சனி, 16 ஜனவரி, 2021

உலகப் பொதுமறை!.திருப்பூர் கிருஷ்ணன்.திருக்குறள் 133 அதிகாரங்களைத் தாங்கியது. ஒவ்வோர் அதிகாரத்திற்கும் ஒரு தலைப்பு. அப்படியானால் 133 தலைப்புகள் இருக்க வேண்டும். ஆனால் 132 தலைப்புகள் தான் உள்ளன!

*உலகப் பொதுமறை!*
*திருப்பூர் கிருஷ்ணன்*
............................................
  திருக்குறள் 133 அதிகாரங்களைத் தாங்கியது. ஒவ்வோர் அதிகாரத்திற்கும் ஒரு தலைப்பு. அப்படியானால் 133 தலைப்புகள் இருக்க வேண்டும். ஆனால் 132 தலைப்புகள் தான் உள்ளன! 
............................................
  *மிகப் பழங்காலத்திலேயே திருவள்ளுவர் கள் அருந்துவதையும் புலால் உண்பதையும் ஆண்கள் பரத்தையரிடம் செல்வதையும் எதிர்த்துக் கருத்துத் தெரிவித்துள்ளார். 

  சங்க காலத்தில் இந்தப் பழக்கங்களெல்லாம் நடைமுறையில் இருந்ததைச் சங்கப் பாடல்கள் தெரிவிக்கின்றன.

  திருக்குறள் எழுதப்பட்ட காலத்தின் தொன்மை குறித்துக் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அது சங்கம் மருவிய கால நூல் என்றே பலராலும் கொள்ளப்படுகிறது. 

  தம் காலத்தில் நிலவிய தீய வழக்கங்களைத் துணிச்சலாக அவர் சாடியுள்ளார். புரட்சியாளராக இருந்த அவருக்குத் தாம் வாழ்ந்த காலத்தில் எத்தனை எதிர்ப்பு இருந்திருக்கும் என்பதை நாம் ஊகிக்க முடியும். 

  திருக்குறளின் கருத்து மட்டுமல்ல, கருத்து சொல்லப்படும் விதமும் தனி அழகுடையது. தமிழின் முதல் எழுத்தான அகரத்தில், `அகர முதல` என்று தொடங்கும் திருக்குறள், தமிழின் கடைசி எழுத்தான `ன்` இல், `கூடி முயங்கப் பெறின்` என முடிகிறது. 

  அரசியல் சார்ந்த அதிகாரங்கள் சில ஆண்டுகள்தான் செல்லுபடியாகும். வள்ளுவரின் 133 அதிகாரங்களும் எல்லாக் காலத்திலும் எல்லா இடங்களிலும் செல்லுபடியாகக் கூடியவை! 

  மூன்றடியால் உலகளந்தவர் திருமால் என வைணவம் பேசுகிறது. இரண்டே அடியால் அறநெறிகள் அனைத்தையும் அளந்து கூறிவிட்டார் வள்ளுவர்.   

  *திருக்குறளைப் பற்றிப் பல சுவாரஸ்யமான செய்திகள் உண்டு. திருக்குறள் 133 அதிகாரங்களைத் தாங்கியது. 

  ஒவ்வோர் அதிகாரத்திற்கும் ஒரு தலைப்பு. அப்படியானால் 133 தலைப்புகள் இருக்க வேண்டும். ஆனால் 132 தலைப்புகள் தான் உள்ளன! 

  திருக்குறளில் ஒரே தலைப்பைத் தாங்கி இரண்டு அதிகாரங்கள் உள்ளன! `குறிப்பறிதல்` என்ற தலைப்பில் பொருட்பாலில் 71 ஆம் அதிகாரம் உள்ளது. இதே தலைப்பிலேயே காமத்துப் பாலில் 110 ஆவது அதிகாரமும் அமைந்துள்ளது.

  முதலடியில் நான்கு சீரும் இரண்டாம் அடியில் மூன்று சீருமாக மொத்தம் ஏழே வார்த்தைகள் தான். ஏழே வார்த்தைகளில் 1330 குறள்களை எழுதி 1330 கருத்துகளைச் சொல்ல வேண்டுமானால் அதற்கு எத்தகைய மொழி வளம் இருக்க வேண்டும்? பயனற்ற ஒரே ஒரு வார்த்தை கூடத் திருக்குறளில் கிடையாது. 

   *திருக்குறளின் 133 அதிகாரங்களில் `அகர முதல எழுத்தெல்லாம்` என்ற குறளோடு தொடங்கும் முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து என்கிற அதிகாரம். 

  தெய்வ நம்பிக்கை என்பது நம் தமிழின் மிகப் பழைய இலக்கியப் புதையலான சங்கப் பாடல்களிலேயே தென்படுகிறது. நம் பழைய இலக்கியங்களில் நாத்திகக் கருத்துக்கு இடமில்லை. 

  சங்கப் பாடல்களில் தெய்வத்திற்கு இன்ன வடிவம், இன்ன நிலம் என்றெல்லாம் தெளிவான அடையாளம் கொடுக்கப்பட்டாலும் வள்ளுவரின் கடவுள் பற்றிய சிந்தனைகள் எந்த அடையாளமும் இல்லாமல் அமைந்து வியப்பைத் தருகின்றன. 

  வள்ளுவர் கடவுளின் பெயரையோ கடவுள் ஆணா பெண்ணா என்பதையோ நெற்றிக் குறியையோ கை ஆயுதத்தையோ வாகனத்தையோ எங்குமே குறிப்பிடவில்லை. 

  அந்த தெய்வீக சக்தியின் பெருமைகளை மட்டுமே குறிப்பிடுகிறார். சங்கக் கடவுளுக்கும் வள்ளுவக் கடவுளுக்கும் தான் எத்தனை வேறுபாடு!

  வள்ளுவர் கடவுளை எட்டுக் குணங்கள் உடையவராகக் காண்கிறார். 

`கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் 
தாளை வணங்காத் தலை.`

   கடவுளின் அந்த எட்டுக் குணங்கள் எவை? `தன் வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்கை உணர்வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களில் நீங்குதல், பொருளுடைமை, முடிவில்லாத ஆற்றலுடைமை, வரம்பிலாத இன்பமுடைமை` என அந்தக் குணங்கள் சைவ ஆகமத்தில் கூறப்பட்டுள்ளன. 

   வள்ளுவர் எட்டுக் குணங்கள் உடையவன் எனக் கடவுளைப் பற்றிச் சொல்லும் இந்தக் குறள் திருக்குறளில் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் ஒன்பதாம் குறளாக உள்ளது. எனவே இதற்கு முந்தைய எட்டுக் குறள்களிலும் வள்ளுவர் சொல்லும் குணங்களே கடவுளின் எண்குணங்கள் என்கிறார்கள் சிலர். 

  `ஆதி பகவனாயிருத்தல், வாலறிவனாயிருத்தல், மலர்மிசை ஏகியவனாய் இருத்தல், வேண்டுதல் வேண்டாமை இலாதவனாய் இருத்தல், இருள்சேர் இருவினை சேராதவனாய் இருத்தல், பொறிவாயில் ஐந்தவித்தவனாயிருத்தல், தனக்குவமை இல்லாதவனாய் இருத்தல், அறவாழி அந்தணனாய் இருத்தல்` என்பதாக அக்குணங்கள் வகைப்படுத்தப் படுகின்றன. 

  *மத நல்லிணக்கத்தைப் பற்றி உரத்துக் குரல் எழுப்பப்படும் இக்காலத்தில் நாம் பின்பற்றத் தகக சமயம் வள்ளுவர் கூறும் சமயமே. ஜாதிச் சச்சரவுகள் தலைவிரித்து ஆடுகிற இன்றைய தருணத்தில் வள்ளுவரே நமக்குச் சரியாக வழிகாட்டக் கூடியவர். 

  நாம் எந்தச் சமயத்தைப் பின்பற்றினாலும் வள்ளுவர் கூறும் லட்சிய சமயத்தை நோக்கிச் செல்லும் பாதையாக நம் சமயத்தைக் கொள்வது நல்லது. 

  இன்று திருக்குறளின் பெருமை அகில இந்தியாவிலும் பேசப்படத் தொடங்கியுள்ளது. திருக்குறள் தமிழகத்திற்கோ இந்தியாவுக்கோ மட்டும் உரியதல்ல. அது உலகப் பொதுமறை

 . வள்ளுவர் நம் தமிழ் மொழியில் முழு உலகத்திற்குமான ஒரு நூலை எழுதினார் என்பதே உண்மை. 
............................................
நன்றி:
எழுத்தாளர் மதிப்புமிகு.திருப்பூர் கிருஷ்ணன்.

*📱வாட்ஸ்அப் பயனாளிகளின் தகவல்கள் பாதுகாக்கப்படுமா?- நிர்வாகம் விளக்கம்*

*📱வாட்ஸ்அப் பயனாளிகளின் தகவல்கள் பாதுகாக்கப்படுமா?- நிர்வாகம் விளக்கம்*

*டில்லி*

*வாட்ஸ்அப் நிர்வாகம் தாங்கள் அறிவித்துள்ள புதிய கொள்கையால் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் குறித்து விளக்கம் வெளியிட்டுள்ளது.*

*வாட்ஸ்அப் நிர்வாகம் சமீபத்தில் ஒரு புதிய கொள்கையை அறிவித்தது. அதன்படி வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்படும் தகவல்கள், படங்கள், செய்திகள் உள்ளிட்டவை யாவும் முகநூலில் சேமிக்கப்படும் எனவும் அவற்றை மற்றவர்களுக்கு விளம்பரங்களுக்காக அளிக்கப்படலாம் எனவும் கூறப்பட்டது. இதையொட்டி தங்கள் அந்தரங்க விவரங்கள் வெளியாகலாம் எனக் கருதிப் பல பயனாளிகள் வாட்ஸ்அப் செயலியில் இருந்து விலகத் தொடங்கினர்.*

*இந்நிலையில் வாட்ஸ்அப் நிர்வாகம் ஒரு விளக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது.*

*அந்த அறிக்கையில் வாட்ஸ்அப்,*

*'நாங்கள் எங்களது புதிய அறிவிப்பால் பலருக்கும் எத்தனை குழப்பங்கள் நேரிட்டுள்ளன என்பதை நாங்கள் அறிந்துக் கொண்டோம். இதில் நிறைய தவறான தகவல்கள் பரவி உள்ளதால் நாங்கள் எங்களது கொள்கை மற்றும் அதன் உண்மை நிலை பற்றி அனைவருக்கும் உதவ எண்ணுகிறோம்.*

*வாட்ஸ்அப் செயலி என்பது நீங்கள் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினருடன் தகவல்கள் பரிமாற உருவாக்கப்பட்டதாகும். உங்களுடைய உரையாடலை நாங்கள் எப்போதும் இரு முனைகளில் இருந்தும் பாதுகாப்போம் என்பதே பொருள் ஆகும். எனவே வாட்ஸ்அப் அல்லது முகநூல் தனிப்பட்ட தகவல்களை பார்வையிடப்போவதிலில்லை. இதனால் தான் நாங்கள் உங்களுடைய அழைப்பு அல்லது தகவல்களைச் சேமிப்பது இல்லை. அத்துடன் நீங்கள் பகிரும் இருப்பிடங்கள் மற்றும் உங்கள் தொடர்பு  எண்களை முகநூலுடன் பகிர மாட்டோம்.*

*இந்த புதிய கொள்கையினால் மேலே உள்ள எதுவும் மாறப்போவதில்லை. மாறாக வாட்ஸ்அப் மூலம் மக்கள் தங்கள் வர்த்தக தகவல்களைப் பகிரும் போது அது மேலும் பலரை சென்றடைய நாங்கள் இந்த விவரங்களைப் பயன்படுத்த உள்ளோம். வர்த்தகர்கள் தங்கள் பணிகளை வாட்ஸ்அப் மூலம் செய்துக் கொள்ளலாம் என்பதற்காக இந்த புதிய முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் பயனாளிகள் அனைவரும் வர்த்தகர்கள்: இல்லை என்பதால் இது குறித்து யாரும் கவலை கொள்ள வேண்டாம்.*

*நாங்கள் இது குறித்து மக்களின் விருப்பத்தைக் கோர அறிவித்த காலக் கெடுவை மாற்ற உள்ளோம். பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் யாருடைய கணக்கும் நீக்கப்படாது. இந்த தவறான தகவலை நீக்கத் தேவையான பல நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வாட்ஸ்அப் மூலம் யாருடைய தனிப்பட்ட அல்லது அந்தரங்க விவரங்கள் யாருக்கும் அளிக்கப்பட மாட்டாது என்பதை உறுதிப்படுத்த உள்ளோம். எனவே நாங்கள் இது குறித்த புதிய அறிவிப்பு மற்றும் வர்த்தக தேர்வுகளை வரும் மே மாதம் 15 ஆம் தேதி வெளியிட உள்ளோம்.*

*வாட்ஸ்அப் மூலம் உலக மக்களால் பகிரப்படும் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கும். மற்றும் தற்போதுள்ள தனிப்பட்ட தகவல்களை இப்போது மட்டுமின்றி எப்போதும் பாதுகாப்பாக வைத்திருப்போம். இது குறித்து எங்களிடம் விளக்கம் கேட்ட அனைவருக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இதன் மூலம் சரியான உண்மை தகவல்களை அளிக்க வைத்து வதந்திகளை நிறுத்தவும் நீங்கள் உதவி உள்ளீர்கள். நாங்கள் எப்போதும் வாட்ஸ்அப் செயலி மக்களுக்கு மேலும் சேவைகள் செய்வதையும் அந்தரங்க தகவல்கள் பாதுகாப்பாக இருப்பதையும் தொடர்ந்து செய்வோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.*

*9 ஆண்டுகள், 11 மாதங்கள் மற்றும் 17 நாட்கள் பணிபுரிந்து (10 ஆண்டுகள் பணிபுரியவில்லை என்று ஓய்வூதியம் மறுக்கப்பட்ட நிலையில்), மறைந்த ஓய்வு பெற்ற புவியியல் உதவியாளருக்கு 01.10.1984 முதல் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அரசாணை வெளியீடு!!!*

9 ஆண்டுகள், 11 மாதங்கள் மற்றும் 17 நாட்கள் பணிபுரிந்து (10 ஆண்டுகள் பணிபுரியவில்லை என்று ஓய்வூதியம் மறுக்கப்பட்ட நிலையில்), மறைந்த ஓய்வு பெற்ற புவியியல் உதவியாளருக்கு 01.10.1984 முதல் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அரசாணை வெளியீடு!!!
அரசாணையினைப் படிக்க இங்கே கிளிக் செய்க.

வெள்ளி, 15 ஜனவரி, 2021

*🏵️யூடிஆர் (கூட்டு பட்டா) , கிராமநத்தம் , புலபடங்களில் தவறு இருந்தால் அதனை திருத்தங்கள் செய்யும் முறை...!*

*🏵️யூடிஆர் (கூட்டு பட்டா) , கிராமநத்தம் , புலபடங்களில் தவறு இருந்தால் அதனை திருத்தங்கள் செய்யும் முறை...!*

UDR பட்டாவில் தவறான நபர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது, பட்டாதாரர் & தந்தை பெயர் பிழையாக இருக்கிறது, எழுத்து & பெயர் பிழையாக இருக்கிறது, சர்வே எண்கள் / உட்பிரிவுகள் தவறுதலாக உள்ளது, கிராம நத்த ஆவணங்களில் நாங்கள் அனுபவிக்கும் வீட்டை பக்கத்து வீட்டுகாரர் பெயரில் ஏற்றிவிட்டனர் போன்ற பல ஆவண பிழைகளால் ஏற்படும் சிக்கல்கள் பல பிழையான ஆவணங்கள் வைத்து இருந்தால் நிலங்களை பட்டா மாற்றம் செய்தல் இலகு அல்ல, வீடுகட்ட அங்கீகாரம் கிடைப்பது கடினம்,  கடன் கிடைக்கபெறுவது கடினம், போன்ற பல சிக்கல்கள் எழும். இதனை வட்டாசிரியர் அலுவலகம் அணுகி சரி செய்தல் முறை.

UDR / கிராம நத்தம்/ FMB யில் திருத்தங்கள் செய்ய என்னென்ன நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதின் நடைமுறை விளக்கம்.

முதலில் உங்கள் ஆவணத்தில் உள்ள பிழை என்ன என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும், இதில் உங்களுக்கு தெளிவில்லை என்றால் அறிந்தவர்களிடம்  விவரங்கள் கேட்டு அறிந்து கொள்ளுதல் அவசியம். என்ன தவறு, தவறுதலுக்கான காரணம் இவற்றை அறிந்து கொண்டால், இதனை சரி செய்தல் இலகுவாகும்.

நமது கோரிக்கை என்னவோ அதனை  அரசு தரப்பு ஊழியர்களுக்கு எளிதில் புரியும் வண்ணம், மனுவாக  எழுதுதல் வேண்டும். மனு சுருக்கமாகவும், தெளிவாகவும் இருத்தல் நலம்.

மேற்படி மனுவுடன் ஆதாரங்கள் இணைக்க வேண்டும். இதனை மாவட்ட வருவாய் அலுவலகத்திற்கு சென்று  சமர்ப்பிக்க வேண்டும். பதிவு தபால்  மூலமாகவும் அனுப்பலாம். நேரிடையாக சென்று கொடுத்தால் அத்தாட்சி பெறுதல் விதிகளின்படி அரசு அலுவலகத்தில் இருந்து ஏற்பு ரசீது (அக்னாலெட்ஜ்மெண்ட்)  பெற வேண்டும்.  உங்கள் மனுவில் பணியாளர் & நிர்வாக சீர்திருத்தம் சட்ட ஆணை 114 , 66, 89 கீழ் ஏற்பு ரசீது கொடுக்கும் படி கேட்டுக்கொள்ள வேண்டும்.

நமது கோரிக்கை என்னவோ அதனை  அரசு தரப்பு ஊழியர்களுக்கு எளிதில் புரியும் வண்ணம், மனுவாக  எழுதுதல் வேண்டும். 

மனு சுருக்கமாகவும், தெளிவாகவும் இருத்தல் நலம். மேற்படி மனுவுடன் ஆதாரங்கள் இணைக்க வேண்டும். இதனை மாவட்ட வருவாய் அலுவலகத்திற்கு சென்று  சமர்ப்பிக்க வேண்டும். பதிவு தபால்  மூலமாகவும் அனுப்பலாம்.

பதிவு தபாலில் அனுப்பியிருப்பின், பதிவு தபால் அத்தாச்சி வந்தவுடன், DRO அலுவலகம் நேரிடையாக சென்று தபால் பிரிவில் இருப்பவரிடம் மனுவின் நிலைமை, மற்றும் அதற்கு வரிசை எண் கொடுக்கப்பட்டு, உரிய நபரிடம் நகர்ந்து இருக்கிறதா என்று கவனிக்க வேண்டும். தேவைபட்டால் DRO வை நேரிடையாக சந்திக்க வேண்டும்.

DRO அலுவலகத்தில் இருந்து, மேற்படி மனு, உங்கள் ஊர் வட்டாசியருக்கு FORWARD செய்யப்படும். பதிவு தபாலில் அனுப்பியிருப்பின், அதற்கான இன்னொரு நகல் கடிதம் நமக்கு வந்து சேரும் , அந்த கடிதம் கிடைத்தவுடன் தாங்கள் வட்டாட்சியர் அலுவலகம் நேரிடையாக சென்று அங்கு இருக்கும் தபால் பிரிவை அணுகி உங்கள் மனு ”எண்” ஆகிவிட்டதா என்றும், அது சம்பந்தப்பட்ட நபருக்கு சென்று விட்டதா என பார்த்துவிட்டு, தேவைபட்டால் துணை வட்டாட்சியர் , வட்டாட்சியரை சந்தித்து விவரங்களை சொல்ல வேண்டும்.

மேற்படி மனு வருவாய் ஆய்வாளருக்கு (RI) FORWARD செய்யப்படும். நாம் அவரை பின் தொடர்ந்து அதனை VAO க்கு வர வைக்க வேண்டும் . VAO வை நேரடியாக சந்தித்து கிராம கணக்கு விவரங்கள் , மற்ற கள விவரங்கள் பற்றி மனுவை ஒட்டி VAO விசாரணை நடத்தி ஆய்வறிக்கை தயார் செய்வர் . அப்பொழுது அவருக்கு தேவையான விவரங்களை நாம் தர வேண்டும்.

 இதன்பின் இந்த மனுவானது, VAO விடம் இருந்து, RIக்கும், RI இடம் இருந்து வட்டாசிரியருக்கு அனுப்பப்படும். கூட்டுப்பட்டா  சிக்கல்கள் பட்டா மேல் முறையீடு அதிகரியிடமும், FMB சிக்கல்கள் தலைமை சர்வேயருக்கும் , கிராம நத்தம் பிரச்சனைகள் நத்தம் அலுவலகத்திற்கு செல்லும். பிறகு வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து தங்களுக்கு விசாரணை அழைப்பானை வரும்.

அழைப்பாணையில் குறிப்பிட்ட தேதியில் தவறாமல் ஆஜராகி விசாரணையில் கேட்கின்ற கேள்விகளுக்கு பதிலளித்து, தாங்கள் கொடுத்த பதில்களை ஆவணங்களாக உருவாக்கி உங்களிடம் கையெழுத்து பெற்று மேற்படி ரிப்போர்ட்களை DRO விற்கு அனுப்பி வைப்பார்கள்.

எந்த வித சிக்கலும் பிரச்சினைகளும் ஆட்சேபனைகளும் உங்கள் பிராதுக்களில் இல்லை என்றால் DRO உத்தரவு போட்டு உங்களுக்கு ஏற்ற நிவாரணம் செய்வார் . உங்கள் ஆவணங்கள் DRO உத்தரவு படி சரி செய்யப்படும். அதுவே ஆட்சேபனைகளும் சிக்கல்களும் எதிர்ப்புகளும் இருந்தால், மேற்படி மனு வருவாய் கோட்டாட்சியர் நீதிமன்ற விசாரணையில் வழக்காக்கி பதியப்பட்டு , வழக்கு விசாரணை அடிப்படையில் தங்களுக்கு தீர்வு கிடைக்கும்.

நன்றி....!

*💊பள்ளிகள் திறப்பு - மாணவர்களுக்கு Multivitamin Tablet மற்றும் Zinc Tablet வழங்குதல் குறித்த பள்ளிக் கல்வி இயக்குநரின் அறிவுரைகள்!*

*💊பள்ளிகள் திறப்பு - மாணவர்களுக்கு Multivitamin Tablet மற்றும் Zinc Tablet வழங்குதல் குறித்த பள்ளிக் கல்வி இயக்குநரின் அறிவுரைகள்!*
பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்க.

*📘10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு 50 சதவீதம் வரை பாடத்திட்டம் குறைய வாய்ப்பு - ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகிறது...*

*📘10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு 50 சதவீதம் வரை பாடத்திட்டம் குறைய வாய்ப்பு - ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகிறது...*

 நடப்பு ஆண்டு பள்ளிகள் திறப்புதாமதம் காரணமாக 50 சதவீத அளவுக்கு பாடத்திட்டம் குறைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக கடந்த 10 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணையதளவழியில் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில் கல்வியாண்டு தாமதத்தைக் கருத்தில் கொண்டு 10, 12-ம்வகுப்புகளுக்கு மட்டும் பொங்கல் விடுமுறைக்குபின் பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதையடுத்து 10, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் ஜன.19-ம் தேதிமுதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

இதற்கிடையே கல்வியாண்டு தாமதம் காரணமாக நடப்பு ஆண்டு1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு 50 சதவீதமும், 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு 35 சதவீதம் வரையும்பாடத்திட்டம் குறைக்கப் பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார்.


 
இதற்கான பணிகளில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் (எஸ்சிஇஆர்டி) ஈடுபட்டது. தற்போது 10, 12-ம் வகுப்புகளுக்கும் 50 சதவீதம்வரை பாடத்திட்டம் குறைக்கப் பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

பள்ளிகள் திறக்கப்படாத சூழலில் நடப்பு கல்வியாண்டில் 60 சதவீத வேலைநாட்கள் முடிந்துவிட்டன. மீதமுள்ள நாட்களில் பாடங்களை நடத்த போதுமான அவகாசம் இருக்காது. இதைக் கருத்தில் கொண்டு 10, 12-ஆம் வகுப்புகளுக்கு பாடஅளவு குறைப்பு 45 முதல் 50 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.


 
பாடத்திட்டக் குறைப்பு பாடங்கள் வாரியாக மாறுபடும். அதற்கான பணிகளும் முழுமையாக முடிந்துவிட்டன. இதுகுறித்த தொகுப்பறிக்கை அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதல்வர் ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியிடுவார். குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே பொதுத்தேர்வு வினாத்தாள்கள் வடிவமைக்கப்படும்.


 
இதுதவிர, பள்ளிக்கு வர இயலாமல் வீட்டிலிருந்தபடி கல்வி பயிலும் மாணவர்கள், அரசின் கல்வித் தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடங்களைப் படித்தால் போதுமானது. எனவே, மாணவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்த அச்சம் வேண்டாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்

☘️அனைத்து பள்ளிகளும், பள்ளி வளாகத்தை தூய்மை செய்து, பயனீட்டுச் சான்றை ஜனவரி 20 க்குள் சமர்ப்பிக்க SPD உத்தரவு.*

*☘️அனைத்து பள்ளிகளும், பள்ளி வளாகத்தை தூய்மை செய்து, பயனீட்டுச் சான்றை ஜனவரி 20 க்குள் சமர்ப்பிக்க SPD உத்தரவு.*

*ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வாயிலாக , 2020 -21 ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எவ்வித பயமும் இன்றி பாதுகாப்பு உணர்வுடன் கல்வி கற்கும் சூழலை உருவாக்குவதற்காக , “ பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு ” ( Safety & Security at School level ) என்ற தலைப்பில் , பார்வை 1 - இன்படி பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணிக்காக , பள்ளி ஒன்றுக்கு ரூ .500 / - வீதம் 6,173 அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளுக்கும் , 31,297 அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கும் நிதி விடுவிக்கப்பட்டு அதற்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளது.*


*இந்நிலையில் , 19.01.2021 முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாலும் , ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வந்து செல்வதாலும் பார்வை 1 இல் உள்ள வழிகாட்டுதல்களின்படி , விடுவிக்கப்பட்ட நிதியை உடனடியாக பயன்படுத்தி பணியினை மேற்கொள்ள அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தவும் அதற்கான பயன்பாட்டுச் சான்றிதழை பள்ளிகளிடமிருந்து பெற்று 20.01.2021 ஆம் தேதிக்குள் மாநில திட்ட இயக்ககத்தின் rmsatamilns@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.*

*📘✍️பள்ளி திறப்பின் போது வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை.*

*📘✍️பள்ளி திறப்பின் போது வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை.*


*பள்ளி திறப்பின் போது வேண்டியவை:*

1. அனைவரும் முகக்கவசம் அணிதல் . 

2. கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் . 

3. பள்ளிக்கு வரும்போதும் , முற்பகல் இடைவேளை , மதிய உணவு இடைவேளை , பிற்பகல் இடைவேளை மற்றும் வீட்டிற்கு செல்லும் போதும் கைகளை சோப்பு கொண்டு கழுவுதல் வேண்டும் . 

4. சமூக இடைவெளி கடைபிடித்தல் 

5. சமூக இடைவெளியைப் பின்பற்றும் பொருட்டு தரையில் வட்டம் / கட்டம் போன்ற குறியீடுகள் வரைதல் . 

6. ஒரு வகுப்பிற்கு 25 மாணவர்கள் மட்டும் அனுமதி அளித்தல் . 

7. தெர்மல் ஸ்கேனர் ( THERMAL SCANNER ) கொண்டு உடல் வெப்பநிலை பரிசோதித்தல் . 

8. பல்ஸ் - ஆக்சிமீட்டர் பயன்படுத்த அறிந்திருத்தல் . 

9. வைட்டமின் மற்றும் துத்தநாக ( ZINC ) மாத்திரைகளை உரிய முறையில் மாணவர்கள் சாப்பிடுவதை உறுதி செய்தல் . 

10. ஆசிரியர்கள் , அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் அடையாள அட்டை அணிந்திருத்தல் , 

11. பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ள கோவிட் -19 - SOP ஐ ஆசிரியர்கள் முழுமையாக தெரிந்திருத்தல் . 

12. பள்ளி வளாகத்தில் அதிக அளவிலான குப்பைத் தொட்டிகளை வைத்தல் . 

13. கோவிட் -19 தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் சுவரொட்டிகள் , பதாகைகள் ஆகியவை பள்ளி வளாகத்தில் வைத்திருத்தல் . 

14. அருகாமையிலுள்ள சுகாதார நிலையத்தின் அவசர தொடர்பு எண்களை அறிந்திருத்தல் . 

15. வகுப்பிற்கு ஒரு ஆசிரியரை பொறுப்பாளராகவும் , அனைத்து பணிகளையும் மேற்பார்வையிட பள்ளிக்கு ஒரு ஆசிரியரை பொறுப்பாளராகவும் நியமித்தல்.

*பள்ளித்திறப்பின்போது செய்யக்கூடாதவை.*

1. 25 மாணவர்களுக்கு மேல் ஒரு வகுப்பறையில் அனுமதிக்கக்கூடாது . 

2.பள்ளி வளாகத்தில் எச்சில் துப்புதல் கூடாது , கழிவறை செல்லும் நேரம் , உணவு இடைவேளைகளில் கூட்டம்  

3 . கூடுதலை தவிர்த்தல் . 

4 . உணவு , தண்ணீர் பாட்டில்கள் , எழுதுபொருட்களை பரிமாறிக் கொள்ளுதல் கூடாது . 

5 . இறைவணக்கக் கூட்டம் , கலாச்சார நிகழ்வுகள் , உடற்கல்வி / NSS / NCC / தவிர்க்கப்படவேண்டும் . 

6 . மாணவர்கள் வகுப்பறைகளுக்கு வெளியே சுற்றித் திரிதல் கூடாது . 

7. வகுப்பறையில் ஆசிரியர்கள் , மாணவர்கள் , முகக்கவசம் அகற்றுதல் கூடாது , 

8 . முகக் கவசம் உள்ளிட்ட கழிவுப் பொருட்களை பொது வெளியில் எறிதல் கூடாது . 

9 . மூடிய வகுப்பறைகளில் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் தவிர்த்தல் , 

10 . தூய்மையற்ற முகக் கவசம் அணிதல் கூடாது . 

11 . கைக்குட்டை , மெல்லிழைத்தாள் பயன்படுத்தாமல் பொதுவெளியில் இருமல் , தும்மல் கூடாது .

12. பயோமெட்ரிக் ( BIOMATRIC ) கைரேகை பதிவு கூடாது . 

13 . குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்யாமல் வைத்திருக்கக்கூடாது . 

14. தேவையற்ற பார்வையாளர்களை நுழைய அனுமதித்தல் கூடாது .

*📘பள்ளி திறப்புக்கான சரிபார்ப்பு பட்டியல்!!!*

பள்ளி திறப்புக்கான சரிபார்ப்பு பட்டியல்!!!

*📘பள்ளி திறப்புக்கான மண்டல மற்றும் மாவட்ட வாரியான பொறுப்பு அலுவலர்கள் பட்டியல் வெளியீடு.

பள்ளி திறப்புக்கான மண்டல மற்றும் மாவட்ட வாரியான பொறுப்பு அலுவலர்கள் பட்டியல் வெளியீடு.