புதன், 30 செப்டம்பர், 2020

*🌟EER பதிவேடு மற்றும் 6-14, 15-18 வயதில் இடைநின்ற மாணவர்கள் விவரமும் பராமரிப்பது குறித்து நாமக்கல் மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்.*

*🌟EER பதிவேடு  மற்றும் 6-14, 15-18 வயதில் இடைநின்ற மாணவர்கள் விவரமும் பராமரிப்பது குறித்து நாமக்கல் மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்.*

*🌟02.10.2020 அன்று கிராம சபாக் கூட்டம் நடத்துதல் தொடர்பான ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக இயக்குநர் கடிதம்.*

*🌟02.10.2020 அன்று கிராம சபாக் கூட்டம் நடத்துதல் தொடர்பான ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக இயக்குநர்   கடிதம்.*

*2020-21 நிதியாண்டு வருமானவரி செலுத்துதல் பழைய வரி விகிதம் மற்றும் புதிய வரி விகிதம் வேறுபாடு.*

2020-21 நிதியாண்டு வருமானவரி செலுத்துதல் பழைய வரி விகிதம் மற்றும் புதிய வரி விகிதம் வேறுபாடு.வேறுபாடு அட்டவணையை பார்க்க கிளிக் செய்யவும்.

click here

செப்டெம்பர் 30, வரலாற்றில் இன்று. சார்லஸ் பிரான்சிஸ் ரிக்டர் நினைவு தினம் இன்று.

செப்டெம்பர் 30, 
வரலாற்றில் இன்று.

 சார்லஸ் பிரான்சிஸ் ரிக்டர் நினைவு தினம் இன்று. 

இவர் அமெரிக்க இயற்பியலாளர் மற்றும் நிலநடுக்கவியலாளர்.

 நிலநடுக்கத்தை உணர்வதற்கு உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் ரிக்டர் அளவீடு என்ற அலகினைக் கண்டறிந்தவர். 

பைனோ கூட்டன்பர்க் என்பவரின் உதவியுடன் சார்லஸ் ரிக்டர் கண்டறிந்த இந்த அலகு நிலநடுக்க விளைவுகளைக் மடிமை அளவீட்டால் (logarithm) கணக்கிட பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

செப்டெம்பர் 30, வரலாற்றில் இன்று. எண்ணற்ற தகவல்களை அள்ளித் தரும் தமிழ் விக்கிபீடியா தொடங்கப் பட்ட தினம் இன்று (2003).

செப்டெம்பர் 30, வரலாற்றில் இன்று.

 எண்ணற்ற தகவல்களை அள்ளித் தரும் தமிழ் விக்கிபீடியா தொடங்கப் பட்ட தினம் இன்று (2003).

தமிழ் விக்கிப்பீடியாவின் 60000க்கும் மேற்பட்ட கட்டுரைகளுடன் சேர்த்து இதன் மொத்தக் கட்டுரைகளான 24 மில்லியன் கட்டுரைகளும் உலகெங்கிலுமுள்ள தன்னார்வலர்களால் கூட்டாக எழுதப்படுகின்றன. பெரும்பாலும் இதன் எல்லாக் கட்டுரைகளும், இதனைப் பயன்படுத்தும் எவராலும் தொகுக்கப்பட முடியும். 

மேலும் இது கிட்டத்தட்ட 100,000 முனைப்பான பங்களிப்பாளர்களையும் கொண்டுள்ளது.

 விக்கிப்பீடியா 285 மொழிகளில் செயற்படுகிறது.

செப்டெம்பர் 30, வரலாற்றில் இன்று.சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் இன்று.

செப்டெம்பர் 30, வரலாற்றில் இன்று.

சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் இன்று.

கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபிளை மொழிபெயர்த்த புனித ஜெரோமின் (கிபி 347-420) நினைவு தினமான செப்டெம்பர் 30ஆம் தேதி, சர்வதேச மொழிபெயர்ப்பு தினமாக ஆண்டுதோறும்  கொண்டாடப்படுகிறது.

ஜெரோம் 'மொழிபெயர்ப்புகளின் பாதுகாவலர்' என புகழப்படுகிறார். 1953ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட 'சர்வதேச மொழிபெயர்ப்பாளர்களின் கூட்டமைப்பினால்' இந்த சிறப்பு தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

1991ஆம் ஆண்டில் இந்த அமைப்பானது பல்வேறு நாடுகளிலும் மொழிபெயர்ப்புத் துறையில் ஈடுபட்டுள்ளோர் தம் ஒருமைப்பாட்டைக் காட்டும் முகமாக இந்நாளை உலகளாவிய அளவில் கொண்டாட வேண்டும் என்று அழைப்பு விடுத்தது.

செவ்வாய், 29 செப்டம்பர், 2020

பள்ளிகளுக்கு நேரிடையாக நலத்திட்டப் பொருள்களை வழங்குமாறு வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்! தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் கோரிக்கையின் மீது நாமக்கல் மாவட்டக்கல்வி அலுவலர் நடவடிக்கை!

பள்ளிகளுக்கு நேரிடையாக நலத்திட்டப் பொருள்களை வழங்குமாறு வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்!
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் கோரிக்கையின் மீது நாமக்கல் மாவட்டக்கல்வி அலுவலர் நடவடிக்கை!

செப்டெம்பர் 29,வரலாற்றில் இன்று.உலக இதய தினம் இன்று.

செப்டெம்பர் 29,
வரலாற்றில் இன்று.

உலக இதய தினம் இன்று.


இன்று உலகம் முழுவதும் இதய தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உணவு முறைகளில் ஏற்பட்டிருக்கும் மாறுதல்களால் அதிகம் பாதிக்கப்படும் உறுப்பாக இதயம் மாறி வருகிறது. அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

* புகைப் பழக்கமே இல்லாத 6 லட்சம் பேர் ஒவ்வொரு வருடமும் காற்றில் கலக்கும் புகையால் பாதிப்பட்டு உயிரிழக்கின்றனர். இதில் உலக அளவில் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 50 சதவீதம். புகைப் பிடிப்பதினால் 10 சதவீதம் பேர் இருதய நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

* புகைப்பிடிப்பதை நிறுத்தி 15 வருடமான பிறகும்கூட மாரடைப்பு வரலாம். அதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளன.
அதிக கொழுப்பு, அதிக சர்க்கரை மற்றும் உப்பு உள்ள உணவை உண்ணுவது இதய நலனுக்கு எதிராவை. இதனால் இதய நோய் மற்றும் வலிப்பு நோய் உண்டாகிறது.

* உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் குழந்தைகளில் 10 லட்சம் குழந்தைகள் பிறவியிலேயே இதயக் கோளாறுடன் பிறக்கின்றன. இதயக் கோளாறு என்பது பெரும்பாலும் ஆண்களையும், வயதானவர்களையும் மட்டுமே தாக்கும் என்ற கருத்து பரவலாக உள்ளது. அது தவறு, பெண்கள், குழந்தைகள் உட்பட அனைத்து வயதினருக்கும் இதய பாதிப்பு ஏற்படலாம்.

* உலக அளவில், பத்துக்கு ஒன்று என்ற விகிதாச்சாரத்தில் பள்ளிக் குழந்தைகள் அதிக எடை உள்ளவர்களாக இருக்கிறார்கள். அதிக எடை, இதய நோய் மற்றும் வலிப்பு நோய்கள் வருவதற்கு காரணமாக அமையும்.

கவனிக்க வேண்டியவை:

* சமச்சீர் சத்துகள் உள்ள பழங்களும் காய்கறிகளும் இதய நோய் மற்றும் வலிப்பு நோய் வருவதைத் தடுக்க உதவுகின்றன.

* வெறுமனே உடற்பயிற்சியில் மட்டும் ஈடுபடாமல் தினமும் விளையாடுவது, மதி வண்டிகளை அதிகம் பயன்படுத்துவது, மாடிப்படிகள் ஏறி இறங்குவது உடல்நலத்திற்கு நல்லது.

* சரியான நேரத்தில் சீரான கலோரிகள் கொண்ட உணவை உட்கொள்வது.

* 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் சீரான இடைவெளியில் முழு உடற்பரிசோதனை செய்து கொள்வது நலம்.

* ரத்தத்தின் சர்க்கரை அளவை அடிக்கடி பரிசோதனை மூலம் கவனித்து வருவது

* எண்ணெணய் பண்டங்களை அதிகம் உட்கொள்வதை தவிர்ப்பது.

* நல்ல தூக்கம், அதிக மன அழுத்தம் வராமல் பார்த்து கொள்வது.

செப்டெம்பர் 29, வரலாற்றில் இன்று.சர்வதேச காபி தினம் இன்று.

செப்டெம்பர் 29, வரலாற்றில் இன்று.

சர்வதேச காபி தினம் இன்று.

 நாம் அன்றாடம் ஒன்று அல்லது இரண்டு தடவையாவது காபி அருந்தும் பழக்கம் உடையவர்களாக இருப்போம்... ஆனால் யாருக்கும் காபியின் வரலாறு தெரியாது... அது கடந்து வந்த பாதையும் தெரியாது... (வரலாறு முக்கியம் அமைச்சரே, மறந்து விடாதீர்கள்)

காபியின் ருசிகர தகவல்கள்...

சிலர் காபி குடிப்பது நல்லது என்பார்கள், சிலர் காபி குடிப்பது கேடு என்பார்கள், அதெல்லாம் அவரவர் பாடு. காபியில் பல வகைகள், சுவைகள் இருக்கின்றன. நாம் மிகவும் விரும்பி சுவைக்கும் ருசியான காபியின் வரலாறு அதை விட ருசிகரமானது. காபியை எந்த கேட்டரிங் படித்த மாணவரும் கண்டுப்பிடிக்கவில்லை. ஆடு மேய்த்துக் கொண்டிருந்த யாரோ ஒருவர் தெரியாமல் கண்டுப்பிடித்த பானத்தை இன்று உலகே வேண்டி விரும்பிக் குடித்துக் கொண்டிருக்கிறது. 

காபி எனும் பானம் கண்டுபிடிக்கப்பட்டு 11 நூற்றாண்டுகள் ஆகிறது. 9ஆம் நூற்றாண்டில், எதியோப்பியாவை சேர்ந்த ஓர் ஆடு மேய்ப்பவர் தற்செயலாக கண்டுப்பிடித்த பானம் தான் காபி. 

உலக வரலாற்றில் மூன்று முறை காபி தடை செய்யப்பட்டது. 16ஆம் நூற்றாண்டில் மெக்காவிலும், 1675ஆம் ஆண்டு ஐரோப்பாவில் சார்லஸ் II ஆம் மன்னராலும், 1677ஆம் ஆண்டு ஜெர்மனியில் பிரெட்ரிக் என்பவராலும் காபி தடை செய்யப்பட்டது.
பின்லாந்த், ஸ்வீடன், நார்வே, டென்மார்க் போன்ற நாடுகளில் தான் காபி அதிகமாக பருகப்படுகிறது

 பொதுவாக காபி மரங்கள் 30 அடி வரை வளர முடியுமாம். ஆனால், 10 அடியில் இருக்கும் போதே அறுவடை செய்துவிடுகின்றனர். அப்போது தான் எளிதாக பறிக்க முடியும். கேமரூனில் இருக்கும் ஒரு வகை காபி (Coffea Charrieriana) தான் உலகிலேயே இயற்கையாக காஃபைன் நீக்கப்பட்ட காபி ஆகும்.

கடந்த 1906ஆம் ஆண்டு, ஆங்கில வேதியியலாளர் ஜார்ஜ் கான்ஸ்டன்ட் வாஷிங்டன் என்பவர் தான் முதன் முதலில் இன்ஸ்டன்ட் காபியை தயாரித்தார். சில நாடுகளின், சில பகுதிகளில் காபிக் கொட்டைகளை உரமாகவும் பயன்படுத்துகின்றனர்.
உலகில் எண்ணெய்க்கு அடுத்து இரண்டாவதாக, அதிகமாய் ஏற்றுமதி செய்யப்படும் பொருள் காபி தான் என்பது குறிப்பிடத்தக்கது. தினமும் காபி
 குடிப்பதால், டைப் 2 நீரிழிவு நோய், அல்சைமர் எனும் மறதி நோய், இதய நோய்கள் போன்ற நோய்களின் அபாயங்கள் குறையும். ஓர் நாளுக்கு ஆறு தடவைக்கு மேல் காபிக் குடிப்பவர்களில் பெரும்பாலானோருக்கு புரோஸ்டேட் புற்றுநோய் வரும் அபாயம் இருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

திங்கள், 28 செப்டம்பர், 2020

தொடக்கக்கல்வி - 2019-20ஆம் கல்வி ஆண்டில் பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்துகொண்டு மாறுதல் ஆணை பெற்று இன்னும் பழைய ஈராசிரியர் பள்ளிகளிலேயே பணிபுரியும் 487 இடைநிலை ஆசிரியர்களை பணியில் இருந்து விடுவிக்கவும், அவரவர் மாறுதல் பெற்றுள்ள புதிய பள்ளிகளில் பணியேற்று பணிபுரியவும் அனுமதி அளித்து தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு...

தொடக்கக்கல்வி - 2019-20ஆம் கல்வி ஆண்டில் பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்துகொண்டு மாறுதல் ஆணை பெற்று இன்னும் பழைய ஈராசிரியர் பள்ளிகளிலேயே பணிபுரியும் 487 இடைநிலை ஆசிரியர்களை பணியில் இருந்து விடுவிக்கவும், அவரவர் மாறுதல் பெற்றுள்ள புதிய பள்ளிகளில் பணியேற்று பணிபுரியவும் அனுமதி அளித்து ஆணை அளித்து தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது...