வெள்ளி, 3 ஜூலை, 2020

சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு உலர் உணவுப்பொருட்களை பள்ளித் தலைமையாசிரியர் /தலைமையாசிரியைகளின் மேற்பார்வையில் வழங்குமாறு தமிழக அரசு உத்தரவு!

சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு உலர் உணவுப்பொருட்களை பள்ளித் தலைமையாசிரியர் /தலைமையாசிரியைகளின்  மேற்பார்வையில்  வழங்குமாறு  தமிழக அரசு உத்தரவு!


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பரமத்தி ஒன்றிய அமைப்பின் சார்பில் பரமத்தி ஒன்றிய ஆசிரியர்களின் மூன்று அம்சக்கோரிக்கைகளுக்கு வலுச்சேர்த்திடும் வகையில் இன்று (03.07.2020-வெள்ளி) முற்பகல் 11.45 மணியளவில் வேலூரில் (கபிலர்மலை ஒன்றிய ஆசிரியர்மன்ற அலுவலகம்) செய்தியாளர் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டச்செயலாளர் மெ.சங்கர், மாவட்ட தணிக்கைக்குழு உறுப்பினர் த.தண்டபாணி, பரமத்தி ஒன்றியத்தலைவர் நா.ரங்கசாமி, ஒன்றியச்செயலாளர் க.சேகர், ஒன்றியம் பொருளாளர் கு.பத்மாவதி, ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் மா.மலர்விழி உள்ளிட்ட பல்வேறு பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். மாநிலச்செயலாளர் திரு. முருகசெல்வராசன் செய்தியாளர்களை சந்தித்தார். ஊடகத்துறையினருக்கு பேட்டி அளித்தார். அச்சு ஊடகம் மற்றும் மின்னணு ஊடகம் ஆகியவற்றின் சார்பில் செய்தியாளர்கள் இச்சந்திப்பில் கலந்துக்கொண்டனர். மெ.சங்கர், மாவட்டச்செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின்  பரமத்தி ஒன்றிய அமைப்பின் சார்பில் பரமத்தி ஒன்றிய ஆசிரியர்களின் மூன்று அம்சக்கோரிக்கைகளுக்கு வலுச்சேர்த்திடும் வகையில்
 இன்று (03.07.2020-வெள்ளி)
முற்பகல் 11.45 மணியளவில் வேலூரில்
(கபிலர்மலை ஒன்றிய ஆசிரியர்மன்ற  அலுவலகம்) செய்தியாளர் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் 
மாவட்டச்செயலாளர் மெ.சங்கர்,
மாவட்ட தணிக்கைக்குழு உறுப்பினர் த.தண்டபாணி, பரமத்தி ஒன்றியத்தலைவர் நா.ரங்கசாமி, ஒன்றியச்செயலாளர் க.சேகர்,
ஒன்றியம் பொருளாளர் கு.பத்மாவதி,
ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் மா.மலர்விழி உள்ளிட்ட பல்வேறு பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

மாநிலச்செயலாளர் திரு. முருகசெல்வராசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
ஊடகத்துறையினருக்கு பேட்டி அளித்தார்.

அச்சு ஊடகம் மற்றும்
மின்னணு ஊடகம் ஆகியவற்றின் சார்பில் செய்தியாளர்கள்  இச்சந்திப்பில் கலந்துக்கொண்டனர்.

மெ.சங்கர்,
மாவட்டச்செயலாளர்.

பரமத்தி ஆசிரியர்களின் 3 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 07.07.2020 -ல் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ஆர்பாட்டம்

முன்  ஊதிய உயர்வு  வேறு!
ஆசிரியர் பெருமக்களின்
உயர்கல்விக்கான ஊக்க ஊதியஉயர்வு வேறு!

இரண்டையும் ஒன்றாக்கி ஆசிரியர்களை வாட்டி வதைக்கும் பரமத்தி வட்டாரக்கல்வி அலுவலருக்கு வன்மையான கண்டனம்!

தூய்மைப்பாரதம் !தூய்மைப்பள்ளி!என்பதெல்லாம் ஏட்டளவிலா?!
பேச்சளவிலா?! முழு சுகாதாரத் தமிழகத்தில்
12 தொடக்கப்பள்ளிகளின் சுகாதாரம் கணக்கில்லையா ?!

2019-2020 நிதியாண்டும்,
கல்வியாண்டும்  கடந்து போனது தெரியலையா?!
கொரோனாவின் கோரத்தாண்டவக்காலத்தில் தொகுப்பூதியம் வழங்கத் தோணலையா?!
பசிப்பிணியின் தாக்கம் உரைக்கலையா?!