வியாழன், 5 நவம்பர், 2020

நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் அவர்களை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொறுப்பாளர்கள் இன்று (05/11/2020) முற்பகல் சந்திப்பு..

*நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலர் சந்திப்பு*

நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் அவர்களை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின்  பொறுப்பாளர்கள் இன்று (05/11/2020) முற்பகல் சந்தித்தனர் .
விலையில்லா பாடநூல்களை பள்ளிகளுக்கே கொண்டு சேர்த்திட வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்கியும்,
இராசிபுரம் ஒன்றிய ஆசிரியர்களின் ஈடிஎஸ் கோரிக்கை, நாமகிரிப்பேட்டை ஒன்றிய ஆசிரியர்களின்  கோரிக்கைகள் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொண்டதற்கு மாவட்ட அமைப்பின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. 

இச்சந்திப்பில் மாநிலச் செயலாளர் திரு.முருகசெல்வராசன் ,
மாவட்டச் செயலாளர் திரு.மெ.சங்கர்,  மாவட்டப் பொருளாளர் திரு சு.பிரபு , மாநில பொதுக்குழு உறுப்பினர் 
திரு.இரா.ரவிக்குமார்,  மாவட்ட தணிக்கை குழு உறுப்பினர் திரு.த.தண்டபாணி ஆகியோர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக