புதன், 24 ஏப்ரல், 2019

அரசுத் தேர்வுகள் இயக்ககம் - மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பொதுத் தேர்வுகள், மார்ச் 2019 - பள்ளி மாணாக்கர் பெயர்ப்பட்டியல் - திருத்தங்கள் மேற்கொள்ள கடைசி வாய்ப்பு வழங்குதல் - சார்பு...



நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரே! இடைநிலை சாதாரணநிலை ஆசிரியர்களுக்கு நீதி வழங்கிடுக! சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்திடுக! ஒன்றியத்திற்கு, ஒன்றியத்திற்கு வேறுபடும், மாறுபடும் அன்றாட அலுவலக நிர்வாகநடைமுறைச் செயல்பாடுகளை முறைப்படுத்திடுக! ~ஆசிரியர் மன்றம் கோருகிறது.

செவ்வாய், 23 ஏப்ரல், 2019

நாமக்கல் முதன்மை கல்வி அலுவலர் இடைநிலை ஆசிரியர்களுக்கு நீதி வழங்க ஆசிரியர் மன்றம் கோரிக்கை மனு


நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரே! இடைநிலை சாதாரண நிலை ஆசிரியர்களை அலைக்கழிக்கும் எருமப்பட்டி வட்டாரக் கல்வி அலுவலரின் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்க! ~ஆசிரியர் மன்றம் வேண்டுகிறது.

10ம் வகுப்பு, மேனிலை வகுப்புகளுக்கு சிறப்பு துணைத் தேர்வு ~ அட்டவணை வெளியீடு…

கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பதவி மே 4ம் தேதிக்குள் சான்றிதழ் பதிவேற்றம்~ TNPSC அறிவிப்பு…

EMIS இணைய தளத்தில் மாணவர்களுக்கு அடுத்த வகுப்பிற்கு PROMOTE வழங்கும் விளக்கம்...

EMIS இணைய தளத்தில் மாணவர்களுக்கு PROMOTE வழங்கும் போது தொடக்கப்பள்ளிகள் 5 ஆம் வகுப்பில் இருந்தும் , நடுநிலைப்பள்ளிகள் 8 ஆம் வகுப்பில் இருந்தும் உயர்நிலைப்பள்ளிகள் 10ம் வகுப்பிலிருந்தும் மேல்நிலைப்பள்ளிகள் 12ஆம் வகுப்பிலிருந்தும்
PROMOTE வழங்க ஆரம்பிக்கவும்

(முதல் வகுப்பில் இருந்து துவங்கினால் முதல் வகுப்பில் promote செய்யப்பட்ட மாணவர்கள் இரண்டாம் வகுப்பு மாணவர்கள் பட்டியலில் கலந்து விடுகிறார்கள்)

துவக்கப்பள்ளிகள் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் ,நடுநிலைப்பள்ளிகள் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், உயர்நிலைப்பள்ளிகள் 10ஆம் வகுப்பு  மாணவர்களுக்கும்,மேல்நிலைப்பள்ளிகள் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் move to common pool தேர்வை தெரிவு செய்யவும்.

மாணவர்களை அடுத்த வகுப்பிற்கு PROMOTE செய்யும் முன்பாக கவனிக்க வேண்டியவை:

1.தற்போது படிக்கும் வகுப்புகளின் (2018-2019)பிரிவுகள் (sections) எண்ணிக்கையும் PROMOTE செய்யப்படும் வகுப்புகளின் (2019-2020)பிரிவுகள் எண்ணிக்கையும் சமமாக இருக்க வேண்டும்.

 2.தற்போது படிக்கும் வகுப்புகளின் (2018-2019)பிரிவுகள் (sections) எண்ணிக்கை PROMOTE செய்யப்படும் வகுப்புகளின் (2019-2020)பிரிவுகள் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தால் class &sections பகுதிக்கு சென்று add class &section மூலம் புதிய பிரிவுகளை சேர்க்கவும்.

3.தற்போது படிக்கும் வகுப்புகளின் (2018-2019)பிரிவுகள் (sections) எண்ணிக்கை PROMOTE செய்யப்படும் வகுப்புகளின் (2019-2020)பிரிவுகள் எண்ணிக்கையை விட குறைவாக இருந்தால் class &sections பகுதிக்கு சென்று மாணவர்கள் எண்ணிக்கை 0 உள்ள பிரிவுகளை Delete செய்யவும்.

Click here for video...

பூமியின் அளவில் புதிய கிரகம் கண்டுபிடிப்பு...

ஜூன் 20ல் இன்ஜினியரிங் கவுன்சலிங் ~ மே 2 முதல் விண்ணப்பிக்கலாம்…

திங்கள், 22 ஏப்ரல், 2019

அனைத்து எமர்ஜென்சிக்கும் ஒரே நம்பர் 112 ~ தமிழகத்தில் அமல்.....

இந்தியாவின் அவசர உதவி எண் 112 சேவையில் தமிழகம், ஆந்திரா, கேரளா உள்பட மொத்தம் 20 மாநிலங்கள் இணைந்துள்ளன. இது, நாடு முழுவதும் ஒருங்கிணைக்கப்பட்ட சேவையாக செயல்பட்டு வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் 112 என்ற அவசர உதவி எண்ணை மத்திய உள்துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியது. இதில், தனிநபர் ஒருவருக்கு அவசர சேவை தேவைப்படும்போது 112 என்ற எண்ணை அழைக்கலாம். 

இதன் மூலம், போலீசுக்கு 100, தீயணைப்புக்கு 101 மற்றும் பெண்கள் பாதுகாப்புக்கு 1090 ஆகிய சேவைகள் வழங்கப்படுகின்றன.

மத்திய அரசின் நிர்பயா திட்டத்தின் கீழ் இந்த சேவை செயல்படுத்தப்படுகிறது.

அதேபோல் சேவைக்காக தொடங்கப்பட்ட இந்த எண்ணை வேடிக்கைக்காக யாரும் பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.