வியாழன், 14 பிப்ரவரி, 2019

FY:2018 - 2019 வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை...

📘மாத சம்பளத்துடன் நிலுவை ஊதியம் பெற்று இருப்பின் அதையும் காண்பிக்க வேண்டும். [DA Arrear -2, Bonus, surrender, pay fix arrear if any]

📘நிலையான கழிவு (Standard deduction) ரு.40,000/- ஐ மொத்த வருமானத்தில் கழித்துக் கொள்ளலாம்.

📘housing loan பிடித்தம் செய்பவர்கள் HRA கழிக்கக் கூடாது.

📘மாற்றுத்திறன் ஆசிரியர்கள் தொழில்வரி செலுத்தத் தேவையில்லை. மேலும் சம்பளத்தில் பெறக்கூடிய  போக்குவரத்து பயணப்படியை Entertainment Allowance ல் கழித்துக் கொள்ளலாம்.

📘housing loan - வட்டி அதிகபட்சமாக Rs.2,00,000/- வரை கழித்துக் கொள்ளலாம். 

📘housing loan - அசல் தொகையை  80c ல் கழித்துக் கொள்ளலாம்.

📘housing loan - அசல் மற்றும் வட்டி கழிப்பவர்கள் 12c படிவம் வைக்க வேண்டும்.

📘CPS திட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் 80c ல் சேமிப்பு 1,50,000 க்கு மேல் இருந்தால், செலுத்திய CPS  தொகையில்  அதிகபட்சமாக ரூ.50,000/- வரை 80CCD(1B) ல் கழித்துக் கொள்ளலாம்.

📘School fees - குழந்தைகளின் *tuition fee மட்டும் கழிக்க வேண்டும்*. Other fees ஏதும் கழிக்கக் கூடாது. (அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மட்டும்)

📘LIC & PLI : பிரீமியம் தொகை மட்டும் கழிக்க வேண்டும். Late fee கழிக்கக் கூடாது. (LIC Statement பெற்று,  படிவத்துடன் இணைக்கவும்).

📘மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் NHIS தொகையை 80D ல் கழித்துக் கொள்ளலாம்.

📘கல்விக் கடனுக்காக  இந்த நிதியாண்டில் (2018-2019) செலுத்திய வட்டியை முழுவதும் 80E ல் கழித்துக் கொள்ளலாம்.

 📘நன்கொடை, கஜா புயல் மற்றும் கேரளா புயல் நிவாரண நிதி வழங்கியிருந்தால், அத்தொகையை 80G ல் கழித்துக் கொள்ளலாம்.

 
📘வரி விபரம்....
2,50,000 வரை - இல்லை
2,50,001 - 5,00,000 : 5%
5,00,001 - 10,00,000 : 20%

📘வருமான வரியில் ஆரோக்கியம் மற்றும் கல்வி வரி 4% பிடித்தம் செய்ய வேண்டும்.

📘Taxable income ரூ.3.5 இலட்சத்துக்கு குறைவாக இருந்தால் மட்டும், மொத்த வரியில் ரூ.2500/-  ஐ 87A ல் கழித்துக் கொள்ளலாம்.

📘Taxable Income மட்டும் அருகாமையில் உள்ள ரூ.10 க்கு முழுமையாக்க வேண்டும். வரியில் ரூ.10 க்கு முழுமையாக்க வேண்டாம்.

பழைய வீடுகளை விற்று புது வீடு வாங்கினாலும் வரிச்சலுகை பெறலாம்~ வருமான வரித்துறை தீர்ப்பாயம் உத்தரவு…

புதன், 13 பிப்ரவரி, 2019

*🌷தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களை மீள பணியமர்த்துவது குறித்து மறுஆய்வு செய்து நடவடிக்கை கோருதல் சார்பாக தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்


2019 ஆண்டு விழா கொண்டாட பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு மற்றும் இயக்குநர் நெறிமுறைகள்



பள்ளிக் கல்வித்துறை- வேலை நிறுத்தம்-ஜேக்டோ ஜியோ அமைப்பினால் 22.01.2O19 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்தப்பட்டமை-தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை மீளப் பணி அமர்த்துவது குறித்து மறு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கோருதல் சார்பாக...

🌷தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களை மீள பணியமர்த்துவது குறித்து மறுஆய்வு செய்து நடவடிக்கை கோருதல் சார்பாக பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்


ஆசிரியர்மன்றம் காப்பீர்!ஆசிரியர்நிலை மேம்பாடு காண்பீர்!!

அன்பானவர்களே!வணக்கம்.

தமிழ்நாடு
தொடக்கப்பள்ளி ஆசிரியர்
மன்றத்தின் நாமக்கல் மாவட்டச்செயலாளரின்  கூட்டமைப்பு பங்களிப்பு
,பங்கேற்பு குறித்து  நாமக்கல் மாவட்டத்தில்  சமீன்தார் மனப்பாங்கு கொண்ட சிலர் தேவையற்ற விமர்சனங்களை காழ்ப்புணர்வோடு  முன்வைத்து வருகின்றனர்.
உள் நோக்கமுடன் விசக்கருத்துகளை பரப்பிவருகின்றனர். அவதூறுகளை அள்ளி விதைத்து அமோகமாக அறுவடைச்செய்துக்கொள்ள ஆசைப்படுகின்றனர்.
கூட்டமைப்புப் போராட்டத்தில் பங்கேற்றோருக்கு ஏதாவது பயனும்,பலனும் பெற்றுத்தர வாய்ப்புண்டா?வழியுண்டா?என்று அதற்கான தளத்தில்  திடமான மனநிலையில் நின்று சேவையாற்றி வரும், பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் ,ஆதரவு தந்து பாதிப்பைப் களைய என்ன வழியுண்டு?என்று இயக்க ரீதியாக நடவடிக்கைகள் மேற்கொண்டுவரும்  ஆசிரியர்மன்றத்தின் நாமக்கல் மாவட்டச்செயலாளரை முடக்கிப்போடும் வகையில் ,
கல்வித்துறை அதிகாரிகளோடு கள்ளக்கூட்டு வைத்துக்கொண்டும்,
ஆசிரியர்களிடம் தவறான தகவல்களை தந்துக்கொண்டும் வாய்சவடால் அடித்துக்கொண்டு காத்திருக்கின்றனர்.
தங்களின் சொந்த ஆதாயத்திற்கு,
தங்களின் சொந்த சங்கத்தின் ஆதாயத்திற்காக போராட்டக்காலத்தில் திறம்பட செயலாற்றிய ஆசிரியர்மன்ற மாவட்டச்செயலாளரை சிறுமைப்படுத்திட  அலைபவைகள் பசுந்தோல் போர்த்திய வண்ணமும்,
எண்ணமும் சிதைந்து உருமாறிய குள்ளநரிகள் ஆகும். 
இவைகள் 
 ஆவலாய்,
ஆசையாய் நப்பாசையோடு 
வலம் வருகிறது. இவைகளுக்கு ...ஆம், இவைகளுக்கு எக்காரணம் கொண்டு இடமளித்து விடாதீர்! அடையாளம்
கண்டு தோலுரித்துக்காட்டுவீர்!
இவைகளை அம்பலப்படுத்துங்கள்;
இவைகளின் நச்சுக்கருத்துகளை
புறந்தள்ளுங்கள்;
கணக்காயர் நிலை மேம்பாடு பெற்றிட 
ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர்.
பாவலர்.திரு.க.மீ.,
அவர்களின்
 வழிகாட்டுதலில்  தொடர்ந்து தொண்டாற்றுங்கள்; 
முன்னேற்றம்  காணுங்கள்.

*வாய்மையேவெல்லும்!

*நாம்வெல்வோம்!

*நாளை நமதே!
          நன்றி.
              -முருகசெல்வராசன்

தேசிய பசுமைப்படை - நாமக்கல்/ திருச்செங்கோடு கல்வி மாவட்டங்கள் உலக ஈர நில நாள் (பிப்ரவரி 2) தொடர்பான ஒருநாள் (13.02.2019) பயிற்சி முகாம்-தகவல்- சார்பு....