 
இந்தியாவில் 
ஆண்டு தோறும் டிசம்பர் 17 ஆம் நாளன்று கொண்டாடப்படுகிறது. 
டிசம்பர் 17, 1982-ஆம் நாளில், 
இந்திய உச்ச நீதிமன்றம்,
 ஓய்வூதியம் குறித்து வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை நினைவுகூரும் வகையில்
 இந்நாள் ஒவ்வொரு ஆண்டும்
 ஓய்வூதியர்களால்
இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இத்தகு பெருமைமிகு நாளில் இந்திய அரசையும்,
தமிழக அரசையும் நோக்கி
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி 
ஆசிரியர் மன்றத்தின்
நாமக்கல் மாவட்ட அமைப்பு 
கோரிக்கையை வலியுறுத்துகிறது.

மத்திய,மாநில அரசுகளே!

ஓய்வூதியத்தை மறுக்கின்ற;
பறிக்கின்ற,
மாத ஊதியத்தில் ஊதியவெட்டு ஏற்படுத்துகின்ற
மோசடிநிதித்
திட்டமான
புதிய தன்பங்கேற்பு ஓய்வூதியத்
திட்டத்தினை (CPS)முற்றிலுமாக விலக்கிக்கொள்ளுங்கள்;கைவிடுங்கள்.

ஆசிரியர்களை,அரசு அலுவலர்களை,
தொழிலாளர்களை,உழைக்கும் மக்களை 
ஏமாற்றாதீர்;வஞ்சிக்காதீர்.

           ~முருகசெல்வராசன்.

18.12.17 முதல் 17.01.18 வரை பெங்களூரில் ஆங்கிலப்பயிற்சி~ தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு...




கோயம்புத்தூர் மாவட்ட பள்ளி குழு பார்வை குறித்து முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்...

Hello English...

Annamalai University-Distance Education- December 2017- Exam Hall Ticket download from 17.12.2017 onwards....

கடிதம் எழுதினால் பரிசு~ அஞ்சல் துறை அறிவிப்பு...



அஞ்சல் துறை சார்பில், சர்வதேச கடிதம் எழுதும் போட்டி, ஜன., 7ல் நடத்தப்படுகிறது. இதில், 15 வயதுக்கு உட்பட்ட மாணவ – மாணவியர் பங்கேற்கலாம்.

மாணவ – மாணவியர், தங்களை கடிதமாக பாவித்து, பயணிக்கும்போது ஏற்படும் அனுபவங்கள் குறித்து கடிதம் எழுத வேண்டும். இதற்கான 
சர்வதேச அளவிலான, கடிதம் எழுதும் போட்டியை, அஞ்சல் துறை அறிவித்துள்ளது.
இதில், 15 வயதுக்கு உட்பட்டவர்கள் பங்கேற்கலாம்.
கடிதப் போட்டி, ஜன., 7, காலை, 10:00 மணிக்கு நடத்தப்படுகிறது. கடிதத்தை ஆங்கிலத்திலோ, பட்டியலிடப்பட்ட மொழிகளிலோ எழுதலாம். போட்டியில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்களை, டிச., 21க்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதில், வெற்றி பெறுவோருக்கு, 5,000, 3,000, 2,000 ரூபாய் பரிசு வழங்கப்படும்.
ஒவ்வொரு அஞ்சல் வட்டத்திலும் தேர்வாகும் கடிதங்களுக்கு, ஆறுதல் பரிசாக, 1,000 ரூபாய் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். சிறந்த கடிதங்கள் தேர்வு செய்யப்பட்டு, சர்வதே அளவிலான கடிதப் போட்டிக்கு, இந்தியா சார்பில் அனுப்பி வைக்கப்படும்.

அங்கு, சர்வதேச அஞ்சல் சங்கம் தேர்வு செய்யும் கடிதங்களுக்கு, தங்கம், வெள்ளி, வெண்கல மெடல்கள், சான்றிதழ், சர்வதேச அஞ்சல் தலைகள் வழங்கப்படும்.

பங்கேற்க விரும்பும் மாணவ – மாணவியர் புகைப்படம், பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, பள்ளி, வீட்டு முழு முகவரி ஆகியவற்றை அனுப்பி வைக்க 
வேண்டும்.
மேலும் தகவல்
களுக்கு, தலைமை அஞ்சல் அதிகாரி, அஞ்சல் வட்ட அதிகாரி, மண்டல அதிகாரி ஆகியோரை, தொடர்பு கொள்ளலாம். மேலும், தகவல்களுக்கு http:// www.indiapost.gov.in என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.