சனி, 20 அக்டோபர், 2018

புதிய அப்டேட்டில் கலக்க வரும் வாட்ஸ் ஆப்.! சிறப்பு அம்சங்கள்.!


தற்போது புதிய அப்பேட்டில் களமிறங்க வாட்ஸ் தயாராகி விட்டது. 

இந்தியாவில் அதிகமானனோர் பயன்படுத்தும் செயலியாக வாட்ஸ் ஆப் இருக்கின்றது. இதை மையமாக வைத்து தான் பொழுது போக்கு, வணிகம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளும் நடக்கின்றது.
இந்நிலையில் வாட்ஸ் ஆப் புதிய அப்பேட்டை கொடுப்பதாக அறிவித்துள்ளது. இதனால் ஏராளமானோர்களும் ஆவலுடன் காத்து இருக்கின்றனர். 

இதில் என்னென்ன விஷயங்கள் இருக்கின்றது என்று தெரிந்து கொள்ளலாமா .!

சமூக வலைத்தளங்களில் செய்தி பரிமாற்றத்திற்கு அதிக அளவில் பயன்படுத்தப்படும் ஒன்றாக வாட்ஸ்-அப் விளங்குகிறது. உலக அளவில் 1.3 பில்லியனுக்கு அதிகமானோரும், இந்திய அளவில் 250 மில்லியனுக்கு அதிகமானோரும் பயன்படுத்தி வருகின்றனர். .

இதனை பேஸ்புக் நிறுவனம் நிர்வகித்து வருகிறது.

வாட்ஸ்-அப்பில் அவ்வப்போது புதிய அப்டேட்கள் வெளியாகி வாடிக்கையாளர்களுக்கு வசதிகள் செய்து தரப்படுகிறது. இந்நிலையில் புதிதாக மூன்று அப்டேட்கள் வாட்ஸ்-அப்பில் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

* வாட்ஸ்-அப்பை, இன்ஸ்டாகிராம் கணக்குடன் இணைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக Settings பகுதியில் மாற்றம் வரவுள்ளது. அதில் பயனாளர்களின் அனுமதி கேட்டு, பின்னர் இன்ஸ்டாகிராம் இணைப்பு நிகழும்.

* குறிப்பிட்ட Chatting Session பிடிக்கவில்லை எனில் Vacation Modeஐ பயன்படுத்திக் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக