திங்கள், 2 ஏப்ரல், 2018

ஏப்ரல் 2 ~ ஆட்டிஸம் விழிப்புணர்வு தினம்...


ஆட்டிஸம் (Autism)... 

பரவலாகக் கவனம் பெறாத, நரம்பு மண்டல நோய். உணர்வுகள் வெளிக்காட்டாத முகம், நோக்கம் எதுவுமற்ற பார்வை, சம்பந்தமில்லாத செயல்பாடுகள் என்று ஆட்டிஸ குழந்தைகளையும், பெரியவர்களையும் நாம் அவ்வப்போது கவனித்திருக்கலாம். 

'உலக அளவில் ஆயிரத்தில் இரண்டு குழந்தைகளுக்கு ஏற்பட வாய்ப்புள்ள நோய் இது' என்கிறது ஆய்வுத் தகவல்.

 ''அன்பு மற்றும் ஏற்றுக் கொள்ளல்... இது ரெண்டும்தான் ஆட்டிஸ நோயால் பாதிக்கப்பட்டவங்களுக்கு நாம் கொடுக்கும் முதல் மற்றும் முக்கிய மருந்து!''

ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

பள்ளி நாட்காட்டி ~ஏப்ரல் 2018...

பதிவுத் துறையின் சுற்றறிக்கை~நாள் 27-03-2018…

SSA AND RMSA MERGER~PDF

கூட்டுறவு தேர்தலில் எப்படி வாக்களிக்க வேண்டும்....?


*SC/ST பிரிவில்  4 அணிகள் நின்றாலும் 8 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் அவர்களில் 2 வேட்பாளர்களுக்கு மட்டும்தான் நீங்கள் வாக்களிக்க வேண்டும். 

*பெண்கள் பிரிவில் 
நான்கு அணிகள் போட்டியிடுகிறது என்றால் ( 4×3) 
12  வேட்பாளர்கள். 
நீங்கள் ஏதேனும் 3 பெண்களுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும். 
உங்களுக்கு யாரேனும் மிகவும் பிடித்தவர்கள் என்று மனதில் கொண்டு 4  பெண்களுக்கு வாக்களிக்க கூடாது. அப்படி வாக்களித்தால் அந்த 4 ஓட்டுகளுமே செல்லாதவையாக போய்விடும். 
எனவே 3 பெண்களுக்கு  மட்டுமே வாக்களிக்க வேண்டும். 

பொதுப்பிரிவில் 
நான்கு அணிகள் போட்டியிடுகிறது என்றால் (4×6) 
24  வேட்பாளர்கள் என்று வைத்துக் கொண்டால் 
நீங்கள் 6 பொது பிரிவு வேட்பாளர்களுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும். 
மீறி 6 க்கு மேல் வாக்களித்தால் அவை எல்லாமே செல்லாதவையாக போய்விடும். 

*எனவே SC/ST பிரிவுக்கு 2 ஓட்டுகள்...

*பெண் பிரிவுக்கு 3 ஓட்டுகள்...

*பொதுப்பிரிவுக்கு 6 ஓட்டுகள்...

இந்த அடிப்படையில் மட்டுமே வாக்களிக்க வேண்டும்...

பள்ளிக் கல்வி செயலர் ஆசிரியர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக "கைசாலா குழு" - வில் இணைய அழைப்பு...


நம் பள்ளிக் கல்வி செயலர் ஆசிரியர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக கைசாலா குழுவில் எத்தனை ஆசிரியர்கள் வேண்டுமானாலும் இணையலாம்...

நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து செயலி தரவிறக்கம் செய்து இணையலாம்...

You are invited to Microsoft Kaizala group~click here...

சனி, 31 மார்ச், 2018

சர்வசிக்‌ஷா அபியான் உள்பட பள்ளிக்கல்வி திட்டங்கள் ஒன்றாக இணைப்பு : மத்திய அரசு ரூ.75ஆயிரம் கோடி ஒதுக்கீடு...


மத்திய அரசு கடந்த 2000ம் ஆண்டில் அனைவருக்கும் கல்வி இயக்கம் என்ற திட்டத்தை கொண்டு வந்தது. இது 10 ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும் என்று தெரிவித்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு அந்த திட்டம் மேலும் நீட்டிக்கப்பட்டது. அதைத் தொடந்து 2010ம் ஆண்டு மத்திய இடைநிலைக் கல்வி திட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த இரண்டு திட்டங்கள் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் நடைமுறையில் உள்ளன. இந்நிலையில் இந்த இரண்டு திட்டங்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் தனித்தனியாக நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.

இப்போது, மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை மேற்கண்ட இரண்டு திட்டங்களையும் ஒன்றாக இணைப்பது, அத்துடன் ஆசிரியர் கல்வி திட்டத்தையும் ஒன்றாக இணைப்பது  குறித்து ஆலோசித்து வந்தது. இதற்கான ஆய்வுக் கூட்டம் புதுடெல்லியில் நேற்று முன்தினம் நடந்தது. அதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் பேரில் மேற்கண்ட 3 திட்டங்களையும் ஒரே திட்டமாக செயல்படுத்த முடிவு செய்துள்ளனர். ஒருங்கிணைந்த இந்த திட்டம் ஏப்ரல் 1ம் தேதி முதல் மார்ச் 2020 வரை ஒரே திட்டமாக செயல்படும். இதற்காக ரூ.75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைந்த திட்டத்திற்கு ஏற்ப பள்ளிக் கல்வித்துறை வடிவமைக்கப்படும். கல்விக்கான தற்போதைய நிதி ஒதுக்கீட்டில் 20 சதவீதம் அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய அரசியலைமைப்பு முன்னுரை...

ஊழலில் சிக்கிய அதிகாரிகளுக்குப் பாஸ்போர்ட் தடை...

ஒரு கோடி புதிய வேலைவாய்ப்புகள் மத்திய அரசு அறிவிப்பு...