வெள்ளி, 1 மே, 2020

தேர்வுக்கு_அவசரம்_என்ன? பள்ளி_கல்லூரிகளைக்_கடைசியாக யோசிக்கலாம் #தமிழ் இந்து தலையங்கம்

தமிழ் இந்து தலையங்கம்

மே 1, 2020.

#தேர்வுக்கு_அவசரம்_என்ன?

#பள்ளி_கல்லூரிகளைக்_கடைசியாக #யோசிக்கலாம்

ஊரடங்கு முடிந்தவுடன் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுக்கான அட்டவணை வெளியாகும் என்ற பள்ளிக் கல்வித் துறையின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. அன்றாட ஒழுங்கு குலைக்கப்பட்ட இந்நாட்களில், ஒரு பொதுத் தேர்வை நடத்துவதில் அவசரம் ஏன்?

 கரோனா ஊரடங்குக்குப் பிந்தைய மீட்சி நாட்களில் கடைசி வரிசையில் சிந்திக்க வேண்டிய பள்ளி, கல்லூரிகள் இயக்கத்தை முன்கூட்டி நடத்த அரசு முற்படுவதே வினோதமாக இருக்கிறது.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கை மட்டுமே சுமார் ஒரு கோடி. தமிழக மக்கள்தொகையில் ஏறக்குறைய எட்டில் ஒரு பங்கினரான மாணவர்களைக் கல்வி நிலையங்களை நோக்கி நகர்த்தும் எந்த நடவடிக்கையும் ஒட்டுமொத்த இயக்கத்திலும் பெரும் மாற்றத்தை உண்டாக்கிவிடும். ஏனெனில், ஒரே நேரத்தில் சென்றடைய வேண்டிய அவர்களுடைய புறப்பாடு, வீடுகளின் சமையலறைகளிலிருந்து சாலைகள் வரை பரபரப்பை உண்டாக்குவதோடு, நெரிசலையும் உண்டாக்கும். நெரிசல் மிக்க நம்முடைய கல்வி நிலையங்களில் இதுவரையில் அரசு வலியுறுத்திவரும் தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிப்பதும் கடும் சவாலாக இருக்கும், ஒழுங்கை அது குலைக்கும். கரோனாவின் இலக்குக்கு ஆளாவதில் இளம்வயதினர் பின்வரிசையில் இருக்கலாம். ஆனால், அவர்கள் கிருமி கடத்துநர்களாகிவிடும் பெரும் அபாயம் இருப்பதை அரசு புறந்தள்ளக் கூடாது. இத்தகு நிலையில், குறைந்தது ஜூன் 17 வரையில் பள்ளிகள் திறக்கப்படாது என்ற ஒடிஷா அரசின் முடிவு தெளிவானதாகத் தெரிகிறது.

அப்படியென்றால், தேர்வுகளை என்ன செய்வது? பள்ளி இறுதித் தேர்வுதான் முக்கியமானது. அதை ஏற்கெனவே தமிழகம் நடத்தி முடித்துவிட்டது. பதினோராம் வகுப்பைப் பொறுத்தமட்டில் ஒரே ஒரு தேர்வு மிச்சம் இருக்கிறது; அதைப் பன்னிரண்டாம் வகுப்பின் காலாண்டுத் தருணத்தில் சேர்த்துக்கூட நடத்திக்கொள்ளலாம். பத்தாம் வகுப்புத் தேர்வுகளைப் பொறுத்தமட்டில் கடந்த ஆண்டில் 95% மாணவர்களுக்குத் தேர்ச்சி அளித்திருக்கிறது தமிழக அரசு. இந்த வருடம் தேர்வையே ரத்துசெய்துவிட்டு, 100% தேர்ச்சி அளிப்பதில் என்ன பிரச்சினை என்று கேட்கிறார்கள் கல்வியாளர்கள். அரசு விரும்பாவிடில், இன்னும் இரு மாதங்கள் கழித்துக்கூடத் தேர்வை நடத்தட்டும். எப்படியும் அடுத்த இரு மாதங்களில் தேர்வு நடத்துவதை யோசிப்பது தேர்வுக்கான மனநிலையின் முக்கியத்துவத்தைப் புறந்தள்ளுவது; அதை அரசு செய்யக் கூடாது. இப்போதைக்கு இணைய வழிக் கல்வியை அரசு தொடரட்டும். அதற்கு வாய்ப்பற்றோருக்கு அந்த வாய்ப்பை உருவாக்கிடும் திட்டங்களை யோசிக்கட்டும்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேலும் 14 நாட்கள் ஊரடங்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவு. மே-17 ந்தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு‍ Press Release statement








இடம் விட்டு இடம் நகருவதற்கு அனுமதி சீட்டுபெறுதல் சார்ந்தது உள்ளிட்ட பல்வேறுபுதிய வழிகாட்டும் நெறிமுறைகள்வெளியீடு!தமிழ்நாடு தலைமைச் செயலாளர் அனைத்து அரசு செயலாளர் மற் றும் மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கும் கடிதம்









மே விழா! அதை எங்ஙனம் மறக்க முடியும்? -பேரறிஞர் அண்ணா


ஆசிரியர்களுக்கு மே தின வாழ்த்துகள்

மே தினம் - தந்தை பெரியார்


மே தினம், அதாவது பிரதி வருஷத்திய மே மாத முதல் நாள் உலகமெங்கும் உழைப்பவர்-களால் பெருநாளாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டுக் கடைசியில், அமெரிக்க தேசத்தில், தொழிலாளர், கிருஷிகர் (விவசாயி) அடங்கிய மக்கள் 8-மணி நேரத்திற்கு மேல் தொழிற்சாலைகளிலும் வயல்களிலும், நிலங்களிலும் வேலை செய்வது அநீதி என்றும், அதனை வற்புறுத்துவது அதனினும் அநீதி என்றும், 8-மணி நேர உழைப்பே போதுமானதென்றும் ஒரு கிளர்ச்சி புறப்பட்டது. அக்கிளர்ச்சியை முதலாளிகள் அடக்க முயன்றனர். அவ்வடக்கு முறை, மே மாதம் முதல் நாள் கொடூரமாக முடிந்ததன் பயனாக, எளிய தொழிலாளர், விவசாயிகளின் இரத்தம் சிந்திய படியால், அந்நாள் தொழிலாளர்களின் மாபெரும் தியாக ஞாபகார்த்தமாகக் கொண்டு உலக முழுமையும் அத்தினத்தைக் கொண்டாடிக் கொண்டு வருகின்றார்கள்.

தொழிலாளர் உலகில் முதலாளித்திட்டம் ஏற்பட்டது முதல், 8-மணி நேரம் மாத்திரமல்ல, அவர்கள் உழைத்து வந்தது 10-மணி நேரம் 12 மணி நேரம், 16 மணி நேரம் ஊன் உறக்கமின்றி உழைத்து வந்திருக்கின்றார்கள். சுரங்கங்களிலும், குன்றின் மேற்புறங்களிலும், புயல் காற்றிலும், பெரும் வெள்ளத்திலும் உழைத்து வருகின்றார்-கள். தொழிலாளர்களில் முதியோர் மாத்திரமல்ல, சிறுகுழந்தைகளும் தூங்க வேண்டிய இரவிலும் உழைத்து வருகின்றனர். அனுதினமும் வேகா வெய்யிலிலும், குளிரிலும் தீஷண்யத்திலும், வயலிலும், பாலைவனத்திலும் உழைத்து வருகின்றவர் யார்? இவ்வளவு கஷ்டமும் தங்கள் வயிற்றுக்கு மட்டிலும் தானா? மணிக்கு 100 மைல் ஓடும் எக்பிரஸ் வண்டியில் ஆயிரக்கணக்கான பிரயாணிகளுடைய உயிர் ஒரு சிக்னல் மென் அதாவது, அடையாளம் காட்டும் ஒரு கூலியிடமிருக்கின்றது! அவனைப் பன்னிரண்டு மணி நேரம் இரவில் விழித்திருக்க வேண்டுமென்றால் இதனினும் கொடுமை எங்குளது. இவன் 8-மணி நேரம் வேலை செய்வதுதான் உசிதமென்று வாதமிட்டால், அவனை மிஷின்-கன்களைக் கொண்டு கொல்லுவதென்றால், யாரால் பொறுக்க முடியும். இத்தியாதி கொடுமைகளைப் போக்கி, உலகத்தில் தொழிலாளருக்கு நியாயத்தை தாபிக்க நேர்ந்த தினம் இந்நாளாகும்.

சென்னை புளியந்தோப்பில் பன்னீராயிரம் நெசவுத் தொழிலாளர்கள் அய்ந்து மாத காலமாகப் பசியும் பட்டினியாயும் கிடக்க நேரிட்ட காலையில் அவர்களுக்குப் பதிலாக வேலைக்குப் போகும் கருங்காலிகளை நிறுத்த எத்தனித்த காலையில், அமைதிக்கும் ஒழுங்குக்கும் ஏற்பட்டுள்ள அதிகாரிகள், தொழிலாளர் எழுவரைச் சுட்டுக் கொன்றனர்!! இத்தியாகத்தைக் கொண்டாடும் தினமும் மே தினமாகும்.

1905ம் வருஷத்தில் வீணாக ஜப்பானியர் மேல் படையெடுத்த ஜார் சக்கரவர்த்தியின் கொடுமையைத் தடுக்க முயன்ற ரஷியத்-தொழிலாளிகள், பதினாயிரக்கணக்கில் கொல்லப்பட்ட ஞாபக தினமும் இத்தினமாகும்.

பிரான்சு தேசம்

புரட்சிக்குப்பின் பிரான்சு நாட்டில், அநீதியும் கொடுமையும் மிகுந்து வந்தபடியால் பிரான்சு தேச தொழிலாளிகளும், விவசாயிகளும் ஒன்று சேர்ந்து, பாரீஸ் நகரத்தில் ஏகாதிபத்திய ஆட்சியை, தி கம்யூன் என்ற உழைப்பவர்கள் ஆட்சியை தாபித்த காலை, முதலாளிகளுடைய தந்திரத்தால் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான பிரான்சுத் தொழிலாளர்களுடைய ஞாபகத்தைக் குறிக்கும் தினம் இம்மே தினமாகும்.

ஆங்கில நாட்டினும் நிலவரியிலும், நிலங்களை இழந்தாலும் மனம் பொறாத தொழி லாளர்கள் சார்ட்டி என்ற இயக்கத்தைக் கிளப்பியதன் காரணமாக, அக்கூட்டத்தைச் சேர்ந்த அனைவரையும் நாசப்படுத்தியதை ஞாபகப்படுத்தப்படும் தினம் இத்தினமாகும்.

சீனநாட்டில் சன்யாட்சன் என்ற பெரியார் தாபித்த தேசியத்தை அபிவிருத்தி செய்ய ஏற்பட்ட தொழிற்கட்சியை நாசமாக்கிய ஞாபக தினமும் இதுவாகும்.

நேற்று தென்இந்திய ரயில்வேயில் முப்பதினாயிரம் பேர்கள் வேலையிலிருந்து நிறுத்திய காலையில் அவர்களின் தலைவர்கள் நிரபராதிகளாகிய பதினெட்டுப் பேரை, பத்து வருஷம் சிறைவாசமிட்ட ஞாபக தினமும் இத்தினமாகும். இவ்விதமாக உலகம் முழுமையும் அந்த நாடுகளின் தொழிலாளர் இயக்கங்கள் தோன்றிய நாள் முதல் பல்லாயிரக் கணக்கானோர் கஷ்டப்பட்டு, மாண்டு மடிந்த உழைப்போர்களுடைய தியாகத்தை ஞாபகார்த்தமாகக் கொண்டாட இத்தினம் ஏற்பட்டுள்ளது.

உலகில் உயிர் முளைத்த காலம் முதல், கஷ்டமும் தியாகமும் அவ்வுயிர்களுடன் கலந்தேயிருக்கின்றன. இது பிரபஞ்ச வாழ்க்கையிலொன்றாகும். கஷ்டமில்லாமல் தியாகமில்லாமல் ஒன்றும் கை கூடுவதாக இல்லை. உலகத்தின் மேல் நடப்பது, பெரும்பான்மை மக்களுக்கு முள் கம்பளத்தின் மேல் நடப்பதைபோல் ஒத்திருக்கின்றது. முள் கம்பளத்தின் மேல் நடக்க யாருக்குத்தான் மனம் வரும்? ஆனால் அக்கம்பளத்தின் மேல் நடந்தால் தான், சுகப் பேற்றை அடைய முடிகிறது. இதைத்தான் தொழிலாளர் இயக்கத்துக்கு ஆசானாகிய காரல் மார்க்ஸ் என்பார், லோகாயுதத்தின் முரண் என்பார். கஷ்டமில்லாமல் சுகமில்லை. சுகமும் கஷ்டமில்லாமல் கிடைப்பதில்லை. இதுதான் சமதர்மத் தத்துவத்தின் முரண்பாடு. பொது உடைமைக்காரர் யாராகிலும், இந்தப் பிரபஞ்ச முரண்பாட்டை அலட்சியம் செய்ய முடியாது. சோஷலிட் அனைவரும், இந்தப் பிரபஞ்ச முரண்பாட்டை அடிப்படையாக வைத்து, தங்கள் தத்துவத்தைக் கட்டவேண்டும். சுதந்திரம் வேண்டுமானாலும், சகோதர தத்துவம் வேண்டுமானாலும், சரிசம சமத்துவம் வேண்டுமானாலும் தியாகத்தால் தான் அடைய முடியும்.

உடலுக்கு உணவு வேண்டுமானால், அறிவுக்குக் கல்வி வேண்டுமானால், தியாகம் அன்னியில் எதையுமடைய முடியாது! சுகம், துக்கம்; துக்கம், சுகம் வாழ்வில் பிணை கொண்டிருக்கும் படியால், தியாக மூர்த்திகள் செய்து வரும் தியாகம் உலக ஞாபகத்தில் இருந்து கொண்டேயிருக்கும். இவ்வித தியாக மூர்த்திகளின் ஞாபகத்தைக் கொண்டாடும் தினம் இந்த மே மாதம் முதல் தேதியாகும்.

இந்த மே தின ஞாபகம் ஏகாதிபத்திய ஆட்சிக்கல்ல, செல்வத்திற்கும் சம்பளத்திற்கு மல்ல, கொடுங்கோன்மைக்குமல்ல, உலக மக்களனைவரும் உண்டு உடுக்கவும் இருந்து வாழவும், சந்ததி விருத்தி செய்யவும், அந்தச் சந்ததியார் உலக சுக பேற்றைப்பெறவும் செய்யும் தியாகமாகும்.

தற்போது உலகம் பலவித இடுக்கண்களால் கஷ்டப்பட்டு வருகின்றது. இல்லாமையும் வறுமையும், பஞ்சமும், வெள்ளமும் உலகை ஒருபுறம் வருத்திவரக் கொடுங்கோன்மைக் கட்சிகளாலும், முதலாளிகளின் அட்டூழியத்தாலும், வறுமைச் சுமையாலும் உலக நெருக்கடி அதிகரிக்கும் போலும்! உலகம் பிற்போக்கால் ரொம்பவும் கஷ்டப்பட வேண்டிவரும் போதும்! உலக நெருக்கடி குறைந்த பாடில்லை. சேனைத் தளங்கள் உலகில் அதிகரித்து வருகின்றன. மகாயுத்தத்தின் முன்னிருந்த சேனைத்தளங்களைவிட எண் மடங்கு அதிகரிக்கின்றன. இத்தியாதி வியர்த்தங் களால் உலக மக்கள் இனிவரும் மாபெரும் யுத்தத்தில் மடியப் போகின்றனர். இனி-வரும் யுத்தம் உலகில் விளைபொருள் போதாதென்பதற்கல்ல. செய்பொருள் செய்ய முடியவில்லை என்பதற்கல்ல. வல்லரசு-களின் ஆணவத்தாலும் அகம்பாவத்-தாலும் விளையப் போகும் மகா பாதகமென அறிக!!!

சு.ம. வீரர்களே! சமதர்மிகளே! தொழிலாளர்-களே! தொழிலாளிகளின் தோழர்களே! இந்த வருஷத்தில் மே தினத்தை மே மாதம் முதல் தேதியில் தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஜில்லாவிலும் உள்ள நகரங்கள் தோறும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களைத் திரட்டி, வெகு விமரிசையாகக் கொண்டாட வேண்டுகிறேன். தேசம், மதம், ஜாதி என்கின்ற தேசிய உணர்ச்சிகளை மறந்து உலகத் தொழிலாளர் எல்லாம் ஒரே சமுகமாய் ஒன்றுபட்டு எல்லா தேச, மத, ஜாதி மக்களுக்கும் வாழ்க்கையில் சம உரிமையும், சம சந்தர்ப்பமும் கிடைக்கும்படி செய்ய வேண்டும் என்றும், தொழிலாளர் சம தர்ம ராஜ்ஜியம் ஏற்பட வேண்டும் என்னும் ஒரே அபிப்பிராயம் ஏற்படும்படி தொழிலாளர்களிடையில் பிரச்சாரம் செய்யவும்,
வேறு சாதகங்கள் பெறவும், இம்முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

புரட்சி - தலையங்கம் 29.04.1934
மற்றும்
குடிஅரசு - அறிக்கை - 28.04.1935

வியாழன், 30 ஏப்ரல், 2020

சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தி அறிக்கை


மே நாள் சூளுரை : மனிதகுலத்தை அச்சுறுத்தும் கொரானா – தோற்றது முதலாளித்துவம் ! மாற்று சோசலிசமே !

மே நாள் சூளுரை : மனிதகுலத்தை அச்சுறுத்தும் கொரானா – தோற்றது முதலாளித்துவம் ! மாற்று சோசலிசமே !
அன்பார்ந்த உழைக்கும் மக்களே,

கொரானா வைரஸ் தாக்குதலால் இன்று உலகமே உறைந்து கிடக்கிறது. 184 -க்கும் மேற்பட்ட நாடுகளில் ஊரடங்கு. 30 லட்சத்திற்கும் மேற்பட்டோரை வைரஸ் தொற்றியுள்ளது. இறப்பு எண்ணிக்கை இரண்டு லட்சத்தை தாண்டிவிட்டது. பொருளாதர நெருக்கடி கொள்ளைநோய் கொரானாவைவிட பல மடங்கு அச்சுறுத்திக் கொண்டுள்ளது.

நாட்டின் மருத்துவத்துறையில் சுமார் 80% தனியார்மயம். அரசு மருத்துவமனைகளில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை. விரிவான பி.சி.ஆர் பரிசோதனை செய்வதற்கான மையங்கள் இல்லை. மருத்துவப் பணிகளுக்கு போதிய நிதி ஒதுக்கவில்லை. மருத்துவர்கள், தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உடைகள், வசதிகள் இல்லை.

ஊரடங்கில் உள்ள மகக்ளுக்கு உரிய நிவாரணமும் வழங்கவில்லை. இந்திய உணவுக்கிடங்கில் 8 கோடி டன் உணவுப் பொருட்கள் நிரம்பி வழிந்த போதும், மத்திய மாநில அரசுகளோ 20 கிலோ அரிசி, ஒரு கிலோ எண்ணெய், பருப்பு, 1000 ரூபாய் நிவாரணம் என உழைக்கும் மக்களை பிச்சைக்காரர்களைப் போல் நடத்துகின்றன. பெருவாரியான உழைக்கும் மக்கள் நோய் அச்சத்தாலும், உணவின்றியும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு நடைப்பிணமாக வாழ்கிறார்கள்.

கொரானாவை கட்டுப்படுத்துவதை விட ஊரடங்கை பயன்படுத்தி மக்கள் உரிமையை மறுப்பதிலும், தொழிலாளர்களின் உரிமைகளை பறிப்பதிலும்தான் தீவிரம் காட்டி வருகிறது மோடி அரசு. தொழிலாளர்கள் போராடிப் பெற்ற 8 மணி நேர வேலை உரிமையை பறித்து 12 மணி நேரமாகவும், 44 தொழிலாளர்நல சட்டங்களை வெட்டிச்சுருக்கி நான்கு தொகுப்புகளாக மாற்றவும் அவசர சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

வேலையின்மையும், ஏற்றத்தாழ்வும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 70 சதவீத (95 கோடி) மக்களின் சொத்து மதிப்பைவிட நான்கு மடங்கு அதிகமாக ஒரு சதவீத பணக்காரர்களிடம் சொத்து குவிந்துள்ளது என்கிறது சமீபத்தில் வெளிவந்த ஆக்ஸ்ஃபாம் அறிக்கை. வேலையற்றவர்கள், வாங்கும் சக்தியற்றவர்கள்  ஒழிக்கப்படவேண்டும் என்பதுதான் அம்பானி – அதானிகளின் எண்ணம். இப்போது கொள்ளை நோய் கொரானாவும் இவர்களுக்கு துணை சேர்ந்திருக்கிறது. பொருளாதார நெருக்கடி – பட்டினிச்சாவையும் கொரானா கணக்கில் எழுதி விடுவார்கள். தோற்று, திவாலாகிப் போனதுடன் மக்களுக்கு எதிரானதாகவே மாறிப் போயுள்ள இந்த அரசுக் கட்டமைப்பில் மக்களின் எந்தவொரு பிரச்சனையையும் தீர்க்க முடியாது என்பது கொரானாவிலும் நிரூபிக்கப்பட்டு வருகிறது.

நம் நாடு மட்டுமல்ல, அமெரிக்கா போன்ற வல்லரசுகளே கொரானாவை கட்டுப்படுத்த முடியாமல் ஆட்டங்கண்டு போயுள்ளன. அமெரிக்காவில் கொரானா மரணங்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்து விட்டது. இங்கிலாந்து, பிரான்சு, இத்தாலி போன்ற முதலாளித்துவ நாடுகளில் நடக்கும் மரணங்களை கண்டு அந்நாட்டு அரசுகளெல்லாம் அலறுகின்றன. “எங்கள் நாட்டு மக்களை காப்பாற்ற முடியாத கையறு நிலையில் இருக்கிறோம்’’ என்று இத்தாலி பிரதமர் வெளிப்படையாக சொல்லி கண்ணீர் விட்டு அழுது கொண்டே பேட்டி அளிக்கிறார். காரணம், இத்தாலியில் மருத்துவத்துறையில் 85 சதவீதம் தனியார் கையில் உள்ளது. அங்கு மட்டுமல்ல, பிரிட்டன்,  ஸ்பெயின், பிரான்சு, ஜெர்மனி போன்ற நாடுகளிலும் இதுதான் நிலை.

அரசாங்கம் எல்லா விசயங்களிலும் தலையிடக்கூடாது; சந்தையே அனைத்தையும் தீர்மானிக்கும் என்ற புதிய தாராளவாதக் கொள்கையின் தோல்வியை பளிச்சென்று காட்டியுள்ளது கொரானா. பொதுசுகாதாரம், மருத்துவம், பொதுக்கல்வி, பொது விநியோகம் போன்றவைகளை எல்லாம் மக்களுக்கு கொடுப்பது அரசுகளின் வேலை இல்லை. அதை தனியார்கள் பார்த்துக் கொள்ளட்டும் என்ற புதிய தாராளவாதக் கொள்கையின் விளைவால் முதலாளித்துவ நாடுகளில் மக்கள் சேவைகள் அனைத்தும் தனியார் கையில் உள்ளது. இதனால் தான் தொற்றுநோயை கட்டுப்படுத்த முடியாமல் முதலாளித்துவ அரசுகள் தோல்வியடைந்துள்ளன.

கொரானா வைரஸ் தாக்குதல் குறித்து உலக சுகாதார நிறுவனமும் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்த போதும் பல முதலாளித்துவ நாடுகள் அதை அலட்சியம் செய்தன. ஊரடங்கை அறிவித்த பின்பும் பொருளாதார நெருக்கடியைக் காட்டி பெரிய பெரிய வணிக நிறுவனங்கள், கேளிக்கை விடுதிகள், மதுபான கடைகள், பல தொழிற்சாலைகளை இயங்க அனுமதித்தன. இதன் விளைவாக வைரஸ் தொற்று வேகம் அதிகரித்தது.

ஆனால், அதைக் கட்டுப்படுத்துவதற்கான மருத்துவ கட்டமைப்பு அந்நாட்டு அரசுகளிடம் இல்லை. வெண்டிடேட்டர், மாஸ்க், பாதுகாப்பு உடைகள் போன்ற அடிப்படையான மருத்துவ உபகரணங்கள் கூட இல்லை. நாள்தோறும் ஆயிரக்கணக்கில் மக்கள் சாகிறார்கள். அவர்களை புதைக்கக்கூட இடுகாட்டில் இடமில்லை. இத்தாலியின் வீதிகள் எங்கும் பிணங்கள்,  யாரும் எடுத்து அடக்கம் செய்யவும் முன் வருவதில்லை.

முதலாளித்துவ நாடுகளில் மருத்துவச் செலவு அதிகம் என்பதால் கொரானாவினால் பாதிக்கப்பட்டவர்கள் பலருக்கு மருத்துவம் பார்ப்பதில்லை. குறிப்பாக, 70 வயதைக் கடந்த முதியவர்களுக்கு மருத்துவம் பார்க்க வேண்டாம் என இத்தாலியும், பிரான்சும் கைவிடுகின்றன. அமெரிக்காவில் ஏழை கருப்பின மக்கள் தான் அதிகம் சாகிறார்கள் என்பதில் இருந்தே ஏழைகளில் நிலையை புரிந்து கொள்ளலாம்.

உலக  முதலாளித்துவ கட்டமைப்பில் எந்த ஒரு தயாரிப்புகளும் கண்டுபிடிப்புகளும் சந்தையின் தேவையைப் பொறுத்தே முக்கியத்துவம் பெறுகின்றன. புதிய தாராளவாதக் கொள்கை நமது அனைத்து தேவைகளையும் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைத்து விட்டது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக நோய் தடுப்பு மருந்து தயாரிப்பதை விட அதிக லாபம் கொண்ட அழகு சாதன பொருட்களை தயாரிப்பதிலும், கண்டுபிடிப்பதிலும் தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகின்றன. பெரிய வல்லரசு என பீற்றிக் கொண்ட நாடுகளுக்கு சொந்த நாட்டு மக்களை தொற்றுநோயில் இருந்து காக்க வழியுமில்லை; சோறு போடவும் வக்கில்லை. முதலாளித்துவத்தின் அரசியல், பொருளாதாரம், சமூகம் என அனைத்து கட்டமைப்பும் நெருக்கடியில் சிக்கி அழுகி நாறிக்கொண்டுள்ளதை கொரானா வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

உலகளவில் சீனா போன்ற முன்னாள் சோசலிச நாடும் மற்றும் கியூபா போன்ற மக்கள் நல அரசுகளும் மட்டுமே கொரானாவை கட்டுப்படுத்துவதில் முன்நிற்கின்றன. இதற்கு காரணம் அந்நாட்டு புரட்சிகளின் போது ஏற்படுத்தப்பட்டிருந்த சோசலிச கட்டமைப்பு. உலகையே  ஆண்ட பிரிட்டன் தனது நாட்டு மக்கள் 600 பேரை காக்கும்படி கியூபாவிடம் கைகூப்பி  உதவி கோரியது. கியூபாவும், தென்கொரியாவும் மருத்துவர்களை பிறநாட்டு மக்களைக் காப்பற்ற அனுப்பிக் கொண்டுள்ளன. கொரானா நோயை கண்டறிந்தவுடன் 10 நாட்களில் 1200 படுக்கை வசதி கொண்ட இரண்டு மருத்துவமனையை கட்டி முடித்து கொரானாவைக் கட்டுப்படுத்தியது சீனா.

இன்னொரு பக்கம், தனிவுடைமை எனும் முதலாளித்துவக் கொள்கையை சொர்க்கம் என பீற்றி வந்த  ஸ்பெயினும், அயர்லாந்தும் இப்போது தனியார் மருத்துவமனைகளை அரசுடைமையாக்கியுள்ளன. 1990 களின் தொடக்கத்தில் புதிய தாராளவாத உலகத்தை முன்னறிவித்த மார்க்கரெட் தாட்சரின் பிரிட்டனில் தனிமையில் வாடும் 15 லட்சம் முதியவர்களைப் பராமரிக்க 5 லட்சம் இளைஞர்கள் தன்னார்வலர்களாக முன் வந்திருக்கிறார்கள். தேசிய மருத்துவ சேவையில் தொண்டர்களாகப் பணியாற்ற 7.5 லட்சம் இளைஞர்கள் பதிவு செய்திருக்கின்றனர். மக்களின் தேவைகள் அனைத்தையும் நிர்வாகம் செய்யும் பொருட்டு 4300 வட்டார உதவிக்குழுக்களை அந்நாட்டு மக்கள் உருவாக்கி இருக்கிறார்கள். முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரத்தின் தோல்விக்கு வேறென்ன சான்றுகள் வேண்டும்?

தொற்றுநோய் அபாயங்களில் இருந்தும், பொருளாதார நெருக்கடியில் இருந்தும் மனிதகுலத்தைக் காக்க முதலாளித்துவ சந்தைக்கான உற்பத்தி, அறிவியல் கண்டுபிடிப்புகள் என்பதை சமூகத்தின் தேவைக்கானதான மாற்றியமைக்க வேண்டும். அதற்கு தோற்றுப்போன முதலாளித்துவத்தை தூக்கியெறிந்து, சோசலிசத்தை படைக்க வேண்டும். நம் நாட்டில் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் புதிய ஜனநாயகப் புரட்சியை  நடத்தி முடிக்க மே நாளில் சூளுரைப்போம்!

நன்றி : வினவு இணையதளம்

கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தி அறிக்கை


நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தி அறிக்கை


அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்டு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து முதலீடுகளை ஈர்ப்பதற்கு தலைமைச்செயலாளர் தலைமையில் சிறப்புக்குழு அமைப்பு ! தமிழ்நாடு அரசு அறிவிப்பு !ஈ