வியாழன், 24 ஜூன், 2021

கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு நிகழ்ச்சிகள் விவரம் மற்றும் விலையில்லா பாடநூல்கள் விநியோகித்தல் சார்ந்து தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்... நாள் : 21.06.2021





 

பள்ளிக்கல்வி – 22.01.2019 முதல் 30.01.2019 வரை நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியரல்லாத பணியாளர்கள் மீது தொடரப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை, குற்றவியல் வழக்குகள், மாறுதல் மற்றும் பதவி உயர்வு நிறுத்தி வைத்தல் - சார்பான விவரங்கள் கோருதல் - சார்பு


 

திங்கள், 14 ஜூன், 2021

தமிழ்நாட்டில் செயல்படும் 11 உயர்கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் வழியில்பட்டம் தரலாம்!

தமிழ்நாட்டில் செயல்படும்
 11 உயர்கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் வழியில்
பட்டம் தரலாம்!

தமிழ்நாட்டு ஆசிரியர்,அரசு ஊழியர்‌ மற்றும்‌ஓய்வூதியர்களின் குழுக்காப்பீடுதிட்டக் குறைபாடுகள் களைவதற்கு புதிய தனிப்பிரிவு தொடக்கம்!தமிழக அரசு ஆணை!

தமிழ்நாட்டு ஆசிரியர்,அரசு ஊழியர்‌ மற்றும்‌
ஓய்வூதியர்களின் குழுக்காப்பீடுதிட்டக் குறைபாடுகள் களைவதற்கு புதிய தனிப்பிரிவு தொடக்கம்!
தமிழக அரசு ஆணை!

கோவிட்-19, இது குறித்த பெரும் எச்சரிக்கை உணர்வோடு தமிழகத்தில் கல்விப்பணிகள் தொடங்கட்டும்!கல்விச் சிறந்த தமிழகம் உதிக்கட்டும்!நம்மில் எவர் ஒருவரையும் இழக்காது தமிழகத்தின் பொதுநலன் வளர்ப்போம்!-தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், நாமக்கல் மாவட்டம் (கிளை).

அன்பானவர்களே! வணக்கம்.
🙏.
கோவிட்-19 ,
இந்தப் பெயரே இன்றையக் காலத்தில் உருமாறி, பெயர் மாறி ,
தேச எல்லைகளை எல்லாம் மின்னல் வேகத்தில் தாண்டி , அடுத்தடுத்து சூறாவளியாகத் தாக்குகிறது;
பேரழிவுகளை உருவாக்குகிறது
 என்பதை நாம். அனைவரும் நன்கறிவோம்!

இந்நிலையில், எத்தகு‌ மாற்றங்கள் நடந்தேறினாலும்,
நாம் பாடுபட்டு நாம் பெரிதுமே  விரும்பிய மாற்றமே நாம் அமைத்தாலும்,
முடிவெடுக்கும் நிவையில்‌ உள்ளோர் அகில  உலக, அகில இந்திய முடிவுகளை ஒட்டியே மாநிலத்தில்‌ முடிவெடுக்கும் நிலையில்‌ இருப்பர்.
இவைகளை முழுக் கவனத்தில்‌ கொள்ளல் வேண்டும்.

சரக்குக் கடைகளை,
சாயாக்கடைகளை திறப்பது போன்றவற்றில் பெரும்இலாபம் யாருக்கு வேண்டுமானாலும் செல்லலாம்.

கல்விக்கூடங்களைத் திறக்கச்செல்வதின் மூலமாக , தமிழ்நாட்டு பொதுக்கல்வியை எப்பொழுதும் தன் உயிரினும் மேலானாதாகக்‌‌ கட்டிக்காத்து வரும்‌ தமிழ்நாட்டு ஆசிரியர் சமுதாயத்தினரில்‌ 
இழப்பு என்ற‌  ஆபத்தான நிலை , பேரவலமான நிலை உருவாகாமல்‌‌ 
மிகுந்த கவனத்துடன் பள்ளிக்கல்விப் பணிகளில் செயல்படுங்கள்.

பெருந்தொற்றை குறைத்து மதிப்பிட்டு விட வேண்டாம்.
கொரில்லா தாக்குதல் முறையையும் தூக்கி‌ முழுங்கி ஏப்பம் விட்டு அடுத்தடுத்து ஆள்கள் தேடும் நவீனமானதாகும் இப்பெருந்தொற்று என்பதை முழுக்கவனத்தில்- கணக்கில்‌ கொண்டு செயல்படுங்கள்.

அனைத்து வட்டாரக்கல்வி அலுவலகங்களிலும்  கொரோனா பரவல் தடுப்பு விதிகளை முழுமையாக, முறையாக   
பின்பற்றச் செய்யுங்கள்!
அலுவலக நிருவாகப் பணிகளை கும்பமேளா கணக்கில்‌ செயல்படுத்தும் அலுவலர்கள் இன்றும் இருக்கத்தான் செய்வார்கள். பாவம்!அவர்கள் என்று விட்டு விடாதீர்கள். தமிழக‌அரசின் நோய்த்தடுப்பு விதிகளைப் பாடம் எடுத்துக்காட்டுங்கள்.  


தொடக்க/ நடுநிலைப் பள்ளிகளில்‌ முககவசம்‌ இல்லாத எவரையும் அனுமதிக்காதீர்கள.
தனிநபர் இடைவெளி/சமூக இடைவெளி‌ போன்ற இவைகளில் எந்த விதமான சமரசமங்களும் செய்துக்கொள்ளாதீர்கள்.

தொடக்க/நடுநிலைப்பள்ளி ஆசியர்கள் குழந்தைமையை கொண்டாடுங்கள்.
ஆனால்,அதே நேரத்தில்‌
தங்கள் நலனை, தங்களைச் சார்ந்தோரின்‌ உடல்-மன  நலன்களில் பெரிதும்‌ கவனம் கொள்ளுங்கள்.


கோவிட்-19, இது குறித்த பெரும் எச்சரிக்கை உணர்வோடு தமிழகத்தில்  கல்விப்பணிகள் தொடங்கட்டும்!
கல்விச் சிறந்த தமிழகம்    உதிக்கட்டும்!
நம்மில் எவர் ஒருவரையும் இழக்காது   தமிழகத்தின் பொதுநலன் வளர்ப்போம்!.

நன்றி!
இப்படிக்கு,

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், நாமக்கல் மாவட்டம் (கிளை).

திங்கள், 31 மே, 2021

தேசிய நல்லாசிரியர் விருது ஜூன் 1 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் _ மத்திய அரசு அறிவிப்பு



 தேசிய நல்லாசிரியர் விருது:

 நாளை (01/06/2021) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்


மத்திய அரசு வழங்கும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆசிரியராக இருந்து நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனைப் போற்றும் வகையில் அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. நாட்டில் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு இந்நாளில் மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.


இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்கள் அனைவருக்கும் டெல்லி, விக்யான் பவனில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 5-ம் தேதி, குடியரசுத் தலைவர் கையால் விருது வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருதுக்கு விண்ணப்பிக்க மத்தியக் கல்வி அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.


இதுகுறித்து மத்தியக் கல்வி அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ஆர்.சி.மீனா இன்று அனைத்து மாநிலங்களின் முதன்மைச் செயலாளர்களுக்கும்/ செயலாளர்களுக்கும் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில், ''ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருது பெற நாளை (ஜூன் 1) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கக் கடைசித் தேதி ஜூன் 20 ஆகும்.


ஆசிரியர்கள் கூடுதலாகப் பங்கேற்கும் வகையில் மாநிலங்கள் விருது குறித்த அறிவிப்பைப் பரவலாக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு https://nationalawardstoteachers.education.gov.in/ என்ற இணையதள முகவரியைக் காணலாம்'' என்று தெரிவித்துள்ளார்.


கடந்த ஆண்டு நாடு முழுவதிலும் இருந்து 45 ஆசிரியர்களுக்கும் சிறப்புப் பிரிவில் மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் 2 பேருக்கும் தேசிய நல்லாசிரியர் விருதை மத்தியக் கல்வி அமைச்சகம் வழங்கியது. கரோனா காரணமாக அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காணொலி முறையில் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


நன்றி :  இந்து தமிழ்