புதன், 31 ஜூலை, 2024

பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நடைபெறுதல் வழிகாட்டு நெறிமுறைகள் - நிதி விடுவித்தல் சார்பு.

பள்ளிக் கல்வித் துறை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி -2024 2026-ஆம் ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு அனைத்து வகை அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நடைபெறுதல் வழிகாட்டு நெறிமுறைகள் - நிதி விடுவித்தல் சார்பு.

தற்காலிக பணியிடங்களுக்கு 01.07.2024 முதல் 30.09.02024 வரை மேலும் 3 மாதங்களுக்கு ஊதியம் வழங்கும் அதிகார ஆணை(Pay Authorization) வழங்குதல் -சார்பு.

பள்ளிக்கல்வி 2006-2007 ஆம் கல்வியாண்டில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 6,7 மற்றும் 8 வகுப்புகளுக்கு அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் 7,979 பட்டதாரி ஆசிரியர் தற்காலிக பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது - இப்பணியிடங்களுக்கு 1.04.2021 முதல் 31.03.2024 வரை 3 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை வழங்கப்பட்டது 01.04.2024 முதல் 30.06.2024 வரை மூன்று மாதத்திற்கு பள்ளிக் கல்வி இயக்குநரால் தற்காலிக தொடர் நீட்டிப்பு (Express Pay Order) முடிவடைந்துவிட்டது வெளியிடப்பட்டு தற்போது 01.07.2024 முதல் 30.09.02024 வரை மேலும் 3 மாதங்களுக்கு ஊதியம் வழங்கும் அதிகார ஆணை(Pay Authorization) வழங்குதல் -சார்பு.

ஞாயிறு, 28 ஜூலை, 2024

பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித்துறையில் இணை இயக்குனர்கள்(JD) மாற்றம்.

 பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித்துறையில் இணை இயக்குனர்கள்(JD) மாற்றம்.

தொடக்கக்கல்வி இணை இயக்குநராக (நிர்வாகம்) திரு.கோபிதாஸ் அவர்கள் நியமனம்.
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻

செவ்வாய், 16 ஜூலை, 2024

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் ஒன்றியம்செயற்குழுக்கூட்டம் 16.07.2024

 தமிழ்நாடு தொடக்கபள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் ஒன்றியக்கிளையின் செயற்குழுக்கூட்டம் 16.07.2024 மாலை 05.30மணிக்கு அரசு தொடக்கப்பள்ளியில் நடைப்பெற்றது.


இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் திரு.அ.செயக்குமார் அவர்கள் தலைமை தாங்கினார். திருமதி.கொ.கௌரி மகளிரணி துணை அமைப்பாளர் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். திருமதி.கோ.கு.இராசேசுவரி மாநில பொதுக்குழு உறுப்பினர் அவர்கள் மற்றும் திருமதி.நா.ஜீவாஜாய் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அவர்கள் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் திரு.மெ.சங்கர் அவர்கள் தொடக்கவுரை ஆற்றினார். மாநிலப் பொருளாளர் திரு.முருக செல்வராசன் அவர்கள் இயக்க உரை ஆற்றினார். இறுதியாக ஒன்றியப்  பொருளாளர் திரு.மு.சசிக்குமார் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.