சனி, 8 ஆகஸ்ட், 2020

*🎤தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்த பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். - முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு:*

*🎤தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? முதலமைச்சர் பழனிசாமி  பதில்*

*பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.*

*கரோனா வைரஸ் பரவல் இன்னும் குறையவில்லை. இது உயிர் சம்பந்தப்பட்ட பிரச்னை. குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டுமென்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றார்கள்.*

 *முதலில் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆகவே, இந்தியா முழுவதுமுள்ள நிலைமைக்கு ஏற்றவாறு தமிழ்நாடும் செயல்படும்.*

*நம்முடைய மாநிலத்தை பொறுத்தவரை, மக்களைக் காக்க வேண்டும், குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.*

 *நிலைமை சீராகும்பொழுது நிச்சயமாக பள்ளிகள் திறக்கப்படும்.இவ்வாறு முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக