செவ்வாய், 16 மே, 2023

முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் (First Generation Graduate Certificate) பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? - எளிய வழிமுறைகள்.


முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் (First Generation Graduate Certificate) பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? - எளிய வழிமுறைகள் (How to Apply Online for First Generation Graduate Certificate? - Simple instructions)...


முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் (First Graduate Certificate) ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி என தெரிந்து கொள்வோம்.


தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தின் முதல் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களாக இருக்க வேண்டும். இதன்மூலம் கல்விக் கட்டண தொகை விலக்கு அளிக்கப்படும். 


மேலும் இந்த சலுகையை பெற விரும்பும் மாணவர்கள் குடும்பத்தில் முதல் பட்டதாரியாக இருத்த வேண்டும். 


தேவையான ஆவணங்கள்


* விண்ணப்பதாரரின் புகைப்படம்


* குடும்ப அட்டை


* ஆதார் அட்டை 


* 12ஆம் வகுப்பு சான்றிதழ்


* கல்லூரி விண்ணப்பம் 


* தந்தை கல்வி சான்றிதழ்


* தாய் கல்வி சான்றிதழ்


* சகோதர சகோதரிகளின் கல்வி சான்றிதழ்



விண்ணப்பிப்பது எப்படி?


*STEP : 1


முதலில் https://tnega.tn.gov.in/ அதில் Citizen Login என்பதை க்ளிக் செய்யவும்.


ஏற்கனவே account இருப்பவர்கள் user name password கொடுத்து என்டர் செய்யவும். Captcha Code என்பதில் சரியானவற்றை கொடுத்து Login செய்யவும்


Account இல்லாதவர்கள் புதிதாக Account Open செய்யவும். அதில் new user? sign up என்ற Optionல் புதிதாக Account Open செய்யலாம். 


Account Open செய்து லாகின் செய்து அதில்  Revenue Department என்பதை  செய்யவும். 


முதல் பட்டதாரி  என்பதை தேர்வு செய்து Proceed என்பதை Click செய்யவும்.


*STEP : 2


அடுத்து அதில்  Register CAN என்பதை க்ளிக் செய்யவும்.


அடுத்து அவரும் விண்ணப்பப் படிவத்தில்  விண்ணப்பதாரரின் பெயர், பாலினம், திருமண நிலை, பிறந்த தேதி, உறவு முறை, தந்தை/ தாய் பெயர், மதம், கல்வி தகுதி, சாதி, வட்டம், மாவட்டம், கிராமம், நிரந்தர வீட்டு முகவரி, மொபைல் எண் கொடுத்து Generate OTP என்பதை கொடுத்த பிறகு மொபைல் எண்ணிற்கு  வரும்  OTP எண்னை கொடுத்து Register என்பதை Click செய்யுங்கள்


அடுத்து உங்களுக்கு can நம்பர் ரெஜிஸ்டர் செய்த மொபைல் எண்ணை கொடுத்து விவரங்களை குறிப்பிட்ட பிறகு search ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.


அதில் உங்களுடைய பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி அனைத்தும் வரும். அடுத்து அதில் Proceed என்பதை க்ளிக் செய்யவும்.


அடுத்து உங்களுடைய மொபைல் எண் வரும். அருகில் இருக்கும் generate otp என்பதை கொடுத்த பிறகு மொபைல் எண்ணிற்கு வரும் OTPயை கொடுத்து conform OTP என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும் அடுத்து கீழே proceed என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும். 


*STEP : 3


அதில் Current Course என்ற இடத்தில் Graduate என்பதை கொடுத்து கல்வி நிறுவனத்தின் பெயர், முகவரியை டைப் செய்ய வேண்டும். அனைத்தையும் சரிபார்த்து Submit கொடுக்கவும்.


*STEP : 4


அடுத்து உங்களுடைய ஆவணங்களை Upload செய்யும் ஆப்ஷன் வரும். அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் Upload செய்யுங்கள்.


அதில் Self Declaration Form , Download Aadhar Consent Form டவுன்லோடு செய்து SIGN இட்டு மீண்டும் ஸ்கேன் செய்து அப்லோடு செய்யவேண்டும்.


 Download Self Declaration Form என்பதை க்ளிக் செய்யவும். அவற்றில் உங்களுடைய கையெழுத்து போட வேண்டும்


*STEP : 5


ஆவணங்கள் அப்லோட் செய்த பிறகு Make payment என்பதை கொடுக்க வேண்டும். 


அதில் நெட் பேங்கிங் , யூபிஜ , டெபிட் கார்டு போன்றவைகள்  ஏதேனும் பயன்படுத்தி ஆன்லைன் மூலம் பணத்தினை செலுத்த வேண்டும்.


பணம் செலுத்திய பிறகு ஒப்புகை சீட்டு வரும்.  உங்களுக்கு வந்த ஒப்புகை சீட்டை  கொண்டு உங்கள் பகுதி கிராம நிர்வாக அலுவலர் (VAO) மற்றும் வருவாய் ஆய்வாளர் (RI) சரிபார்ப்பு முடிந்து தாசில்தார் ஒப்புகை கொடுத்தபின்பு உங்கள் முதல் பட்டதாரி சான்றிதழ் டவுன்லோடு செய்யலாம்.

ஆசிரியர் பொது மாறுதல் கவுன்சிலிங் இரவில் நடத்த தடை.

ஆசிரியர் பொது மாறுதல் கவுன்சிலிங் இரவில் நடத்த தடை

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங், இன்று துவங்குகிறது. இரவில் கவுன்சிலிங்கை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது

முதல் நாளில், சுழற்சி மாறுதல் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, வருவாய் மாவட்டத்துக்குள் இடமாறுதல் நடக்க உள்ளது.


படிப்படியாக ஒவ்வொரு பிரிவினருக்கும், 26ம் தேதி வரை கவுன்சிலிங் நடக்கிறது. இரவு நேரத்திலும் கவுன்சிலிங் நடத்தப்படுவது உண்டு.


அதனால், ஆசிரியர்கள் விடிய விடிய காத்திருப்பர்.


அந்த நிலை இன்றி, இந்த முறை இரவு நேரத்தில் நடத்தாமல், பகலிலேயே கவுன்சிலிங்கை முடிக்க, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுஉள்ளது

மதியம் 12 மணியிலிருந்து 3 மணி வரைக்கும் வெளியில தல காட்டாதீங்க ~ பேரிடர் மேலாண்மைத்துறை அறிக்கை...

திங்கள், 15 மே, 2023

கல்வித்துறையின் விருப்பத்துக்கு ஏற்ற ஒருதலைப்பட்சமான பொதுமாறுதல் கலந்தாய்வு அரசுக்கு -ஆசிரியருக்கும் இடையே விரிசலை உருவாக்கும்! கலந்தாய்வு பொது மாறுதல் எனும் வார்த்தையின் உள்ளார்ந்த நோக்கத்தை சிதைத்துவிடும்! ஒன்றியத்திற்குள் இடமாறுதல் கோரும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும்! தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பின் வலியுறுத்தல்!

கல்வித்துறையின் விருப்பத்துக்கு ஏற்ற ஒருதலைப்பட்சமான பொதுமாறுதல் கலந்தாய்வு

அரசுக்கு -ஆசிரியருக்கும் இடையே விரிசலை உருவாக்கும்!

கலந்தாய்வு பொது மாறுதல் எனும் வார்த்தையின் உள்ளார்ந்த நோக்கத்தை சிதைத்துவிடும்!

ஒன்றியத்திற்குள் இடமாறுதல் கோரும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும்!

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பின் வலியுறுத்தல்!




ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கவனத்திற்கு.. 2012, 2013, 2017 & 2019 ஆம் ஆண்டுகளில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று தேர்வு சான்றிதழ் இல்லாதவர்கள் தங்களது தேர்வு சான்றிதழ் நகலினை பெற eSevai மூலம் 160 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கவனத்திற்கு.. 2012, 2013, 2017 & 2019 ஆம் ஆண்டுகளில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று தேர்வு சான்றிதழ் இல்லாதவர்கள் தங்களது தேர்வு சான்றிதழ் நகலினை பெற eSevai மூலம் 160 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.

திட்டமிடப்பட்ட பராமரிப்புச் செயல்பாடுகள் காரணமாக, EMIS இணைய பயன்பாட்டுச் சேவைகள் மே-15 காலை 11 மணி முதல் மே-22 காலை 11 மணி வரை கிடைக்காது.

திட்டமிடப்பட்ட பராமரிப்புச் செயல்பாடுகள் காரணமாக, EMIS இணைய பயன்பாட்டுச் சேவைகள் மே-15 காலை 11 மணி முதல் மே-22 காலை 11 மணி வரை கிடைக்காது (Due to Scheduled maitenance activity of EMIS web application services  will not be  available from (MAY-15)-  11am   to (MAY-22)-  11am)...

ஆசிரியர் இனக்காவலர், பாவலர் அய்யா அவர்களின் நினைவுநாள் பயிலரங்கு ~ நாளிதழ் செய்திகளில்...

சனி, 13 மே, 2023

தற்போதைய IAS அதிகாரிகள் மாற்றத்தில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் திரு. நந்தகுமார் அவர்கள் மனித வள மேம்பாட்டு துறை செயலாளர் ஆக மாற்றம் செய்யப்பட்டார்

 தற்போதைய IAS அதிகாரிகள் மாற்றத்தில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் திரு. நந்தகுமார் அவர்கள் மனித வள மேம்பாட்டு துறை செயலாளர் ஆக மாற்றம் செய்யப்பட்டார்



தமிழகத்தில் முக்கிய IAS அதிகாரிகள் மாற்றம். முதல்வரின் செயலாளராக இருந்த உதய சந்திரன் நிதித் துறை செயலாளராக மாற்றம்- அரசாணை வெளியீடு



தமிழகத்தில் முக்கிய IAS அதிகாரிகள் மாற்றம். முதல்வரின் செயலாளராக இருந்த உதய சந்திரன் நிதித் துறை செயலாளராக மாற்றம்

சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மக்கள் நல்வாழ்வு துறை செயலாளராக மாற்றம்

ஊரக வளர்ச்சி துறை செயலாளராக அமுதாவுக்கு பதில் டாக்டர் பி செந்தில்குமார் நியமனம்

ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் பி அமுதா உள்துறை செயலாளராக மாற்றம்

போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளராக பணிந்தர் ரெட்டி நியமனம்!

  நிதித்துறை செயலாளராக இருந்த முருகானந்தம் முதல்வரின் முதன்மைச் செயலாளராக நியமனம்!

👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻

CLICK HERE TO DOWNLOAD


பணிநிரவலில் ஆசிரியர்கள் பாதிக்கா வகையில் முதலில் பதவி உயர்வு நடவடிக்கைகளை தொடங்கிடுக! தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை!

பணிநிரவலில் ஆசிரியர்கள் பாதிக்கா வகையில் முதலில் பதவி உயர்வு நடவடிக்கைகளை தொடங்கிடுக!

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை!