வியாழன், 21 மே, 2020

அரசுத் துறை - பொதுத் துறைகள் குறிப்பாக பாதுகாப்புத் துறை உள்பட தனியார் மயமாவதில் பின்னணி என்ன?

அரசமைப்புச் சட்ட முகவுரையில் உள்ள ‘சோசலிஸ்ட்’ என்ற தத்துவத்தைப்  புறக்கணிக்கலாமா?

தற்போதுள்ள சமூகநீதியை -  இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டும் திட்டம் - தந்திரமே இதன் பின்னணி - எச்சரிக்கை!

--------------------------------------------------

கரோனா தொற்று கொடூரத்தைப் பயன்படுத்தி மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு - கரோனா தடுப்பு நிவாரணம் - பொருளாதார பாதிப்பிலிருந்து நாட்டை - மக்களைக் காப்பாற்ற புதிய திட்டங்கள் என்ற பெயரால், மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, அவற்றை வெறும் பெயரளவில் செயல்படும் முனிசிபாலிட்டிகளைப் போல ஆக்கும் பணி, மிக லாவகமாகவும், வேகமாகவும் நடைபெற்று வருகிறது.

மறுபுறத்தில் தற்சார்பு  (Self-Relìance) என்ற பெயரால், ஏற்கெனவே ஆர்.எஸ்.எஸ். எதையெல்லாம் தங்களது அரசியல் பொருளாதாரத் திட்டங்களாக ஆக்கிட வேண்டுமென்று நினைத்திருந்ததோ, அவற்றையெல்லாம் மிகமிக அவசரமாக - 20 லட்சம் கோடி ரூபாய் என்ற நிவாரணப் போர்வைக்குள் வைத்து வெளியிடுகின்றது.

நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளின் விவாதத்தையேகூட தவிர்த்திடும் யுக்தியாகவும் பயன்படுத்தப்பட்டு  - ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கிறது.

‘தோலிருக்க சுளை முழுங்கி’ என்பதுபோல...

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் (Preamble)   அரசுகளின் அடிப்படை இலக்கு - கொள்கை, முழு இறையாண்மையுள்ள, சமதர்ம, மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு (Sovereign, Socialist, Secular, Democratic Republic) என்று வலியுறுத்தியுள்ள நிலையில், அதன் பெயரில் உறுதி மொழி எடுத்து ஆட்சி செய்யும் ஓர் அரசு, அதனை நடைமுறையில் ஒழிக்கும் வகையில், ‘தோலிருக்க சுளை முழுங்கி’ என்பதுபோல, அதன் அடிப்படை லட்சியங்களுக்கு நேர் முரணான அரசியல் நிலைப்பாட்டினைச் செயல்படுத்த - இந்தச் சூழலைப் பயன்படுத்துகிறது!
அரசின் சமதர்ம அடிப்படைக்கு ஏற்ப நீண்ட நெடுங்காலமாக இருந்த நம் நாட்டுத் தொழில் வளர்ச்சி என்பதும், அடிக்கட்டுமானம் என்பதும் பொதுத் துறை, கூட்டுத் துறை, தனியார்த் துறை (Public Sector, Joint Sector, Private Sector) ஆகிய மூன்றாக இருந்து வந்தன.

பிரதமர் வாஜ்பேயி அமைச்சரவையில்...

பல பொதுத் துறை நிறுவனங்களையும், அதன் பங்குகளையும் - அதிலும் லாபம் வரும் நிறுவனங்களின் பங்குகளையும்கூட - தனியாருக்கு விற்று விடும் நிலை, அடல்பிகாரி வாஜ்பேயி அவர்கள் பிரதமராக வந்த காலத்தில் தொடங்கியது; அருண்ஷோரி ஒரு தனி அமைச்சகத்தின் Disinvestment துறை அமைச்சராகவே இருந்து வந்தார்.
பிரதமர் மோடி தலைமையில் ஆறாவது ஆண்டுகால  ஆட்சியில், அது வெகு பட்டாங்கமாய் தனியார் பெரும் -  கார்ப்பரேட் முதலாளிகளுக்கே அரசின் - இராணுவம் போன்ற பல துறைகளும் தனியார் மய அறிவிப்புக்கு ஆளாகியுள்ளது.

‘ஜெட்’ வேகத்தில் தனியார் மயம்!

தனியார் மயம், கரோனா நிவாரணம் என்ற சாக்கில் மிகவும் ‘ஜெட்’ வேகத்தில் அறிவிக்கப்படுகிறது!

எடுத்துக்காட்டாக,
1. 50 நிலக்கரி சுரங்கங்கள் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படுகின்றன.

2. அலுமினியம் உற்பத்தியை அதிகரிக்க பாக்சைட் - நிலக்கரிச் சுரங்கங்கள் ஒன்றாக ஏலம் விடப்படும்.

3. கனிமச் சுரங்கங்களின் குத்தகையை பிற நிறுவனங்களுக்கு மாற்றிக் கொள்வதற்கு அனுமதி.

4. இராணுவத் தளவாட உற்பத்தித் துறையில் அந்நிய நேரடி முதலீடு (Foreign Direct Investment) 49 சதவிகிதத்திலிருந்து 74 சதவிகிதமாக அதிகரிப்பு!

5. இந்தியாவில் விமான நிலையங்களை மேம்படுத்தும் நடவடிக்கையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து செயல்படும்.

6. இந்தியாவிலுள்ள மேலும் 6 விமான நிலையங்களில் தனியார் நிறுவனங்கள் முதலீட்டை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும்.

7. இவை எல்லாவற்றிற்கும் மேலான கொடுமை என்ன தெரியுமா?

யூனியன்   பிரதேசங்களில் உள்ள மின் விநியோக நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும். (இது ஒட்டகம் கூடாரத்திற்குள் தலையை நுழைக்கும் துவக்கம் போல - மற்ற மாநிலங்களிலும் அடுத்த கட்டம் - இதை ஏற்று, தற்போது விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் திட்டம், தந்திரம் உள்ளே புதைந்துள்ளது!). இந்த அறிவிப்பின்மூலம், புதுச்சேரி உள்ளிட்ட 8 யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் விநியோக நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும்.

8. விண்வெளித் துறையில் செயற்கைக்கோள் தயாரிப்பு மற்றும் அவற்றை ஏவுவது போன்றவற்றில் தனியார் முதலீடு ஊக்குவிக்கப்படும்.

9. ‘இஸ்ரோ’வின் உள்கட்டமைப்பு வசதிகளைத் தனியார் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்படும். (ராணுவ ரகசியங்கள் எந்த அளவுக்குப் பாதுகாக்கப்படும் சூழல் உருவாகும் என்பது மக்களுக்குத்தான் வெளிச்சம்).

10.  அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி வழங்கப்படும்.

மேதகு அப்துல் கலாம் அவர்களால் உருவாக்கப்பட்ட - பயனுறு வகையில
*☀GO No: 248, Economy in Expenditure Corona (COVID-19) - Ban on creation of new posts in government departments - order - issued.*👆


Go.No:249 செலவினங்களை குறைக்க தமிழக அரசு அரசாணை 249.நாள் 21.05.2020 வெளியீடு..!*👆

*☀ செலவினங்களை குறைக்க தமிழக அரசு  அரசாணை 249.நாள் 21.05.2020 வெளியீடு..!*👆



Educational Digital Content தயார் செய்வதற்கு தேவையான Tutorial Videos ...

1. https://youtu.be/QLf8Veps6wA

*How to Edit Audio On Mobile (மொபைலில் ஆடியோ edit செய்வது எப்படி)*

2. https://youtu.be/DVelAJ1aglk

*மொபைலில் Audio Record செய்ய மிகச்சிறந்த Audio Recorder App*

3. https://youtu.be/jlpae2inFVs

*வீடியோ Edit செய்ய மிகச்சிறந்த Mobile App -Kine Master App - மொபைலில் வீடியோ edit செய்வது எப்படி*

4. https://youtu.be/MU4sBP7GeeI

*Youtube- ல் முறையாக வீடியோ Upload செய்வது எப்படி (18 Steps)*

5. https://youtu.be/BBWY-nIGmcM

*GOOGLE Forms மூலம் ஆசிரியர்கள் QUIZ/Evaluation Questions எவ்வாறு தயாரிப்பது*....

6. https://youtu.be/u-HIOYqDKew

 *ஆசிரியர்கள் Objective type Questions, Two mark Questions சுலபமாக தயாரிப்பது எப்படி*..
(Hot Potatoes- Free Software)

7. https://youtu.be/Xj25Fu0n_Zw

*Computer ல் , Audacity Free open source software மூலம், Audio edit செய்வது எப்படி*.

Thank you...
Mr.G.Anandhakannan. ELT.
Kallakurichi.
கொரானா வைரஸ் தொற்று_ 18.05.2020 முதல் 31.05.2020 வரை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உட்பட பிற துறைகளிலும் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி மேற்கொள்வதில் இருந்து விலக்களித்தல் சார்பு
மே 21, வரலாற்றில் இன்று.

எலக்ட்ரோ என்செபலோகிராபி
(Electro EncephaloGraphy)யை கண்டுபிடித்த நரம்பியல் வல்லுநர் ஹான்ஸ் பெர்கர் பிறந்த தினம் இன்று.

இவர் 1924இல் எலக்ட்ரோ என்செபலோகிராபி "மூளை அலைகளைப் பதிவு செய்யும் முறை"யைக் கண்டுபிடித்தார்.

ஆல்பா அலைச்சீரைக் கண்டறிந்த இவரது பெயரால் அந்த அலை "பெர்கர் அலை" என அழைக்கப்படுகிறது.
மே 21, வரலாற்றில் இன்று.

எலிசபெத் ஃபிரை பிறந்த தினம் இன்று.

எலிசபெத் ஃபிரை (Elizabeth Fry, 21 மே 1780 – 12 அக்டோபர் 1845) ஆங்கிலேயச் சிறைச்சாலை சீர்திருத்தவாதி். இவர் சமூக சேவகர், கிறித்தவ வள்ளல் எனப் பன்முகங்களைக் கொண்டவர். இவரை "சிறைகளின் தேவதை" எனவும் அழைத்தனர். ஃபிரை கைதிகள் மனிதாபிமானத்துடன் நடத்தப்பட வேண்டும் என்ற புதிய சட்டத்தை உருவாக்க பாடுபட்டார்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளிமாநிலம்/வெளிமாவட்டத்தில் தங்கி இருக்கும் முதுகலை/பட்டதாரி ஆசிரியர் விபரம் கோரும் பள்ளக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்..

மே 21, வரலாற்றில் இன்று.

பிபா தொடங்கப்பட்ட தினம் இன்று.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பான பிபா 1904-ம் ஆண்டு இதே நாள் ஆரம்பிக்கப்பட்டது. உலக அளவில் நடக்கும் முக்கியமான கால்பந்துப் போட்டிகளை ஒழுங்கு செய்து கட்டுப்படுத்தும் பொறுப்பு இந்த அமைப்பிற்கே உள்ளது.

தொடக்கத்தில் 7 நாடுகள் மட்டுமே உறுப்பினர்களாக இருந்த இந்த அமைப்பில், தற்போது 209 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் தலைமையகம் ஸ்விட்சர்லாந்து நாட்டில் உள்ள சூரிச் நகரில் உள்ளது.
மே 21,
வரலாற்றில் இன்று.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினம் இன்று (1991).

ராஜீவ் காந்தி, இந்தியாவின் ஆறாவது பிரதமர் ஆவார். இவர் 21 மே 1991 அன்று தமிழ்நாட்டிலுள்ள ஸ்ரீபெரும்புதூரில் ஒரு குண்டு வெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார். அதில் 14 நபர்கள் கொல்லப்பட்டனர்.
இத்தாக்குதல் தேன்மொழி ராஜரத்தினத்தால் நடத்தப்பட்டது. இவர் விடுதலை புலிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. அந்த சமயத்தில் இந்தியா இலங்கை உள்நாட்டு போரில், இந்திய அமைதிப் படையைத் திரும்பப் பெற்றிருந்த காலம்.