செவ்வாய், 16 ஜூலை, 2024

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் ஒன்றியம்செயற்குழுக்கூட்டம் 16.07.2024

 தமிழ்நாடு தொடக்கபள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் ஒன்றியக்கிளையின் செயற்குழுக்கூட்டம் 16.07.2024 மாலை 05.30மணிக்கு அரசு தொடக்கப்பள்ளியில் நடைப்பெற்றது.


இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் திரு.அ.செயக்குமார் அவர்கள் தலைமை தாங்கினார். திருமதி.கொ.கௌரி மகளிரணி துணை அமைப்பாளர் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். திருமதி.கோ.கு.இராசேசுவரி மாநில பொதுக்குழு உறுப்பினர் அவர்கள் மற்றும் திருமதி.நா.ஜீவாஜாய் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அவர்கள் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் திரு.மெ.சங்கர் அவர்கள் தொடக்கவுரை ஆற்றினார். மாநிலப் பொருளாளர் திரு.முருக செல்வராசன் அவர்கள் இயக்க உரை ஆற்றினார். இறுதியாக ஒன்றியப்  பொருளாளர் திரு.மு.சசிக்குமார் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.