சனி, 7 மார்ச், 2020

08.03.2020(ஞாயிறு) நாமக்கல் நகரில் நடைபெற இருந்த முப்பெரும் விழா ஒத்திவைப்பு- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்

ஆசிரியர் மன்றத்தின் முப்பெரும் விழா ஒத்திவைப்பு
------------------------------
தமிழ்நாட்டின் மேனாள் கல்வி-நிதிஅமைச்சர் ,
சுயமரியாதைச் செம்மல்,
திராவிட இயக்க முன்னோடி,
திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளர், இனமானப் பேராசிரியர் பெருந்தகை க.அன்பழகனார் அவர்களின் மறைவிற்கு இன்று (07.03.2020) கூடிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட  முப்பெரும் விழாக்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
ஒருவாரக் காலத்திற்கு  துக்கம் கடைப் பிடிக்குமாறும், ஒன்றியத் தலைநகரில் புகழஞ்சலி  கூட்டங்கள் நடத்திடுமாறும் கேட்டுக்கொள்கிறது. மேலும்,
08.03.2020 ஆம் நாள் அன்று  நாமக்கல்லில் நடைபெற இருந்த  முப்பெரும் விழாவினை ஒத்திவைத்து அறிவிக்கிறது.

-முருகசெல்வராசன் ,
விழாக்குழுத் தலைவர்
மற்றும்
மெ.சங்கர்,
விழாக்குழுச் செயலாளர்.