திங்கள், 22 மார்ச், 2021

*✍️பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி-கற்போம் எழுதுவோம் இயக்கம் 27.03.2021 அன்று நடத்த திட்டமிடப்பட்ட கற்றல் அடைவுத்தேர்வு 16.05.2021 அன்று நடத்துதல் சார்பான பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்குநர் அவர்களின் சுற்றறிக்கை.*

*✍️பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி-கற்போம் எழுதுவோம் இயக்கம் 27.03.2021 அன்று நடத்த திட்டமிடப்பட்ட கற்றல் அடைவுத்தேர்வு 16.05.2021 அன்று நடத்துதல் சார்பான பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்குநர் அவர்களின்  சுற்றறிக்கை.*

சனி, 20 மார்ச், 2021

*📚பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு ஜனவரி மாதம் நடைபெற்ற பயிற்சிக்கான தொகை - ரூ.2000 ( மதிப்பூதியம் ஒரு உறுப்பினருக்கு ரூ.100 வீதம் 20 உறுப்பினர்களுக்கு ) மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதுவதற்கான தொகை - ரூ 665 மொத்தம் ஒரு பள்ளிக்கு ரூ. 2665 SMC வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு தொகை விடுவிக்கப்பட்டது சார்பான நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின்(ஒபக)செயல்முறைகள்.*

*📚பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு ஜனவரி மாதம் நடைபெற்ற பயிற்சிக்கான தொகை  - ரூ.2000 ( மதிப்பூதியம் ஒரு உறுப்பினருக்கு  ரூ.100 வீதம் 20 உறுப்பினர்களுக்கு ) மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதுவதற்கான தொகை - ரூ 665 மொத்தம் ஒரு பள்ளிக்கு  ரூ. 2665 SMC வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு தொகை விடுவிக்கப்பட்டது  சார்பான நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின்(ஒபக)செயல்முறைகள்.*

புதன், 17 மார்ச், 2021

எஸ்.எண்.241 எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன நாணயச்சங்கத்தின் செயலாளர் திருமதி.கே.ராணி என்பாரிடம் இருந்து நிதியிழப்புத்தொகை சுமார் 19 இலட்சத்தை முழுமையாக வசூலித்திடுக!நாமக்கல் சரக கூட்டுறவு துணைப்பதிவாளரின் ஒருபக்கச் சார்பு கொண்ட வசூல் விசாரணையை நிறுத்திடுக! இறுதி ஆணைகள் பிறப்பித்திட தடை விதித்திடுக!தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல்மாவட்ட அமைப்பின் ஏழுகட்டத்தொடர் நடவடிக்கையின் இரண்டாம் கட்டமான சுவரொட்டி இயக்கம் தமிழக அரசுக்கும்,தமிழ்நாடு கூட்டுறவுத்துறைக்கும் வேண்டுகோள்!

எஸ்.எண்.241 எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன நாணயச்சங்கத்தின் செயலாளர் திருமதி.கே.ராணி என்பாரிடம் இருந்து  நிதியிழப்புத்தொகை சுமார் 19 இலட்சத்தை முழுமையாக வசூலித்திடுக!

நாமக்கல் சரக கூட்டுறவு துணைப்பதிவாளரின் ஒருபக்கச் சார்பு கொண்ட வசூல் விசாரணையை நிறுத்திடுக! 
இறுதி ஆணைகள் 
பிறப்பித்திட 
தடை விதித்திடுக!

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல்மாவட்ட அமைப்பின் ஏழுகட்டத்தொடர் நடவடிக்கையின் இரண்டாம் கட்டமான  சுவரொட்டி இயக்கம் 
தமிழக அரசுக்கும்,
தமிழ்நாடு கூட்டுறவுத்துறைக்கும் வேண்டுகோள்!

திங்கள், 15 மார்ச், 2021

*💉கரோனா தொற்று பாதிப்பை தடுக்க பள்ளி மாணவ,மாணவிகள் தீவிரமாக கண்காணிப்பு சுகாதாரத் துறை செயலாளர் தகவல்...*

*💉கரோனா தொற்று பாதிப்பை தடுக்க பள்ளி மாணவ,மாணவிகள் தீவிரமாக கண்காணிப்பு சுகாதாரத் துறை செயலாளர் தகவல்...*

 *கரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துவருகிறது. இதற்கிடையில், தஞ்சாவூர் அருகே அம்மாப்பேட்டை பள்ளியில் 57 மாணவிகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.*

*இதுதொடர்பாக சுகாதாரத்துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:*



*கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை முடியும் வரை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்கின்றனர். வீடுகளில் தனிமைப் படுத்திக் கொள்பவர்களாக இருந்தாலும் தனி அறை, கழிப்பறை இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டால் குடும்பத்தில் மற்றவர்களுக்கும் தொற்று பரவ வாய்ப்புள்ளது. தனி அறை, கழிப்பறை வசதிகள் இல்லாதவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறவேண்டும். காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.*


*தமிழகத்தில், மேற்கு மாம்பலம், புரசைவாக்கம், வேப்பேரி, சோழவரம், ஆவடி ஆகிய பகுதிகளில், சுப, துக்க நிகழ்ச்சிகளில் கூடிய கூட்டதால் தொற்று அதிகம் பரவி உள்ளது. பல இடங்களில், முகக்கவசம், சமூக இடைவெளியை பொதுமக்கள் பின்பற்றுவதில்லை.*


*தேர்தல் நடைபெற உள்ளதால் தங்கள் தொண்டர்களை காக்கவும், அவர்களால் மற்றவர்களுக்கு தொற்று பரவாமல் தடுக்கவும், அரசியல் கட்சி தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, கூட்டத்தில் பங்கேற்கும் அனைவரும் முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளி பின்பற்றுவதையும், தலைவர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.*


*அரசியல் கட்சி தலைவர்களின் பங்களிப்பு இருந்தால், தொற்று பரவலை கட்டுப்படுத்தலாம். பள்ளிகளில் மாணவர்களுக்கு காய்ச்சல், சளி போன்ற பிரச்சினை இருக்கிறதா என்று கண்காணிக்கப்படுகிறது. பெற்றோரும் மாணவ, மாணவிகளுக்கு காய்ச்சல் இருந்தால் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம். மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். இவ்வாறு கூறினார்.*

*💵தவறான வங்கிக்கணக்கில் பணம் மாற்றப்பட்டால் எப்படி அதனை திரும்ப பெறுவது..?*

*💵தவறான வங்கிக்கணக்கில் பணம் மாற்றப்பட்டால் எப்படி அதனை திரும்ப பெறுவது..?*


*தற்போது ஆன்லைன் பணப் பரிமாற்றங்கள் தவிர்க்க முடியாதவையாக மாறிவிட்டன.. யுபிஐ, பேடிஎம், நெட் பேங்கிங் உள்ளிட்ட பல முறைகளில் மக்கள் வங்கி பரிவர்த்தனைகள் மேற்கொள்கின்றனர். ஸ்மார்ட்போன்கள் அல்லது மடிக்கணினிகள் மூலம் சில நொடிகளில் இதைச் செய்ய முடியும் என்பதால் ஒருவரின் கணக்கிற்கு பணத்தை மாற்ற நாங்கள் ஒரு வங்கியைப் பார்க்க வேண்டியதில்லை. இருப்பினும், ஆன்லைன் பரிவர்த்தனைகள் வங்கி வசதிகளை எளிதாக்கியுள்ள நிலையில், இதில் பல சிக்கல்களும் இருக்க தான் செய்கின்றன..*


*உதாரணமாக, வேறொருவரின் கணக்கிற்கு தவறுதலாக பணத்தை மாற்றினால், பணத்தை எவ்வாறு திரும்பப் பெறுவீர்கள்? அந்த தொகையை உங்கள் கணக்கில் திருப்பிச் செலுத்த வங்கிக்கு அதிகாரம் உள்ளதா? சரி, பயனர்கள் அதைத் தொடர அனுமதிக்காவிட்டால், வங்கிகளால் அதைத் திருப்ப முடியாது. “புரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒரு பரிவர்த்தனை செய்யப்பட்டிருந்தால், பயனாளியின் ஒப்புதல் இல்லாமல் வங்கி அதன் முடிவில் இருந்து அதை மாற்ற முடியாது. வங்கி ஒரு வசதியாளராக மட்டுமே செயல்பட முடியும் என்று கூறப்படுகிறது..உங்கள் பணத்தை எவ்வாறு திரும்பப் பெறுவது?*


*உடனடியாக உங்கள் வங்கி வாடிக்கையாளர் சேவையை அழைத்து முழு விஷயத்தையும் விளக்குங்கள். பரிவர்த்தனை, கணக்கு எண் மற்றும் பணம் தவறாக மாற்றப்பட்ட கணக்கு ஆகியவற்றின் சரியான தேதி மற்றும் நேரத்தை நீங்கள் நிர்வாகிக்கு தெரிவிக்க வேண்டும். நீங்கள் பணத்தை மாற்றிய வங்கிக் கணக்குக்கு 5-6 வணிக நாட்களுக்குள் பணம் தானாகவே திருப்பித் தரப்படும்.  இல்லையென்றால், நீங்கள் உங்கள் வங்கியை அணுகி தவறான பரிவர்த்தனை குறித்து மேலாளருக்கு தெரிவிக்க வேண்டும். அந்த வங்கி பயனாளியின் விவரங்களை சரிபார்க்கும், அதே கிளையில் நபர் ஒரு கணக்கை வைத்திருந்தால், பணத்தை திருப்பித் தருமாறு வங்கி அவரிடம் கோரலாம்.   பயனாளி உங்கள் கணக்கில் பணத்தை மீண்டும் செலுத்த மறுத்தால் என்ன செய்வது..? இந்த வழக்கில், உங்கள் வங்கியைத் தொடர்புகொண்டு விஷயத்தை விரிவாகக் கூறுங்கள்.  அவர் அல்லது அவள் உங்கள் பணத்தை திருப்பி கொடுக்க மறுத்தால் சட்ட வழியைத் தேர்வுசெய்க. உங்கள் வங்கியும் உங்கள் பயனாளியின் வங்கிகளும் வேறுபட்டவை மற்றும் வெவ்வேறு நகரங்களில் இருந்தால் நிலைமை மிகவும் சிக்கலானதாகிவிடும். உங்கள் பணத்தை திருப்பி கொடுக்க பயனாளி ஒப்புக்கொண்டால் என்ன நடக்கும்..?*

*ஒரு பயனாளி பரிவர்த்தனையை மாற்ற ஒப்புக்கொண்டால், உங்கள் பணத்தை திரும்பப் பெற 8-10 வேலை நாட்கள் ஆகும். இல்லையெனில், நீங்கள் சரியான வங்கி அறிக்கை, முகவரி மற்றும் ஐடி ஆதாரம் போன்றவற்றைக் கொண்டு பரிவர்த்தனையை நிரூபிக்க வேண்டும்.*

*✍️தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 6ம் தேதி பொது விடுமுறை - ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என தொழிலாளர் நலத்துறை உத்தரவு...*

*✍️தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 6ம் தேதி பொது விடுமுறை - ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என தொழிலாளர் நலத்துறை உத்தரவு...*