சனி, 24 நவம்பர், 2018

CMRL Recruitment 2018-06 Assistant Chief Controller @ B.E, B.Tech


CMRL Recruitment 2018-2019 | CMRL invites Application for the post of 06 Assistant Chief Controller, Manager (Civil UG), Architectural Expert Posts. CMRL Assistant Chief Controller Jobs Notification 2018 Released. Candidates are requested to Download Application through Official website https://chennaimetrorail.org/.You can check here CMRL Recruitment Eligibility Criteria, Pay Scale, Application Fee/Exam Fee, CMRL Selection Process, How to Apply, CMRL Result Release Date & other rules are given below.

CMRL Recruitment 2018-06 Assistant Chief Controller @ B.E, B.Tech -Apply Now Online

Organization Name: Chennai Metro Rail Limited
Job Category: Tamilnadu Govt Jobs
Official Website: https://chennaimetrorail.org/
No. of Posts: 06 Vacancies
Name of the Posts: Assistant Chief Controller, Manager (Civil UG), Architectural Expert Posts
Job Location: Chennai
Selection Procedure: Medical Examination, Interview
Walk in Date: 08.12.2018

Name of the Post & No of Vacancies:

Architectural Expert

Manager (Civil UG)

Assistant Chief Controller

Eligibility Criteria for CMRL Assistant Chief Controller:

Architectural Expert – Degree in Architecture with minimum 15 years of professional experience in architecture design and planning

Manager (Civil UG) – Degree in Civil Engineering with minimum 10 years of experience or Diploma in Civil Engineering with minimum 15 years of experience in the construction field. 5 years of experience in the underground metro station construction and experience in interface co-ordination is desirable.

Assistant Chief Controller – Degree with minimum 15 years of Railway experience, out of which at least 5 years in Control Office as a Controller. The job involves to work in shifts and supervise the controllers on shift in the Operation Control Centre.

Age Limit:

Architectural Expert- 50 Years

Manager (Civil UG) – 38 Years

Assistant Chief Controller – 45 Years, Go through CMRL official Notification 2018 for more reference

CMRL Assistant Chief Controller Selection Procedure:

CMRL may follow the following process to select the candidates.
The selection methodology comprises two-stage process, interview followed by Medical examination. The selection process would judge different facets of knowledge, skills, comprehension, aptitude and physical fitness.
a. Medical Examination: Expenses for the first time medical examination of the candidate will be borne by CMRL. However, in case a candidate seeks extension for joining, then the second time medical examination expenditure will be borne by the candidate. To & fro travel expenses for the medical test shall be borne by the candidate. The candidate who fails in the prescribed medical test will not be given any alternative employment and decision of CMRL is final on this issue.

How to apply CMRL Assistant Chief Controller Vacancy?

Candidates who fulfill the above requirement may appear for walk-in- interview along with duly filled in application form (application form available in page No. 4 to 6) supported by Bio-Data and one set of selfattested copies of certificate of educational qualifications, experience, age, community and latest passport size photograph. Candidates are required to bring all the original certificates for verification.

Walk-in Venue:
CHENNAI METRO RAIL LIMITED CMRL DEPOT, ADMIN BUILDING, POONAMALLEE HIGH ROAD, KOYAMBEDU, CHENNAI – 600 107.

Important Dates to Remember:

Date to Walk in Interview – 08.12.2018

CMRL Important Links:


Apply Mode: Online


அனைத்து பள்ளிகளிலும் கடைசி வெள்ளி SMC / SMDC Meeting நடத்த நிதி வழங்கி திட்ட இயக்குநர் உத்தரவு



Inspire award தேர்வான மாணவர்கள் list 2018

கல்வித்துறையில் நேர்மையான அதிகாரிகளை காண்பதே கடவுளைக் காண்பது போல ஆகி விட்டது~ பள்ளி ஆசிரியர்கள் குமுறல்…

அரசு வழங்கும் வழக்கமான பணப் பலன்கள் பெற கல்வி அலுவலகங்களில் கட்டாய கட்டணம் வசூலிப்பதாக உதவி பெறும் பள்ளி/அரசுப்பள்ளி  ஆசிரியர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

மாவட்டத்தில் ஒரு  சி.இ.ஓ., மூன்றுக்கும்,
நான்குக்கும் மேலான டி.இ.ஓ.,க்கள்,10 க்கும் அதிகமான பி.இ.ஓ.,க்கள் அலுவலகங்கள் செயல்படுகின்றன. இங்கு ஆசிரியர்களின் தேர்வுநிலை, சிறப்பு நிலை, உயர் கல்வி ஊக்க ஊதியம் உள்பட பல்வேறு பணப் பலன்கள் தொடர்பான ஆவணங்கள் எழுதப்படுகிறது.
பணப்பலன்கள் அனுமதிக்கப்படுகிறது.
.
இதற்காக அரசு/அரசு  உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களிடம் கட்டாய வசூல் நடத்தப்படுகிறது.

 பணம் வழங்காவிட்டால் பைல்கள் கிடப்பில் போடப்படுகின்றன. நொண்டிச்சாக்குகள் சொல்லி திருப்பப்படுகின்றன.
ஆசிரியர்கள் அவமானப்படுகின்றனர்.

பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் கூறியதாவது: 

கல்வித்துறை  அலுவலகங்களில் கட்டாய வசூல் வேட்டை குதுகலாமாக நடக்கிறது.
உயர்அலுவலர்களுக்கும் இதில் பங்கு தர வேண்டுமென கூறியும் கேட்கப்படுகிறது.
இதனால் யாரிடமும்  இந்த வசூல்பற்றி சொல்வதற்கு  ரொம்பவே பயமாக உள்ளது.

 உயர்கல்வி ஊக்க தொகைக்கு 10 ஆயிரம், சரண்டருக்கு 2 ஆயிரம், 
தேர்வு நிலை, சிறப்பு நிலை பெற 10 ஆயிரம் ரூபாய் என விலைப் பட்டியல் வைக்காத குறையாக வசூலிக்கின்றனர்.

சில ஊழிய
ர் மட்டுமே நேர்மையாக உள்ளனர். 
கல்வித்துறையில் நேர்மையானவர்களை காண்பதே கடவுளைக் காண்பது போன்று அரிதாகி வருகிறது.

அரசு உதவிபெறும்பள்ளி ஆசிரியர்களிடம் மட்டுமல்ல,ஊராட்சி,நகராட்சி,மாநகராட்சி, அரசுப் பள்ளி ஆசிரியரகளிடமும் இவ்வாறான கட்டாயவசூல் வேட்டை தொய்வின்றி,
மிகச்சிறப்பாக,
அமோகமாக நடைபெறுகிறது .

இந்த கட்டாய வசூலுக்கென்றே ஆசிரியரகள் சிலரையே புரோக்கர்களாக்கி அலுவலகத்தின் வாசற் படியிலேயே உட்கார வைத்துக்கொண்டு உள்ளனர். இந்த அவலம்  எப்போது ,எப்படி
சரி செய்யப் படும் என்பதே ஆசிரியர்களின் ஏக்கமாக உள்ளது.குமுறலாக உள்ளது.

காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு மரபணு சோதனை நடத்தினால் என்ன? தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி



சென்னையில் சாலையோரம் பெற்றோருடன் தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகள் அடுத்தடுத்து கடத்தப்பட்டன. இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டில், எக்ஸ்னோரா நிர்மல் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, தமிழக அரசுக்கு பல உத்தரவுகளை பிறப்பித்து இருந்தது.

குழந்தைகள் கடத்தல் வழக்குகளை மட்டும் விசாரிக்க மாவட்டந்தோறும் தனிப்படை அமைக்க வேண்டும். கடத்தப்பட்ட குழந்தைகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றால், பெற்றோருக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. மேலும், தமிழகத்தில் குழந்தைகள் காப்பகங்கள் குறித்து பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் வக்கீல் சி.அய்யப்பராஜ் ஆஜராகி, குழந்தைகள் காப்பகம் குறித்து அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘தமிழகத்தில் 1,274 குழந்தைகள் காப்பகங்கள் உள்ளன. இதில் 44 காப்பகங்களை அரசு நடத்துகிறது. மீதமுள்ள காப்பகங்களை தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், தனியார் அமைப்புகளும் நடத்துகின்றன. 

இந்த காப்பகங்களில் 52 ஆயிரம் குழந்தைகள் உள்ளனர். அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்ட காப்பகங்களை மூடிவிட்டாலும், இன்னும் 3 காப்பகங்கள் உள்ளன’ என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், ‘குழந்தைகளை கடத்தும் கும்பல்கள் தமிழகத்தில் உள்ளதா?. இந்த கும்பலை போலீசார் அடையாளம் கண்டுள்ளனரா?. அவர்கள் குறித்து ஏதாவது தகவல் உள்ளதா?. காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு மரபணு சோதனை செய்து, அவற்றின் விவரங்களை பாதுகாத்து வந்தால், எதிர்காலத்தில் ஏதாவது பிரச்சினை வரும்போது அவை உதவும். எனவே, காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு மரபணு சோதனை செய்தால் என்ன? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
அப்போது ‘மாற்றம் இந்தியா’ என்ற அமைப்பின் இயக்குனர் பாடம் நாராயணன் ஆஜராகி, இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்க்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டு, அவரை ஒரு மனுதாரராக சேர்த்தனர். பின்னர், ‘காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு மரபணு சோதனை நடத்துவது குறித்து தமிழக அரசு பதில் அளிக்கவேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அரசின் அடுத்த அடி 'வாகன மதிப்பிழப்பு'... ஒரு அதிர்ச்சி தரும் சர்வே முடிவுகள் ....


இந்தியர்கள் மத்தியில் சொந்த வாகனத்தை வாங்கி பயன்படுத்தும் பழக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இன்று வாகனம் இல்லாத வீடுகளே இந்தியாவில் மிக குறைவுதான். 


குறைந்த பட்சம் ஒரு வாகனமாவது ஒரு வீட்டில் இருக்கிறது. சிலர் வீட்டில் இருக்கும் ஒவ்வொருக்கும் ஒரு வாகனம் என்று பயன்படுத்தி வருகின்றனர்.
இதற்கு முக்கிய காரணம் பொது போக்குவரத்தின் பற்றாகுறையும், அதற்கான பயண செலவுமே ஆகும். பெரு நகரங்களில் செயல்படும் பெரும்பாலான பேருந்துகள் அதிக கூட்டத்துடன் செல்கிறது. இதனால் மக்கள் அதில் பயணிக்க விரும்பவில்லை.

மேலும் இந்தியா முழுவதும் தற்போது பேருந்துகளில் பயணிக்க டிக்கெட்டிற்கு கொடுக்கும் பணம் என்பது சொந்த வாகனம் வாங்கி அதற்கான எரிபொருளுக்கு ஆகும் செலவு கிட்டத்தட்ட சமமாகிறது. அதனால் பெரும்பாலும் சொந்த வாகன பயன்பாட்டை விரும்புகின்றனர்.
போதாக்குறைக்கு இந்தியாவில் மக்கள் தொகை வேறு அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க வேண்டும். தற்போது ஆட்டோமொபைல் மார்கெட்டும் இந்தியாவில் அதிகமாக உள்ளது. விரைவில் இந்திய மக்கள் தொகையை தாண்டி இந்தியாவில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கை சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
நிலைமை இப்படி இருக்கையில் இந்தியாவில் எதிர்காலத்தில் ஆட்டோமொபைல் சந்தைக்கு ஏற்றதாக இருக்குமா என்ற சந்தேகம் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு ஏற்பட்டு விட்டது. எதிர்காலத்தில் இந்தியா போன்று அதிக மனித வளம் கொண்ட நாட்டில் ஆட்டோமொபைலுக்கு பெரிய மார்கெட் இல்லை என்றால் அவர்களது வருமானத்திற்கு பெரிய அளவில் இழப்பு ஏற்படும்.
இதனால் எதிர்கால இந்தியாவிலும் தொடர்ந்து ஆட்டோமொபைலுக்கான மார்கெட்டை நிலை நாட்ட தற்போது கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசுடன் சேர்ந்து சில திட்டங்களை கொண்டு வர முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு ஆயுள் காலத்தை நிர்ணயிக்க வேண்டும் என கூறப்படுகிறது. அதாவது நீங்கள் புதிதாக ஒரு வாகனம் வாங்கினால் அந்த வாகனத்தை குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மட்டும்தான் பயன்படுத்த முடியும் என்ற வகையில் சட்டம் இயற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

டில்லியில் இது போன்ற சட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. பெட்ரோல் வாகனங்களுக்கு 15 ஆண்டுகளும், டீசல் வாகனங்களுக்கு 10 ஆண்டுகளும் ஆயுள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆயுளை தாண்டி வாகனங்களை இயக்க கூடாது என்ற உத்தரவு தற்போது நடைமுறையில் உள்ளது.
இந்த உத்தரவு கொண்டு வரப்படுவதற்கு முக்கிய காரணம் டில்லியில் ஏற்பட்ட காற்று மாசுதான். சுமார் 10-15 ஆண்டுகள் பழமையான வாகனங்கள் எல்லாம் அதிக அளவு மாசுகளை வெளியேற்றும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்த அரசு முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. ஒரே முறையாக இதை செய்யாமல் முதலில் மெதுவாக பெரு நகரங்களில் இதை நடைமுறைப்படுத்தி விட்டு மெது மெதுவாக இதை சிறிய நகரங்கள் என இந்தியா முழுவதிலும் இதை கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து நிதிஅயோக் அமைப்பின் மூத்த ஆலோசகர் சுஜீத் கூறுகையில் : "தற்போது ஆட்டோமொபைல் மற்றும் போக்குவரத்து துறையின் கிராப்களை கணக்கிடுகையில் எதிர்காலத்தில் இந்தியாவில் அவர்களுக்கான வாய்ப்பு என்பது மிக குறைவானதாகி விடும். இதற்கு எல்லாம் தீர்வு குறிப்பிட்ட வயதை தாண்டிய வாகனங்களுக்கு தடை விதிப்பதுதான்.
ஆனால் அவ்வாறு செய்தால் இந்தியாவில் சுமார் 3 கோடி வாகனங்கள் செயல்பட முடியாத நிலைக்கு சென்று விடும். அந்த வாகனங்களை மக்களால் பயன்படுத்தவும் முடியாது. வேறு எதுவும் செய்ய முடியாது வாகனங்களை அழிக்க மட்டுமே முடியும்" என கூறினார்.
மேலும் வாகனங்களை அழிக்கவும் இந்தியாவில் குறைந்தது 500 அல்லது 600 கார் ரீ சைக்கிள் மையங்கள் அமைக்கப்பட வேண்டும். அதற்கான சாத்திக்கூறுகள் மிக குறைவு.
இதற்கிடையில் வாகனங்களை அழிப்பதற்கு முன் அதை எவ்வாறு அழிக்க வேண்டும்? அதன் கழிவுகளை எப்படி ரீ சைக்கிள் செய்ய வேண்டும்? என்ற சரியான திறனை நாம் வளர்க்கவேண்டும். அதற்கு முன்னர் இவ்வாறான முடிவுகளை எடுப்பது நிச்சயம் தவறு எனவும் அவர் குறிப்பிட்டார்.
By
Drive spark news

தமிழக அரசில் பணிபுரிந்து ஓய்வு பெறுகின்ற அடுத்தநாள் ஊதிய உயர்வு என்றால் அவ்ஊதிய உயர்வு வழங்க அரசு ஆணையிட்டுள்ளது...


தமிழக அரசில் பணிபுரிந்து ஓய்வு பெறுகின்ற அடுத்தநாள் ஊதிய உயர்வு என்றால் அவ்ஊதிய உயர்வு 
வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.  

அதுபோல ஓய்வு பெறுகின்ற(மூன்று மாதங்கள்)  ஊதிய உயர்வு வழங்கலாம்.

பள்ளி மாணவர்களிடையே சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்தல் சார்பான நாமக்கல் CEO செயல்முறைகள்...