வெள்ளி, 5 ஜனவரி, 2018

06.01.18~நாமக்கல்~ஜாக்டோ-ஜியோவின் தொடர்முழக்கப் போராட்டத்தை வெற்றிபெறச் செய்வீர்...


ஜாக்டோ-ஜியோவின் நாமக்கல் மாவட்டக்கூட்டம்
 (04.01.18-வியாழன்)பிற்பகல் 05.00மணிக்கு நாமக்கல் எஸ்.பி.எம்.,மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மன்றத்தின் மாநில விதிமுறைக்குழு உறுப்பினர் ப.இராசேந்திரன்(சேந்தமங்கலம்),
மாநிலத்தீர்ப்புக்குழு உறுப்பினர் இரா.பன்னீர்செல்வம்(புதுச்சத்திரம்),
மாநிலப்பொதுக்குழு உறுப்பினர் இரா.இரவிக்குமார்
(கபிலர்மலை),மாவட்டத்துணைச்செயலாளர் வெ.வடிவேல்(பள்ளிப்பாளையம்),நாமக்கல் ஒன்றியச்செயலாளர் அ.ஜெயக்குமார்,கபிலர்மலை ஒன்றியப்பொருளாளர் த.தண்டபாணி ஆகியோர்பங்கேற்றனர். 

இக்கூட்டத்தில் வரும் (06.01.18-சனிக்கிழமை)முற்பகல் 10.00மணிமுதல் 01.00 மணி முடிய நாமக்கல் பூங்காசாலையில் 11அம்சக்கோரிக்கைகளை தமிழக அரசு உடன் நிறைவேற்றிட வலியுறுத்தி மாநிலந்தழுவியதொடர்முழக்கப்போராட்டம்
மேற்கொள்வதென முடிவாற்றப்பட்டது.

இக்கூட்ட முடிவினை வெற்றிகரமாக்குமாறும்,போராட்டக்களத்தில் முழு வீச்சுடன் செயலாற்றுமாறும்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில,மாவட்ட,ஒன்றிப்பொறுப்பாளர்களை,இயக்க முன்னோடிகளை,மன்ற ஆசிரியப்பெருமக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.
~முருகசெல்வராசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக