வியாழன், 23 ஜனவரி, 2020

சிறைச்செம்மல்களே! வேலைநிறுத்தப்போராளிகளே! ஊதிய வெட்டுக்கு ஆளான மறவர்களே!மறத்தியர்களே! கோடானுகோடி பாராட்டு மாலைகளை - படைக்கிறேன்...



ஆசிரியர் மன்றத்தின் மானமிகு
மறவரே!மறத்தியரே!தங்களுக்கு என் வீரவணக்கம்.

சனவரி 22,2019இல் தொடங்கியகால வரையற்ற வேலைநிறுத்தத்தில் தாங்கள் ஈந்துள்ள
தங்களின் அளப்பரிய தியாகம் என்றும்  வீண்போகாது. தங்களின் தியாகம் விதைக்கப்பட்டுள்ளது.
வரும் காலங்களில் பூத்துக்காய்த்து கனிந்து எல்லோருக்கும் பலனும்,பயனும் பெருமளவில் வாரிவழங்கும்.

இன்னும் சொல்லப்போனால் போராட்டக்காலத்தில்  வர்க்க எதிரிகளாக, விரோதிகளாக, துரோகிகளாக, கருங்காலிகளாக
சோரம் போனவர்களுக்கும் சேர்த்தே
 பலனும்,பயனும் பெற்றுத்தரும் வல்லமைமிக்கவர்கள் தாங்கள்.

இத்தகு  வசந்தகாலத்திற்காக  தாங்கள் எல்லோரும் அடைந்துள்ள இன்னல்கள்
சொல்லிமாளதவைகளாகும்.

 தங்களுக்கும்,
தங்களது  குடும்பத்தினருக்கும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் பொதுச்செயலாளர் பாவலர்.திரு.க.மீ ., அவர்களின்  சார்பில்   என் சிரம் தாழ்த்தி இருகரம் குவித்து தங்களுக்கு  கோடானுகோடி வாழ்த்தும் -பாராட்டும் நிறைந்த மலர்ஆரங்களை சூட்டுகிறேன்.
தங்களின்பாதக் கமலங்களில் கோடானுகோடி நன்றிமலர்களை காணிக்கையாக்கி படைக்கிறேன்.

 நாம் நிச்சயம் வெல்வோம்! நம்பிக்கையோடு களமாடுங்கள்!
பள்ளிக்கல்விப் பணிகளையும், ஆசிரியர்மன்றப் பணிகளையும் அரசியல் சித்தாந்தத்தோடு ஆர்வமுடன்ஆற்றுங்கள்!

 தங்களோடு ஆசிரியர்மன்றம் முப்பொழுதும் உற்றத்துணைவனாக என்றும் உடன் நிற்கும்.
#நாளைநமதே!
-முருகசெல்வராசன்.