சனி, 16 டிசம்பர், 2017

ஓய்வூதிய உரிமையை பறிக்காதீர்! மத்திய,மாநில அரசுகளிடம் ஆசிரியர் மன்றம் வலியுறுத்துகிறது...

ஓய்வூதியர் நாள் 

ஓய்வூதியர் நாள்
(Pensioners' Day), 
இந்தியாவில் 
ஆண்டு தோறும் டிசம்பர் 17 ஆம் நாளன்று கொண்டாடப்படுகிறது. 
டிசம்பர் 17, 1982-ஆம் நாளில், 
இந்திய உச்ச நீதிமன்றம்,
 ஓய்வூதியம் குறித்து வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை நினைவுகூரும் வகையில்
 இந்நாள் ஒவ்வொரு ஆண்டும்
 ஓய்வூதியர்களால்
இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இத்தகு பெருமைமிகு நாளில் இந்திய அரசையும்,
தமிழக அரசையும் நோக்கி
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி 
ஆசிரியர் மன்றத்தின்
நாமக்கல் மாவட்ட அமைப்பு 
கோரிக்கையை வலியுறுத்துகிறது.

மத்திய,மாநில அரசுகளே!

ஓய்வூதியத்தை மறுக்கின்ற;
பறிக்கின்ற,
மாத ஊதியத்தில் ஊதியவெட்டு ஏற்படுத்துகின்ற
மோசடிநிதித்
திட்டமான
புதிய தன்பங்கேற்பு ஓய்வூதியத்
திட்டத்தினை (CPS)முற்றிலுமாக விலக்கிக்கொள்ளுங்கள்;கைவிடுங்கள்.

ஆசிரியர்களை,அரசு அலுவலர்களை,
தொழிலாளர்களை,உழைக்கும் மக்களை 
ஏமாற்றாதீர்;வஞ்சிக்காதீர்.

           ~முருகசெல்வராசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக