வெள்ளி, 19 ஜூன், 2020

*🌐ஜூன் 19, வரலாற்றில் இன்று:சர்வதேச அழற்சிநோய் விழிப்புணர்வு தினம் இன்று.*

ஜூன் 19, வரலாற்றில் இன்று.

சர்வதேச  அழற்சிநோய் விழிப்புணர்வு தினம் இன்று.
( International  Sickle Cell Day )

இது ரத்தசோகை உள்ளவர்களுக்கு ஏற்படும் நோயாகும், இது பரம்பரை மற்றும் பெற்றொரிடமிருந்து பரவுவதாக கூறப்படுகிறது.

இவற்றின் அறிகுறி -   தோல், நகங்கள், கண்ணின் உள்புறம், நாக்கு போன்ற பகுதிகள் வெளிறி இருக்கும், இவற்றை நம்பத்தகுந்த அறிகுறிகளாகக் கொள்ள முடியாது. Hemolytic anemia வில் குருதிச் சிவப்பணுக்கள் அழிவடைவதால், மஞ்சள் காமாலை நோய் ஏற்படும். மேலும் எலும்புகளில் அமைப்பு மாற்றம், இரும்புச்சத்து குறைபாட்டினால் உணவற்ற சில பதார்த்தங்களை உண்ண ஆரம்பிப்பர். காகிதம், மெழுகு, சமைக்கப்படாத அரிசி, அழுக்கு, புல், தலைமுடி, கரி போன்றவற்றை உண்ணும் பழக்கத்தை அறிகுறியாகக் கொண்டிருப்பார்கள்.

இவை ரத்தச்சோகை இல்லாதவர்கள் சிலரிலும் காணப்படும். நாட்பட்ட ரத்தசோகை ஏற்படும்போது, குழந்தைகளின் நடத்தையில் குழப்பம் ஏற்பட்டு, சில நரம்பியல் தொடர்பான விரும்பத்தகாத விருத்தி நிலைகளால் தமது கல்வியில் பின் தங்கியவர்களாக மாறிவிடுவர். இரும்புச்சத்து குறைபாட்டால் வரும் ரத்தச்சோகையில் கால்களில் தளர்வும், அமைதியற்ற நிலையும் காணப்படும்.

மிகக்குறைந்த அளவிலான அறிகுறிகளாவன: கால், கைகளில் வீக்கம், தொடர்ந்த இதயவலி, வாந்தி, அதிக வியர்வை, மலத்துடன்  ரத்தம் வெளியாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக