திங்கள், 28 அக்டோபர், 2019

*🌷அக்டோபர் 28, வரலாற்றில் இன்று.*
--------------------------------------------------

*ஜெர்மன் அறிஞர் பெட்ரிக் மாக்ஸ் முல்லர்*
*(Friedrich Max Muller)*
*நினைவு தினம் இன்று.*

*இந்தியாவுக்கு வராமலேயே இந்திய நாட்டின் உயர்ந்த நூல்களை மொழிபெயர்த்து உலகறியச் செய்தவர், ஜெர்மன் நாட்டு அறிஞர் மாக்ஸ் முல்லர். அவரது நண்பர் மலபாரி, அவரை இந்தியாவுக்கு வரவேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அதற்கு மாக்ஸ் முல்லர், "நான் வருவதற்கில்லை! ஏனெனில், புராதனமான பண்பாடு நிறைந்த, முனிவர்கள் வாழ்ந்த இந்தியாவிலேயே அவர்களது உன்னதத் தத்துவ நூல்கள் மூலம் வாழ்ந்துவிட்டேன். நான் அங்கே வந்தால் மீண்டும் ஜெர்மன் திரும்ப முடியாது" என்று கூறி மறுத்துவிட்டார்.*