செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

கேரள வெள்ள நிவாரணம் 2018 ~ ஒருநாள் ஊதியம் பிடித்தம் செய்து செலுத்தக்கோரும் விருப்பக் கடிதம்…

கேரள வெள்ள நிவாரண நிதிக்காக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒருநாள் ஊதிய பிடித்தம் சார்ந்த அரசாணை வெளியீடு...

பெண்களை பின்தொடர்ந்தால் அழைக்கலாம்~ பொதுமக்களின் பாதுகாப்பிற்கு "காவலன் 100" செயலி அறிமுகம்…

ஓட்டுபவர், பின்னால் உட்காருபவர் இருவரில் யார் ஹெல்மெட் அணியாவிட்டாலும் அபராதம்...

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் 38 புதிய படிப்புகளுக்கு யுஜிசி அனுமதி...

கடல்சார் கண்காணிப்புக்கு செயற்கைக்கோள்கள்...

கோவை வ.உ.சி மைதானத்தில் இலவச வைபை வசதியுடன் தங்க நிறத்தில் 'ஸ்மார்ட் ட்ரி'~ 350 மீட்டருக்கு பயன்படுத்தலாம்...

சுத்தம் ~ உறுதிமொழி…

திங்கள், 27 ஆகஸ்ட், 2018

IGNOU பல்கலையில் ஆகஸ்ட்-31 வரை சேர்க்கை...


இந்திரா காந்தி, தேசிய திறந்த நிலை பல்கலையில், வரும், 31ம் தேதி வரை, மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

'இக்னோ' எனப்படும், இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலையில், பட்டம், முதுநிலை பட்டப்படிப்பு, சான்றிதழ் மற்றும் டிப்ளமா படிப்புகள், தொலைநிலை கல்வியில் வழங்கப்படுகின்றன. 

நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, வரும், 31ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

விருப்பம் உள்ளவர்கள், சென்னை, வேப்பேரியில் உள்ள, இக்னோ மண்டல அலுவலகத்துக்கு சென்று விண்ணப்பிக்கலாம். மேலும், https://onlineadmission.ignou.ac.in/admission 
என்ற இணையதளம் வழியாகவும், விண்ணப்பம் அனுப்பலாம் என, இக்னோ தெரிவித்துள்ளது.

சிப் அடிப்படையிலான புதிய ATM கார்டுகளை பெற்றுக் கொள்ளுமாறு வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் அறிவிப்பு...


இப்போது நாம் பயன்படுத்தி வரும் டெபிட், ஏடிஎம் கார்டுகளை கொடுத்துவிட்டு, 'சிப்' அடிப்படையிலான புதிய கார்டுகளை பெற்றுக் கொள்ளுமாறு வாடிக்கையாளர்களுக்கு  வங்கிகள் அறிவித்துள்ளது.

தற்போது பயன்பாட்டில் உள்ள வங்கி அட்டைகள் காந்தப் பட்டை தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை 'ஸ்கிம்மர்' கருவி மூலம் நகல் எடுத்து மோசடியாளர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தடுப்பதற்காக கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த 'சிப்' அடிப்படையில் கார்டுகளை வழங்குமாறு ரிசர்வ் வங்கி பிற வங்கிகளுக்கு அறிவுறுத்தியிருந்தது. இதனால், வங்கி அட்டை முறைகேடுகளை முழுமையாகத் தடுக்க முடியும்.

இந்நிலையில் இந்த பாதுகாப்பு அம்சத்தை முழுமையாக செயல்படுத்த வங்கிகள் முடிவு செய்துள்ளது. 

வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கிக் கிளைக்கு நேரில் சென்றும், நெட் பாங்கிங் மூலமும் புதிய அட்டையை பெற விண்ணப்பிக்கலாம்.