செவ்வாய், 23 மார்ச், 2021

எங்கள் நாடு தமிழ்நாடு!

எங்கள் நாடு 
தமிழ்நாடு!

தமிழ்நாடு மாறாது!.கரிகாலன் கருத்து!!

# தமிழ்நாடு மாறாது!
++++++++++++++++++

தியாகி.
சங்கரலிங்கனார் 
உயிர் கொடைத் தந்து  
உருவாகிய மாநிலம்
எங்கள்
தமிழ்நாடு!.

பேரறிஞர் அண்ணா
இந்திய நாடாளுமன்றத்தில் 
முழங்கிய மாநிலம்
எங்கள்
தமிழ்நாடு !.

தமிழ்நாடு சட்டமன்றத்தின்  
பிரகடனம் 
எங்கள் நாடு 
தமிழ்நாடு!

ஈராயிரமாண்டு 
பாரம்பரியம்மிகு
தமிழ் இலக்கியங்களில் 
எங்கள் நாடு 
தமிழ்நாடு !.

மகாகவி பாரதி வார்த்தைகளில் 
கல்விச்சிறந்த நாடு 
எங்கள் தமிழ்நாடு  !.

ஆரியம் போல்
வழக்கொழிந்த
நாடற்ற மொழி அல்ல!.
சீரிளமைத் 
திறம்வியந்து  
நாள்தோறும் 
நாட்டினர் 
போற்றும் மொழி!
வளரும் மொழி !
எங்கள்
கன்னித்தமிழ்மொழி
அரசாளும் நாடு 
எங்கள்
தமிழ்நாடு!.

பரிபாடல்,
பதிற்றுப்பத்து, 
சிலப்பதிகாரம்,
 மணிமேகலை,
பக்தி இலக்கியம்
என 
இலக்கணத்தில் ...
இலக்கியத்தில்...
வாழ்வியலில்...
வகை வகையாக...
தொகை தொகையாக...
நீடித்து நிலைத்து  
பெயர் சிறக்க 
வாழும் வரலாறாய் 
வாழும்நாடு!
நாள்தோறும்
வளரும் நாடு!
எங்கள் தமிழ்நாடு!.

அகிலத்தின் 
மூத்த பெருங்குடிமக்களின்
பல்லாயிரமாண்டு காலத்திய
 செழுமைமிகு 
வரலாற்றுப் பெட்டகம்
எங்கள் 
தமிழ்நாடு!.
வரலாற்றுக் கருவூலம்  
எங்கள்
 தமிழ்நாடு !.

இத்தகுப் பெருமைப்போன்று 
எண்ணிலடங்கா 
எண்ணங்களினால்...
வண்ணங்களிலால்...
உரத்த சிந்தனைகளினால்...
நிறைந்து 
செழிக்கும் நாடு
 எங்கள் 
 தமிழ்நாடு!.

கம்பீரமாக சொல்லுவோம்!
எங்கள்நாடு
தமிழ்நாடு!.

#மாறாது தமிழ்நாடு!.
-கரிகாலன்.

*📚அரசாணை எண் -327- கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.*

*📚அரசாணை எண் -327- கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.*

திங்கள், 22 மார்ச், 2021

*✍️பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி-கற்போம் எழுதுவோம் இயக்கம் 27.03.2021 அன்று நடத்த திட்டமிடப்பட்ட கற்றல் அடைவுத்தேர்வு 16.05.2021 அன்று நடத்துதல் சார்பான பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்குநர் அவர்களின் சுற்றறிக்கை.*

*✍️பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி-கற்போம் எழுதுவோம் இயக்கம் 27.03.2021 அன்று நடத்த திட்டமிடப்பட்ட கற்றல் அடைவுத்தேர்வு 16.05.2021 அன்று நடத்துதல் சார்பான பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்குநர் அவர்களின்  சுற்றறிக்கை.*

சனி, 20 மார்ச், 2021

*📚பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு ஜனவரி மாதம் நடைபெற்ற பயிற்சிக்கான தொகை - ரூ.2000 ( மதிப்பூதியம் ஒரு உறுப்பினருக்கு ரூ.100 வீதம் 20 உறுப்பினர்களுக்கு ) மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதுவதற்கான தொகை - ரூ 665 மொத்தம் ஒரு பள்ளிக்கு ரூ. 2665 SMC வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு தொகை விடுவிக்கப்பட்டது சார்பான நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின்(ஒபக)செயல்முறைகள்.*

*📚பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு ஜனவரி மாதம் நடைபெற்ற பயிற்சிக்கான தொகை  - ரூ.2000 ( மதிப்பூதியம் ஒரு உறுப்பினருக்கு  ரூ.100 வீதம் 20 உறுப்பினர்களுக்கு ) மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதுவதற்கான தொகை - ரூ 665 மொத்தம் ஒரு பள்ளிக்கு  ரூ. 2665 SMC வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு தொகை விடுவிக்கப்பட்டது  சார்பான நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின்(ஒபக)செயல்முறைகள்.*

புதன், 17 மார்ச், 2021

எஸ்.எண்.241 எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன நாணயச்சங்கத்தின் செயலாளர் திருமதி.கே.ராணி என்பாரிடம் இருந்து நிதியிழப்புத்தொகை சுமார் 19 இலட்சத்தை முழுமையாக வசூலித்திடுக!நாமக்கல் சரக கூட்டுறவு துணைப்பதிவாளரின் ஒருபக்கச் சார்பு கொண்ட வசூல் விசாரணையை நிறுத்திடுக! இறுதி ஆணைகள் பிறப்பித்திட தடை விதித்திடுக!தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல்மாவட்ட அமைப்பின் ஏழுகட்டத்தொடர் நடவடிக்கையின் இரண்டாம் கட்டமான சுவரொட்டி இயக்கம் தமிழக அரசுக்கும்,தமிழ்நாடு கூட்டுறவுத்துறைக்கும் வேண்டுகோள்!

எஸ்.எண்.241 எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன நாணயச்சங்கத்தின் செயலாளர் திருமதி.கே.ராணி என்பாரிடம் இருந்து  நிதியிழப்புத்தொகை சுமார் 19 இலட்சத்தை முழுமையாக வசூலித்திடுக!

நாமக்கல் சரக கூட்டுறவு துணைப்பதிவாளரின் ஒருபக்கச் சார்பு கொண்ட வசூல் விசாரணையை நிறுத்திடுக! 
இறுதி ஆணைகள் 
பிறப்பித்திட 
தடை விதித்திடுக!

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல்மாவட்ட அமைப்பின் ஏழுகட்டத்தொடர் நடவடிக்கையின் இரண்டாம் கட்டமான  சுவரொட்டி இயக்கம் 
தமிழக அரசுக்கும்,
தமிழ்நாடு கூட்டுறவுத்துறைக்கும் வேண்டுகோள்!