வெள்ளி, 4 செப்டம்பர், 2020

செத்த மொழிக்கு அரியாசனம்!-பேரறிஞர்.அண்ணா.

செத்த மொழிக்கு 
அரியாசனம்!
-பேரறிஞர்.அண்ணா.
**************************

மாங்க்ஸ் என்ற மொழி பேசுவோரில் இன்று எவருமே உயிருடனில்லை. இருந்தும் அவர்கள் மொழியை இப்பொழுது கேட்க முடியும்!

இடிந்த கோட்டை, பாழான அகழி, சிதிலமான மணி மண்டபம், சிதைந்த சிற்பங்கள், சீர் கெட்டுப் போன சித்திரங்கள் என்று காண்கிறோமே, அது போலவே பழையமொழி மாங்க்ஸை கேட்கச் செய்திருக்கின்றனர்.

மாங்க்ஸ் மொழி மறைந்து விடாதிருக்க, ‘ரிகார்டு’ மூலம் அம்மொழியைக் கேட்கச் செய்யப்பட்டுள்ளது.

செத்த இனமானாலும் அவர் வழங்கிய மொழி சாகாதிருக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

இறந்த மொழிகளுக்கு இதுதான் இடம்! ஆனால் இந்தியப் பூமியிலே மட்டும் செத்த மொழிக்கு சீரும், சிறப்பும் தேடுவதில் முனைந்துள்ளவர்கள், அம்மொழிக்கு இடம் ‘ரிகார்டு’ என்பதை மறந்துவிட்டு, அரிசாயனம் அமைக்க ஆசை கொண்டு திரிகின்றனர்!

“ரிகார்டு” செய்து, காட்சி சாலைகளிலே, கேட்கச் செய்வதை விடுத்து விட்டு, அதற்குப் பன்னீர் தெளித்து, பரிமள கந்தம் பூசி, பட்டுபீதாம்பரம் உடுத்தி, பாலும் பழமும் ஊட்டி, பல்லக்கிலேற்றி பராக்கு கூறி, பாராள வைக்கலாம் என்று ஆகாத ஆசையினால் அவதிப்படுகிறார்கள்!

எங்கள் சமஸ்கிருதம், செத்த மொழியென்று பேசுகின்றனரே, இவர்கள் நா அழுகிப் போகாதா! நாசகாலர்கள், தேவ மொழியையே நிந்திக்கிறார்கள்! இவர்கள் வாழ்வார்களா! என்று ஆயாசங் கலந்து பேசிடும் பொழுது, சிரிப்பதா, அழுவதா என்று புரியவில்லை.

வடமொழி, பேசும் மொழியல்ல! தேவரும், மூவரும் கேட்டமொழி, பூசை நேரத்தில் பேசிய மொழியல்ல! இங்குள்ள பூதேவர்களும் நாவில் நடமிடவில்லை அம்மொழியை. செத்த மொழியைத் தாங்குகிறார்கள் தர்ப்பையைக் கொண்டு. புரி நூலால், அம்மொழியைக் கட்டித் தூக்கி நிறுத்துகின்றனர்!

- அறிஞர் அண்ணா,
திராவிட நாடு, 29.07.1951
'“நாம்“ பலர், அவர்கள் சிலர்” என்ற கட்டுரையிலிருந்து.

நன்றி:திரு.பெ.பழநி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக