புதன், 30 செப்டம்பர், 2020

*🌟EER பதிவேடு மற்றும் 6-14, 15-18 வயதில் இடைநின்ற மாணவர்கள் விவரமும் பராமரிப்பது குறித்து நாமக்கல் மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்.*

*🌟EER பதிவேடு  மற்றும் 6-14, 15-18 வயதில் இடைநின்ற மாணவர்கள் விவரமும் பராமரிப்பது குறித்து நாமக்கல் மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்.*

*🌟02.10.2020 அன்று கிராம சபாக் கூட்டம் நடத்துதல் தொடர்பான ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக இயக்குநர் கடிதம்.*

*🌟02.10.2020 அன்று கிராம சபாக் கூட்டம் நடத்துதல் தொடர்பான ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக இயக்குநர்   கடிதம்.*

*2020-21 நிதியாண்டு வருமானவரி செலுத்துதல் பழைய வரி விகிதம் மற்றும் புதிய வரி விகிதம் வேறுபாடு.*

2020-21 நிதியாண்டு வருமானவரி செலுத்துதல் பழைய வரி விகிதம் மற்றும் புதிய வரி விகிதம் வேறுபாடு.வேறுபாடு அட்டவணையை பார்க்க கிளிக் செய்யவும்.

click here

செப்டெம்பர் 30, வரலாற்றில் இன்று. சார்லஸ் பிரான்சிஸ் ரிக்டர் நினைவு தினம் இன்று.

செப்டெம்பர் 30, 
வரலாற்றில் இன்று.

 சார்லஸ் பிரான்சிஸ் ரிக்டர் நினைவு தினம் இன்று. 

இவர் அமெரிக்க இயற்பியலாளர் மற்றும் நிலநடுக்கவியலாளர்.

 நிலநடுக்கத்தை உணர்வதற்கு உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் ரிக்டர் அளவீடு என்ற அலகினைக் கண்டறிந்தவர். 

பைனோ கூட்டன்பர்க் என்பவரின் உதவியுடன் சார்லஸ் ரிக்டர் கண்டறிந்த இந்த அலகு நிலநடுக்க விளைவுகளைக் மடிமை அளவீட்டால் (logarithm) கணக்கிட பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

செப்டெம்பர் 30, வரலாற்றில் இன்று. எண்ணற்ற தகவல்களை அள்ளித் தரும் தமிழ் விக்கிபீடியா தொடங்கப் பட்ட தினம் இன்று (2003).

செப்டெம்பர் 30, வரலாற்றில் இன்று.

 எண்ணற்ற தகவல்களை அள்ளித் தரும் தமிழ் விக்கிபீடியா தொடங்கப் பட்ட தினம் இன்று (2003).

தமிழ் விக்கிப்பீடியாவின் 60000க்கும் மேற்பட்ட கட்டுரைகளுடன் சேர்த்து இதன் மொத்தக் கட்டுரைகளான 24 மில்லியன் கட்டுரைகளும் உலகெங்கிலுமுள்ள தன்னார்வலர்களால் கூட்டாக எழுதப்படுகின்றன. பெரும்பாலும் இதன் எல்லாக் கட்டுரைகளும், இதனைப் பயன்படுத்தும் எவராலும் தொகுக்கப்பட முடியும். 

மேலும் இது கிட்டத்தட்ட 100,000 முனைப்பான பங்களிப்பாளர்களையும் கொண்டுள்ளது.

 விக்கிப்பீடியா 285 மொழிகளில் செயற்படுகிறது.

செப்டெம்பர் 30, வரலாற்றில் இன்று.சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் இன்று.

செப்டெம்பர் 30, வரலாற்றில் இன்று.

சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் இன்று.

கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபிளை மொழிபெயர்த்த புனித ஜெரோமின் (கிபி 347-420) நினைவு தினமான செப்டெம்பர் 30ஆம் தேதி, சர்வதேச மொழிபெயர்ப்பு தினமாக ஆண்டுதோறும்  கொண்டாடப்படுகிறது.

ஜெரோம் 'மொழிபெயர்ப்புகளின் பாதுகாவலர்' என புகழப்படுகிறார். 1953ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட 'சர்வதேச மொழிபெயர்ப்பாளர்களின் கூட்டமைப்பினால்' இந்த சிறப்பு தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

1991ஆம் ஆண்டில் இந்த அமைப்பானது பல்வேறு நாடுகளிலும் மொழிபெயர்ப்புத் துறையில் ஈடுபட்டுள்ளோர் தம் ஒருமைப்பாட்டைக் காட்டும் முகமாக இந்நாளை உலகளாவிய அளவில் கொண்டாட வேண்டும் என்று அழைப்பு விடுத்தது.