வெள்ளி, 4 செப்டம்பர், 2020

புதியகல்விக்கொள்கையை கொள்கைவழியில் ஆராய்ந்து கருத்துகள்-பரிந்துரைகள் வழங்குவதற்கு தமிழக அரசு குழு அமைப்பு!

புதியகல்விக்கொள்கையை 
கொள்கைவழியில் 
ஆராய்ந்து 
கருத்துகள்-பரிந்துரைகள் 
வழங்குவதற்கு 
தமிழக அரசு குழு அமைப்பு!

***************************************
புதிய கல்விக்கொள்கை குறித்த பரிந்துரைகளையும், கருத்துகளையும் தமிழக அரசுக்கு வழங்க உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா தலைமையில் உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டு இருக்கிறது.

அந்தக்குழுவில் சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள் எஸ்.பி.தியாகராஜன், பி.துரைசாமி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.பிச்சுமணி, அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் என்.ராஜேந்திரன், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கிருஷ்ணன், திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.தாமரைச்செல்வி ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக்குழு கொள்கை வழியாக சென்று தமிழக அரசாங்கத்துக்கு சாத்தியமான பரிந்துரைகளை வழங்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக