சனி, 19 மே, 2018

புதிய அரசாணை 101-ன் படி CEO, DEO, BEO-ன் பணிகள்...


🌟அனைத்து வகை பள்ளிகளையும் கண்காணிக்க பதவிகள் ஒருங்கிணைபட்டு சில மாறுதல்கள் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது..

🌟மாவட்ட அளவில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது...

பதவிகள்:

⚡1.முதன்மை கல்வி அலுவலர் CEO

⚡2.மாவட்ட கல்வி அலுவலர் DEO

⚡3.வட்டார கல்வி அலுவலர் BEO

1.முதன்மை கல்வி அலுவலர் பணிகள்:

🌟அனைத்து வகை பள்ளிகளையும் (அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் , மெட்ரிக் பள்ளி,சுயநிதிப்பள்ளிகள்) கண்காணித்தல்..

🌟DEO BEO ஆகியோரை கண்காணித்தல்..

🌟அரசு மேல் நிலைப்பள்ளிகளில் ஆண்டாய்வு செய்தல்..

🌟பள்ளி ஆசிரியர்களுக்கு மாறுதல் உத்தரவு வழங்குதல்..

🌟அரசு நலத்திட்ட உதவிகள் மாவட்ட அளவில் கிடைப்பதை உறுதி செய்தல்...

🌟தனியார் பள்ளிகள் அங்கீகார பணிகளை மேற்கொள்ளுதல்...

2.மாவட்ட கல்வி அலுவலர் பணிகள்:

🌟அனைத்து வகை பள்ளிகளையும்  மேற்பார்வை செய்தல்

🌟BEO அலுவலர்கள் பணிகளை மேற்பார்வையிடுதல்..

🌟அனைத்து வகை உயர்நிலைப்  பள்ளிகளை ஆண்டாய்வு செய்தல்...

🌟மாவட்ட அளவில் அனைத்து அரசு நலத்திட்ட உதவிகளும் சென்றடைவதை உறுதி செய்தல்...

🌟உயர்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர் பணிகளை கண்காணித்து அறிவுரைகளை வழங்குதல்...

3.வட்டார கல்வி அலுவலர் பணிகள்:

🌟உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் பணியிடம் வட்டார கல்வி அலுவலர் பணியிடமாக மாற்றப்பட்டு உள்ளது..

🌟அனைத்து வகை தொடக்க நடுநிலை பள்ளிகளை கண்காணித்து ஆண்டாய்வு செய்தல்..

🌟தொடக்கநிலை நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் பணிகளை கண்காணித்து அறிவுரைகளை வழங்குதல்..

🌟அரசு நலத்திட்ட உதவிகளை முறையாக கிடைப்பதை உறுதி செய்தல்..

இன்று 'டான்செட்' நுழைவு தேர்வு...


சென்னை: இன்ஜினியரிங் மற்றும் மற்ற பட்டப் படிப்பு முடித்த பட்டதாரிகள் எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., - எம்.பிளான் - எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., படிப்புகளில் சேர, அண்ணா பல்கலை நடத்தும், 'டான்செட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான, டான்செட் நுழைவு தேர்வு, இன்று(மே 19)தமிழகம் முழுவதும், 27 மையங்களில் நடக்கிறது.

இதில், எம்.பி.ஏ., படிப்புக்கு, 17 ஆயிரத்து, 913 பேரும், எம்.இ., - எம்.டெக்., உள்ளிட்ட படிப்புகளுக்கு, 15 ஆயிரத்து, 242 பேரும் பங்கேற்கின்றனர். எம்.சி.ஏ., படிப்புக்கு, நாளை தேர்வு நடக்கிறது. இதில், 5,240 பேர் பங்கேற்கின்றனர்.

வெள்ளி, 18 மே, 2018

Admission of students in Railway Schools...

அரசுப்பணியாளர்களை குறைக்க நடவடிக்கை ஆரம்பம்... பணியாளர் விவரங்களை கேட்டு சீரமைப்புக்குழு கடிதம்...

அரிய தபால் தலை சேகரித்தால் ரூ.8,000 கல்வி உதவித்தொகை...


தமிழகத்தில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், அரிய வகை தபால் தலைகளை சேகரித்தால், அவர்களுக்கு 8,௦௦௦ ரூபாய் கல்வி உதவித்தொகையை, மத்திய அரசு வழங்குகிறது.

இதுதொடர்பாக, தபால் துறை அதிகாரிகள் கூறியதாவது:
மத்திய அரசு சார்பில், தபால் துறை மூலமாக, 'தீன்தயாள் ஸ்பார்ஸ் யோஜனா ஸ்காலர்ஷிப்' என்ற திட்டத்தின் கீழ், 2018- - 19 கல்வியாண்டு முதல், அரிய வகை தபால் தலைகளை சேகரிக்கும் பள்ளி மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

அதன்படி, தமிழகத்தில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என்று அனைத்து பள்ளிகளைச் சேர்ந்த, ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், அரிய வகை தபால் தலைகளை சேகரித்து, தபால் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.

 அத்துடன், மாணவர்களுக்கு பொது அறிவு தொடர்பான எழுத்துத் தேர்வும் நடத்தப்படும். இதில், தபால் தலைகள் சேகரிக்க 25 மதிப்பெண்கள், பொது அறிவு தேர்வுக்கு 25 மதிப்பெண்கள் என, 50 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

ஒவ்வொரு வகுப்புக்கும் சிறந்த 10 மாணவர்களள் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு, 40 மாணவர்களுக்கு தலா 8,௦௦௦ ரூபாய் வீதம் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும். இதற்கான தேர்வு, தபால் துறை மூலம் நடத்தப்படும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Whatsapp-ன் புதிய Update...


வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டிருக்கும் புதிய அப்டேட் அதன்
வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அம்சங்களை வழங்குகிறது.

ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கு வாட்ஸ்அப் செயலியில் புதிய அப்டேட் வழங்கப்படுகிறது. இந்த அப்டேட் வாட்ஸ்அப் க்ரூப்களுக்கு அதிக வசதிகளை வழங்குகிறது. ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் செயலியில் தற்சமயம் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய வசதிகள் முன்னதாக ஆன்ட்ராய்டு பீட்டா பதிப்பில் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய அப்டேட் இன்ஸ்டால் செய்தவர்கள் வாட்ஸ்அப் க்ரூப்களில் டிஸ்க்ரிப்ஷன் சேர்க்க முடியும், க்ரூப் அட்மின்களுக்கு கூடுதலாக புதிய வசதிகள், மென்ஷன்ஸ் அம்சம் மற்றும் க்ரூப்களில் உள்ளவர்களை தேடும் அம்சம் வழங்குகிறது.

இந்த வசதிகள் அனைத்தும் பழைய க்ரூப்களுக்கும், புதிதாய் உருவாக்கப்படும் க்ரூப்களிலும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. க்ரூப்களை உருவாக்கும் போது க்ரூப் குறித்த விவரங்களை க்ரூப் டிஸ்க்ரிப்ஷன் பகுதியில் எழுத முடியும். இதனை க்ரூப்-இல் உள்ளவர்கள் மற்றும் புதிதாய் இணைபவர்களும் பார்க்க முடியும்.

க்ரூப் டிஸ்க்ரிப்ஷன்களை க்ரூப் அட்மின்கள் மற்றும் க்ரூப்-இல் இருப்பவர்களும் மாற்றியமைக்க முடியும். மற்றவர்கள் இவ்வாறு செய்ய வேண்டாம் என நினைக்கும் க்ரூப் அட்மின்கள் இதற்கான வசதியை முடக்க முடியும். இதே போன்று க்ரூப் சப்ஜக்ட் மற்றும் ஐகானினை யார் மாற்ற வேண்டும் என்பதை க்ரூப் அட்மின்கள் முடிவு செய்ய முடியும்.

இத்துடன் க்ரூப் அட்மின்கள் மற்ற க்ரூப்களில் இருப்பவர்களின் அட்மின் அனுமதிகளை திரும்ப பெற முடியும். மேலும் க்ரூப் உருவாக்குபவரை இனி க்ரூப்-ஐ விட்டு வெளியேற்ற முடியாது. வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் க்ரூப்களில் மென்ஷன்ஸ் எனும் புதிய வசதியை பயன்படுத்த முடியும்.

மாற்றுச் சான்றிதழ் வேண்டி விண்ணப்பம்...

வியாழன், 17 மே, 2018

SBI - கல்வி கடன் பற்றி கல்லூரியில் சேரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை...


எஸ்பிஐ என்று அழைக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கி பல வகையிலான கல்வி கடனை அளிக்கிறது. 

கல்வி கடன் என்றால் இந்திய குடிமக்கள் தங்களது மேல் படிப்பை நிதி சிக்கல் இல்லாமல் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் படிப்பதற்காக அளிக்கப்படும் திட்டம் என்று sbi.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எஸ்பிஐ கல்வி கடன் 5 வகையாக உள்ளது: 

ஸ்காலர் லோன், குலோப எட்-வாண்டேஜ், ஸ்டூடண்ட் லோன், ஸ்கிள் லோன் மற்றும் கல்வி கடன். 

கடன் பெற்று படிப்பை முடித்த ஒருவருடத்திற்குப் பிறகு திருப்பிச் செலுத்த துவங்கினால் போது. பணத்தினை திருப்ப செலுத்தத் துவங்கியதில் இருந்து 15 வருடத்திற்குள் முழுமையாகச் செலுத்த வேண்டும்.
எஸ்பிஐ கல்வி கடன் வகைகள் பற்றி விளக்கமாக இங்கு பார்க்கலாம்.

ஸ்காலர் லோன்:
இந்த கடன் திட்டமானது இந்தியாவில் உள்ள ஐஐடி, ஐஐஎம், என்ஐடி, ஏயிம்ஸ் மற்றும் பிற பிரீமியம் கல்வி நிறுவங்களில் பயிள இருக்கும் மாணவர்களுக்கு மட்டுமே அளிக்கப்படும். ஒருவரால் 30 லட்சம் ரூபாய் வரை இந்த கடன் திட்டம் கீழ் கடன் பெற முடியும்.
 
குலோபள் எட்-வாண்டேஜ்:
வெளிநாட்டுக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் முழு நேர படிக்கும் மாணவர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் 20 லட்சம் ரூபாய் முதல் 1.5 கோடி ரூபாய் வரை கடன் அளிக்கப்படுகிறது.

மாணவர் கடன்
இந்தியா மற்றும் வெளிநாடு என இரண்டு இடங்களில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கும் இந்தத் திட்டம் கீழ் கடன் அளிக்கப்படுகிறது. இந்த திட்டம் கீழ் இந்தியாவில் படிக்க விரும்பும் மாணவர்கள் 10 லட்சம் ரூபாய் வரையிலும், வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்கள் 20லட்சம் ரூபாய் வரையிலும் கடன் பெற முடியும்.
 
ஸ்கிள் லோன்:
இந்தியாவில் அரசு அனுமதி பெற்ற தொழில் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் சேர கடன் தேவைப்படும் போது ஸ்கிள் லோன் திட்டத்தின் கீழ் கடன் பெற முடியும்.
 
கல்வி கடனை டேக் - ஒவர் செய்தல்:
கல்வி கடனை டேக் - ஒவர் செய்தல் என்றால் ஒரு நிறுவனத்தில் கல்வி கடன் பெற்று இருக்கும் போது மாத தவணையை குறைப்பதற்காக எஸ்பிஐ வங்கிக்குக் கடனை மாற்றம் செய்ய கூடிய ஒரு திட்டமாகும்.
எஸ்பிஐ வங்கியில் கல்வி கடன் பெறும் போது தெரிந்துகொள்ள வேண்டியவை

கடன் தொகை:
இந்தியாவில் படிக்கும் மாணவர்கள் அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம். வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள் 20 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம்.
சில நேரங்களில் இந்திய மாணவர்களுக்கு அவர்கள் நிலையைப் பொருத்து கல்வி கடன் வரம்பு உயரவும் வாய்ப்புள்ளது.
வெளிநாட்டில் படிக்க விம்பும் மாணவர்களுக்கு அதிக கடன் தேவை என்றால் எஸ்பிஐ-ன் குலோபள் எட்-வாண்டேஜ் திட்டத்தினை தேர்வு செய்வது நல்லது.

மானவர் கடன்
கடன் வரம்பு 1 ஆண்டு MCLR பரவலான வட்டி விகிதம் மீட்டமை காலம்
ரூ 7.5 லட்சம் வரை 8.15% 2.00% 10.15% 1 வருடம்
ரூ. 7.5 லட்சத்திற்கு மேல் 8.15% 2.75% 10.90% 1 வருடம்

சலுகை:
மாணவிகள் என்றால் வட்டி விதத்தில் கூடுதலாக 0.50 சதவீதம் வரை சலுகை பெறலாம். கடன் தவணையினை சரியாகச் செலுத்திக்கொண்டு வரும் போது கூடுதலாக 1 சதவீதம் வரை சலுகை அளிக்கப்படுகிறது.
 
செக்யூரிட்டி:
ரூ. 7.5 லட்சம் வரை கடன் பெறும் போது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் பெயரில் கடனை பெறலாம். துணை பாதுகாப்பு அல்லது மூன்றாம் தரப்பு உத்தரவாதம் தேவையில்லை.
இதுவே 7.5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகக் கடன் பெரும் போது பெற்றோர் / பாதுகாவலர் மட்டுமே இணை-கடனாளியாக இருக்க முடியும் மற்றும் உறுதியான இணைப் பாதுகாப்பு தேவைப்படுகிறது. அதாவது சொத்து ஆவணங்கள் போன்றவற்றைச் சமர்ப்பிக்க வேண்டியது வரும்.
ஒருவேலைத் திருமணமானவர் என்றால் பெற்றோர் அல்லது துணை அல்லது சட்டப்பூர்வமாக பெற்றோர்களாகக் கருதப்படுபவர்கள் தான் கடனுக்கு பொறுப்பு ஆகும்.

மார்ஜின் அல்லது விளிம்பு:
மார்ஜின் தொகை என்பது கடன் பெறுபவர்கள் செலுத்த வேண்டிய தொகை, மீத தொகை வங்கிகள் செலுத்தும்.
4 லட்சம் ரூபாய் வரை மார்ஜின் இல்லை, அதற்கு அதிகம் என்றால் இந்தியாவில் படிக்கும் மாணவர்கள் 5% மற்றும் வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள் 15% மார்ஜின் தொகை செலுத்த வேண்டி வரும்.

கடனைத் திருப்பி அடைத்தல்
இரண்டாம் முறையாகவும் கடன் பெற்று மேல் படிப்பை தொடரும் போது இரண்டாவது படிப்பை முடித்த 15 வருடத்தில் கடனை மொத்தமாக அடைக்க வேண்டும்.

INCOME TAX RETURN DUE DATES AND LATE FILING FEES FOR ACCOUNT YEAR 2017-2018...

G.O Ms 100 - SSA & RMSA இணைத்து, பதவிகள், பொறுப்புகளை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு (16.05.2018)