வெள்ளி, 18 ஜனவரி, 2019

அங்கன்வாடிக்கு இடைநிலை ஆசிரியர்களை அனுப்புதல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறை (11/01/2019)



நிலவுக்கு அழைத்துச் செல்லும் ராக்கெட் ரெடி...

TNPSC குரூப் 4 பதவிக்கு வருகிற 21ம் தேதி சான்று சரிபார்ப்பு,கலந்தாய்வு...

PG IMPORTANT PROCEEDINGS...

மாண்டிசோரி கல்விமுறை...

காலிப்பணியிடம் உள்ள மேல்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை~ பட்டியல் அனுப்ப உத்தரவு…

EMIS இணையதள பணிகளை பள்ளிகள் விரைந்து முடிக்க வேண்டும்  ~முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிகல்வித் துறை உத்தரவு…

புதன், 16 ஜனவரி, 2019

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 வுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் தொலைந்தால் டூப்ளிகேட் மதிப்பெண் சான்றிதழை சொந்த மாவட்டத்திலேயே பெறலாம்~உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வசதி…

Income tax 80C யின்கீழ் என்னென்ன சேமிப்புக்கள் வரும்?

வருமானவரியை மிச்சம் பிடிக்க 80 சி யின் கீழ்விலக்கு அளிக்கப்பட்டுள்ள சேமிப்புகளின் விவரம் பின் வருமாறு:

வருமான வரி செலுத்துவோருக்கு வரி விலக்கு அளிக்க சிலசேமிப்புக்கள் 80 சி பிரிவின் கீழ் உள்ளன. அவை என்ன என்பதை தெரிந்துக் கொள்வதன் மூலம் அதிக வரி செலுத்தாமல் தவிர்க்க முடியும். அத்தகைய சேமிப்பு இனங்கள் குறித்து நாம் இப்போது காண்போம்

1. ஆயுள் காப்பீட்டு பிரிமியம்

2. பொது பிரவிடண்ட் ஃபண்ட்

3. ஊழியர் பிராவிடண்ட் ஃபண்ட்

4. சுகன்யா சம்ரிதி திட்டம்

5. தேசிய சேமிப்பு பத்திரம் (இதில் வட்டி, முதலீடு இரண்டுக்குமே விலக்கு உண்டு)

6. வங்கிகள், தபால் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் 5 வருட வைப்பு தொகை

7. முதியோர் சேமிப்பு திட்டம்

8. யுனிட்டுகள் மூலம் காப்பீடு

9. முதலீட்டு சேமிப்புக்கள்

10. ஓய்வூதியம்

11. குழந்தைகளின் கல்விச் செலவு (இரு குழந்தைகளுக்குமட்டும்)

12. வீட்டு வசதிக் கடன் முதல் திரும்பி செலுத்துதல்இவை அனைத்தும் இணைந்து வருடத்துக்கு ரூ. 1.5 லட்சம் வரை விலக்கு அளிக்கப்படும். அல்லது ஒரே இனமாகவும் விலக்கு பெற முடியும்.

 

ஆசிரியருக்கு பயோ மெட்ரிக் பதிவு வந்தாச்சு...

மதுரை மாவட்டத்தில் ஜன., 21 முதல் 113 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவு துவங்கவுள்ளது.

மாநில அளவில் 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் இம்முறை அமல்படுத்தப்படவுள்ளது. மாவட்டத்தில் முதற்கட்டமாக 261 பயோ மெட்ரிக் வருகை பதிவு கருவிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரு பள்ளிக்கு 2 வீதம் 113 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தவிர முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம், மதுரை, திருமங்கலம், மேலுார், உசிலம்பட்டி என நான்கு கல்வி மாவட்ட அலுவலகங்கள், 15 வட்டார கல்வி அலுவலகங்கள், 15 வட்டார வள மையங்களில் இக்கருவிகள் பொருத்தும் பணிகள் நடக்கின்றன.

ஆசிரியர்கள், அலுவலர்களின் ஆதார் எண்கள் மற்றும் எட்டு 'டிஜிட்' கோடு எண் ஒதுக்கப்பட்டு வருகின்றன. ஆசிரியர் அல்லது அலுவலர்கள் கருவியில் கைவிரல் ரேகையை பதிவு வைக்கும் போது 'கோடு எண்கள்' மட்டுமே ஸ்கிரீனில் தெரியும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதிகாரி ஒருவர் கூறியதாவது: பிரத்யேக பயிற்சி பெற்ற 10 கணினி பயிற்றுனர்கள் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளனர். பள்ளிகளில் காலை 8:45 முதல் 9:15 மணிக்குள், பகல் 1:00 முதல் 1:15 மணிக்குள்ளும் ஆசிரியர் வருகை பதிவு செய்ய வேண்டும்.

கல்வி அலுவலகங்களில் காலை 10:00 மணிக்குள் அதிகாரிகள், அலுவலர்கள் விரல் ரேகை பதிவு செய்ய வேண்டும்.