வெள்ளி, 25 ஜனவரி, 2019

ஆசிரியர் மன்றப் பொதுச்செயலாளர் பாவலர் க.மீ., அவர்கள் தொடர்ந்த வழக்கு எண் 1634 இன்படி இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி ஆசிரியர் பணிஇடத்தில் பணியமர்த்த சென்னை நீதிமன்றம் தடை விதித்துள்ளது...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பாக இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையத்திற்கு மாறுதல் செய்யப்படுவதை எதிர்த்து  தொடுக்கப்பட்ட வழக்குவிசாரணை  இன்று(25-1-19) விசாரணைக்கு வந்தது.

இன்று சென்னை உயர்நீதிமன்ற 38வது கோர்ட்டில் 2வது லிஸ்டில் 23வது   வழக்காக நமது வழக்கு வழக்கு எண் 1634/2019 விசாரணைக்கு வந்தது.

அங்கன்வாடி பள்ளிகளில் எல்கேஜி யூகேஜி வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை பணி மாறுதல் செய்வதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.மாற்று ஏற்பாடுகள் செய்து கொள்ளுமாறு தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக