புதன், 28 நவம்பர், 2018

குரூப் 4 பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 3ம் தேதி தொடக்கம்: டிஎன்பிஎஸ்சி




சென்னை: குரூப் 4 பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 3ம் தேதி தொடங்கும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பு: குரூப் 4 பதவியில் (2015-16, 2016-17, 2017-18 ஆண்டுக்கானது) அடங்கிய பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு எழுத்து தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 11ம் தேதி நடந்தது. இதில் விண்ணப்பதாரர் பெற்ற மதிப்பெண் விவரங்கள் இணையதளத்தில் கடந்த ஜூலை  30ம் தேதி வெளியிடப்பட்டது.
இத்தேர்வு தொடர்பான மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னை பிராட்வே பேருந்து நிலையம் அருகில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் வருகிற 3ம் தேதி முதல் நடைபெற உள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு  மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள், ஒட்டுமொத்த தரவரிசை எண், இட ஒதுக்கீட்டு விதி மற்றும்  காலிப்பணியிடம் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தற்காலிகப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.