ஞாயிறு, 13 அக்டோபர், 2019

*🌷அக்டோபர் 13, வரலாற்றி
ல் இன்று.*

*🌷தியாகி சங்கரலிங்கனார் நினைவு தினம் இன்று.*

 *சங்கரலிங்கனார் இளமையில் நாட்டு விடுதலையில் நாட்டமும், ஈடுபாடும் கொண்டவராக விளங்கினார்.*

 *கப்பலோட்டிய தமிழன் வ.உ.சியின் சுதந்திரப் போராட்ட உரையினைக் கேட்டு விடுதலை உணர்வு பெற்றார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் 1908ஆம் ஆண்டு முதல் தன்னை இணைத்துக் கொண்டார்.*

                *விருதுநகரில் ‘பங்கஜ விலாச வித்தயாபிவர்த்திச் சங்கம்’ என்னும் அமைப்பை 1914 ஆம் ஆண்டு ஏற்படுத்தி, பெண் கல்வி மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு சுவாமி திருவாலவாயர் செயல்பட்டார். சங்கரலிங்கனார் அச்சங்கத்தின் செயலாளராகத் தொண்டாற்றினார்.*

                *சங்கரலிங்கனார் செந்தியம்மாள் என்பவரை 1915 ஆம் ஆண்டு வாழ்க்கைத் துணைவியாக ஏற்றார். தன் முதல் மகளுக்கு பங்கசம் என்று பெயர் சூட்டினார்.*

                *சங்கரலிங்கனார் ‘மாதர் கடமை’ என்னும் நூலை எழுதி 1920 ஆம் ஆண்டு வெளியிட்டார். நூல் வெளியீட்டைத் தொடர்ந்து சங்கரலிங்னாருக்கு மூதறிஞர் இராஜாஜியின் தொடர்பும் நட்பும் ஏற்பட்டது.*

                *அதே ஆண்டு திருநெல்வேலியில் நடைபெற்ற சென்னை மாகாண அரசியல் மாநாட்டில் கலந்து கொண்டார். அம்மாநாட்டில் இராஜாஜியை சந்தித்தது உரையாடினார்.*

 *அவரும் அவரது குடும்பத்தினரும் கதரே உடுத்துவதென*
*1922ஆம் ஆண்டு முதல் முடிவு செய்தனர். கதர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு ‘விருதுநகர் கதர் வஸ்திராலயம்’ என்னும் கதர்க் கடையைத் திறந்தார். கதர் விற்பனையை அவர் அதிகமாகச் செய்ததைப் பாராட்டி 26.04.1926இல் சுதேசமித்திரன் இதழ் ஒரு பாராட்டுச் செய்தி வெளியிட்டது. அப்போது சென்னை மாகாணத்தின் கதர் வாரியத் தலைவராக தந்தை பெரியாரும், செயலாளராக எஸ்.இராமநாதனும் தொண்டாற்றினர்! விருதுநகருக்கு தந்தை பெரியாரை 1924 ஆம் ஆண்டு அழைத்து, த.இரத்தினசாமி நாடார் நினைவு வாசக சாலை சார்பாக பொதுக் கூட்டம் நடத்தினார்.*

      *காந்தியடிகளை 16.02.1925 பம்பாயில் சந்தித்தார். அன்று முதல் நாள்தோறும் நூல் நூற்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். ‘மகாத்மா காந்தி கதர் வஸ்திராலயா’ என்னும் கதர்க்கடையில் பணியாற்றினார். 1927 ஆம் ஆண்டு காந்தியடிகள் விருதுநகர் வருகை புரிந்த போது சிறப்பான ஏற்பாடுகளை சங்கரலிங்கனார் செய்தார். காந்திஜி தங்கிய கிராமத்திற்கு நகராட்சியின் ஒப்புதல் பெற்று ‘காந்தி தங்கல்’ என்று பெயர் சூட்டினார். காந்திஜி உப்புச் சத்தியாகிரகத்துக்காக 1930 ஆம் ஆண்டு தண்டியாத்திரை தொடங்கியபோது சங்கரலிங்கனார் மூன்று நாட்கள் காந்தியடிகளுடன் பயணம் மேற்கொண்டார்.*

   *காந்தியடிகளின் தலைமையில் 1930-31 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டக் காலத்தில், சங்கரலிங்கனார் சென்னை, திருச்செங்கோடு, ஈரோடு, காரைக்குடி ஆகிய நகரங்களுக்குச் சென்று தலைவர்களை சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு திரட்டினார். சங்கரலிங்கனார் கரூர், திருச்சி முகாம்களிலிருந்து சத்தியாக்கிரக இயக்கத்தை நடத்தினார்.*

       *திருச்சி சத்தியாக்கிரகப் போராட்ட வழக்கில் ஆறு மாத‌ங்கள் கடுங்காவல் தண்டனையும், கரூர் வழக்கில் ஆறு மாதங்கள் கடுங்காவல் தண்டனையும், ரூ.50 அபராதமும் விதிக்கப்பட்டது. திருச்சி மத்திய சிறைச்சாலையில் தண்டனையை அனுபவித்தார்.*

   *அவருக்குச் சொந்தமான இரண்டு வீடுகளையும், அவர் சேமித்து வைத்திருந்த ரூபாய் நான்காயிரத்தையும் விருதுநகர் சத்திரிய மகளிர் உயர்நிலைப்பள்ளிக்கு 1952 ஆம் ஆண்டு நன்கொடையாகக் கொடுத்தார். அந்தத் தொகையிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையைக் கொண்டு, பள்ளியில் பயிலும் ஏழைக் குழந்தைகளுக்கு மதிய உணவாக உப்பில்லாக் கஞ்சி ஊற்ற வேண்டும் என்ற ஒரு திட்டத்தை ஏற்படுத்தினார். பெருந்தலைவர் காமராசர் பின்னர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டத்திற்கு இது முன்னோடியானதாகும்!*
 *தியாகி சங்கரலிங்கனார் பழம்பெரும் காங்கிரஸ் தியாகி; நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். நம் தாய்த் தமிழகத்துக்கு 'மதராஸ்' என்னும் பெயர் இருத்தல் கூடாது; ‘தமிழ்நாடு’ என்று பெயர் வைக்க வேண்டும் என உளமார விரும்பினார். தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கையை முன்னிட்டு 27.07.1956இல் விருதுநகர் தேசபந்து திடலில் “உயிர் பெரிதன்று – மானமே பெரிது” என்ற இலட்சியப் பிடிப்புடன் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து உண்ணா நோன்பை மேற்கொண்டார். 76 நாட்கள் உண்ணாவிரதமிருந்த அவர் 1956 அக்டோபர் 13இல் காலமானார்.*

*12 அம்சக் கோரிக்கைகள்:*

*1. மொழிவழி மாநிலம் அமைத்தல் வேண்டும்*

*2. சென்னை இராஜ்ஜியம் என்பதை மாற்றி ‘தமிழ்நாடு’ எனப் பெயரிடுதல் வேண்டும்.*

*3. இரயிலில் ஒரே வகுப்பில் அனைவரும் பயணம் செய்தல் வேண்டும்.*

*4. வெளிநாட்டு விருந்தினர்களுக்கு நடனம் முதலான ஆடம்பரங்களை விலக்கி, சைவ உணவு அளித்தல் வேண்டும்.*

*5. அரசுப் பணியி

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் , சட்ட மேலவை மேனாள் உறுப்பினர் பாவலர் திரு க. மீனாட்சி சுந்தரம் அவர்களின் அறிக்கை


3,4,5 ம் வகுப்புகள் மாணவர்களுக்கு விளையாட்டுகள் போட்டி நடத்துதல் சார்ந்து இயக்குநர் செயல்முறை


அக்டோபர் 15 கை கழுவும் தினம் (Global Hand Washing Day) கொண்டாட அறிவுறுத்தல்- collector


Election format form



சனி, 12 அக்டோபர், 2019

நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு-ஊதியம் நிர்ணயம் செய்தல் தெளிவுரைதமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறை நாள் 11.10.2019




NISHTHA - introduction guide

சாலச்சித்தி school external evaluation dashboard

*அக்டோபர் 12,-வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்.*

*🌷அக்டோபர் 12

, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்.*
🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏

----------------------------------------------
*1.தமிழ்மொழியை செம்மொழி என்று இந்திய அரசு  அறிவித்த தினம் (2004)*

*2.*இந்தியாவில் தேசிய மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்ட தினம்.*

--------------------------------------------

 *🌷தமிழ் மொழியை  செம்மொழி என்று இந்திய அரசு அறிவித்த தினம் இன்று (2004).*

*ஒரு மொழி .. செம்மொழியாவதற்கு:*

*1.1500 முதல் 2000 ஆண்டுகள் வரை நூல்கள்* *பதிவுபெற்ற வரலாறு.*
*2. அம்மொழியைப் பயன்படுத்தும் பல தலைமுறையினரின் அரிய* *பண்பாட்டுப் பாரம்பரியம் உடையதாகக் கருதப்படும் இலக்கிய நூல்கள்.*
*3. அம்மொழிக்கே உரியதாகவும் மற்ற மொழி குடும்பத்தினரிடமிருந்து கடன்பெறாததுமான இலக்கியப் பாரம்பரியம் கொண்ட*

*இந்த 3 தகுதிகளை உடைய மொழிகளையே செம்மொழி என்கின்றனர்.*

*மேலும்,  செம்மொழியாகக் கூறப்படுவதற்கு தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.*

*1. தொன்மை*
*2. தனித்தன்மை*
*3.பொதுமைப் பண்பு,*
*4.நடுவு நிலைமை,*
*5.தாய்மைத் தன்மை,*
*6.மொழிக்கோட்பாடு,*
*7.இலக்கிய வளம்,*
*8.உயர் சிந்தனை,*
*9.பண்பாடு, கலை,*
*10.பட்டறிவு*
*11.வெளிப்பாடு*
*ஆகிய பதினோரு தகுதிகளை ஒரு மொழி பெற்றிருந்தால்தான், அது செம்மொழியாகும்.*

*இந்த பதினோரு தகுதிகளை மட்டுமின்றி, இந்த தகுதிகளுக்கெல்லாம் மேலான மேன்மையான தகுதிகளைப் பெற்ற மொழிதான் தமிழ்மொழி என்பதை, தமிழகத்திலுள்ள தமிழறிஞர்கள் மட்டுமல்ல, தமிழைக் கற்றுத் தேர்ந்த உலக அறிஞர்கள் எல்லாம், ஒருமனதாக ஒப்புக்கொண்டுள்ளார்கள்.*

*தமிழ்,செம்மொழியே என*
 *முதன் முதலில் குரல் கொடுத்த தமிழறிஞர் வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரி எனும் பரிதிமாற்கலைஞர்.*

*தமிழ் செம்மொழி என்று முதன்முதலில் கூறிய வெளிநாட்டவர், அறிஞர் ராபர்ட் கால்டுவெல்.*

*அயர்லாந்து நாட்டில் "ஷெப்பர்ட்ஸ் காலனி' என்ற இடத்தில் வாழ்ந்த இவர், அங்கிருந்து குடிபெயர்ந்து, தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தில் இடையான்குடி என்ற ஊரில், தனது இறுதிக் காலம் வரையில் வாழ்ந்தவர்.*

*தமிழ் செம்மொழி என்னும் அங்கீகாரத்தைப் பெறவேண்டுமென்று, சென்னை சைவசித்தாந்த மகாசமாஜம், கரந்தைத் தமிழ்ச் சங்கம் போன்ற அமைப்புகளும், சென்னை பல்கலை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை உள்ளிட்ட தமிழகத்திலுள்ள பல்கலை கழகங்களும் குரல் கொடுத்தன.*

*மேலும்,  மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர், முனைவர் ச. அகத்தியலிங்கம், வா.செ. குழந்தைசாமி, ஜான்சாமுவேல், மணவை முஸ்தபா, அவ்வை நடராஜன், பொற்கோ போன்ற தமிழறிஞர்களும், டாக்டர் சுனித்குமார்சட்டர்ஜி, கமில் சுவலபில், ஜார்ஜ் எல். ஹார்ட் போன்ற வெளிமாநில, வெளிநாட்டு அறிஞர்களும் குரல் கொடுத்தனர்.*

*பல்லாண்டு காலம் போராட்டத்திற்கு பிறகு தமிழ் மொழியை  செம்மொழி என்று பிரகடனப்படுத்த வேண்டுமென்ற தி.மு.க.,வின் கோரிக்கை ஏற்கப்பட்டது. கடந்த 2004, அக்டோபர் 12இல் தமிழ் செம்மொழி என அறிவிப்பு மத்திய அரசால் வெளியிடப்பட்டது.*
-----------------------------------------------
*🌹இந்தியாவில் தேசிய மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்ட தினம் இன்று.*

*🇮🇳இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம் ஒரு தன்னாட்சி பெற்ற இந்திய அரசாங்கத்தின் ஆணையமாகும். அக்டோபர் 12, 1993 இல் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 1993 , (டி பி எச் ஆர் ஏ) இன் கீழ் இவ்வாணையம் நிலைநாட்டப்பெற்றது. பாரிசில் நடைபெற்ற* *ஐக்கிய நாடுகள் அவை சார்பில் மனித உரிமை பாதுகாப்பு ஆணைய கூட்டத்தில் எடுக்கப்பெற்ற தீர்மானத்தின் அடிப்படையில் இவ்வாணையம் இந்தியாவில் உருவாக்கப்பட்டது,*

*இங்கு பெற அல்லது வரப்படும் ஒவ்வொரு புகாரும் அதன் தன்மைக் குறித்து ஆய்வு* *செய்யப்பட்டு அதன் படி வகைப்படுத்தப் படுகின்றது. அவற்றை* *ஒழுங்குபடுத்தியபின் அவற்றை தன்மைக்கேற்ப வழக்குப் பதிவு செய்து* *அதற்கு பதிவெண் வழங்கப்படுகின்றது.*
*புகார்ரைப்பதிவு செய்த நாளிலிருந்து 7 நாட்களுக்கு மிகாமல் ஆணையத்தின் முன் வைக்கவேண்டும்.* *அவசரத் தேவையாக இருப்பின் அவற்றின் அவசரத்தன்மைக் கருதி 24 மணி நேரத்திற்குள்*
*தேசிய அல்லது மாநில மனித உரிமை ஆணையத்தின் முன் வைக்கப்படவேண்டும் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது.*

*டி பி எச் ஆர் ஏ பிரிவு 3 மற்றும் 4 ன் கீழ் வரையறுத்துள்ளதின்படி இவ்வாணையத்தின் நியமனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேசிய மனித உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் நியமனங்கள் அதன் சிறப்புக்குழுப் பரிந்துறையின்படி இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றனர்.*
-----------------------------------------------

வெள்ளி, 11 அக்டோபர், 2019

*அக்டோபர்-11 வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்*

*🌷அக்டோபர் 11, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்.*
🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏

----------------------------------------------
*1.சர்வதேச பெண்குழந்தைகள்   தினம்.*

*2.உலக முட்டை தினம்.*

--------------------------------------------

*👩‍💼சர்வதேச பெண் குழந்தைகள் தினம் இன்று.*

*உலகில் உள்ள அனைத்து பெண் குழந்தைகளுக்கும் கட்டாயம் கல்வி வழங்க, முக்கியத்துவம் அளிக்கும் விதமாக இந்த தினத்தை கொண்டாட ஐ.நா.சபை வலியுறுத்தியுள்ளது.*
----------------------------------------------

*🥚🍛உலக முட்டை:தினம் இன்று.*

*சர்வதேச முட்டை ஆணையத்தின் அறிவிப்புப்படி, ஆண்டுதோறும் அக்டோபர் 2ஆவது வெள்ளிக்கிழமை உலக முட்டை தினமாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது.*

*ஒவ்வொருவரும் தினம் ஒரு முட்டை சாப்பிடுவது அவசியம் . எல்லோருக்கும் மிகவும் நல்லது . குறைந்த செலவில் நிறைந்த பயனை தருகிறது முட்டை . கூடுதலான முட்டை இருக்கிறது என்று நான்கு , ஐந்து என்று சாப்பிடாதீர்கள் . எதுவும் அளவோடு சாப்பிட்டால் பயன் உண்டு . ஒரு நாளைக்கு ஒன்று என்று சாப்பிடுங்கள்.*

*முட்டையை .அவித்தோ , பொரித்தோ சாப்பிடுங்கள் . அல்லது முட்டை குழம்பு வைத்து சாப்பிடுங்கள் . அதுவும் நன்றாக இருக்கும் . முட்டையை விரும்பாதவர்கள் இல்லை . ஒரு சிலர் தான் விரும்ப மாட்டார்கள்.*

*கிராமங்களில் எல்லாம் எல்லோர் வீட்டிலும் கோழி வளர்த்து முட்டை விற்கிறார்கள் . முட்டையை நாம் எந்த காலங்களிலும் கடைகளில் வாங்க முடியும் . அதற்க்கு தட்டுப்பாடு இருக்காது . ஏனெனில் கூடுதலானவர்கள் முட்டையை அதிகம் சாப்பிடுவதனால் எந்த கடைகளிலும் முட்டை இல்லை என்று சொல்ல மாட்டார்கள்.*

*ஒரு சாதாரண கோழி முட்டையில் 80 கலோரிச் சத்து இருக்கிறது. மு‌ட்டையை எவ்வாறு சமை‌த்து சா‌ப்‌பி‌ட்டாலு‌ம் இந்டத கலோ‌ரி‌ச்ச‌த்துக‌ள் குறைவ‌தி‌ல்லை. இதில் 60 கலோரி முட்டையின் மஞ்சள் கருவில் இருக்கிறது. 20 கலோரிதான் வெள்ளைக்கருவில் இருக்கிறது. சிலருக்கு முட்டையின் வெள்ளைக்கரு பிடிக்கும் . சிலருக்கு மஞ்சள் கரு பிடிக்கும் . உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதை சாப்பிடுங்கள்.*

*உடல் பருமன் அதிகமாக கொண்டவர்கள் மற்றும் முதியவர்கள் முட்டையின் வெள்ளைக்கருவினை மட்டுமே சாப்பிடுவது நல்லது.*
*தினமும் 300 மில்லிகிராம் கொழுப்புச்சத்து ஒருவருக்கு தேவைப்படுகிறது. ஒரு முட்டையின் மஞ்சள் கருவில் மட்டுமே 275 மில்லிகிராம் கொழுப்பு இருக்கிறது. குழந்தைகளுக்கு முட்டையை அரை அவியலாக அவித்து அத‌ன் வெ‌‌ள்ளை‌க் கருவை ம‌ட்டு‌ம் கொடு‌த்து சா‌ப்‌பிட‌ப் பழ‌க்க வே‌ண்டு‌ம். ‌பி‌ன்ன‌ர் ‌சி‌றிது ‌சி‌றிதாக அவ‌ர்களு‌க்கு ம‌ஞ்ச‌ள் கருவை கொடுக்கலாம்.*

*உண்மையில் முட்டை உண்பது மாரடைப்பு போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது . அதிலுள்ள கொழுப்பு ஆபத்தானது இல்லை . மாமிசம், சீஸ் போன்றவையே தவிர்க்கப் படவேண்டியவை.*

*முட்டை உடம்புக்கு நல்லதல்ல, இதயத்துக்குக் கேடு, குருதி அழுத்தத்தை அதிகரிக்கும் என ஒவ்வொருவர் ஒவ்வொரு கதைகளை சொல்வார்கள்.* *பல்வேறு பயமுறுத்தும் அறிக்கைகளால் முட்டையை உண்ணலாமா வேண்டாமா என குழப்பத்திலேயே இருக்கின்றனர் பெரும்பாலானோர்.*
*அந்த பயத்தை நீக்கி தினம் ஒரு முட்டை உண்ணுங்கள் . பல ஆராய்ச்சியாளர்களும் இதை தான் சொல்கிறார்கள்.*


*“தினம் ஒரு முட்டை” உண்பது குருதி அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் என சமீபத்தில் வெளியாகியிருக்கும் ஆராய்ச்சி முடிவு ஒன்று சொல்கிறது*

*சராசரியாக ஒரு முட்டையின் வெள்ளைக் கருவில் 17 கலோரியும், மஞ்சள் கருவில் 59 கலோரியும் இருப்பதுடன், தைராய்டு ஹார்மோன் சுரப்பதற்கான அயோடினும் அதிகமுள்ளது. மேலும், பல்கள், எலும்புகளுக்குத் தேவையான பாஸ்பரஸ், நோய் எதிர்ப்பு சக்திக்குத் தேவையான துத்தநாகம், கொழுப்பு, புரதச்சத்து உள்ளிட்ட அனைத்து வகை ஊட்டச்சத்துகளும் நிறைந்து காணப்படுகின்றன.*

*இதயத்துக்கு பாதுகாப்பான ஃபோலிக் அமிலம் மற்றும் "பி' குரூப் வைட்டமின்களும், நச்சு முறிவு மருந்துகளும், கொழுப்புச் செறிவில்லாத கொழுப்புகளும் முட்டையில் உள்ளன. இத்தகைய ஊட்டச்சத்துகள் நிறைந்த முட்டையை தினமும் குழந்தைகளுக்கு அளிப்பதன் மூலம் அவர்களின் கற்கும் திறன் அதிகரிப்பதாக அமெரிக்க முட்டைச் சத்துணவு மைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.*

*இத்தகைய மகத்துவம் மிக்க முட்டை உருவாகும் விதம் குறித்து பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சிக்கலானதும் ஆனால், சீரானதுமான அமைப்புடைய முட்டைகள் கருப்பையிலும், முட்டைக் குழாயிலும் உருவாகிறது.*

*கோழிக்கு இடப்புறத்தில் திராட்சை பழக்கொத்துப் போன்று ஒரேயொரு கருப்பையே உள்ளது (சில நாட்டுக் கோழிகளுக்கு மட்டும் இரு கருப்பைகள், முட்டைக் குழாய்கள் உண்டு). இந்த முட்டை உற்பத்தி நடைமுறை இரண்டே முக்கால் மணி நேரத்தில் நடைபெறுகிறது. முட்டையிட்டு ஒரு மணி நேரத்தில் மற்றொரு மஞ்சள் கரு ம