வெள்ளி, 5 ஜனவரி, 2018

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் திருச்செங்கோடு ஒன்றியச்செயற்குழுக்கூட்டம் (04.01.18)~நிகழ்வுகள்...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் திருச்செங்கோடு ஒன்றியச்செயற்குழுக்கூட்டம்
04.01.18(வியாழன்)பிற்பகல் 05.45மணிக்கு திருச்செங்கோடு நகராட்சி மலையடிவாரம் நடுநிலைப்பள்ளியில் ஒன்றியத்தலைவர் இரா.திருவேங்கடம் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்டச்செயலாளர்
முருகசெல்வராசன்,
மாவட்டப்பொருளாளர்
ப.ஹரிஹரன்,
மாநிலப்பொதுக்குழு உறுப்பினர் அ.ஜெயப்பாண்டியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று இயக்க உரை ஆற்றினர்.

இக்கூட்டத்தில்
ஜாக்டோ-ஜியோ நாமக்கல்மாவட்ட அமைப்பின் சார்பில்  
எதிர்வரும்
06.01.18(சனி)முற்பகல் 10.00மணிமுதல் 01.00 மணி முடிய நாமக்கல் பூங்காசாலையில் 11அம்சக்கோரிக்கைகளை தமிழக அரசு உடன் நிறைவேற்றிட வலியுறுத்தி நடைபெறும்  மாநிலந்தழுவிய
தொடர்முழக்கப்போராட்டத்தில் திருச்செங்கோடு ஒன்றியத்திலிருந்து 200 மன்ற உறுப்பினர்கள் பங்கேற்பதென முடிவாற்றப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக