வெள்ளி, 25 ஜனவரி, 2019

அன்பானவர்களே!வணக்கம். 25.01.19 ஜாக்டோ-ஜியோ தமிழ்நாட்டில் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை நடத்துகிறது...

25.01.19
தமிழகமெங்கும் மாவட்டத்தலைநகரில் மகத்தான மறியல் போராட்டத்தை நடத்துகிறது.

ஜாக்டோ-ஜியோ சொல்லி, 
ஜாக்டோ-ஜியோ அழைத்து,
கோரிக்கைகளை மனதில் கொண்டு  வேலைநிறுத்தத்திலும்,
மறியலிலும் பங்கேற்று இப்போரட்டத்தை வெற்றி முகம் நோக்கி முன்னேற்றப்பாதையில் வழி நடத்திவரும்
நாம் ,அந்த
 ஜாக்டோ-ஜியோ சொல்லும் வரை, 
அந்த கோரிக்கைகளுக்கு முடிவுகள் தெரியும் வரை
நான் பணிக்கு திரும்பமாட்டேன் என்று திடமான முடிவெடுத்து வேலைநிறுத்தத்தில் நில்லுங்கள்.
வேலைநிறுத்தத்தை ,மாவட்டமறியலை 
வெற்றிகரமாக்குங்கள்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டம் சார்ந்த 
மாநில,மாவட்ட,
ஒன்றியப்பொறுப்பாள்ர்கள் ,மன்ற  முன்னோடிகள்,
மன்றத்தின் ஆற்றல்மிகு ஆசிரியப்பெருமக்களே! நாமக்கல் நோக்கி மறியல் படை நடத்துங்கள்!
நாமக்கல் பூங்காச்சாலையை நிறைத்திடுங்கள்!
ஒன்பது அம்சக் கோரிக்கைகளுக்காக ஆசிரியர் மன்றத்தின் அனைத்து உறுப்பினரும் கைதாகி சிறை ஏகினர் என்று பாராட்டத்தக்க முடிவெடுத்து செயலாற்றுங்கள்.

#நாம்வெல்வோம்.
-முருகசெல்வராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக