வியாழன், 24 மே, 2018

ஜாக்டோ-ஜியோவின் மாநில ஒருங்கிணைப்புக் குழு ~ தூத்துக்குடி படுகொலைகளைக் கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தியும் இன்று (24.05.2018) நாமக்கல் பூங்கா சாலையில் பிற்பகல் 05.00 மணிக்கு பெருந்திரள் ஆர்ப்பாட்டம்...

அன்பானவர்களே!வணக்கம்.

ஜாக்டோ-ஜியோவின் 
மாநில ஒருங்கிணைப்புக்
குழு தூத்துக்குடி படுகொலைகளைக்
கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தியும் 
இன்று (24.05.2018) மாவட்டத்தலைநகரங்களில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளரும்,
ஜாக்டோ-ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளருமான பாவலர் அய்யா அவர்களின் வழிகாட்டுதலில் மாநிலத்தலைவர் அவர்கள்  அலைபேசியில் அழைத்து இவ்வார்ப்பாட்டத்தை வெற்றிகரமாக்கிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

நாமக்கல் மாவட்ட ஜாக்டோ-ஜியோ  நாமக்கல் 
பூங்கா சாலையில் இன்று(24.05.18)
பிற்பகல் 05.00மணிக்கு ஆர்ப்பாட்டம் மேற்கொள்வதாக  அறிவித்துள்ளது.

இதனடிப்படையில்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த மாநில,மாவட்ட,
ஒன்றியப்பொறுப்பாளர்கள், ஆசிரியர் மன்ற முன்னோடிகள்,
ஆசிரியர்மன்ற ஆசிரியப்
பெருமக்கள் இன்றைய (24.05.18)பிற்பகல்
05.00 மணிக்கு ஆர்ப்பாட்டத்தில்  பெருந்திரளாய் 
ஒன்று கூடுமாறு  அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
                  நன்றி.
          ~முருகசெல்வராசன்.

தகவல் தொழில்நுட்பம்- புதிய பாடத்திட்டம் - QRC(Quick Response Code) - அனைத்து ஆசிரியர்களும் Smart Phone வைத்திருக்க வேண்டும் - இணைப்பில் வர அறிவுறுத்துதல் சார்பு...

DSE PROCEEDINGS-பள்ளிகளில் மாணவர்கள் எதிர்கொள்ளும் உளவியல் ரீதியான பிரச்சனைகளுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கிடுதல் சார்பு - இயக்குநர் செயல்முறைகள்...

2018-2019 ம் கல்வியாண்டு முதல் 9-10, 11-12 வகுப்புகளுக்கு புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள சீருடையில் 01.06.2018 முதல் ​9-10, 11-12 வகுப்பு மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வருகை தர ஆவண செய்ய பள்ளிக்கல்விதுறை உத்தரவு...

புதன், 23 மே, 2018

கம்ப்யூட்டர் சயின்ஸ் பெயர் மாற்றம்~ பிளஸ்1,பிளஸ்2 வகுப்புகளுக்கு கணினி பயன்பாடு மற்றும் தொழில்நுட்பம் என மாறியது...

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு~ தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்தல் மற்றும் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தல் சார்ந்து செய்திக்குறிப்பு...

புதிய பாடத்திட்ட நூல்கள்~ இன்று முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்…


புதிய பாடத் திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட 1, 6, 9, 11 ஆம் வகுப்புகளுக்கான பாடநூல்களை புதன்கிழமை முதல் இணையதளத்தில் படிப்படியாகப் பதிவிறக்கம் செய்யலாம் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தமிழகத்தில் பள்ளிகளுக்கான மாநிலப் பாடத் திட்டம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றியமைக்கப்பட்டது.

ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், நூற்றுக்கணக்கான பேராசிரியர்கள், வல்லுநர்களின் வழிகாட்டுதலில் உருவான புதிய பாடத் திட்ட நூல்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் கடந்த மே 4-ஆம் தேதி வெளியிட்டனர். 

இதையடுத்து வரும் கல்வியாண்டில் 1, 6, 9, 11 ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடநூல்களின் அடிப்படையில் கற்றல், கற்பித்தல் பணிகள் நடைபெறவுள்ளன.

இந்த நிலையில் மாணவர்கள், பெற்றோர் நலன் கருதி 1, 6, 9, 11 ஆம் ஆகிய வகுப்புகளுக்கான பாடநூல்கள் மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன (எஸ்சிஇஆர்டி) வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பதிவேற்றம் செய்யப்பட்ட புதிய பாடத்திட்ட நூல்களை www.tnscert.org என்ற இணையதள முகவரியில் புதன்கிழமை முதல் பதிவிறக்கம் செய்யலாம். வழக்கமான புத்தகங்களில் உள்ள தகவல்களைக் காட்டிலும் இதில் கூடுதல் தகவல்கள் இடம்பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

செவ்வாய், 22 மே, 2018

பள்ளிக் கல்வி - பாடத்திட்டம் - மேல்நிலைக் கல்வி- தொழிற்கல்வி - கலைப்பிரிவு - 2018-19ம் கல்வியாண்டு பாடப்பிரிவுகளில் உள்ள பாடப் பெயர்கள் மாற்றம் மற்றும் முதன்மைப் பாடங்கள் மாற்றம் - சார்ந்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு விவரம் தெரிவித்தல்-சார்ந்து...

10th Result~link...


Click here for result...

பள்ளிகளில் அசல் மதிப்பெண் சான்றிதழ் வினியோகிக்கும்போது, வேலைவாய்ப்பு பதிவு மேற்கொள்ளும் வகையில், ஆவணங்களை தயார் நிலையில் வைக்குமாறு தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு...


பள்ளிகளில் அசல் மதிப்பெண் சான்றிதழ் வினியோகிக்கும்போது, வேலைவாய்ப்பு பதிவு மேற்கொள்ளும்வகையில், ஆவணங்களை தயார் நிலையில் வைக்குமாறு தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது .

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 16ம் தேதி வெளியானது.

வரும் 23, 30 ஆகிய தேதிகளில் முறையே, 10ம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. 

வேலைவாய்ப்பு அலுவலக பதிவில், மாணவர்களின் கல்வித்தகுதி, அந்தந்த பள்ளிகளிலேயே பதிவு செய்யப்படுகிறது.

அசல் மதிப்பெண் சான்றிதழ் வினியோகிக்கும் போது  இப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

ஏற்கனவே பொதுத்தேர்வு எழுதிய, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, முந்தைய பதிவு எண் அடங்கிய ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இதன் ரசீதை, அந்தந்த பள்ளிகளிலும் பராமரிக்க, அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதோடு, ஜாதி சான்றிதழ் மற்றும் குடும்ப அடையாள அட்டை ஆகியவை இருந்தால், இப்பதிவில் கூடுதலாக சேர்க்கலாம்.

10ம் வகுப்புக்கு, வேலைவாய்ப்புக்கான கல்வித்தகுதி புதிதாக பதிவதால், இம்மாணவர்களிடம் முக்கிய சான்றிதழ்களின் நகல்கள் பெறப்பட்டு தகவல்கள் பதிவேற்றுமாறு தலைமையாசிரியர்களுக்கு  அறிவுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அரசுப்பள்ளி தலைமையாசிரியர்கள் கூறுகையில்... 

'வேலைவாய்ப்பு பதிவு பணிகள் மேற்கொள்ளும் வகையில், பள்ளிகளில் உள்ள கம்ப்யூட்டர்களை தயார் நிலையில் வைக்க வேண்டும்.

பழைய கம்ப்யூட்டர்களாக இருப்பின் பழுது நீக்குவதோடு மாற்று ஏற்பாடு செய்யவேண்டும். 

மாணவர்களின் தகவல்கள் சரிபார்த்தல், பிழையின்றி உள்ளீடு செய்தல் உள்ளிட்ட பணிகளில் எந்த குளறுபடிகளும் இல்லாமல் பார்த்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.