செவ்வாய், 28 ஜூலை, 2020

*📘✍️அரசாணை எண் 77 நாள்:28.07.2020 -ன் படி இணை இயக்குனர்கள் மாற்றம்*

*📘✍️அரசாணை எண் 77 நாள்:28.07.2020 -ன் படி இணை இயக்குனர்கள் மாற்றம்*

*இணை இயக்குனர்கள் மாற்றம்*
➖➖➖➖➖➖➖➖➖
திரு கோபிதாஸ் மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் 

திரு நரேஷ் இணை இயக்குனர் தொழிற்கல்வி 

திருமதி சுகன்யா இணை இயக்குனர் இடைநிலைக்கல்வி 

திருமதி ஸ்ரீதேவி ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்.

*_தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஈழுவா வகுப்பினரை பிற்படுத்தப்பட்ட வகுப்பிலும், தீயா வகுப்பினரை பிற்படுத்தப்பட்ட வகுப்பிலும் சேர்க்க முதலமைச்சர் உத்தரவு - அரசாணையும் வெளியீடு!!!_* 👇

*_தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்  உள்ள ஈழுவா வகுப்பினரை பிற்படுத்தப்பட்ட வகுப்பிலும், தீயா வகுப்பினரை பிற்படுத்தப்பட்ட வகுப்பிலும் சேர்க்க முதலமைச்சர் உத்தரவு - அரசாணையும் வெளியீடு!!!_*








ஊரடங்கு காரணமாக தங்களின் சொந்த மாநிலம் சென்ற வெளிமாநில தொழிலாளர்கள் மீண்டும் தமிழகம் திரும்புவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

ஊரடங்கு காரணமாக தங்களின் சொந்த மாநிலம் சென்ற வெளிமாநில தொழிலாளர்கள் மீண்டும் தமிழகம் திரும்புவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


*📘✍️01.07.2020 முதல் 30.09.2020 வரையிலான காலத்திற்கு GPF மீதான வட்டி விகிதம் 7.1% ஆக நீடிப்பு!!!*

*📘✍️01.07.2020 முதல் 30.09.2020 வரையிலான காலத்திற்கு GPF மீதான வட்டி விகிதம் 7.1% ஆக நீடிப்பு!!!*

ஜூலை 28,வரலாற்றில் இன்று.உலக கல்லீரல் நோய் விழிப்புணர்வு தினம் இன்று.

ஜூலை 28,
வரலாற்றில் இன்று.

 உலக கல்லீரல் நோய் விழிப்புணர்வு தினம் இன்று.

ஹெப்படைடிஸ் சி எனப்படும் கல்லீரல் நோய், எய்ட்ஸ் நோயை போன்ற ஒரு கொடிய நோய். அதுவும் இது ஒரு தொற்று நோயாகும். இந்த நோயின் தாக்கம் அதிகமாகும் போது கல்லீரலில் புற்று நோய் ஏற்படுகிறது. எனவே இந்த நோயிலிருந்து பாதுகாத்து கொள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகும்.

அதன் பொருட்டே ஹெப்படைட்டிஸ் பி என்கிற வைரஸை கண்டுபிடித்த நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் திரு. புளூம்பர்க் ( Blumberg)  அவர்களின் பிறந்த தினமான ஜூலை 28 ஆம் தேதியன்று அவரின் நினைவாக உலக கல்லீரல் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

ஒட்டுமொத்தமான நம் உடலின் உட்பகுதியில் இருக்கும் பெரிய திண்ம உறுப்பு கல்லீரல். ’அதிகம் மது அருந்தினால் கல்லீரல் கெட்டுப் போகும்’ என்பது தான் சாதாரண மக்களுக்கு கல்லீரல் பற்றிய அதிகபட்ச விழிப்புணர்வு. மாரடைப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்று கல்லீரல் நோய்கள் தொடர்பாக நம்மிடையே போதிய விழிப்புணர்வு இல்லை என்பது உண்மைதான்.

இதற்கிடையில் இதயமாற்று, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை போன்று கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை இப்போது தான் பிரபலமாகி வருகிறது. ஆனால் இந்தியாவில் பத்து லட்சம் பேர் பல்வேறு கல்லீரல் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தான் அதிர்ச்சி தகவல்.
மேலும் சொல்வதென்றால் உடலின் வளர்சிதை மாற்றம், புரோட்டீன் உற்பத்தி, ரத்த உறைவு உட்பட பல முக்கிய செயல்களை இந்த கல்லீரல்தான் செய்கிறது.

நம் உடலின் மையத்தில் உள்ள கல்லீரல் முற்றிலும் பாதிக்கப்பட்டால் மற்ற உறுப்புகளும் படிப்படியாக செயலிழக்க ஆரம்பித்து விடும். எனவே, கல்லீரலை கவனமாக காக்க வேண்டும். அது நம் கையில் தான் உள்ளது.

மது அருந்துதல், கொழுப்பு மிக்க துரித உணவு, சுகாதாரமற்ற உணவு சாப்பிடுவது, தூய்மையற்ற தண்ணீர் அருந்துவது, அதிக உடல் எடை, உடல் பருமன், டென்ஷன் அடைவது, சர்க்கரை நோய், ரத்தம் பெறும் போது ஏற்படும் தொற்று போன்ற பல்வேறு காரணங்களால் இத்தகைய கல்லீரல் நோய்கள் உண்டாகின்றன. சில குழந்தைகளுக்கு பிறக்கும் போதே என்சைம் கோளாறுகளால் கல்லீரல் பாதிப்பு ஏற்படுகிறது.

மஞ்சள் காமாலை மற்றும் பலவகை ஹெபடைடிஸ், கல்லீரல் வீக்கம், கல்லீரல் சுருக்கம், கல்லீரல் புற்றுநோய், கல்லீரலில் கட்டிகள் போன்றவை முக்கிய நோய்கள்.

பசி இல்லாமை, உடல் சோர்வு, எடை குறைதல், மயக்கம், கால் வீக்கம், ரத்த வாந்தி, ரத்தம் வெளியேறுதல் போன்றவை, கல்லீரல் பாதிப்பின் அறிகுறிகள்.

முக்கியமான விஷ்யம் என்னவென்றால் கல்லீரல் 70 சதவீதம் பாதிக்கும் வரை நிறைய பேருக்கு பெரிய அளவில் அறிகுறிகள் எதுவும் தெரிவது இல்லை. ஆனாலும் மஞ்சள் காமாலை போன்றவை உடனடி சிகிச்சையின் மூலம் குணமாகும். அது போல மற்ற கல்லீரல் நோய்களுக்கும் தொடர் சிகிச்சைகள் தடுப்பூசிகள் உள்ளன. ஆனால் முற்றிலும் பாதிக்கப்பட்டு விட்டால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தான் ஒரே வழி.

மேலும் சிறுநீரகம் போன்று, ’டயலிசீஸ்’ செய்ய இயலாது. கல்லீரல் மட்டும் பாதிக்கப்பட்டு இருந்தால் உடனடியாக மாற்று அறுவை சிகிச்சை செய்யலாம். ஆனால் மற்ற உறுப்புகளும் பாதிக்கப்பட்ட பின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை கூட செய்வது இயலாத காரியம்.

உடல் உறுப்பு தானம் செய்வோரிடம் இருந்து இறந்த குறிப்பிட்ட மணி நேரத்திற்குள் கல்லீரல் பெறலாம்; அல்லது நெருங்கிய உறவினரிடமிருந்து கல்லீரலின் 70 சதவீத பகுதி வரை வெட்டி எடுத்து பாதிக்கப்பட்டவருக்கு பொருத்தலாம். இதனால் இருதரப்பிற்கும் பாதிப்பு இல்லை. கல்லீரல் அளித்தவர் அறுவை சிகிச்சைக்கு பின் ஏழு நாட்கள் மருத்துவமனையில் தங்கினால் போதும். புண் ஏற்படும், வலி ஏற்படும் என்ற பீதி ஏதும் வேண்டாம். பின்னர் வழக்கமான வாழ்க்கை வாழலாம். அது மட்டுமின்றி வெட்டப்பட்ட கல்லீரல் இரண்டு மாதத்திற்குள் வளரும்.

எனவே ஒருவர் முற்றிலும் கல்லீரல் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதை விட நெருங்கிய உறவினர் கல்லீரலின் ஒரு பகுதியை தானம் செய்தால் அந்த உயிரை காப்பாற்றலாம். ஒருவர் தினமும் மது அருந்தினால் உறுதியாக கல்லீரலை பாதிக்கும். சிலர் எப்போதாவது மது அருந்துபவர்களாக இருக்கலாம். ஆனால் அவருக்கு, கொழுப்பு படிந்து கல்லீரல் பாதிப்பு ஏற்கனவே இருந்தால் அது ஆபத்து. எனவே நம் வாழ்க்கை முறை, உணவு முறைகளை மாற்றினால் கல்லீரலை காக்கலாம்.

ஜூலை 28,வரலாற்றில் இன்று.முதல் உலகப் போர் ஆரம்பமான தினம் இன்று (1914).

ஜூலை 28,
வரலாற்றில் இன்று.

முதல் உலகப் போர் ஆரம்பமான தினம் இன்று (1914).

ஐரோப்பா  ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் (சீனா மற்றும் பசிபிக் தீவுகளின் சில இடங்களில்)
முதல் உலகப்போர் என்பது உலகம் தழுவிய அளவில் இடம்பெற்ற ஒரு போர்.

எனினும் இது பெரும்பாலும் ஐரோப்பாவிலேயே நடைபெற்றது.

இப் போரில் நேச நாடுகள் என்று அழைக்கப்பட்ட பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும்,

மைய நாடுகள் என்று அழைக்கப்பட்ட ஆஸ்திரியா, ஹங்கேரி, ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளும் எதிர்ப் பக்கங்களில் நின்று போரிட்டன.

இதன் அளவும், செறிவும் முன்பு எப்போதும்  இல்லாத அளவு பெரிதாக இருந்தது.

பெருமளவினர் சண்டையில் ஈடுபட்டிருந்ததோடு பெரும் தொகையில் இழப்புகளும் ஏற்பட்டன.

60 மில்லியன் ஐரோப்பியர்களை உள்ளடக்கிய சுமார் 70 மில்லியன் போர்வீரர்கள் சண்டையில் ஈடுபட்டிருந்தனர்.

புதிய தொழில்நுட்பங்களின் வழிவந்த இயந்திரத் துப்பாக்கிகள், உயர்தரமான கனரகப் பீரங்கிகள், மேம்பட்ட போக்குவரத்து, நச்சு வாயு, வான்வழிப் போர்முறை, நீர்மூழ்கிகள் என்பன போரின் தாக்கத்தைப் பெரிதும் அதிகப்படுத்தின.

போரில் 40 மில்லியன் பேருக்குக் காயங்களும் உயிரிழப்புக்களும் ஏற்பட்டன.

ஜூலை 28,வரலாற்றில் இன்று. உலக இயற்கை வள பாதுகாப்பு தினம் (World Nature Conservation Day) இன்று.

ஜூலை 28,
வரலாற்றில் இன்று.


உலக இயற்கை வள பாதுகாப்பு தினம் (World Nature Conservation Day) இன்று.

உலகிலுள்ள இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் 1948ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. உலகத்தில் ஏற்பட்டிருக்கும் சூழல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், அதனால் ஏற்படும் சவால்களை உலகம் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. ஆகவே இயற்கையை நாம் பாதுகாத்தால், இயற்கை நம்மைப் பாதுகாக்கும் என்கிற நோக்கில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.

திங்கள், 27 ஜூலை, 2020

🎯* தமிழகத்தில் செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணை வெளியீடு:*

🎯* தமிழகத்தில் செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணை வெளியீடு:*



*சென்ற பருவத்தில் மாணவர்கள் பெற்ற தேர்வு மதிப்பெண்ணில் 30 % கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.*

*நடப்பு பருவத்தில் அக மதிப்பீட்டிலிருந்து 70 % மதிப்பெண் கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.*

*இவற்றை வைத்து முதன்மை, மொழி பாடங்களுக்கு மதிப்பெண் அளிக்கப்படும்.*

*செயல்முறை தேர்வு நடத்தப்படாமல் இருந்தால் ஆய்வக பதிவேட்டின் அடிப்படையில்  மதிப்பெண் வழங்கப்படும்.*

*முந்தைய பருவத்தில் தேர்ச்சி பெறாமல் இருந்தால் தேர்வுகளை பின்னர் எழுத வேண்டும்.*

*மருத்துவ கல்விக்கு பிறகு அரசு மருத்துவமனை. அரசு மருத்துவமனைகளுக்கு மூடு விழா நடத்தப்போகும் மோடி அரசு...

மருத்துவ கல்விக்கு பிறகு அரசு மருத்துவமனை...
-------------------------------------------------
அரசு மருத்துவமனைகளுக்கு மூடு விழா நடத்தப்போகும் மோடி அரசு...

இந்தியாவின் எட்டு பெரும் நகரங்களை தவிர்த்து மற்ற மாநிலங்களிலுள்ள அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் உள்ள வளாகத்தில் 50 அல்லது 100 படுக்கை வசதிக்கொண்ட கட்டிடத்தை தனியாருக்கு 30வருடங்களுக்கு கொடுக்க வழிவகை செய்யும் ஒரு ஓப்பந்தத்தை அனைத்து மாநில அரசுக்கும் மத்திய நிதி ஆயோக் மற்றும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அனுப்பியிருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் பெரும்பாலான மக்கள் நம்பிக்கொண்டு இருக்கும் அரசு மருத்துவமனைகளையே இல்லாமல் செய்யும் வேலையை மோடி அரசு செய்ய துணிந்திருக்கிறது.

இந்த ஓப்பந்ததில் உள்ளவை..

1.மாவட்ட மருத்துவமனை வளாகத்தில் உள்ள இடத்தில் தனியாருக்கு 50 அல்லது 100 படுக்கை வசதிகள் கொண்ட கட்டிடத்தை அந்தெந்த மாநில அரசு கொடுக்க வேண்டும். அதாவது 50 படுக்கை வசதிக் கொண்ட மருத்துவமனையை தனியார் கட்ட முன் வந்தால் அதற்கு அரசு மருத்துவமனை வாளாகத்திலுள்ள இடத்தில் 30,000 சதுர அடி இடமும், 100 படுக்கைவசதிகொண்ட மருத்துவமனையென்றால் 60,000 சதுர அடி இடமும் மாநில அரசு கொடுக்க வேண்டும். மேலும் மருத்துவமனை கட்டத்தேவையான பணத்தின் ஒரு பகுதியையும் மாநில அரசே தனியாருக்கு ஒதுக்க வேண்டும்.

2.மாவட்ட மருத்துவமனைகளிலுள்ள இரத்த வங்கி சேவைகள், ஆம்புலன்ஸ் சேவைகள், பிசியோதெரபி சேவைகள், மருத்துவ கழிவுகள் அகற்றும் முறை, பார்க்கிங் வசதி, மின்சாரம், பிணவறை, நோயாளிகள் பணம் செலுத்தும் கவுண்டர் மற்றும் செயூரிட்டி போன்ற அனைத்தையும் தனியாரும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.

3.அரசு காப்பிடு திட்ட பயனாளிகளுக்கு இங்கு மருத்துவம் பார்க்கப்படும். ஆனால் படுக்கைக்கு (BED) பணம் கொடுத்துத்தான் ஆகவேண்டும்.

4.மாநில காப்பீட்டு மற்றும் சுகாதார திட்டங்களின் மூலம் பயன்பெறும் நோயாளிகளுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படமாட்டாது. அப்படியே அவர்கள் வந்தாலும் முழுக்கட்டணமும் செலுத்தித்தான் பயன்பெறமுடியும்.

அதாவது அரசு மருத்துவமனை இடத்தையும் பெற்றுக்கொண்டு மருத்துவமனை கட்ட நிதியையும் அரசிடமே பெற்றுக்கொண்டு அரசு மருத்துவமனையிலுள்ள அனைத்து வசதிகளையும் வாட்ச்மேன் முதற்கொண்டு பெற்றுக்கொண்டு அரசு உதவிபெறும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மாட்டார்களாம். பின் எதற்கு இந்த புதிய நல்ல ஒப்பந்தமென்றால். அரசு மருத்துவமனை என்ற ஒன்றையே இல்லாமல் செய்ய வேண்டுமென்பது தான் இதன் பின்னுள்ள மோசமான  அரசியல். ஏற்கனவே 2012இல் குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது புஜ் அரசு மருத்துவமனையை (Bhuj’s government hospital) அதானி குழுமத்தின் மருத்துவ கல்லூரிக்காக 99வருடத்திற்கு குத்தகைக்கு விட்டவர்தான் இப்போது நாட்டிலுள்ள ஓட்டுமொத்த மாவட்ட மருத்துவமனைகளையும் தனியாருக்கு கொடுக்க முன்வருகிறார்.

ஏற்கனவே ’நீட்’ எனும்  சட்டத்தினால் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு சாதகமாக செயல்பட்ட மோடி அரசு. இப்போது இந்த புதிய ஒப்பந்தத்தால் அரசு மருத்துவமனைகளை தனியாருக்கு கொடுக்க வேலை செய்கிறது.

இந்த  ஒப்பந்தத்திற்கு இரண்டு வார காலத்திற்குள் மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டுமென்று நிதி அயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்திருக்கிறார். இந்த ஒப்பந்தத்தை தமிழக அரசு ஆரம்ப நிலையிலேயே எதிர்க்க வேண்டும்.

அதுபோலவே எல்லா மாநிலங்களும் இதனை ஆரம்ப நிலையிலேயே எதிர்க்கவேண்டும். இல்லையென்றால் இதனால் வரக்கூடிய விளைவுகள் இந்திய சமூகத்தில் மிக மோசமானதாக இருக்கும்.

மொத்த நாட்டையே அழிவுப்பாதைக்கு அழைத்துச் செல்லும் சதித்திட்டம்- EIA2020: வலுக்கும் எதிர்ப்பு #SCRAPEIA2020

மொத்த நாட்டையே அழிவுப்பாதைக்கு அழைத்துச் செல்லும் சதித்திட்டம்- EIA2020: வலுக்கும் எதிர்ப்பு
 #SCRAPEIA2020



சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் 2020 - வரைவு அறிவிக்கைக்கு எதிராக ட்விட்டரில் #scrapEIA2020 என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளனர்.

கொரோனா ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி மோடி அரசு, சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை விதிகள் -2020” என்று வரைவு அறிவிக்கையில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. மோடி அரசு கொண்டுவந்துள்ள இந்த திருத்தங்கள், வளர்ச்சியின் பெயரால் அழிவுப் பாதைக்கு அடித்தளம் அமைக்கும் வகையில் இருக்கின்றன என பலரும் எதிர்க்கத் துவங்கியுள்ளனர்.

அதன் ஒருபகுதியாக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் 2020 - வரைவு அறிவிக்கைக்கு எதிராக ட்விட்டரில் #scrapEIA2020 என்ற ஹேஸ்டேக் மூலம் தங்களின் கருத்துக்களை பொதுமக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். தற்போது #scrapEIA2020, #WithdrawEIA2020 போன்ற ஹேஸ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளனர்
இ.ஐ.ஏ 2020 சட்ட வரைவுக்கு கடும் எதிர்ப்பு எழ என்ன காரணம்?

கடந்த 1986 இல் நடைமுறைக்கு வந்த சுற்றுச் சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 1994 ஜனவரி 27 இல் வெளியிடப்பட்ட குறிப்பாணையின்படி, சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை சட்ட ரீதியாக கட்டாயமாக்கப்பட்டது.

இதனையடுத்து நடைமுறையில் உள்ள சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை 2006-ல், சில திருத்தங்களைச் செய்து) 2020 மார்ச் 23-ம் தேதி, ஒரு வரைவு அறிவிக்கையை மத்திய பா.ஜ.க. அரசு தயார் செய்தது. அந்த தயார் செய்யப்பட்ட அறிக்கையை ஏப்ரல் 11 ஆம் தேதி அரசு இதழிலும் வெளியிட்டுள்ளது.

இந்த வரைவு அறிவிக்கையின் மீது அரசு இதழில் அறிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குள் மக்கள் கருத்து தெரிவிக்கலாம். மாநில அரசுகளும் கருத்துகளை அளிக்க வேண்டும் என்று மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சகம் கூறி இருந்தது.

பின்னர் சூழலியாளர்கள், கொரோனா தொற்று பாதிப்பு காரணம் வைத்து மோடி அரசு அவசரகதியாக சட்டத்தை திருத்தி தனக்கு சாதகமாக்கிக்கொள்ள பார்க்கிறது என குற்றம் சாட்டினார்கள். பின்னர் கால அவகாசத்தை 2020 ஜூன் 30 வரை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டது மத்திய அரசு.

இந்நிலையில், “சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை விதிகள் -2020” என்று வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள மூன்று முக்கியத் திருத்தங்கள் மத்திய அரசுக்கு எதேச்சதிகாரமான அதிகாரங்களை வழங்கும் வகையில் உள்ளதை சூழலியாளர்கள் கண்டிக்கத் துவங்கினார்கள்.

மோடி அரசு அறிக்கையில் திருத்தியவற்றில், முதலாவதாக சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை முன்வைக்காமலும், மக்களிடம் கருத்துக் கேட்காமலும் நடைமுறையில் செயல்பாட்டில் உள்ள புதிய திட்டங்கள், பழைய திட்டங்களின் விரிவாக்கங்கள் - கட்டுமானப் பணிகள் இவற்றை எவ்வித தடையுமின்றி தொடரலாம். அரசுக்கு தண்டத்தொகை செலுத்தினால் போதும் அனுமதி கிடைத்துவிடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, இரண்டாவதாக 70 மீட்டர் வரையிலும் சாலைகளை அகலப்படுத்துதல், விரிவாக்கத் திட்டங்கள், நீராதாரக் கட்டமைப்புகள், பெரும் கட்டுமானத் திட்டங்கள் போன்ற 14 வகையான பணிகளுக்கும், குறிப்பாக, “சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிப்பவை என்று கருதப்படக்கூடிய திட்டங்களுக்கும்” கூட இனி சுற்றுச் சூழல் மதிப்பீட்டு அறிக்கை முன் வைக்கத் தேவை இல்லை. சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் முன் அனுமதி தேவை இல்லை.

இதன் தொடர்ச்சியாக மற்றொரு திருத்தமாக, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி மண்டலங்கள், தோல் தொழில் மற்றும் கடலோரத் தொழில் மண்டலங்கள் போன்றவற்றில் மேற்கொள்ளப்படும் கட்டுமானத் திட்டங்கள் பற்றியும் விரிவாக்கப் பணிகளுக்கும் சுற்றுச் சூழல் அனுமதி தேவை இல்லை என்று திருத்தியிருக்கிறது.

இதனால் என்ன ஆகும் என்றால், மக்களிடம் கருத்துக்கேட்கும் உரிமை முற்றிலும் மறுக்கப்படும். எந்த திட்டத்தையும் மக்கள் அனுமதியின்றி செயல்படுத்த முடியும். மேலும் தொழிற்சாலை, நிறுவனங்கள் தங்கள் அறிக்கையை அளிக்க வேண்டிய தேவை இருக்காது. செயல்பாடுகள் குறித்த அறிக்கை ஆண்டுக்கு ஒருமுறை கொடுத்தால் போதும் என்ற நிலைமை உருவாகும். இதனால் நிறுவனங்கள் அனுமதியுடன் சட்ட மீறலில் ஈடுபடும்

மேலும், சுற்றுச் சூழலுக்குக் கேடு பயக்கும் திட்டங்கள் குறித்து சூழலியல் ஆர்வலர்கள், பொதுமக்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கங்கள் என எவரும் புகார் கூறவோ, கருத்துத் தெரிவிக்கவோ முடியாது. மத்திய அரசு தேவைப்பட்டால் விசாரணைக்குழு அமைத்தால் தான் கருத்துக்களை மக்கள் கூற முடியும்.

இதனால் தமிழகமும் மிகப் பெரிய அளவில் பாதிப்பை சந்திக்கும். குறிப்பாக காவிரியில் மேகேதாட்டு அணை, தேனி நியூட்ரினோ ஆய்வகம், சேலம் - சென்னை 8 வழிச்சாலை மற்றும் காவிரிப் படுகை பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் போன்றவற்றை செயல்படுத்திட இந்த சட்டம் உதவும். காடுகளில் வாழும் மக்கள் துரத்தியடிக்கப்படுவார்கள். இத்தகைய மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் சட்ட வரைவுக்குத் தான் தற்போது நாடுமுழுவதும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது