புதன், 30 ஜனவரி, 2019

இடைநிலை ஆசிரியர்கள் அங்கன்வாடி பள்ளிக்கு செல்ல மதுரை நீதிமன்றம் வழங்கிய தடை ஆணை...

தேசிய தொழுநோய் ஒழிப்புத்திட்டம் - ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு 30.01.2019 - தொழுநோய் ஒழிப்பு தின உறுதிமொழி எடுத்துக்கொள்ள கோருதல் - தொடர்பாக...

தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழி - 30.1.2019 அன்று காலை 11.00 மணிக்கு தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக் கொள்ளுதல் மற்றும் இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்துதல் - தொடர்பாக...

EMIS இணையதளத்தில் பள்ளி விவரங்கள்,ஆசிரியர் விவரங்கள்,ஆசிரியரல்லாத பணியாளர் விவரங்கள் மற்றும் மாணவர் விவரங்களை 10.01.2019 அன்றுக்குள் முழுமையாக முடித்தல்-தொடர்பாக...

National Leprosy Eradication Programe - Sparsh Leprosy Elimination Campaign 2019-on 30-01-2019 ~Taking Pledgeon Leprosy-reg...

திங்கள், 28 ஜனவரி, 2019

ஜாக்டோ - ஜியோ தலைவர்களை விடுதலை செய்து உடனடி பேச்சுவார்த்தைக்கு அழைத்திடுக~இரா.முத்தரசன்...

ஜாக்டோ-ஜியோ பேரமைப்பின் சார்பில் 22.01.19 முதல் வேலை நிறுத்தம் மற்றும் மறியல் மிகுந்த எழுச்சியுடன், நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிகள் 100 சதவிகிதம் மூடப்பட்டுள்ளன. அரசு அலுவலகங்கள் இயங்கவில்லை.

தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்து மாணவர்களுக்கு பாடம் நடத்திட அரசு முயற்சி செய்வது பிரச்சனைகளுக்கு தீர்வு காண உதவாது. எனவே, உடனடியாக போராட்டக்குழு தலைவர்களை, முதல்வர் அழைத்துப் பேசி விரைந்து தீர்வு காண்பது ஒன்றே, ஆசிரியர்கள் பள்ளிக்கு திரும்பி அரசு செய்முறைத் தேர்வுகளை நடத்திட உதவியாக அமையும்.

இரவு, மாவட்ட, மாநில போராட்டக்குழு தலைவர்களையும், ஏராளமான முன்னணி ஆசிரியர்களையும், கைது செய்து சிறையில் அடைத்திருப்பது, போராட்டத்தை தீவிரப் படுத்தியுள்ளது. அதுவும், பள்ளிகளில் குடியரசு தின விழாவை மாணவர்களும், ஆசிரியர்களும் கொண்டாடுவதை சீர்குலைக்கும் அளவுக்கு விழாவின் முதல் நாள் இரவு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை கண்டிப்பதோடு, அரசு உடனடியாக ஜேக்டோ-ஜியோ போராட்டக் குழு தலைவர்களை விடுதலை செய்து, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.  

(இரா.முத்தரசன்)

மாநிலச் செயலாளர்.

ஜாட்டோ ஜியோ தொடர்பான வழக்கு இன்று (28-1-19) மதியம் 2.15 மணிக்கு மதுரை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது...

அங்கன்வாடி மையத்திற்கு ஆசிரியர்களை மாற்ற இடைக்கால தடை~தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் தொடர்ந்த வழக்கின் இடைக்கால தடைக்கான ஆணை....

ஞாயிறு, 27 ஜனவரி, 2019

பழைய ஓய்வூதியத்தை தருவதாகக் கூறினால் உடனே பணிக்கு திரும்பத் தயார் ~ ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மாயவன் தெரிவித்துள்ளார்…

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையிலும் அது குறித்து தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.எனவே இதை கண்டித்தும் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் ஜனவரி 22-ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தது.

ஜனவரி 22-ஆம் தேதி முதல் போராட்டம் நடைபெற்றது.தொடர்ந்து 4 நாட்களாக நடைபெற்றது.

ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் மாயவன் கூறுகையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை கைது செய்வது தவறான முன்னுதாரணம்.28-ம் தேதி அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும். உயர்நீதிமன்றம் செல்லவுள்ளோம் என்றும் தெரிவித்தார்.