வியாழன், 18 ஜனவரி, 2018

17.1.18(புதன்கிழமை) மாநில திட்ட இயக்குனர் அவர்களின் காணொளி கூட்டத்தில் விவாதித்த சில முக்கியமான தவல்கள்...


📕வரும் 25.1.18 அன்றைய தினத்திற்குள் தங்கள் பள்ளியில் பயிலும் பள்ளி மாணவ மற்றும் மாணவியர்களை தவிர வேறு எந்த குழந்தைகளையும் EMIS இல் பதிவேற்றம் செய்து இருந்தால் உடனடியாக அந்த குழந்தைகளை Common Poolற்கு தங்கள் பள்ளியில் இருந்து வெளியேற்ற வேண்டும்.

📕DISE Enrollment படிதான் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு சில பள்ளிகளில் Duplicate entry செய்ய பட்டுள்ளது என்று SPD அவர்கள் கூறி உள்ளார்.

📕மேலும் SPD அவர்கள் கூறியது யாதெனில் தங்கள் பள்ளியில் உள்ள Original மாணவர்களின் எண்ணிக்கையை மட்டும் பதிவேற்றம் செய்தால் போதும் என்றும் தவறான எண்ணிக்கையை கொடுத்து அதற்கு பின்வரும் காலங்களில் உரிய விளக்கம் தர தவறும் பட்சத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை தவிற்குமாறும் கூறி உள்ளார்.

ஏனெனில் ஒரு சில பள்ளிகளில்  குழந்தைகளின் எண்ணிக்கையை போலியாக பதிவேற்றம் செய்யபட்டுள்ளதை  கண்டறியபட்டுள்ளது என கூறினார்.
 அக்குழந்தைகளுக்கான சரியான Adhaar எண்ணை பதிவேற்றம் செய்ய தவறும் பட்சத்தில் அவை போலியான Entry என்று எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அவ்வாறு தவறான தகவல்களை பதிவு செய்யும் தலைமை ஆசிரியர்களை தக்க நடவடிக்கைக்கு உட்படுத்தபடுவார்கள் என்று SPD அவர்கள் எச்சரித்து உள்ளார்.

 📕எனவே தான் சரியான தகவல்களை EMIS ல் வரும் 25.1.18 பதிவேற்றம் செய்துகொள்ள வேண்டும். அதே போல் தங்கள் பள்ளியில் பயிலாத மாணவர்களை Common Pool ற்கு அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்..

 📕 26.1.18 அன்று EMIS ல் தங்கள் பள்ளியில் இருக்கும் மாணவர்கள் அனைவரும் தங்கள் பள்ளியில் பயலும் மாணவர்கள் என்று கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.

📕அவ்வாறு இருக்கும் மாணவர்களின் அனைத்து தகவல்களையும் தலைமை ஆசிரியர் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

📕ஆதார் பதிவேற்றம் செய்யபடாத காரணத்தை கண்டிப்பாக CEOக்கு HM தெரிய படுத்த வேண்டும்.

📕ஒன்றுக்கும் மேற்பட்ட Repeat ஆதார் entry களை Duplicate entry யாக கணக்கில் கொள்ளப்பட்டு அவை அனைத்தும் Delete செய்யபடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக